Sunday, January 15, 2006

வருவாய்த் துறை

.அரசு திட்டம்!* இயற்கை சீற்ற நிவாரண பணிகளுக்குத் தனித்துறை* வருவாய்த்துறையை இரண்டாக பிரிக்க ஆலோசனை

தமிழக அரசில் மிகப் பெரிய துறையான வருவாய்த் துறை நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அமைப்பிலேயே இன்னும் செயல்பட்டு வருகிறது. சுனாமி, வெள்ள நிவாரணம் போன்றவற்றை சமாளிக்க பேரிடர் மேலாண்மைத் துறை தனியாக இல்லாததால் வருவாய்த் துறை இதர பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறது.
அரசில் மிக முக்கியமான துறை வருவாய்த் துறை. இத்துறைச் செயலரின் கீழ் பல்வேறு பெரிய துறைகள் உள்ளன. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை, நில நிர்வாகம், நில சீர்திருத்தம், சர்வே, பதிவுத் துறை, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு என பல துறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஐ..எஸ்., அதிகாரி தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு துறை கமிஷனரின் கீழும் ஐ..எஸ்., அந்தஸ்தில் பல இணை கமிஷனர்கள் உள்ளனர். இதுதவிர, டி.ஆர்.., அந்தஸ்திலான அதிகாரிகளும் பலர் உள்ளனர்.
மாவட்டங்களை பொறுத்தவரை அனைத்து துறைகளுமே கலெக்டரின் கட்டுப்பாட்டில் வருகின்றன. எனவே, நிவாரணம் வழங்குவது என்றாலும், இலவச வேட்டி, சேலை போன்ற திட்டங்களை செயல்படுத்துவது என்றாலும் அனைத்து துறை ஊழியர்களையும் ஒருங்கிணைத்து கலெக்டர்கள் இப்பணிகளை மேற்கொள்வர். ஆனால், மாநில அளவில் அதிகாரிகள் மட்டத்தில் இத்துறை சரிவர பிரிக்கப்படவில்லை. இதனால், பல திட்டங்களை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து வறட்சி, சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிலவுவதால் இதற்கான பணிகளில் வருவாய்த் துறை கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், தற்போது வருவாய்த் துறையே முடங்கிப் போயுள்ளது. பல மாநிலங்களில் பேரிடர் மேலாண்மைக்கு என தனித் துறை உள்ளது. குஜராத்தில் இத்துறையின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ..எஸ்., அதிகாரி இறையண்புவின் சகோதரர் உள்ளார்.
தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைக்கு என தனித் துறையும் இல்லை. வருவாய் நிர்வாகம் மற்றும் நிவாரண, மறுவாழ்வுப் பணிகள் கமிஷனரின் கீழ் இத்துறை வருகிறது. வருவாய் கமிஷனரின் கீழ் ஐ..எஸ்., அதிகாரிகளான மூன்று கூடுதல் கமிஷனர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரின் கீழ் பேரிடர் மேலாண்மை வருகிறது. சுனாமி ஏற்பட்ட போது இதற்காக தனி அதிகாரி மற்றும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டனர்.
சுனாமிக்கு பிறகு பேரிடர் மேலாண்மைத் துறை தேசிய அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு ஆகியும் மாநில அளவில் இத்துறை தனியாக அமைக்கப்படவில்லை. தற்போது வெள்ள நிவாரணப் பணிகளை மிகப் பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் போதிய அதிகாரிகள் மற்றும் நிர்வாக அமைப்பு இல்லாமல் அரசு தடுமாறுகிறது.
அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்களை சமாளிக்கவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் தனியாக துறை அமைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. தனி செயலர் கட்டுப்பாட்டில் வருவாய்த் துறையும், மற்றொரு செயலர் கட்டுப்பாட்டில் பேரிடர் மேலாண்மைத் துறையும் உருவாக்கப்பட வேண்டும். அல்லது வருவாய்த் துறை செயலரின் கீழ் வருவாய் நிர்வாக கமிஷனர் மற்றும் பேரிடர் மேலாண்மை கமிஷனர் என இரு கமிஷனர் பதவிகளை உருவாக்கி, தனித் துறையாக செயல்படுத்த வேண்டும்.
அவ்வாறு வருவாய்த் துறையை மாற்றி அமைத்தால் மட்டுமே இது போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளை அரசு சிறப்பாக கண்காணிக்க முடியும்.
இது தினமலர் செய்தி இதைப் பற்றி சற்று சிந்திப்போம்

http://www.dinamalar.com/2006jan14/frontpage.asp

Friday, January 13, 2006

பிராமன சங்கம்

மணிகண்டன்

2006-ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படணும் .

யாரும் பயப்படத்தேவையில்லை எதற்காக பயப்படணும் இது எல்லாம் ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து அல்ல. மண்ணையாண்டவர் யாரோ மனையை ஆண்வர்கள் யாரோ. இமய மலையில் கொடியை நாட்டியவனும் இலங்கையின் மீது படையெடுத்தவனும் தமிழன்

எச். ராஜா எம்.எல்..,(பா...):

மாற்றங்களை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நாம் கும்பிடுகிற தெய்வத்தை நிந்திக்கிறவர்களை பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தால் நம் பக்தியிலே குறையிருக்கிறது என்று அர்த்தம். எதற்கு பொறுத்திருக்க வேண்டும்.? இத்தனை கோடி மக்கள் இருக்கும் இந்தியாவிலே இந்துக்களை மட்டும் நிந்திக்க காரணம் என்ன?

நாம்கும்பிடுகிற தெய்வத்தை திட்டுவது யார் நமது குடும்பத்தைச்சேர்நத இந்துக்கள் தான் நம்மைத்தான் திட்ட முடியும் அடுத்த வீட்டுக்காரனை திட்டினார் அவன் உதைப்பான் அதான் நம் தெய்வங்கை திட்டுகிறார் தெய்வம் இல்லை என்று சொன்ன ஈ.வே. ராமசாமி மற்றதெய்வங்கை செறுப்பால் அடித்தாரா ?ஏன் செய்ய வில்லை? அவரது சிஷ்யர்கள் அவர்வழியை பின் பன்றுகிறார்கள்.

ஆமாம் உண்மைதான் திராவிட பாரம்பரியம் இந்துக்களை மதிப்பதில்லை இந்துகோயில் களுக்க அரங்காவளர்களாக இருப்பார்கள் இந்துகளையே திட்டுவர் ஒருவர் இந்து வை திருடன்என்பார் (ஒரு வேலை வெண்ணை திருடன் கண்ணனைச் சொன்னாரோ)

நடிகர் டெல்லி கணேஷ்:
நாமெல்லாம் உதாரணப் புருஷர்கள். நாசாவில் ராக்கெட் பறப்பதற்கு நாம்தான் காரணம். பிராமண இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது. ஒரே மனித இனமா வாழ்ந்துவிடலாம் என்று பார்த்தோம் முடியவில்லை. இப்போ ஜாதி ரீதியாகத்தான் வாழமுடியுது. தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா அது ஒரு சுலோகம். பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன்.

உண்மைதான் நாட்டை ஆள்வது நாட்டை பாது காப்பது உணவு உற்பத்தி செய்வதுரோடு போடுவது நாத்து நடுவது அறுவடை செய்வது தொழிற்சாலையில் உழைப்பது எல்லாம் மற்றவர்கள். குடியனவன் சேற்றில் கை வைக்காவிட்டால் சோற்றில் நீங்கள் கைவைக்க முடியுமா?. ராக்கெட் விடாமல் சாப்பிடலாம் !வயலில் பாடுபடாமால் உண்ணமுடியுமா?

சரசுவதி ராமநாதன்:

அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கலப்பு மணங்கள் நமது கலாச்சாரத்தை சீரழிக்கிறது. பிராமின் என்று ஒரு கலாச்சாரம் இருந்தால் போதும், உட்பிரிவுகள் கூடத் தேவையில்லை என்று ஆச்சார்ய சுவாமிகள் கூறியிருக்கிறார்.

அவர்கள் சொல்வது தெரிகிறது இது காலத்தின் கட்டாயம் இதை யாராலும் மாற்ற முடியாது

மற்றவர்கள் பொறுப்பேற்க முடியாது

எழுத்தாளர் சுஜாதா:
நம்முடைய எண்ணிக்கை என்ன? நம்மை அவர்கள் தமிழர்கள் அல்லர் என்கிறார்கள், நமக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். (கைதட்டல்) சங்க காலத்தில் மிகச் சிறந்த புலவரான கபிலர் பிராமணர் .

எனக்கு ஆங்கிலேயரை விட நல்ல ஆங்கிலம் தெரியும் என்னை ஆங்கிலேயன் என சொல்ல முடியுமா? தமிழ் தெரிந்தால் தமிழனா.. வீரமாமுனிவர் வந்து இருந்து தமிழ் கற்று காவியம் படைத்தார் அவர் தமிழன் என்ற சொல்ல முடியுமா?

சினிமா இயக்குநர் பாலசந்தர்:

லவுகீக பார்ப்பானாக இருந்தாலும், வைதீகப் பார்ப்பானாக இருந்தாலும், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். பார்ப்பனர் வெறி என்பது அவர்களின் ரத்த ஓட்டமாக இருக்கிறது என்பதற்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும்? மாநாட்டில் பார்ப்பனர் சிலர் அரிவாளைச் சுழற்றிக் காண்பித்துள்ளனர். இதன் பொருள் வெளிப்படையானது.

இவரே பல படங்களில் பார்பன பெண்களை கேவளமாக சித்தரித்து படம் எடுத்தாரே

விபீஷணர் படலம் இல்லாமல் இராமாயணம் நிறைவு பெறுமா?
மாநாட்டில் பேச்சு வியாபாரி சாலமன் பாப்பையா பங்கு கொண்டு பார்ப்பனர்களைத் தலையில் தூக்கி வைத்து சதிராட்டம் போட்டு இருக்கிறார். அவாள் இல்லாமல் தமிழ் ஏது என்று அவாள் மெச்ச இச்சகம் பேசி ஆழ்வார்ப்பட்டம் பெற்றுவிட்டார். தகுந்த கூலியும் பெற்று இருப்பார் - பேச்சு

இராவணனை காட்டிக் கொடுத விபீணனை மண்ணிக்க முடியது

டோண்டு ராகவன்

ஆனால் ஒன்றை முதலிலேயே கூறிவிடுகிறேன். அரிவாளைத் தூக்கிக் காட்டுவது சற்று மிகைப்படுத்தலே ஆகும். கும்பலில் வந்த ஆக்ரோஷம் என்று கூறினாலும் சற்றே அடக்கி வாசித்திருக்க வேண்டுமென்றே நான் கூறுவேன்.

சரியாகச் சொன்னீர்கள்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் வா.வே.சு அய்யரின் பங்கு அபரிமிதமானது அதைவிட வாஞ்சினாத அய்யரின் பங்கு மேலானது. தமிழ் தாத்தா ஊ.வே.சு அய்யரின் பங்கு மறக்க முடியாது. ஐம்பெருங்காப்பியங்களை கண்டுபிடித்து உலகுக்கொடுத்து உத்தமர் ஊ.வே.சு அய்யரை அந்த காப்பியங்கள் உள்ளவரை மறக்கமுடியாது. வீரவாஞ்சிநாதனை மறக்கமுடியுமா? மேட்டூர் அணை வருவதற்கு காரணமாயிருந்த அந்த அய்யரைத்தான் மறக்க முடியுமா தமிழகத்தில் அனேக தொழிற்சாலைகள் வர காரணமாயிருந்த ஆர். வெங்கட்ராமனைத்தான் மறக்கமுடியுமா? 10ஆயிரம் பார்ப்பனர் உயிர் கொடுத்து காத்த திருவங்கத்தைத்தான் மறக்கு முடியுமா? எல்லலோரும் சங்கம் வைத்துக் கொண்டது போல் அவர்களும்சங்கம் வைத்துள்ளார்கள். அதற்கு ஏன் இத்தணை எதிர்ப்பு


அவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர் பார்பனர் சரி நீங்கள் உங்கள் ஜாதியை அவர்கள் சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. ஏன் இந்த பாகு பாடு காலங்கள் மாறுகின்றன. அனைவரும் ஒரே ஜாதி ஒரே தமிழர். அனவைரும் ஒரு தாயின் பிள்ளைகள்

யாரும் சாதிச்சங்கம் அமைக்க கூடாது பள்ளி கல்லூரிகளிலும் சான்றிதழிகளிலும் சாதிபெயர்வரககூடாத தேர்தலிலும் சாதிக்காக சீட் ஒதுக்கக் கூடாது.



Thursday, January 12, 2006

விவேகானந்தரின் பிறந்த நாள

"எழுமின்.....விழிமின்"

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று
1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிறந்தார்.

சிகாகோ சொற்பொழிவுகள்


1. வரவேற்புக்கு மறுமொழி
செப்டம்பர் 11, 1893
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். (ஒரு பகுதி மட்டும்).
கம்பரைப் பற்றிச் சொல்லும் பொழுது சடையப்பவள்ளலைப் பற்றியும் சொல்லித்தானே ஆகனும் அது போல.

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றால் விவேகாந்தரை உலகறிய செய்தவர் பாஸ்கரசேதபதியே ஆவார். 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்து சமயங்களின் மாநாட்டில் தான் கலந்து கொள்வதாக இருந்த முடிவை மாற்றி விவேகானந்தரை அங்கு அனுப்பி வைத்தது மட்டுமின்றி அவர் 4 ஆண்டுகள் அங்கு தங்கி இந்து மதத்தின் அருமை பெருமைகளை உலகளவில் பறை சாற்றி விட்டு வருவதற்கு உதவி புரிந்தவர் இவர்! விவேகானந்தர் தாயகம் திரும்பிய போது தாயகத்தில் பதிக்கும் முதல் காலடி, என் தலை மீது தான் இருக்க வேண்டும் என வேண்டி, அத்துறவியின் பாதத்ததை தன் தலையில் தாங்கியதோடு அவரை ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று அந்த ரதத்தை தானெ இழுத்து சென்ற அரச பெருமான் அவர். விவேகானந்தர் கால் பதித்த இடத்தில் கல்வெட்டு ஏற்படுத்தி அதில் அன்று அவர் பொறித்த "சத்திய மேவ ஜெயதே"(வாய்மையே வெல்லும்) இன்றும் இந்திய அரசின் தேசிய வாசகமாக உள்ளது!
ஒரு நாட்டின் மன்னர் ஒரு துறவிக்கு கொடுத்த மரியாதை அது.
நாம் கொடுக்கும் மரியாதை இன்று அவர் பிறந்த நாளில் அவரை நினைத்துப் பார்ப்பது.

Wednesday, January 11, 2006

இலங்கை போர்

இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போர் நிறுத்தம் எந்த நேரத்திலும் வாபஸ் ஆகிஅரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் பெரிய அளவில் போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகிறது.

போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறாவிட்டாலும் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஆங்காங்கே அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மன்னார், யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 115 பேர் பலியாகி விட்டனர்.ராணுவத்தின் கெடுபிடி காரணமாக தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அதிரடி தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினரும் கொழும்பு நகருக்குள் ஊடுருவி உள்ளனர்.(செய்தி)

இரண்டாம் உலகப் போரில்

இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால், இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தார் ஹிட்லர். ஆனால் அவருடைய முயற்சி பலிக்கவில்லை. "இந்தியா இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்து கஷ்டப்படுகிறது. நாங்கள் இந்தியாவை விடுவிப்போம்" என்று 1942 ஏப்ரலில் ஜப்பான் அறிவித்தது.

அதற்கு உடனடியாக நேரு பதில் அளித்தார். "இந்திய மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள். அதற்கான வீரமும், விவேகமும் இந்திய மக்களுக்கு உண்டு. எனவே இந்திய மக்களின் விடுதலைக்கு ஜப்பான் உதவி தேவை இல்லை" என்று அறிவித்தார். இந்தியாவுக்கு இங்கிலாந்து எதிரி என்றபோதிலும் ஹிட்லரும், ஜப்பானும் உலகத்துக்கே எதிரிகளாக இருந்தார்கள். எனவேதான் ஜப்பானின் உதவி தேவை இல்லை என்று நேரு கூறினார்.

இதனால் உலகப்போர்களில் இந்தியாவிற்கு நேரடியான பாதிப்பு ஒன்றும் இல்லாமல் போனது.

எப்படியோ அமெரிக்கா தலையிடாமல் இருந்தால் சரி .ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம் என்பர்.

Saturday, December 31, 2005

2006 வாழ்த்து

2006 ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


நமக்கு ஒரு வயது கூடிவிட்டதை நிணைவு படுத்த வருகிறது புத்தாண்டு

தமிழ் மணத்து நல்உள்ளங்களுக்கு என்னுடைய

ஆங்கில வருட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Saturday, December 24, 2005

சென்னையில் இன்று அழகிகள் திருவிழா:

தென் இந்திய அழகி யார்? நடிகர் தனுஷ்- ரஞ்சிதா தேர்வு செய்கிறார்கள்

சென்னை, டிச. 24-
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் இன்று மாலை தென்இந்திய அழகி போட்டி நடக்கிறது.

இறுதி சுற்று போட்டிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களை சேர்ந்த 22 அழகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாலை 6.30 மணிக்கு பிரமாண்டமான மேடையில் அழகிகள் அணி வகுக்கிறார்கள்.

இந்த போட்டியை காண தென் இந்தியாவில் உள்ள ஏராளமான மாடலிங் அழகி களும் வந்து குவிந்துள் ளார்கள். இதனால் வர்த்தக மைய வளாகம் அழகிகள் திரு விழா கூடமாக களை கட்டி உள்ளது.

தெலுங்கு சினிமா நடிகை சவுமியா தமிழக அழகிகள் அஸ்வினி, மிருதுளா உள்பட போட்டியில் பங்கேற்கும் அழகிகளில் மிஸ் தென் இந்தியா பட்டத்துக்கான அழகியை நடுவர் குழுவினர் தேர்வு செய்கிறார்கள்.

நடிகர் தனுஷ், நடிகை ரஞ்சிதா, தெலுங்கு சினிமா நடிகர் ஜீவன், ஹாய் மதன், தயாரிப்பாளர் ஏ.வி.எம். பால சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு குழுவினராக இருக்கிறார்கள்.

பட்டம் பெறும் அழகிக்கு கிரீடம் சூட்டப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. 2 மற்றும் 3-வது இடத்தை பெறும் அழகிகளுக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

போட்டிக்கான ஏற்பாடுகளை மாயாமதன், பிரதீப் குமார், பாபுஜி உள்பட பலர் செய்து வருகிறார்கள்.
நன்றி மாலை மலர்

Sunday, December 18, 2005

சென்னையில் 42 பேர் மரணம்


வெள்ள நிவாரணம் பெருவதில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் மரணம் எப்பொழுதும் போல எதிர்கட்சிகளின் ஒப்பாரி ,"முதல்வரே ராஜினாமா செய்"
"ஓ வி அளகேசா நீ ஆண்டது போதாதா! மக்கள் மண்டது போதாதா?"என அன்று தொடங்கிய திமுகவின் தாரக மந்திரம் இன்றும் நீள்கிறது.
சில பகுதிகளில் ஒரு மண்டல அலுவலரின் பொருப்பில் சில கிராமங்கள் ஒப்படைக்கப்பட்டு அவர் காலை 10 மணிக்கு வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ளவர்கள் தலைமையில் இரண்டு நபர்களை நியமித்து ஒரு நாளைக்கு 250 நபர்களுக்கு மட்டும் ரேசன் கடையில் டோக்கன் கொடுத்து பணம் வழங்கப்படுகிறது. எந்த பிரச்சனையும் இல்லை ஏன் சென்னையில் மட்டும் இந்தக்கொடுமை.
தினமலர்

Wednesday, November 23, 2005

மாண்டவர் மீண்டார்

கரூர் அருகே இறந்ததாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற பெண் மீண்டும் வீ்ட்டிற்கு உயிருடன் திரும்பிவந்தார்.
கரூர் ஈரோடு மெயின் ரொடு குட்டக்கடையிலிருந்து இரண்டு கி.மீ.யில் உள்ளது ஆலம்பாளயம் என்னும் கிராமம் இக்கிராமத்தில் வசிப்பவர் நல்லுச்சாமி இவரது மனைவி பழனியம்மாள் இவருக்கு பல ஆண்டுகளாக ஆஸ்த்துமா நோய் இருந்து வந்து பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர் ; பிறகு பெரிய டாக்டர்கள் பார்த்ததும் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியதால் இறந்து விட்டதாகக் கருதி அனைத்து சடங்குகளும் செய்து . சுடுகாட்டிற்கு கொண்டு சென்று விறகுகள் மேல் வைப்பதற்கு இருதிச்சடங்குகள் செய்யம் பெழுது உடல்அசைவதைப்பார்த்து உயிர் உள்ளதால் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
தினமலர் செய்தி

Sunday, November 20, 2005

ஆந்திராவில் ஆற்றில் அணை

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கிளை நதியான பாபி கொண்டலு நதி ஓடுகிறது. இந்த நதி மலைகளின் நடுவில் ஓடுகிறது.

இதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் இயற்கை எழில் மிகுந்த ஆறு ஆகும். இதை பல கவிஞர்கள் பாராட்டி பாடியிருக்கிறார்கள். பல திரைப்படமும் எடுத்து இருக்கிறார்கள்.

அத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் நதியின் குறுக்கே புதிய அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்து இருக்கிறது. மராட்டியம் மற்றும் சத்தீஷ்கார் மாநில எல்லையில் சுமார் 601 கிலோ மீட்டர் (இது பிழையாக இருக்கலாம்) தூரம் இந்த அணை கட்டப்படுகிறது.

இதற்கு போலவரம் நீர்த்தேக்கம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதை கட்டி முடித்தால் ஆண்டு முழுவதும் 95 கி.மீ. வரை இங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ஆனால் அழகிய பாபி கொண்டலு நதி காணாமல் போய் விடும். இதன் அருகே அமைந்துள்ள பல்வேறு கிராமங்கள் அழிந்து விடும்.

ராமகிருஷ்ண பரமஹம் சரின் சீடர் பாலானந்த சுவாமி பேரண்டம் பள்ளி ஆதிவாசிகள் கிராமத்தில் கட்டிய ஆசிரமம் அழிக்கப்படும். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள்.
மாலை மலர்
தமிழ் நாட்டில் இலவச வேட்டி சேலை வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய். இங்கு எந்த நலத்தி்ட்டமும் வரப்போவதில்லை ஜெயலலிதா தொடங்கினால் கருணாநிதி கிடப்பில் போட்டுவிடுவார். கருணாநிதி தொடங்கினால் ஜெயலலிதா கண்டுக்க மாட்டார். கர்நாடகா , ஆந்திராவில் நீர் அணைகள் அதிகரிக்கிறது , இங்கு காங்கிரசாருடன் போய்விட்டது.

Thursday, November 17, 2005

50 கோடி செலவு அபு, மோனிகாவை கொண்டுவர

மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய தாதா அபு சலீமையும், மோனிகாவையும் இந்தியாவிற்கு கொண்டுவர இதுவரை ஆன செலவு ரூ.50 கோடி.
  1. போர்ச்சுகல் நீதி மன்றத்தில் வாதாட சீனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் ஒரு மணிநேரத்திற்கு. இரண்டு ஜுனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் ஒரு மணி நேரத்திற்கு. ஒரு நாளைக்கு ஒரு சீனியர் இரண்டு ஜுனியர் வாதாடினர். ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணிவரை விசாரணை நடந்தது. தினமும் ரூ. 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை வக்கீல் கட்டணமாக செலவு செய்யப்பட்டதாம். மொத்தம் 15 நாட்கள் விசாரணை நடந்ததில் சி.பி.ஐ.க்கு ரூ.15 கோடி செலவு ஆனது.
  2. சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் இந்திய வக்கீல்களுக்கு போக்குவரத்து, தங்கும் செலவு ரூ. 3 கோடி, இவ்வாறு செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு மொத்தம் ரூ12 கோடி செலவு செய்யப்பட்டது.
  3. உச்சநீதிமன்றத்தில் வாதாட போர்ச்சுகல் சீனியர் வக்கீல் சீனியர் வக்கீல் மணிக்கு ரூ.10 லட்சம் கட்டணம் வாங்கினார். ஜுனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் கட்டணம் 2 சீனியர் வக்கீல்களையும் 2 ஜுனியர் வக்கீல்களையும் அமர்த்திக் கொண்டதில் ஒரு மணி நேர விசாரணைக்கு ரூ.30 லட்சம் செலவு. உச்சநீதிமன்றத்தில் தினமும் 6 மணி நேரம் வீதம் 6 நாட்கள் விசாரணை நடந்தது. இதனால் தினமும் ரூ.1.80 கோடி வக்கீல் கட்டணம் கொடுக்கப்பட்டதாம்.
  4. உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல்களையே அரசியல்சாசன நீதிமன்றத்துக்கும் சி.பி.ஐ. பயன்படுத்திக் கொண்டது. அங்கு 4 நாட்கள் விசாரணை நடந்தது. தினமும் ரூ.1.80 கோடி வீதம் 4 நாட்களுக்கு மொத்தம் ரூ7.2 கோடி வக்கீல் கட்டணம் கொடுக்கப்பட்டதாம்.
  5. நாடு கடத்தல் உத்தரவை அரசியல் சாசன நீதிமன்ற் பிறப்பித்ததும், டில்லியில் இருந்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று லிஸ்பனில் 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தனர். இதற்கான போக்குவரத்து மற்றும் தங்கும் செலவு ரூ.3 கோடி லிஸ்பனில் இருந்து அவர்களை அழைத்து வர தனி விமானத்துக்கு வாடகை ரூ.75 லட்சம்.
  6. மற்றும் இதர செலவுகள் ஆவணங்கள் தயாரிப்பு வாகனங்கள் வாடகை, சாப்பாட்டுச் செலவு மற்றும் இதர செலவுகளையும் சேர்த்தால் மொத்தம் ரூ.50 கோ.............டி.......
இவர்களுக்கு தூக்குத்தண்டணை கூடாதாம் . நாட்டின் பணம் எவ்வளவு சேதம் பாருங்கள்.
தகவல் தினமலர்

Sunday, November 13, 2005

திருவெறும்பூரில் காமராஜர்

ஒரு முறை திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது அதில் பெருந்தலைவர் காமராஜர் கலந்து கொண்டார். வந்து அரை மணிநேரம் ஆனது மற்றவர்கள் பேசினர் பாராளுமண்ற வேட்பாளர் எஸ்.பி.தங்கவேல் முத்துராஜா அவர்கள் போசுவார் என விழாத்தலைவர் கூறி உட்காரபோனார், என்ன நினைத்தாரோ காமராஜர் எழுந்தாதர், "முத்துராஜாவும் பேசவேண்டாம் ஒன்னும் பேசவேண்டாம் நா எங்கடுப்ப தீத்துத்துட்டுப்போறேன்"( இந்த சொல் முன்பக்கம் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்) என மைக்கின் முன்னிற்று, "நீங்க யாரும் கோவிச்சுக்கக் கூடாது நான் திருச்சினாப்பள்ளி போய் அங்கிருந்து ட்ரெய்ன் பிடித்து கொள்ளம் (கேரளா) அவசரமாக போக வேண்டும் திருச்னாபள்ளி போவதற்குள் இரண்டு ரயில்வே கேட் இருக்கு வருத்தப் படவேண்டாம் உங்கள் வாக்குகளை எஸ்.பி.முத்துராஜா வக்கில் அவர்களுக்கு போட்டு ஜெயிக்க வைத்து டெல்லிக்கு அனுப்பிவையுங்கள்." என சொல்லிவிட்டு சென்று விட்டார். எங்கு BHEL கொண்டு வந்தாரோ அதே இடத்தில்.
இதை நான் நேரிடையாக கேட்டது.
ஒரு முறை மாற்றுக் கட்சியினர் காமராஜருக்கு கல்யாணம் ஆகவில்லை குடும்பத்தப் பத்தி அவருக்கு என்ன தெரியும் என்றனர். அதற்கு காமராஜர் கலந்து கொண்ட கூடத்தில் இருவர்
ஒருவர்: ஏன்யா உங்க தலைவர் காமராஜருக்கு கல்யாணமேஆகல குடும்பத்திப் பத்தி அவருக்கு என்ன தெரியும்?
இரண்டாமவர்: ஏன்யா உங்க அண்ணாதுரைக்கு கலயாணஆயிடுச்சே ஒரு புழு பூச்சி உண்டா? என்று அவர் கேட்க
எழுந்தார் தலைவர் இருவர் சட்டையையும் பிடித்து ,"நீங்க ரொம்ப பேசீட்டிங்க உட்காருங்க." என அனுப்பிவிட்டார்.
இதை நான் படித்தது காமராஜர் வரலாற்றில்.

Saturday, November 12, 2005

கொம்பன் (கொம்புமுளைத்தவன்)

கொம்பன் என்றால் தலைவன், பலம் பொருந்தியவன், திறன்மிகுந்தவன்; இவர் கையில் ஒரு கொம்பு ,அதாவது குச்சி,தடி, கம்பு வைத்திருப்பார் அந்த கால வழக்கம்; அதாவது நாடாளும் மன்னருக்கு செங்கோல் கிராமதலைவனுக்கு அம்பலக்கோல். பேச்சு வாக்கில் நீ என்ன கொம்பு உள்ளவனோ? என்பதை கொம்பனோ! என்பது தான் மாறி கொம்பு முளைத்தவனோ ஆனது .
இதைத்தான் சனிபகவானுக்கு தனது நாவை அடகுவைத்த நமது நடிகை சுகாசினியம்மையார் கூறியது. ஒரு நிகழ்சியில் 100 நபர்கள் வந்தால் அதில் 10 நபர்கையில் கொம்பிருக்கும் அந்த பத்துபேர்தான் அவர்களது தலைவன் என அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்த பத்து நபர் எடுக்கும் முடிவை அந்த கிராமமே ஏற்றுக் கொள்ளும் இந்த வழக்கம் பழங்காலந்தொட்டு வழிவழியாக தொடர்ந்து வருகிறது இன்றும் கூட சில கிராமங்களில் உண்டு.
அந்த கோல் பெரும்பாலும் கருப்பாக இருக்கும் அது எப்படி கருப்பானது . விறகு அடுப்புவைத்து சமையல் செய்யும் அடுப்படிக்கு மேல் வைத்திருப்பார்கள் அந்த புகை பட்டு பட்டு அது கருப்பாகிவிடும்.

Friday, November 11, 2005

எங்கள் ஊரில் காமராஜ்

அப்பொழுது நான் பள்ளி மாணவன் எனக்கு வயது 8 அல்லது 9 இருக்கும் 1959 அல்லது 1960 இருக்கும், என நினைக்கிறேன் சரியாக ஞாபகம் இல்லை; எங்கள் ஊருக்கு பெருந்தலைவர் காமராஜரும், கக்கன்ஜியும் வருகிறார்கள் என சிறிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சொல்லப்போனால் கிராமமே விழாக்கோளம் பூண்டிருந்தது என்று சொல்லலாம்; அந்த அளவிற்கு மாவிலை வேப்பிலை தோரணங்கள் கூடவே காங்கிரஸ் கொடிகள்; எனது மாமா வேம்புராஜ் தொண்டமார் தான் பஞ்சாயத்து போர்டு தலைவர் அன்று. அவர் வீட்டு விஷேசம் போல விருந்து; வெளியூரிலிருந்து வந்த கட்சிக்காரர்களுக்கு அங்கு தான் சாப்பாடு. ஏன் என்றால் 5 மைல் சென்றால் தான் சுமாரான சாப்பாட்டுக்கடை BHEL வரவில்லை. ஊரில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் சட்டை போட மாட்டார்கள் வேட்டி துண்டுதான் அணிவது வழக்கம். ஒருவர் ஊரின் முக்கியஸ்த்தர் தனது வெள்ளை வேட்டையை இடுப்பில் கட்டி அதை இறக்கிவிட்டால் காமராஜர் வருவதற்குள் அழுக்காகிவிடுமாம் அதற்கா சுற்றிவைத்துக் கொண்டிருந்தார் கையில் ஒரு வெள்ளைத்தாள் அதில் எங்களது நீர் நிலைகளுக்கு பெருந்தலைவர் கொண்டு வந்த புதிய மேட்டுக் கட்டளைக் கால்வாயிலிருந்து தண்ணீர் கேட்டு எழுத்திய மனு அதில் என்னால் காணமுடிந்த வாசகம் மஹா ரா ரா ரா ஸ்ரீ காமராஜ் அய்யவுக்கு
மட்டும்தான் படிக்க முடிந்தது. மாலை சுமார் 6 மணி இருக்கும் மூன்று கார்களில் காமராஜர் கக்கன்ஜி வந்தனர். அப்பொழுத மனுக்களை முண்டியடித்துக்கொண்டு கொடுக்க முன்வந்தவர்களை காமராஜ், "ஏ ஏ ஏய்யா இப்படி தள்ளுறீங்க எல்லா மனுவையும் பொருமையாக நான் வாங்கிக்கொண்டுதான் போகப்போகிறேன்" என்றார். அப்பொழுது மனுக்களை ஒருவர் மற்றவர்களிடமிருந்து மொத்தமாக வாங்க முயற்சிக்கும் போது நான் சொன்ன அந்த பெரியவர். அவரிடம் கொடுக்காமல்," காமராஜிடம் தான் கொடுப்பேன்" என சத்தமாகச் சொல்லவும். காமராஜரின் பார்வை அங்கு திரும்பியது," யாராப்பா அங்கு விடுப்பா அவரை" என எழுந்து அங்கு போய் அந்த பெயரியவரிடம்," என்ன குறை" என கேட்க அந்த பெரியவர்," ஏங் கொளத்துக்கு ஆத்துத்தண்ணீர் வேணும்யா இஞ்சினீர் முடியாதுங்ரார்" என சொல்ல. இந்த பகுதி காரர்களுக் காகத்தானேய்யா தண்ணீர் கொண்டு வருகிறோம் உங்களுக்கு எப்படி முடியதுன்னு அந்த இஞ்சினீயர் சொன்னார் நாளையே நான் கேட்கிறேன் என அடுத்த நாள் கேட்டு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

Tuesday, November 08, 2005

கக்கன்ஜி

நல்லவர் வல்லவர் காவல்துறை அமைச்சராக எட்டு ஆண்டுகள் பணியாற்றியவர் தனக்கென

எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர் காமராஜரின்நிழல் போவே இருந்தவர் ஒரு முறை

இரயிலில் ஒரு குறிப்பட் ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுத்து இரயில் தூங்கி விட்டார்

அவர் இறங்க வேண்டிய ஸ்டேசனைத் தாண்டி வண்டி சென்று அடுத்த ஸ்டேசனில் நின்றது

அங்கு இறங்கிய அவரை டிக்கெட் பரிசோதகர் சோதணை செய்து அபராதம் கட்டும்படி கூற

அவ்வழியே வந்த ஒரு காங்கிரஸ் தொண்டர் இச்சம்பவத்தைப் பார்த்து," ஐயா இவரை

யாருன்னு தெரியலையா? இவர் தான் முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி" எனச் சொல்ல ; அந்த

பரிசோதகர்," கேள்விப்பட்டிருக்கேன் இவர் எனத்தெரியாது" என தனது வருத்தத்தை

தெரிவித்து; அபராதம் வாங்காமல் அனுப்பியுள்ளார்.

ஒரு முறை எம்.ஜி.யார். முதல்வராக இருக்கும் போது மதுரை அரசு மருத்துவமனையில்

கக்கன்ஜி சாதாரண மக்களுடன் மக்களாக தரையில் படுத்து மருத்துவ சிகிச்சை செய்து

கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு உடனே அவரை பார்த்து சென்னைக்கு அனுப்பிவைத்து

நல்ல முறையில் வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்தார்.

வெள்ளையர் ஆட்சியில் சிறையில் அடைப்பதற்கு முன் நீதிபதி விசாரணை செய்வாராம்.

என்ன சாப்பிடுவார்கள் விசாரணை செய்வது வழக்கம் அதற்கு அரிசி சோறுதான் என

எல்லோரும் கூறவர்.

அவ்வாறு கேட்கும் போது ஒரு நபரை நீதிபதி கேட்டிருக்கார்," உணக்கு கேள்வரகு கூழ்

கொடுக்கச் சொல்கிறேன்" என்றாராம் அதற்கு அவர்," அது எனக்குத் தெரியாதே" என்றாராம்.

"சரி அப்படியனால் வாரம் இரண்டு நாள் உணக்கு அரிசி சோறு தரச்சொல்கிறேன்"

என்றாராம். கக்கன்ஜியிடம் கேட்டதற்கு எதைக்கொடுத்தாலும்சரி என்று ஏற்றுக்

கொண்டாராம்.

அவர் மராமத்து இலாக பார்த்தபோது ஒரு முறை மதுரையில் பாலம் கட்ட ஒரு

தொகையை மதிப்பீடு செய்து ஒதுக்கப்பட்டதாம் கக்கன்ஜி அந்த தொகைக்குள் மேற்படி

வேலையை முடித்து விட்டார் காமராஜர்," என்ன செலவு இன்னும் எவ்வளவு பணம் தேவை"

என கேட்க கக்கன்ஜி,"ஐயா ஒதுக்கிய தொகையிலே மீதம் இருங்குங்க" என்றாராம்

இன்று அந்த தொகையும் பத்தாமல் மறுபடியும் மதிப்பீடு செய்து அதிகமாக சுருட்டக்கூடிய

காலத்தில் அவர் நாட்டிற்காக அவ்வாறு பாடு பட்ட மக்கள் தலைவரை இம்மக்கள் மறந்து

விட்டனரே.

பார்த்ததுண்டா இப்படி பெரிய மனிதரை

கேட்டதுண்டா இவர் பெயரை

சொன்னதுண்டா இவரது செயலை

அனுபவித்துக் கொண்டே மறந்து விட்டோமோ அம்மாமனிதரை

இப்படிப்பட்ட தன்னலங்கருதா தங்கங்களை மறந்ததால் போற்றாததால் தான் அப்படிப்பட்ட

நல்லவர்கள் இப்பூமியில் தோன்ற வில்லை போலும்

Friday, October 28, 2005

சன் செய்தி

திருச்சி உறையூர் பாத்திமாநகரில் தண்ணீர் சூழ்ந்துள்ளது யாரும் கவணிக்கவில்லை நடவடிக்கை எடுக்வில்லை என மக்கள் குமுறல் இன்று இரவு சன் தொலைக்காட்சியில் செய்தி.
பாத்திமா நகர் என்பது நஞ்சை நிலத்தில் வீட்டு மனைகளாக பிரித்து வீடுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு மாநகராட்சி சாலை வசதி செய்து கொடுத்துள்ளனர் ஒரு பிளாட்டை சுற்றி சாலை அமைத்தால் அந்த பிளாட் பள்ளமாகத்தானே இருக்கும் தண்ணீர் வடியவில்லை வடியவில்லை என்றால் எப்படி வடியும். இந்த ஆண்டு வடிகால்வழியாகவே காவிரி நீர் ஊருக்குள் புகுந்து விட்டது. அந்தந்த பிளாட்களில் தண்ணீர்நின்றால் அதற்கு அந்த பிளாட்காரர்தான் பொருப்பு.

Saturday, October 08, 2005

போகர் சித்தர் 4

போகர் தியானத்தில் அமர்ந்தது
போகமுனிவருக்கு ஆறுபத்து மூன்று சீடர்கள் இருந்தனர் . அவர்களுக்கு அட்டாங்க யோகங்களையும் கற்பித்து இனி நீங்கள்வெளியில் போய்க் கற்றுக் கொண்ட வித்தைகளைப் பரிசோதித்துப் பாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
அறுபத்து மூன்று பேரும் நாடெங்கும் சுற்றிப் பார்த்த பின் விண்வெளியில் தாவிஆங்கு உள்ள ஆறு தலங்களையும் நன்றாகப் பார்த்துவிட்டு மனோண்மணிதேவி எழுந்தருளியிருக்கும் இடம் வரை சென்று சிலம்பொலி கேட்டுப்பின் பூவுலகை நோக்கித் திரும்பினர். பூவுலகில் மேருமைலையை வலம் வந்து வணங்கிப் பின் கீழே இறங்கி வந்து போகமுனிவரை வணங்கினார்கள்.
போக முனிவர் மிக மகிழ்ச்சி அடைந்தவராக இனிச் சிறிது காலம் சமாதியில் இருங்கள் எனறு கூறி அனுப்பி விட்டுத் தாமும் சுணங்க மரத்தின் கீழ் வேட்டியை விரித்துப் போட்டுச் சிவயோகத்தில் அமர்ந்தார்(இங்கு எனக்கொரு அய்யம் அதாவது புலித்தோளில் அல்லவா அமந்து யோகம் செய்வர் இவர் ஏன் தனது வேட்டியை அவிழ்து போட்டு அமர்ந்தார்).அவர் மனம் வெளிஒளிப்பாழில் லயித்துப் போய் பிரம்ம நிலையில் அப்படியே தங்கிவிட்டது.
நாட்கள் கடந்தன. ஆண் ஒன்று பெண் ஒன்றுமாக இரண்டு சிங்கங்கள் அவ்வழியாக வந்தன. அந்த இடம் வாழ்க்கை நடத்த ஏற்றதாக இருப்பதாக நினைத்தன.
ஏதோ ஒரு கற்சிலை இருக்கிறது. அதுவும் நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டன.
அங்கேயே விலங்குகளை அடித்தக் கொண்டு வந்து தின்றன. அங்கேயே ஆணும் பெண்ணும் விளையாடிக் கலவியில் ஈடு பட்டு குட்டிகளை ஈன்றன. காலப்போக்கில் அங்கு ஒரு சிங்கக் கூட்டமே உண்டாகிவிட்டது.
ஒரு நாள் ஆண்சிங்கம் கற்சிலையின் மடியில் படுத்து நாவில் வாயைத் தடவிக் கொண்டிருக்கையில் சிலையின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளி ஒன்று அதன் வாயில் விழுந்தது. வெளிஒளிப் பாழில் அனுபவித்த அளவு கடந்த ஆனந்த நிலையின் காரணமாக உண்டான கண்ணீர் அது, சிங்கம் திடுக்கிட்டுப் போய்க் கீழே குதித்தது. சித்தர் முகத்தைப் பார்த்தது.
சித்தரின் உடலில் சற்றும் கூடச் சலமில்லை. ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர்த் துளிகள் சொட்டுச் சொட்டாக உருண்டு உதிர்ந்து கொண்டிருந்தன. சித்தரின் கண்ணீர்த் துளியை உண்டதால் அதற்கு ஞானம் உண்டாகிவிட்டது.
உடனே தன் மனைவி மக்களை அழைத்தது. "ஐயகோ! நாம் கற்சிலை என்று நினைத்தது சிலையல்ல இதோ பாருங்கள் கற்சிலை கண்ணீர் விடுமா? இது சிலை அல்ல. யாரோ மகான்! சமாதி யோகத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த இடத்தை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறோம். என்னென்ன தப்புத் தண்டாக்களை யெல்லாம் இங்கேயே செய்தோம்!
"ஐயகோ! ஐயகோ! முனிவர் விழித்தக் கொண்டால், நம்மைச் சபிக்கப் போகிறார்...." என்று புலம்பியது.
உடனே நிலைமையைப் புரிந்து கொண்ட பெண் சிங்கம் அந்த இடத்தைச் சுத்தப் படுத்தத் தொடங்கியது. மற்ற சிங்கங்களும் உதவிபுரிந்தன, எலும்புகளும், தோல்களுமாகக் ககிடந்த அந்த இடத்திலிருந்த அசுத்தங்களை யெல்லாம் போக்கித் தண்ணீர் தெளித்து நறுமணமலர்களைக் கொண்டுவந்து குவித்து மங்களகரமான இடமாக மாற்றிவிட்டன.
அன்று முதல் சிங்கங்கள் புலால் உண்ணுவதை விட்டுவிட்டன. ரிஷிகள் உண்பதைப் போன்று காய்கனி இலை சருகுகளைப் புசித்து வாழ்ந்தன. அவையும் சிவ சிந்தை நெறியில் நின்றன.
இப்படி இருக்கும் காலத்தில் போகமுனிவர் வெளி ஒளிப்பாழில் பதிந்திருந்த தம் மனதைவீட்டு உலகிற்குக் கொண்டுவந்தார். தன் அருகிலிருந்த சிங்கத்தைப் பார்த்து "நீ யார்?" என்று கேட்டார்.
சிங்கம் தான் விலங்காக வாழ்ந்த காலத்தில் பல தவறுகள் செய்ததையும் அவருடைய கண்ணீர்த் திவலை தன் வாயில் விழுந்ததால்,ஞானம்பெற்று அன்று முதல் தூய வாழ்க்கை நடத்தி வருவதையும் கூறித் தான் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டது.
போகமுனிவரின் அருளால் சிங்கம் ராஜ குடும்பத்தில் பிறந்து நீதியுடன் அரசாண்டு முத்திபெற்றது.

(இதை என்னால் நம்ப முடியவில்லை விலங்காக இருந்த காலத்தில் என்று சொல்வதைப்பார்த்தால் கண்ணீர் திவலை வாயில் விழுந்து விட்டதால் மனித உருவம் பெற்று விட்டாத எனத் தெரியவில்லை )
எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்து
தொரும் . . . . . . . . .

போகர் பற்றி அகஸ்தியர்



அகஸ்திய முனிவர் போகரை சீனாக்காரர் என்றே கூறுகிறார். அகஸ்தியர் பனிரெண்டாயிரம் நான்காம் காண்டத்தில் .


போகமுனிவர் சீனபதிக்கு உகந்தபாலர். காலங்கியின் சீடர் சித்தர்களில் முதன்மையானவர். புலிப்பாணியின் குரு இவருடைய தாய் தந்தையர்கள் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்கிறார் அகஸ்தியர். போகர் சலவைத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர் என்கிறார்.


அதோடு சவர்க்காரம் - சித்தர்கள் அறியவேண்டிய முதன்மையான பொருள். போகரின் தாய் தந்தையர் அதன் தன்மையை உணர்ந்தவர்கள் என்று கூறி எதிர்காலத்தில் போகர் சவர்க்கார வழலை மார்க்கம் கண்டதற்கு ஒரு அடிப்படையையும் உண்டாக்கியுள்ளார்.


பாரேதான் சீனபதி வெள்ளை மாண்பர்

பாருலகில் போகருட மரபென்பார்கள்

நேரேதான் பதினெட்டு வெள்ளை மாண்பர்

நெடிதான பூவுலகில் வாழ்ந்தாரப்பா


சீன நாட்டிலுள்ள வெள்ளை நிற மக்கள் போரின் மரபு என்பாரகள். உலகத்தில் பதினெட்டு வகையான வெள்ளை மனிதர்கள் உண்டு. அவர்களிலே சீனர்களும் ஒருவகையாவர்.


பால்குடிக்கும் பச்சிளங் குழவிப் பருவத்திலும், ஆறேழு மாதங்கள் உடைய இளம் சிசுவாக இருந்த போதும் குழந்தை பேசும் சொற்களைக் கேட்டுத் தாயார் திடுக்கிடுவாள். உலக அதிசயங்களில் ஒன்று போல் தன் வயதுக்கு மீறிய சொற்களைக் கூறும்.


மந்திரச் சொற்களை மழலை மொழியில் தாறுமாறாக உச்சரிக்கும். உலகத்தின் நிலையாமை பற்றியும் எல்லோக்கும் தாயான ஒருத்தி இருக்கிறாள் என்றும் கூறும். குழந்தை இப்படிப் பேசுவதைக்க கண்ட தாயானவள்,"அது என்னமோ ஏதோ தெரியவில்லையே?" என்று மிகுந்த துக்கம் அடைவாள்.

அவ்வாறு தாயார் துக்க மடையும் சமயங்களில்,"அம்மா நீ ஏன் கவலைப் படுகிறாய்? என்னைச் சாதாரண மனிதன் என்று நினைத்துக்கொள்ளாதே. நான் பிறவிக் கடலைத் தாண்டிப் பெரும் பேறடையப் பிறந்தவன். இந்த உலகம் எல்லாம் சுற்றி வரப்போகிறேன் . ஏழுகடல்களையும் தாண்டிப் போகப் போகிறேன்," என்றெல்லாம் வித்தாரம் பேசும்.


சிறு குழந்தையாக இருந்தபோதே ஞானத்தை உபதேசிப்பவர் போல் பேசுவார். பெரிய ஞானிபோல் பேசுவார், பிற்காலத்தில் உலகத்திற்கு அநேகம் நூல்களை அளிக்ப் போகிறவர் அல்லவா? அவர் இந்த உலகத்தின் மேல்நெடுங்காலம் இருந்தார்.


அகத்தியமுனிவர் போகரைப்பற்றி இவ்வாறு கூறுகிறார். அகத்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூல் மட்டும் கிடைக்காமலிருந்தால் போகரைப் பற்றிய இந்த வரலாறு உலகிற்கு தெரியாமலே போயிருக்கும்.

அது மட்டுமன்று, போ_யாங் என்ற சீனப் பெயரே போகர் என மருவியது என்று துணிவாரும் உளர். உலகத்தில் எங்குமே இல்லாத பெயராக பேகர் என்ற பெயரை உண்டாக்கி போகத்தில் ஆழ்ந்து போனவர். ஆகையால் அப்பெயர் ஏற்பட்டது என்ற வதந்தியை உண்டாக்கி அவதூறுக் குள்ளாக்கப் பட்டார். அதற்குத் தக்கபடி கதைகளும் உண்டாக்கப் பட்டன என்று கருதுவார் பலர்.

பேகர் என்ற பெயருக்கு நியாயமான, ஒரு காரணம் கற்பிக்க விரும்புபவர் சகலதுறைகளிலும் துறை போயவர் ஆகையல் போகர் என்ற வெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.


போ_யாங் என்ற பெயர் போ_யர் என்று மரியாதை நிமித்தம் அழைக்கப்பட்டு போகர் என்று மருவியிருக்கலாம் என்பதே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.


போகர் ஏழாயிரத்தில் பேகர் தம்மைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்

உரைத்தோமே எந்தனிட சாதிமார்க்கம்

உத்தமனே விஸ்வகர்மன் என்னலாகும்

திரைத்ததொரு எந்தனது தலைமுறைதானப்பா

திரளான பதினெட்டுத் தலைமுறையேயாகும்


பேகர் தாம் விஸ்வகர்ம குலத்தில் ஐந்து பிரிவுகளில் ஒன்றில் பிறந்ததாக கூறுகிறார் .அதில் இருந்து போகர் பொற்கொல்லர் குலத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகின்றது ஆனால் கருவூரார் தமது வாதகாவியம் 700-ல்

பாரப்பா போக நாதர் பண்பள மட்குலால்

நேரப்பா ஜெனித்து யிந்த நீணிலமதனி லேதான்

மட்குலாலர் = குயவர்

என்று கூறுகிறார்

அகஸ்தியரும் தமது அமுத கலை ஞானம் 1200 என்ற நூலில்

உறுதியுள்ள போகனுமே குசவன் சாதி

ஓகோகோ அவன்பாடல் லக்கோ இல்லை

என்று கூறுகிறார்.

எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்து

எது எப்படியோ நமக்கு போகர் தமிழ் நாட்டுக்காரர் அது போதும்


தொடரும் . . . . . .

http://palani.org/bhogar-biography.htm

Friday, October 07, 2005

போகர் சித்தர் - 2

பேகர் சீனாவிலிருந்து மூன்று சீடர்களோடு தமிழ் நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். நன்றியுள்ள ஒரு நாயும் அவர்களை விடாமல் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
இமய மலைகளின் கொடிய குளிரும் நெடிய பயணமும் அவர்களை வருத்தின. குளிரைத் தாங்கவும் நடைக் களைப்பால் சோர்ந்து போகாமலிருக்கவும் போகர் பல அரிய மூலிகைகளைக் கொண்டு காய கல்பக் குளிகைகளைச் செய்து கொண்டு வந்திருந்தார்.
அந்தக் குளிகைகளில் ஒன்றை முதலில் அந்த நாய்க்குக் கொடுத்தார். குளிகையை விழுங்கியவுடன் நாய் சுருண்டு மடங்கி விழுந்தது. பிறகு ஒரு சீடனுக்குக் கொடுத்தார். அவனும் விழுந் பிணம் போல் கிடந்தான் பிறகு மற்ற சீடர்கள் இருவருக்கும் கொடுத்தார்.
சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்குச் சாக மனம் வரவில்லை. குளிகையை விழுங்குவது போல் பாசாங்கு செய்து விட்டு மறைத்து வைத்துக் கொண்டனர்.
போகமுனிவர் தாமும் ஒரு குளிகையை விழுங்கினார். அதே இடத்தில் இறந்தவர் போல் விழுந்து விட்டார்.
சீடர்கள் குளிகைகளை வீசி எறிந்தனர். "ஐயோ குருநாதா! போய்விட்டீர்களே" என்று அடித்துக் கொண்டு அலறி அழுதனர். பிறகு இறந்தவர்களை நல்லபடி அடக்கம் செய்யவேண்டும் என்று நினைத்தவர்களாகப் பெட்டிகள் வாங்கிக் கொண்டு வருவதற்காகச் சென்றனர்.
அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது இறந்து கிடந்தவர்களைக் காணவில்லை. போகமுனிவரும் அவருடைய உண்மையுள்ள சீடனும், நாயும் வெகு தொலைவில் போய்க் கொண்டிருந்தனர்.
காய கல்பக் குளிகையின் வேகம் தாங்காமல் மூர்ச்சித்து விழுந்தபின் அந்தக் குளிகை உடலில் வேலை செய்து பல மாற்றங்களை உண்டாக்கிப் புதிய தெம்புடனும் ஆற்றலுடனும் அவர்களை எழச் செய்திருக்கிறது. மூடர்களான சீடர்கள் அதை உணரவில்லை. தமது அறியாமையை நினைத்து வருந்தியபடி சீடர்கள் வந்த வழியே திரும்பினர்.
சீனாவிலிருந்து போகமுனிவரை புலிப்பாணி சுமந்து கொண்டு வந்தார் என்று சொல்வதை விட இந்தக் கதையே பொருத்தமாக இருக்கிறது. போகமுனிவர் பழனியில் வாழ்ந்தார். தண்டபாணி சிலையை நவ பாஷாணக் கட்டால் சமைத்தார். கோவிலில் பிரதிஷ்டை செய்தார். தமக்குப் பின் புலிப்பாணியை பூஜை முதலானவற்றைக் கவனித்துக் கெகாள்ளும்படி நியமித்துவிட்டுச் சமாதியடைந்தார். (பழனியாண்டவர் சந்நிதிக்குப் பின்புறத்திலேயே போகர் சமாதி இருக்கிறது) என்பவை கண்கூடாகத் தெரியும் உண்மைகள். ஆயினும் போகர்டவரலாறு மிகவும் சர்சசைக் கிடமளிப்பதொன்றாகும் . அவரைப் பற்றி வழங்கப்பட்ட கட்டுக் கதைகளும் ஏராளம்.

எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்துதொடரும்.........

போகமுனிவர்

மெய்வழிகண்டவர் என்று திருமூலர் பிரானால் தம்மோடொப்பாக வைத்துச் சிறப்பிக்ப்பட்ட போகமுனிவர் திருமூலர் காலத்தைச் சேர்ந்தவராகத்தானே இருக்க வேண்டும்?
ஆனால் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் அறிஞர் மு. அருணாசலம் போகர் பதினாறாம் நூற்றாண்டில் பழனியில் வசித்ததாகக் கூறுகிறாரே?
எது உண்மை?
இந்த ஐயம் தோன்றுவது இயல்பே.
போகர் தமிழகத்தில் இருந்தார். சீனத்துக்குச் சென்றார். அங்கே பல காலம் வாழ்ந்திருந்து சீனமொழியில் பல நூல்களைச் செய்தார். பின் தமிழ் நாட்டுக்குத் திரும்பிவந்தார். பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷாணக் கட்டால் அமைத்தார் என்று எடுத்துக் கொள்டவது சரியாக இருக்கலாம்.
போகமுனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்தபோதிலும் அவற்றைவிட மிகமிக அதிகமாகச் சீனமொழியில் இயற்றியுள்ளார். சீனாவில் அவருக்கு போ-யாங் என்று பெயர் என்றும் வா-ஓ-சியூ என்ற பெயரில் சீனாவின் தலை சிறந்தஞானி என்று கொண்டாடப்படுகிறார் என்றும் போகரைப் பற்றி நீண்ட ஆய்வுகள் செய்துள்ள பேராசிரியர் இராமையா யோகி அவர்கள் தமது போகர் சத்தகாண்டம் நூலின் பதிப்புரையில் கூறியுள்ளார். இவர் அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருந்தவராகையால் இவர் கூற்றில் ஐயப்பாட்டிற்கு இடமிராது என்று நம்புகிறோம்.
போ-யாங்=போகர்
போகமுனிவர் சீன நாட்டில் போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்து சீன நாட்டவராகவே வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது.
சீன நாட்டில் நெடுங்காலம் வாழ்ந்தபின் தமிழ்நாட்டுக்கு வந்த போது சீனத்து உடலிலேயே வந்தாரா அல்லது தமது பழைய உடலோடு வந்தாரா என்பதும் தெரியவில்லை.
போகமுனிவர் சீனநாட்டுக்குச் செல்வதற்கு முன்டபுதான் கொங்கணவர், கருவூரார், இடைக்காடர், சட்டைமுனி போன்ற சீடர்கள் அவருடன் இருந்தார்கள்.
சீனத்திலிருந்து அவரோடு வந்தவர் புலிப்பாணி என்பர். புலிப்பாணியே சீனாவுக்குச் சென்று அவரைக் கண்டு படித்து அழைத்து வந்ததாகவும் முதுமை காரணமாக போக முனிவரால் நடக்க முடியாததால் புலிப்பாணி அவரைத் தமது முதுகில் சுமந்து வந்ததாகவும் கூறுபவர்களும் உண்டு.
ஆனால் சித்தரின் உடலுக்கு முதுமை என்பது ஏது?
போகர் சீனாவிலிருந்து திரும்பி வந்தது பற்றி வேறொரு வரலாறும் கூறப்படுகிறது.

எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்து

தொடரும்.........

Sunday, October 02, 2005

இளவரசி டயானா

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா உலகப் புகழ்பெற்ற பெண்மணி. இளவரசர் சார்லசை மணந்து வில்லியம், ஹாரி என்ற குழந்ஹைகளுக்கு தாய். சார்லசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அரச குடும்பதை விட்டு பிரிந்தவர்.
பின் டோடி அல் பயத்துடன் காதல் கொண்ட அவர் 1997-இல் பாரீஸ் நகரில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். டயானா அரச குடும்ப வாழ்க்கையை விரும்பாத சுதந்திர பறவை. ஆனால் அந்த இளம் பறவை பலரின் வேட்டைக்கு உள்ளான மர்மங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளன.

டயானா வாழ்க்கையில் நடந்த திரைமறைவு ரகசியங்களை அவரிடம் 6 வருடம் மெய்க்காப்பளராக பணியாற்றிய கென்வார்ப் அம்பலப்படுத்துகிறார்.

1993-ம் ஆண்டு டயானா தனது மகன்கள் வில்லியம், ஹாரியுடன் ஆஸ்திரியா லீச் நகரத்திற்கு பயணம் சென்றார். அது பனி சறுக்கு விளையாடுவதற்கு ரம்மியமான இடம். பல்வேறு நாடுகளின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களும் கோடீசுவரர்களும் குவியும் நாடு அது. சொர்க்கலோகம் போன்ற உல்லாச வாழ்க்கை நகரம் அது.
அங்கே ஆல்ப்பெர்க் ஓட்டலில்தான் டயானா தன் இரு மகன்களுடன் தன்கி இருந்தார்.

ஒருநாள் சரியாக காலை 6 மணிக்கு நான் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தேன். திடீரென எனது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. நான் என் உறக்கத்தை கலைத்து விட்டு கதவை திறந்தேன். இரவு நேர பாதுகாப்பு அதிகாரி மார்க் ஜாவோஸ்கி நின்றிருந்தார். அவரது முகத்தில் பீதி பரபரப்பு.

இளவரசி இப்போது நன்றாகத்தானே இருக்கிறார் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மார்க் எதற்காக இப்படி பூடகமாக கேட்கிறார் என்று நினைதேன். என்ன நடந்தது என்று கேட்டேன். மார்க் மூச்சு வாங்கியவாறே பேசத்தொடங்கினார்.

அதிகாலை 5.30 மணி இருக்கும் ஹோட்டலின் கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. ஓடிசென்று பார்த்தேன்
கரிய இருளில் ஸ்கார்ப், தொப்பி அணிந்து இளவரசி வெளியே நின்று இருந்தார். என்னைபார்த்தும் குட்மார்னிங் என்று கூறி விட்டு தனது அறைக்கு போய்விட்டார்.

அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. மார்க் யாருக்கும் தெரியாமல் எப்படி இளவரசி வெளியே போனார்
இப்போது அவர் எங்கே. என அடிவயிற்றில் இருந்து கேள்வி வந்தது. அவரது ரூமில்தான் இருக்கிறார் என்று மார்க்கூறியதும் தான் எனக்கு நிம்மதி வந்தது. எப்படி போனார் நான் மார்க்கிடம் கேட்டேன் அவர் முன்பக்க வாசல் வழியாக அவர் போயிருக்க வாய்ப்பு இல்லை மார்க் அப்படி சொன்னதும் நான் வெளியே எட்டி பார்த்தேன்.

நாங்கள் அந்த ஓட்டலின் முதல் மாடியில் தங்கி இருந்தோம். பால்கனியில் இருந்து கீழே உள்ள புல் தரைக்கு 20 அடி உயரம் இருக்கும். அவர் பால் கனி வழியாக குதித்துதான் வெளியே சென்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். உடனே நான் கீழே சென்று புல்வெளியை பார்த்தேன். அங்கு காலடி தடங்கள் இருந்தன.

நல்ல வேளை அவர் கீழே குத்தித போது பனி அதிகமாக பெய்து கொண்டு இருந்ததால் அவருக்கு அடியேதும் விழவில்லை.

இளவரசி அதற்கு முந்தைய ஆண்டுதான் இளவரசர் சார்லசிடம் இருந்து பிரிந்து இருந்தார். பதிரிகைகாரர்களும் புகைப்படக்காரர்களும் துரத்தி துரத்தி செய்தி சேகரித்த நேரம் அது.

மறுநாள் டயானாவிடம் நீங்கள் நேற்று இரவு எங்கு சென்றீர்கள் என்று கேட்டேன். அது எனக்குள் இருக்க வேண்டிய ரகசியம் என்று கூறிவிடார். அத்துடன் நான் பேச்சை முடித்துக் கொண்டேன். இரண்டு வாரங்கள் கழித்து நான் லீச் நகருக்கு சென்ற போதுதான் அவர் யாரை சந்திக்க சென்றார் என்பது தெரியவந்தது.
செல்சியா (இங்கிலாந்து) நகரின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஹோரே என்பவரும் ஒருவர். ஈரானிய ஓவியக்கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர் இவரது மனைவி டாயனே. இவர் பிரெஞ்சு அரச குடும்பத்தை சேர்ந்த பெண்மணி. இதனால் இவர்களுக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தவருடன் நெருக்கம் உண்டு.
1985-ம் ஆண்டு ஹோரேவும் அவரது மனைவி டாயனேவும் ஒரு முறை லண்டனுக்கு வந்தார்கள். இருவரும் ராணியின் விருந்தினர்களாக ஒருவாரம் `வின்ட்சர் காஸ்டில்' அரண்மனையில் முகாம் போட்டார்கள். அந்த ஒரு வாரமும் கேளிக்கை, விருந்துதான். `ஹோரே' பார்ப்பதற்கு ஆள் ஜோராக இருப்பார். அப்போது ஹோரேவுக்கு வயது 39. இளவரசி டயானாவுக்கு வயது 25.

ஹோரேவும், டயானாவும் ஒருவரையொருவர் அப்பொழுதுதான் முதல் முறையாக பார்த்துக் கொள்கிறார்கள். ஹோரே கை குலுக்க முன்வருகிறார். (அரச குடும்பத்தில் ஆண்-பெண் கைகுலுக்கி கொள்வது சகஜம்). ஆனால் டயானாவின் முகத்தில் வெட்கம், நாணம் பீறிடுகிறது. தயங்கிக் கொண்டே ஹோரேவுடன் கைகுலுக்குகிறார்.

அதன்பிறகு டயானாவே, `தான் ஹோரேவுடன் கைகுலுக்கியபோது வெட்கப்பட்டதாக' ஒப்புக் கொண்டும் இருக்கிறார். ஹோரேயின் மனைவி டாயனேவும் இளவரசி டயானாவும் அவரவர் குடும்ப சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள `நட்பு' வலுப்பெற்றது.

டயானா, ஹோரேயையும் அவரது மனைவி குழந்தைகளையும் தனது கென்சிங்டன் மாளிகைக்கு அழைத்து விருந்தும் கொடுத்தார். இந்த நேரத்தில்தான் இளவரசர் சார்லஸ்- காதலி காமில்லா பார்க்கர் விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது.

ஹோரேயிடம் தனது மனக்குமுறலைக் கொட்டினார் இளவரசி. ஹோரேயும் சார்லஸ்- டயானா பிரச்சினையை தீர்க்க முன் வந்தார். அது திசைமாறியது. சார்லஸ்-காமில்லா பார்க்கர் `காதல்' விவகாரத்தை ஹோரே மூலம் தணிக்க முயன்ற இளவரசி டயானா மெல்ல மெல்ல காதல் பாதைக்கு மாறிவிட்டார்.

ஹோரேவுக்கோ `டபுள்' கொண்டாட்டம். ஒருபக்கம் இளவரசர் சார்லஸ்_காமில்லா விவகாரத்தை தலையிட்டு சமாளிப்பது மாதிரி போக்கு காண்பித்துக் கொண்டே டயானாவின் அன்பையும் பெற்று விட்டார்.

செல்சியா நகருக்கு ஹோரே திரும்பிய பிறகும் டயானா சும்மா இருக்கவில்லை. அவ்வப்போது போனில் சார்லஸ் பற்றி தொண தொணக்க ஆரம்பித்துவிட்டார். ஹோரே ஆறுதல் கூற டயானாவுக்கு அவர்மீது அபரிமிதமான காதல் வளர்ந்தது.

1992-ம் ஆண்டு வாக்கில் டயானா முழுவதுமாக தன்னை மறந்து ஹோரேவை காதலிக்க தொடங்கிவிட்டார். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஹோரேவை முதல் தடவையாக டயானா பார்த்தபோதே அவரிடம் மனதை அடகு வைத்து விட்டார். ஒரு கம்பீரமான ஆண் என்றால் ஹோரேயை மாதிரித்தான் இருக்கவேண்டும் எனவும் நினைத்தார்.

இவர்கள் இருவரும் இது போன்று காதலை வளர்த்துக் கொண்டாலும் பட்டும் படாத மாதிரி சற்று தூரத்தில் நிற்பது மாதிரித்தான் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

ஒரு நாள் சார்லஸ் இல்லாத நேரத்தில் ஹோரே இளவரசி டயானாவின் கென்சிங்டன் அரண்மனைக்கு வந்தார். இது புதிய விஷயம் அல்ல. இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின் டயானா என்னிடம் உதிர்த்த வார்த்தைகள்தான் என்னால் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. "கென், நாங்கள் பேசிக்கொண்டுதான் இருந்தோம். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இனிமையான மனிதர்" என்று என்னிடம் சொன்னார்.

"ஒரு ஆண் அழகானவர், பழகுவதற்கு இனிமையானவர் அனுபவம் வாய்ந்தவர்" என்றால் அதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

அன்று விடிகாலை 3.30 மணி இருக்கும். இளவரசியின் அறை பக்கமிருந்து திடீரென்று `புகை அலாரம்' அடிக்க ஆரம்பித்தது. நான் "ஐயோ இளவரசிக்கு என்ன ஆயிற்றோ ஏது ஆயிற்றோ" என்ற பீதியில் அலறியவாறு அவரது அறையை நோக்கி ஓடினேன். ஆனால் இளவரசியின் அறைக்குள் நுழையும் முன்பே ஒரு போலீஸ்காரன் என்கிற முறையில் அங்கே நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது.

அந்த அறையில் ஒரு பெரிய செடி. அருகே தலைகலைந்த கோலத்தில் ஹோரே சிகரெட்டை உறிஞ்சி இழுத்துக் கொண்டிருந்தார். டயானாவுக்கு சிகரெட் புகையை சுவாசிக்க பிடிக்கவில்லை. அதனால் ஹோரேயை சற்றுத்தள்ளிச் சென்று புகை பிடிக்கும்படி கூறி இருக்கிறார். ஆனால் `புகை அலாரம்' அங்கு இருந்ததை டயானா மறந்துவிட்டார். அதனால்தான் அலாரம் அடித்து இருக்கிறது.

நான் அங்கே வந்ததை ஹோரே விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. என்றாலும் அவரது சிகரெட்டை அணைக்கச் சொன்னேன். அவர் பயந்தவாறே என்னைப்பார்த்தார். பிறகு கீழே விழுந்த நெருப்புச் சாம்பலை கூட்டி தள்ளினார். பின் அங்கிருந்து சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் இந்த சம்பவத்தை நான் வேடிக்கையாய் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த டயானாவிடம் விவரிக்க முயன்றேன். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் சென்று விட்டார்.

இளவரசர் சார்லசைப் பிரிந்த டயானாவின் கவனம் முழுக்க முழுக்க ஹோரே மீதே இருந்தது. அதனால் இந்த விஷயம் வெளியே கசிந்தால் உங்களுக்குத்தான் ஆபத்து என்பதை டயானாவிடம் வெளிப்படையாகவும் சொன்னேன்.

இளவரசி அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க இல்லை. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டார்.

தனிமை, பிரிவு அவரை வாட்டியது. குழப்பமான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டார். ஹோரேயுடன் எப்படியாவது தனது உறவை நீட்டிக்க விரும்பி அவரது மனைவி டாயனேவை தோழியாக்கிக்கொள்ளவும் முனைந்தார். இதுவும் கைகூடவில்லை. அவரது, வேதனை, ஆற்றாமை, ஏமாற்ற உணர்வு பெருகப் பெருக `தேவைகள்' அதிகப்பட்டுக் கொண்டே போயின.

இதனால் செல்சியாவில் இருந்த ஹோரே வீட்டுக்கு போன்மேல் போன் போட்டார். இரண்டு மாதத்தில் அவர் ஹோரே வீட்டுக்கு போட்ட போன் கால்கள் மட்டும் 400-க்கும் மேலிருக்கும்.

எதிர்முனையில் போனை ஹோரே எடுத்துப்பேசினால் மட்டுமே இளவரசி டயானா அவருடன் சுவாரஸ்யமாக பேசுவார். அவர் மனைவி டாயனே எடுத்தது தெரிந்தால் போனை `டொக்'கென்று வைத்து விடுவார்.

இந்த `அனாமதேய' போன் தொல்லையால் அவதிப்பட்ட ஹோரேவின் மனைவி டாயனே போலீசில் புகார் செய்துவிட்டார். விசாரணை நடந்தது. அப்போது அந்த போன் கால்கள் எல்லாமே கென்சிங்டன் மாளிகையில் இருந்து பேசப்பட்டவை என்பது தெரிந்தது.

டயானாவிடம் விசாரணை நடந்தது. அடியோடு இல்லை என்று சொல்லிவிட்டால் நம்ப மாட்டார்கள் என்று உணர்ந்த இளவரசி "நான் ஹோரே வீட்டுக்கு போன் செய்து பேசியது உண்மை. ஆனால் நான் பேசியவை கொஞ்சம்தான். மற்றவற்றை நான் பேசவில்லை" என்று மழுப்பிவிட்டார்.

அந்த விஷயம் அதோடு முடிந்து விட்டது. ஆனால் அன்று `லீச்'சில் தங்கியிருந்தபோது ஹோட்டல் பால்கனியில் இருந்து இளவரசி டயானா குதித்து எங்கே சென்றிருப்பார் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. `ஹோரேவும் லீச்' வந்திருந்தார். அவர் தங்கியிருந்த இடத்துக்குத் தான் அந்த நள்ளிரவில் டயானா சென்றார் என்பதை இன்னும் சொல்லவும் வேண்டுமோ?
  
டயானாவின் மெய்க்காப்பாளராக பணியாற்றிய கெனëவார்ப் இளவரசியின் காதல் அனுபவங்களை தொடர்கிறார்.
அரச குடும்பத்தவர்கள் தங்களது அந்தரங்க விஷயங்களை முழுமையாக மறைத்து விட இயலாது. மறைப்பதும் கடினம். இதற்கு டயானாவும் விதி விலக்கானவர் அல்ல. அவருடைய பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் அவர் சில விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும்.

இளவரசி தோழிகள் யாருடனாவது தியேட்டருக்கு செல்ல விரும்பினாலோ, அல்லது ஆண் ஆதரவாளர் எவருடனாவது சாப்பிட விரும்பினாலோ அதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப நான் பணிபுரிய வேண்டும்.

ஹைகுரோவ் மாளிகையில் இருந்த தலைமை இன்ஸ்பெக்டர் கிரஹாம் சுமித் நான் டயானாவிடம் பணிபுரிய வருவதற்கு முன்பே என்னிடம் ரகசியமாக சொன்னார். "இளவரசிக்கு ஒரு ஆணுடன் தொடர்பு உண்டு. அவர் குதிரை பயிற்சியாளர் கேப்டன் ஜேம்ஸ் ஹெவிட்."

அரச குடும்பத்தில் யார்எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி மெய்க்காப்பாளார் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பாது காப்பாக இருக்கிறார்களா? அவர்களை எவ்வாறு பாதுகாப்பது? என்பதே எங்கள் பணி.

இளவரசி டயானாவிடம் வேலைக்கு சேரும் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஜேம்ஸ் ஹெவிட்டை இளவரசி சந்தித்து இருக்கிறார். டயானாவìன் மெய்க்காப்பாளரான பின்பு `ஹெவிட்' உடன் பேசிய விஷயங்களை அவர் என்னிடம் கூறியிருக்கிறார். ஹெவிட் உடனான முதல் சந்திப்பு இயல்பாக இருந்ததாக என்னிடம் டயானா கூறுவார். அதனால் அவார் மீது டயானாவுக்கு ஈர்ப்பு உண்டு என்பதை அறிவேன்.

ஹெவிட் அரச குடும்பத்தின் குதிரையேற்ற பயிற்சியாளர். குதிரையில் சவாரி செய்வதில் உள்ள சிக்கல் பற்றி டயானா கூறும்போதெல்லாம் அதை சுலபமாக சமாளிப்பது எப்படி என்று ஹெவிட் விளக்கி கூறுவார். இயல்பாக இருந்த இவர்களது பேச்சு சந்திப்பு `உறவு' வைத்துக் கொள்ளும் அளவிற்கு மாறிப்போனது.

இளவரசர் சார்லஸ் மீது டயானா உயிரையே வைத்திருந்தார். ஆனால் உடல் டயானாவிடமும் உயிர் காமில்லா பார்க்கரிடமும் இருந்தது. இதனால் நொறுங்கி போயிருந்த டயானாவுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது. அந்த வடிகாலாய் வந்து வாய்த்தார் ஜேம்ஸ் ஹெவிட். ஏற்கனவே பெண் பித்தர் என்று பெயரெடுத்தவர் அவர். அதனால் இளவரசி டயானா போன்றவர் கிடைத்தால் விடுவாரா என்ன? தனது உடல் இச்சைகளை தணித்துக் கொள்ள தயாராகி விட்டார்.

நீங்கள் கள்ளத்தொடர்பு வைத்தால் எனக்கு வைக்கத் தெரியாதா? என்பது போல இருந்தது டயானாவின் தேடுதல்.

ஒரு புறம் சார்லஸ், காமில்லா பார்க்கர் ஜோடி காதல் களியாட்டம் போட இன்னொரு பக்கம் ஹெவிட், டயானா சல்லாபம் என்று ஹைகுரோவ் மாளìகை காதல் சண்டைக்களமாக மாறிப்போனது. ஆனால் சார்லஸ் கொஞ்சம் அடங்கிப் போவார். இளவரசியை சமாதானப்படுத்துவார். ஆனால் எதுவும் எடுபடாது.

பல தடவை சார்லஸ் பிரச்சினைகளை மறந்து தனது நண்பர்களை டின்னருக்கு அழைத்து வருவார். "டயானாவோ உங்கள் அழுகிப்போன நண்பர்களை நான் எதற்கு கவனிக்க வேண்டும்.? அவர்கள் எனது நண்பர்களே அல்ல!" என காட்டு கத்தாக கத்துவார்.

இருவருக்குமìடையே பனிப்போர் நீடித்தது.

ஹெவிட்டை முதன் முதலாக நான் மத்திய லண்டனில் உள்ள `நைட்ஸ் பிரிட்ஜ் பாரக்ஸில் சந்தித்தேன். கூடவே டயானாவும் இருந்தார். என்னை இளவரசியின் மெய்க்காப்பாளன் என்று நினைத்தாரோ, அல்லது காதலியின் காவலன் என்று நினைத்தாரோ எனக்கு ஏக மரியாதை கொடுத்தார் தனது காதலுக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று கூட அவரது உபசரிப்புக்கு அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

ஹெவிட் மீது இருந்த காதலை டயானா என்னிடம் எடுத்த உடனே கூறி ஒப்புக் கொள்ளவில்லை. வெளிப்படையாகவும் பேசத் தயங்கினார். எனக்கு தர்ம சங்கடமாகிப் போனது.

இந்த சூழ்நிலையில்தான் ஹெவிட்டின் தாயார் ஷெர்லியை டேவன் நகரில் உள்ள அவரது வீட்டில் டயானா சந்தித்துப் பேசி பரபரப்பை உண்டு பண்ணிவிட்டார்.

நான் "இதெல்லாம் வேண்டாம் அம்மா உங்களுக்கு சரிப்பட்டு வராது." என்று எவ்வளவோ கூறிப்பார்த்தேன். எதையும் கேட்கவில்லை.

இன்னொரு நாள்.

குதிரை சவாரிப் பயிற்சிக்காக இளவரசி அடிக்கடி வெளியே செல்வதுண்டு. அப்படிபோன போது ஷெய்லிங் காட்டேஜில் நாங்கள் தங்கியிருந்தோம்.

அன்று மாலை நான் சமையல் செய்து கொண்டிருந்தேன். (இந்த பொறுப்பும் எனக்கு உண்டு) இளவரசியும், ஹெவிட்டும் வெளியே ஹாலில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருநëதார்கள்.

ஒரே கூத்து, கும்மாளம்தான். அதன் பின் இரவு வரை நான் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் சீட்டு விளையாடுவதில் மும்முரமாக இருந்தேன். இளவரசி வந்ததும் அவர் எழுந்து கொண்டார். இருவரும் மாடிப்படியில் ஏறி படுக்கை அறைக்குச் சென்றனர்.

மறு நாள் காலை டயானா வெகுநேரம் கழித்து எழுந்தார். வெளியே வந்த போது அவர் தலைமுடி கலைந்து இருந்தது.

சிறிது நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டவர் வெளியே கிளம்பி விட்டார். ஜேம்ஸ் ஹெவிட்டுடன் தனியாகத்தான் புறப்பட்டார். அந்த காட்டேஜிலë தங்கியிருந்த நாட்களில் ஜேம்சும், டயானாவும் எங்கு போனாலும் தனியாகத்தான் போவார்கள். வாக்கிங் போனால் கூட அவருக்குத் துணை ஜேம்ஸ் ஹெவிட்தான்.

இவர்களது ரகசிய காதல் வெளியுலகத்திற்கு தெரிய வந்த போதுதான் சார்லசும், டயானாவும் பிரிவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஹெவிட்டுடன் இருந்த தொடர்பால் டயானாவின் 2-வது மகன் ஹாரி ஹெவிட்டுட்டுக்கு பிறந்திருக்கலாம் என்று கூட வதந்திகள் வெளியாயìன.

ஆனால் ஹாரி பிறந்த பிறகுதான் ஹெவிட்- டயானா உறவு மலர்ந்தது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும்.

டயனா ரகசியங்கள்...4