Sunday, February 12, 2006

ஜாலியன் வாலாபாக் - 2 -

பதில்: "ஆமாம்; அப்படித்தான் சொன்னேன்."

இருப்பதற்குள் மிகவும் குட்டையான சுவரை நோக்கி மக்கள் ஓடினார்கள். அதுவே ஜாதியடியால் ஐந்தடி உயரம் இருந்தது. அங்கே தான் மக்களில் பலரைக் குண்டுகள் தாக்கி வீழ்த்தின.

கேள்வி: "கவச மோட்டார்கள் உள்ளெ புகப் போதிய வழி இருந்ததாக வைத்துக்கொள்ளுவோம். அப்போது யந்திரத்துப்பாக்கி (மெஷின்கன்) கொண்டு நீர் சுட்டிருப்பீரோ?.

பதில்: "ஆமாம்; அநேகமாக அப்படித்தான் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்."

ஹண்டர் அறிக்கை அழுத்தமாய்ச் சொல்லுகிறது: "டையரை எங்கள் முன்னிலையில் விசாரித்த போது, அவர் இந்த விஷயத்தை விளக்கமாய்ச் சொன்னார்: தம் மோட்டார்க் காரில் வரும்போதே ஒரு தீர்மானம் செய்து விட்டாராம்; கூட்டம் போடக்கூடா தென்று தாம் விதித்த தடையுத்திரவை மீறிமக்கள் கூடியிருந்ததால், உடனே அவர்களைச் சுடுவ தென்று முடிவு செய்தாராம்."

விசாரணையில் டையர் கூறினார்:"அத்தனை மனிதர்களையும் கொன்று விடுவ தென்று நான் முடிவு செய்திருந்தேன்...."

டையர் தம் ராணுவமேல் அதிகாரிக்கு ஓர்அறிக்கை (டிஸ்பாட்ச்) அனுப்பியிருக்கிறார். தம்முடைய இந்தச் சொந்த அறிக்கையில் சில வார்த்தைகளைத் தடித்த எழுத்தில் (ஐட்டலிக்ஸ்) அவரே வரைந்திருக்கிறார். அவருடைய இந்த வாசகத்தை ஹண்டர் அறிக்கை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறது. டையர் எழுதியிருக்கிறார், "நான் சுட்டேன் , மக்கள் கூட்டம் கலையும் வரையில் சுட்டுக்கொண்டே யிருந்தேன், ஒரு பலனை விளைவிப்பது அவசியம், அதை விளைவிப்பது என் கடமை என்று நான் கொண்டேன். என் செயல் நியாயம் என்று காட்ட இந்த அளவு சுட்டதே மிகவும் குறைந்த பட்சமானது என்று நான் கருதுகிறேன். கேவலம் கூட்த்தைக் கலைப்பது ஒன்றே அப்போது முக்கியம் என்று நான் கருதவில்லை; அங்கே கூடியிருந்த மக்களுக்கு மட்டும் அல்ல; இதைவிட முக்கியமாக, பஞ்சாப் எங்கும் உள்ள மக்களுக்கெல்லாமே போதிய அளவு பய பக்தியை (மாரல் எஃபெக்ட்) உண்டாக்கவேண்டியிருந்தது. ராணுவ நோக்கில் பார்த்தால் இது புலப்படும். மித மிஞ்சிய அளவு கடுமையாகச் சுட்டதாக இதைச் சொல்லமுடியாது...

இதைப்பற்றி ஹண்டர் அறிக்கை கூறுகிற முடிவு இது:

"தமது கடமைபற்றி டையர் இப்படிக் கொண்ட கருத்து, துரதிருஷ்ட வசமானது.... அவர் அவ்வளவு நேரம் சுட்டதன் மூலம் மகத்தான பிழை (க்ரேவ் வரர்) புரிந்து விட்டார் என்று எங்களுக்குத் தோன்றுகிறது"

அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது: "ஜலியன்வாலா பாக்கில் காயம் அடைந்தவர்களைக் கவனிக்க, டையர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை; இதைப்பற்றி எல்லாரும் குறை கூறுகிறார்கள்." விசாரணையில் டையர் சொன்னார்:"தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் மனுச் செய்துகொண்டிருந்தால், அப்படி உதவ நான் தயாராக இருந்தேன்."

பஞ்சாபில் பிரிட்டிஷ் ஆக்டிங் கவர்னராக அப்போது ஸர் மைக்கேல் ஓட்வியர் என்பவர் வேலைபார்த்து வந்தார். டையரின் செயலை அவர் ஆமோதித்தார்;கலவரங்களைப் புரட்சி எழுச்சி (ரிபெல்லியன்) என்று அவர் குறிப்பிட்டார். ஹண்டர் கமிஷன் இப்படி அபிப்பிராயம் கூறுகிறது; "பஞ்சாபில் ஒரு நெருக்கடியை டையர் காப்பாற்றழி விட்டார் என்றும், சிப்பாய்க் கலகம் போன்ற பெரிய கலக எழுச்சியைத் தடுத்துவிட்டார் என்றும் வேறு சிலர் கூட வர்ணிக்கிறாரக்கள். ஆயினும் இந்த மாதிரி முடிவு செய்வது சாத்தியம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பிரிட்டிஷ் ஆட்சியைக்கவிழ்க்க வேண்டும் என்று, கலவரங்களுக்கு முன்னதாக எந்த விதமான சதியும் (கான்ஸ்பிரஸி) நடக்கவில்லை".

புரட்சி செய்து எழும்(இன்ஸரெக்ஷன்) நோக்கம் எவருக்கும் இல்லை; அப்படி யாரும் திட்டமிவும் இல்லை. இது மட்டும் அல்ல; மேலும் ஒன்று கூறுகிறது ஹண்டர் அறிக்கை: " 10-ஆம் தேதி எழுந்த கலவரம் சில மணி நேரத்துக்குள்ளே அடங்கிவிட்டதாக சம்பவம் எதுவும் மீண்டும் நிழவில்லை. 10-ஆம் தேதியிலே கூட, பொறுப்பு (சார்ஜ்) வகித்த அதிகாரி தம் கடமையைப் புரிந்திருந்தால் அந்தக் கொடுங் குற்றங்களையும் - பாங்க் உத்தியோகஸ்தர்களைக் கலகக்காரர் கொன்ற கொலைகளை - அவர் அநேகமாகக் தடுத்திருக்க முடியும்".

இரண்டரை நாட்கள் அமிர்தசரஸில் அமைதியே நிலவியது. அதற்குப் பிறகே டையரின் கசாப்பு வேலை (புச்சரி) நடந்திருக்கிறது. அநாவசியமாக அவர் படுகொலை (மாஸக்கர்) புரிந்தார். அந்த நாளில் இந்தியாவிலி ஓங்கியிருந்த பரிட்டிஷ் ராணுவ மனோபாவத்திலே பிறந்ததுதான் இந்தப் படுகொலை. இந்த மனோபாவத்தை விளக்க, ஹண்டர் அறிக்கை ஒரு மேற்கோள் தருகிறது. டில்லியில் பதவி விகத்த ஜெனரல் ட்ரேக்-ப்ராக்மான் என்பவரல் சொன்ன இந்த வாசகந்தான் அந்த மேற்கோள்: " ஆசியாக்காரன் எதையும் மதிக்கமாட்டான்; வலிமை (ஃபோர்ஸ்) ஒன்றைக் கண்டால் மட்டுமே மதிப்பான்."

ஜலியன்வாலாவில் தாம் செய்த படுகொலை குறித்துப் பெருமையோடு ரத்னச் சுருக்கமாக டையர் சொன்னார்:"ஜோரான நல்ல காரியம் ஒன்றைச் செயயப் போவதாகத்தான் நான் எண்ணினேன்."

செய்தகொடுமை போதாது எனறு,மக்களுக்கு ஜெனரல் டையர் ஓர் அவமானமும் இழைத்தார்; இகழ்ச்சிக்குரிய ' தவழும் உத்திரவு' (க்ராலிங் ஆர்டர்) ஒன்றைப் பிறப்பித்தார். அமிர்தசரஸ் பெண் பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக இருந்த மிஸ் ஷெர்வுட் என்ற பெண்ணை ஏப்ரல் 10-ஆம் தேதி ஒரு கலகக் கூட்டம் காட்டுமிராண்டித்தனமாக் கொலை செய்து விட்டது. ஜலியன்வாலா பாக் ரத்தமுழுக்கு நடந்து பல நாள் சென்ற பின்பு, டையர் ஓர் உத்திரவு போட்டார். மிஸ் ஷெர்டவுட்டைக் கலகக் கூட்டம் எங்கே தாக்கியதோ அந்தத் தெருவில் எந்த இந்தியன் போனாலும் சரிதான; அவன் மண்டியிட்டுத் தவழ்ந்து கோண்டே போகவேண்டும் - இது அந்த உத்திரவில் ஒரு ஷரத்து. சில குடும்பத்டதினர் தங்கள் வீடுகளுக்குப் போக இந்தத் தெரு ஒன்றே வழியாக இருந்தது. அவர்களுங்கூட இப்படித் தவழ்ந்து கொண்டு தான் போகவேண்டும்.

ஷெர்வுட் அடிபட்ட இடத்தில், கசையடி மேடை (விப்பிங் போஸ்ட்) ஒன்றையும் டையர் அமைத்தார்: தம் உத்திரவை எந்த இந்தியனாவது மீறினால், அவனை இங்கே கொண்டு வந்து நிறுத்திப் பகிரங்கமாய் அவனுக்குக் கசையடி கொடுக்கச் சொன்னார். அமிர்த சரஸில் சில ஜில்லாக்களில் வழியிலே போகும்போது பிரிட்டிஷ் அதிகாரிகளுள் எவனையாவது கண்டால் வண்டியிலோ குதிரை போன்ற விலங்கின் மீதோ சவாரி செய்கிற இந்தியன் எவனும் கீழே இறங்கி விடவேண்டும் ; பெருங்குடையோ குட்டைக் குடையோ பிடித்துக்கொண்டு போகிற எவனும் அதை இறக்கி விடவேண்டும்; அந்தப் பிரிட்டிஷ் அதிகாரிக்குச் 'சலாம்' வைக்கவேண்டும் - இது டையரின் கட்டளை.

பிரிட்டிஷ் இந்தியா மந்திரி(ஸெக்ரட்டரி அவ் ஸ்டேட் ஃபார் இண்டியா) பதவியல் இருந்த ஸர் எட்வின் மாண்டேகு உத்தியோக ரீதியில் வைஜிராயலார்டு செம்ஸ் ஃபோர்டுக்கு 1920 மே 26-ல் ஒரு கடிதம் எழுதினார். "ஜலியன்வாலா பாக்கில் ப்ரிகடீர் ஜெனரல் டையர் தம் செயலுக்கு அடிப்படையாகக் கொண்ட கோட்பாட்டை மன்னர் பிரானின் சர்க்கார் அழுத்தமாக மறுக்கிறது" என்று அதில் கூறினார்.மேலும் "நாகரிக சர்க்காருக்குரிய எந்த லட்சணத்தையும் டையர் போட்ட 'தவழும் எத்திரவு' மீறிவிட்டது" என்று எழுதினார்.டையரின் செயல் கண்டு எண்ணற்ற ஆங்கிலேயர் வெட்க மடைந்தார்கள். ஆனால் அதை ஆதரிக்காமலும் இல்லை.

டையரைச் சர்க்கார் ராஜீனாமாச் செய்யச் சொல்லியது. விமாங்களைக்குறி பார்க்க உதவியாகத் தூரம்காணும் கருவி(ரேஞ்ஜ் ஃபைண்டர்) ஒன்றைத் தமது ஆயுளின் இறுதிக் காலத்தில் டையர் கண்டு பிடித்தார். ப்ரிஸ்டல் நகரில் ஓய்வு பெற்று வாழ்ந்து,1927 ஜுலை 23-ல் அவர் இறந்தார்.

அங்கே ஒரு வாவேசு அய்யரும் இல்லை , வாஞ்சிநாதனும் இல்லை.

தொடரும்.......

Saturday, February 11, 2006

ஜாலியன்வாலா பாக்

ஜலியன்வாலா பாக் என்ற இடத்திலே கூட்டம் நடந்தது.' பாக்' என்றால்

தோட்டம் என்று அர்த்தம். அறிக்கை கூறுகிறது:"பெயரைப் பார்த்தால் தோட்டம் என்று தோன்றும்: ஆனால், ஜலியன்வாலா பாக் எந்த விதத்திலும் தோட்டம் அல்ல. உபயோகத்தில் இல்லாத ஒரு நிலம் அது. நீண்ட சதுர (ரெக்டாங்குல்) வடிவம் கொண்டது. அங்கங்கே பாழடைந்த கட்டிட இடிபாடுகள் மூடிக்கிடந்தன. அநேகமாய் முழுவதுமே அதைக் கட்டிடச் சுவர்கள் சூழ்ந்திருந்தன. அதற்குள்ளே வரப்போகச் சில வழிகளே இருந்தன. அந்த வழிகளும் நன்றாயில்லை. அடிக்கடி மக்களின் பெருங்கூட்டங்கள் அதில் நடப்பது வழக்கம் என்று தெரிகிறது. அதன் ஒரு கோடி வழியாக ஜெனரல் டையர் நுழைந்தார். அந்தக் கோடியின் நுழைவாயிலுக்கு இரண்டு புறமும் தரை மேடாக இருக்கிறது. டையர் நுழைந்த கோடிக்கு எதிர்க்கோடியில் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. ஜெனரல் டையர் தம் துருப்புக்களை நிறுத்திய இடத்திலிருந்து 150 கஜ தூரத்தில் உயரமாக அமைந்த மேடை ஒன்றின் மீது ஒரு மினதன்ட நின்றுகொண்டு அந்த மக்கள் கூட்டத்துக்குப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்." பாக்கில் பத்தாயிரத்துக்கு மேல் இருபதாயிரம் மக்கள் வரையில் கூடியிருந் திருக்கிறார்கள் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.

இருபத்தைந்து கூர்க்காக்கள் (அதாவது நேப்பாளப் போர் வீரர்கள்), பலூச்சி்ஸ்தானத்திலிருந்துவந்த இருபத்தைந்து பலூச்சிகள் இந்த இரு கூட்டத்தினரும் ரைஃபிள் (சிறு துப்பாக்கி) தங்கியிருந்தார்கள்; நாற்பது கூர்க்காக்கள் கத்திமட்டுமே வைத்திருந்தார்கள். இவர்களோடும் இரண்டு கவச (ஆர்மர்டு) மோட்டார்களோடும் டையர் வந்தார்."ஜலியன்வாலா பாக் பக்கமாக வந்ததும், குறுகிய நுழைவாயில் வழியாக அதனுள் இந்தப் படையுடன் டையர் புகுந்தார். கவச மோட்டார்கள் புகப் போதிய அகலமாக அந்த வாயில் இல்லை, எனவே, வெளியே தெருவிழலேயே அவற்றை டையர் விட்டு வைத்தார்". என்று அந்த அறிக்கை அறிவிக்கிறது.

மேலும் அது தொடர்ந்து சொல்கிறது: "பாக்கினுள் நுழைந்தவுடனே, நுழைவாயிலின் ஒரு பாக்கம் உள்ள மேட்டில் இருபத்தைந்து துருப்புக்களையும் மறு பக்கம் உள்ள மேட்டில் இன்னோர் இருபத்தைந்து துருப்புக்களையும் டையர் நிறுத்திவைத்தார். மக்கள் கூட்டத்துக்கு எந்த வித எச்சரிகையும் செய்யாமலே அவர்களைச் சுடத் தம் துருப்புக்களுக்குக் கட்டளையிட்டார். தடை உத்தரவுப் பிரகடனத்தை மீறி மக்கள் கூடியிருந்ததால், அவர்களுக்கு அப்படி எந்த எச்சரிக்கையும் செய்யத் தேவையில்லை என்று அவர் கருதினாராம். துருப்புக்கள் சுமார் பத்து நிமிட நேரம் தொடர்ந்து சுட்டார்கள். என்ன விதமான பிரசங்கத்தை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவில்லை. மக்களில் எவரும் துப்பாக்கி தாங்கியிருக்க வில்லை. ஆனால், அவர்களில் சிலர் தடிகள் வைத்திருந் திருக்கக் கூடும்.....துருப்புகள் சுட ஆரம்பித்வுடனே, கூட்டம் கலையத் தொடங்கியது. மொத்தம் 1650 தடவை(ரவுண்டு) துருப்புக்கள் சுட்டார்கள்.... தனித் தனினயே சுட்டார்கள்; சரமாரி (வால்லி) ஆகச் சுடவில்லை....சுமார் 379 பேர் மாண்டதாக, கமிஷனின் இந்த விசாரணையில் புலனாகிறது."

மாண்டவர்களைப் போல் மூன்று மடங்கு மக்கள் காயமுற்றிருக்க வேண்டும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது. ஆகவே செத்தவர் 379 பேர்; காயமுற்றவர் 1137 பேர். இந்த இரண்டு எண்ணிக்கையையும் கூட்டிப் பார்க்கும் போது, 1650 துப்பாகிக் குண்டினால்1516 ஆள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. தாழ்வான 'தோட்ட'த்தில் பட்டியில் அடைபட்ட ஆடு மாடுகள் போல் மக்கள் சிக்கியிருந்திருக்கிறார்கள்; வீரர்களின் குண்டுகளுக்குச் சரியான இலக்காகியிருக்கிறார்கள்.

டையரை ஹண்டர் கமிஷன் முன் குறுக்கு விசாரணை செய்தார்கள். தம்முடைய மனப்பான்மையையும் நோக்கத்தையும் அப்போது அவர் வெளியிட்டார்.


கேள்வி: "சுடுவதை அடிக்கடி நீர் திசை மாற்றினீரா? மக்கள் எங்கே அடர்த்தியாய் நின்றார்களோ அங்கே பார்த்துச் சுடச் சொன்னீரா?"

தொடரும்.......

Friday, February 03, 2006

N.S. கிருஷ்ணன்

திருச்சி தென்னூரில் குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்டுவதற்காக

மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் கிந்தனார் கதாகாலச்ட்சேபம் நிகழ்சிசயை என்.எஸ். கிருஷ்ணன் நடத்தினார். இதில் வசூலான தொகை ரூ.1360துடன் தன்னுடைய நன்கொடையாக ரூ.1640 ம் சேர்த்து ரூ.3000 த்தை அன்றைய நகரசபைத் தலைவரிடம் கொடுத்து கிந்தனார் குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்டவைத்தார். பிறகு போக்கு வரத்துக்கு இடஞ்சலாக இருப்பதால் அந்த வண்டி ஸ்டாண்டை எடுத்து மேற்கு பக்கம் கட்டினார்கள் . சென்ற ஆண்டு அந்த வண்டி ஸ்டாண்டை மாநகராட்சி முழுவதும் அப்புறப்படுத்திவிட்டது.

"முன்னுக்கு வாங்க .....முன்னுக்கு வாங்க....... கேய் .....கேய் ....கேய் "

என குதிரை வண்டடிக்காரன் சொன்ன வார்த்தை அவருக்கு பிடித்தது. யாரும் முன்னுக்கு வாங்க முன்னுக்கு வாங்க என நம்மை முன்னேரச்சொல்ல மாட்டார்கள் அந்த குதிரைவண்டிக்காரன் தான் அப்படிச் சொல்வான் என்பதற்காக அவர்களுக் அதை ஏற்படுத்திக் கொடுத்தார்.


Thursday, February 02, 2006

வைரஸ் தாக்குதல்

எனக்கு வந்த மின்னஞ்சல் பார்த்தக்கொள்ளுங்கள் தடுக்கவழி தேடுங்கள் எனக்கும் சொல்லுங்கள் எப்படி என
From: View message header detail customerservice@vsnl.co.in
To: vsnlusers@vsnl.net
Subject: Immediate attention - New Virus Alert
Date: Thursday, February 2, 2006 10:42 am
Dear Tata Indicom Broadband Customer,
A new mass-mailing worm has appeared that can destroy files on your computer. The

MyWife/Blackworm virus can arrive on your computer in the form of an attachment to an

e-mail or through a file transfer, often from a known and trusted friend.

On February 3rd, all Word, Excel, PowerPoint and PDF documents are likely to be

deleted from the hard drives of computers infected by the virus.

We recommend that you implement and follow these protection measures to keep your

Wednesday, January 25, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் - 3 -

காந்திக்கு எதிரே இரண்டடி தூரத்தில் அந்த மணிதன் வந்து நின்று கொண்டான். சிறிய ஆட்டோமாட்டிக் பிஸ்டல் ஒன்றால் மூன்று முறை சுட்டான்.
முதல் குண்டு பாய்ந்தது; இயங்கிக் கொண்டிருந்த காந்தியின் கால் தரையில் பதிந்தது. ஆயினும் அவர் நின்று கொண்டே யிருந்தார். இரண்டாவது குண்டு பாய்ந்தது; ரத்தம் பீரிட்டுக் காந்தியின் வெண்மையான துணிகளைக் கறைப்படுத்தத் தொடங்கியது. அவருடைய முகம் சாம்பலென வெளிறிட்டது. கூப்பியகைகள் மெல்லத் தளர்ந்து தொங்கின. ஒரு புஜம் மட்டும் கணநேரம் ஆஷாவின் கழுத்தில் பதிந்திருந்தது.
"ஹே ராமா!"என்று காந்தி முணுமுணுத்தார். முன்றாவது குண்டு வெடித்தது வெளிவந்தது. துவண்ட உடல் தரையிலே படிந்து விட்டது. அவருடைய மூக்குக் கண்ணாடி மண்ணிலே விழுந்தது. பாதரட்சைள் பதங்களை விட்டு நழுவிக் கழன்றன.
ஆபா, மனு இரண்டுபேரும் காந்தியின் தலையைப் பிடித்து நிமிர்த்தினார்கள். அன்புக் கரங்கள் அவரைத் தரையில் இருந்து தூக்கி, பிர்லா மாளிகைக்குள் அவருடைய அறையில் கொண்டு போய்ச் சேர்த்தன.

Tuesday, January 24, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் - 2 -

வரிசையாகத் தூண்கள் நிற்கும் நீளமான செம்பாறாங்கல் மண்டபப் பாதையில் இரண்டு நிமிஷ நேரம் நடந்து, பிரார்த்தனை மைதானத்துகுச் செல்ல வேண்டும. தினந்தோறும் இந்த இரண்டு நிமிஷ நேரத்திலும் காந்தி தம் தொல்லைகளை யெல்லாம் மறந்து தாமாஷகப் பேசுவார். அன்று ஆபா கொண்டுவந்து கொடுத்தகாரட் கீரைச் சாறு பற்றிக் கிண்டல் செய்தார்.
" ஆகவே நீ எனக்கு மாட்டுத் தீனியைக் கொடுத்து விட்டாய்" என்று சொல்லி அவர் சிரித்தார்.
" இல்லை, இது குதிரைத் தீனி என்றல்லவா பா சொல்லுவார்கள்" என்று ஆபா பதிலளித்தாள். பா என்று அவள் குறிப்பிட்டது காந்தியின் காலஞ்சென்ற மனைவியை.
"வேறு யாருக்கும் பிடிக்காததை நான் சுவைத்துச் சாப்பிடு வதால், நான் எவ்வளவு பெரியவன்?" என்று கேலியாகச் சொன்னார் காந்தி.
"பாபு(அப்பா), உங்கள் கைக் கடிகாரம் அநாதையாகி விட்டது போல் அழுதுகொண்டிருக்கும் அதை இன்று நீங்கள் பார்க்வேயில்லை" என்றாள் ஆபா.
"அதை ஏன் நான் பார்க்க வேண்டும்? நேரத்தைக் கவனித்துக் கொள்ளும் கணக்குப் பிள்ளைகள் தான் எனக்கு இருக்கிறார்களே!" என்று பட்டென்று பதிலளித்தார் காந்தி.
" அந்தக் கணக்குப் பிள்ளைகளையுந்தான் நீங்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை" என்று மனு குறிப்பிட்டாள். காந்தி மறுபடியும் சிரித்தார்.
இந்த நேரத்தில் மைதானத்துக்கு அருகே உள்ள புல்தரையில் அவர் நடந்துகொண்டிருந்தார். தினந்தோறும்மாலையில் நடக்கும் பிரார்த்தனைக்காகச் சுமார் ஐந்நூறு பேர்கள் கூடியிருந்தார்கள் . " இன்று பத்து நிமிஷம் தாமதித்துவிட்டேன். இப்படித் தாமதிப்பது என்றாலே எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. ஐந்து மணி அடிக்கும் போது இங்கே நான் கணக்காய் வந்திருக்க வேண்டும்" என்று தமக்குத் தாமே பேசுவது போல் காந்தி உரக்கச் சொன்னார்.
பிரார்ததனை மேட்டுக்கு ஐந்து சிறுபடிகள் இருந்தன. அவற்றை அவர் வேகமாகக் கடந்தார். மர மேடைக்கு இன்னும்சில கஜ தூரம் தான் இருக்கும். பிரார்த்தனை நடக்கும் போது அந்த மர மேடையிலேயே அவர் உட்கார்ந்திருப்பார். கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பபாலோரும் எழுந்துநின்றார்கள். பலர் முன்னே நகர்ந்து வந்தார்கள். சிலர் அவருக்காகச் சந்தில் வழி விலக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அவருக்கு மிக அருகே இருந்தவர்கள் அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆபா, மனு இருவருடைய தோள்களிலுமிருந்து கைகளை எடுத்துக் குவித்து, ஹிந்து முறையில் காந்தி எல்லாருக்கும் வணக்கம் செலுத்தினார்.
அப்போது ஒரு மனிதன், முழங்கையால் இடித்துத் தள்ளிக் கொண்டு கூட்டத்திலிருந்து சந்துக்குள் வந்து சேர்ந்தான். வழக்கப்படி காந்தியின் பாதத்தில் விழுந்து வணங்க விரும்பிய ஒரு பக்தன் மாதிரி அவன் தோன்றினான். ஆனால் தாங்கள் நேரம் கடந்து விட்டதால், அவனை மனு தடுத்து நிறுத்த முயன்றால்: அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டாள். ஆனால், அவனோ அவளை உதறி ஒரு புறம் தள்ளினான். அவள் உருட்டியடித்துக்கொண்டு போய் விழுந்தாள். காந்திக்கு எதிரே இரண்டடி தூரம்........

நாளை மீதம்

Monday, January 23, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் -1 -

மாலை மணி 4. 30 கடைசி உணவை ஆபா உள்ளே கொண்டு வந்தாள் . இந்த உணவுக்குப் பிறகு வேறு உணவை அவர் உண்ணப் போவதில்லை. ஆட்டுப் பால், சமைத்வையும் , பச்சையுமான காய் கறிகள், ஆரஞ்சுப் பழங்கள், ஒரு பச்சடி இவைதான் அந்த உணவு எலுமிச்சம் பழம், வடித்த வெண்ணெய், இஞ்சி, கற்றாழைச் சாறு இவற்றின் கலவை அந்தப் பச்சடி. புது டில்லியில் பிர்லா மாளிகையின் பின்புறம் உள்ள தமது அறையில் காந்தி உட்கார்ந்திருந்தார். இந்த உணவை அருந்திக் கொண்டே, சுதந்திர இந்தியாவின் புதிய சர்ககாரில் உதவிப் பிரதம மந்திரியான சர்தார் வல்லப் பாய் படேலுடன் அவர் பேசிச்கொண்ருந்தார். படேலின் மகளும் காரியதரிசியுமான மணிபென் கூட இருந்தாள். நடந்த சம்பாஷணை மிகவும் முக்கியமானது. படேல், பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இந்த இரண்டு பேருக்கும் இடையே மணஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் உலவின . வேறு எத்தனையோ விவகாரங்களைப் போலவே இந்த விவகாரத்தையும் மகாத்மாவின் காதில் போட்டிருந்தார்கள்.

காந்தியும் படேலும் அவருடைய பெண்ணும் மட்டும் தனியே இருப்பதைக் கண்ட ஆபா, தான் குறுக்கிடச் சற்றுத் தயங்கினாள். ஆனாலும் காந்திக்கு எதுவும் நேரந் தவறக்கூடாது. இது அவளுககுத் தெரியும். எனவே, கடைசியில், மகாத்மாவின்நிகல் முலாம் புசிய கைக் கடிகாரத்தை எடுத்து வெரிடம் காட்டினாள். "நான் உடனே கிளம்பியக வேண்டும்" என்று சொல்லிக் காந்தி எழுந்தார். பக்கத்துச் சிற்றறைக்குச் சென்று விட்டு, மாளிகையின் இடது பக்கத்துப் பெரிய தோட்டத்தில் உள்ள பிரார்த்தனை மைதானத்தை நேக்கிப் புறப்பட்டார். மகாத்மாவுடைய பங்காளியின் பேனான கனு காந்தியின் இளம் மனைவி ஆபா. மற்றோரு பங்காளியின் பேத்தி மனு. இந்த இரண்டு பேரும் அவருடன் சென்றார்கள். இந்த இரண்டு பேருடைய தோள்கள் மீதும் அவர் கைகளைச் சார்த்திக் கொண்டார். "இவர்கள் தான் நான் நடக்க உதவும் ஊன்று கோல்கள்" என்று காந்தி சொல்வார்.
மீதம் நாளை

Friday, January 20, 2006

நண்பர் பால சந்தர் கணேசனுக்கு

கடிதத்திற்கு பதில்

//"மாணவ_மாணவிகளுக்கு தினம் அரை வேளைதான் படிப்பு. மீதி அரை நேரம், ஏதாவது கைத்தொழில் கற்க வேண்டும்" என்பதே ராஜாஜியின் கல்வித்திட்டம்.


2 ஷிப்டுகளில் பள்ளிக்கூடம் நடத்தி, அதிகமானவர்களை சேர்க்கலாம் என்று ராஜாஜி நினைத்தார்.

"என்ன தொழில் கற்பது? அரசாங்கமே தொழில் கல்விக்கு ஏற்பாடு செய்யுமா?" என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர்.

"அப்பா செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்றுக்கொள்ளலாம்" என்று ராஜாஜி பதிலளித்தார்.//

கற்றுக் கொள்ளலாம் என்று தான் சொன்னார் அதையே தொடர்ந்து செய்யச் சொல்ல வில்லை. அரசியலில் ஆதாயம் பெற மாற்றுக் கட்சியினரால் இதை பெரிது படுத்தி பூதாகாரமாக்கினர்.
ராஜாஜி அன்று சொன்னது இன்றும் நடக்கிறது கட்சித்தலைவர் மகன் அவருக்கு பின் அந்த கட்சித் தலைவர் , நடிகர் மகன் நடிகர், மந்திரி மகன் மந்திரி கிட்டத்தட்ட இதுவும் குலத்தொழில் மாதிரி அன்று எதிர்த்தவர்கள் 'நான் அன்று எதிர்த்தேன் இன்று எனது மகனுக்கு மந்திரி பதவி வேண்டாம்' என யாரும் கூறவில்லை டாக்டர் மகன் டாக்டர் தான். எஞ்சினியர் மகன் எஞ்சினியர் தான் அவர் என்ன சொன்னார் பாதி நேரம் ஏதாவது தொழில் கற்றுக்கொள்ளுங்கள் என்றார் இவர்கள் கேட்டதற்கு தந்தையுடன் கூட இருந்து உதவிசெய்யட்டும் அதை கத்துக்கொள்ளட்டும் என்றார் COLLECTOR வேலைக்குப் போக வேண்டாம் என்றா சொன்னார்?, அதாவது ஒன்று கிராமத்தில் சொல்லவார்கள் ஆகாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என. இதை பெரியார் சொல்லியிருந்தால் ஆகா ஓகொ என புகழ்ந்திருப்பார்கள் சொன்னவர் பார்ப்பணர் என்ற ஒரே காரணத்தால் அன்று எதிர்த்தனர். பார்பணிசியம் என்பது வேறு அதில் எனக்கு உடன்பாடு கிடையாது அதை இதோடு இணைக்கக்கூடாது. சொன்னதை சொன்ன கருத்து நல்ல கருத்து என்றால் யார் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ராஜாஜி சொல்வதற்கு முன்னமே நாம் அந்த வேலையைத்தான் செய்தோம் பள்ளிகூடம் விட்டது வயலுக்கு போனோம், ஒவ்வொருவரும் அப்டித்தான்.
ஒரு மாணவன் 6 மணிநேரம் தொடர்ந்து படிக்க முடியாது 4 மணிநேரம் படித்து விட்டு மீதி நேரம் ஏதாவது தொழில் கத்துக்கொள்ளட்டும் என்பது நல்ல திட்டம்தான்.



இப்போது குலகல்வி திட்டம் பற்றி என்னுடைய பதில்.
உண்மையில் பிள்ளைகள் அதுவும் ஏழை பிள்ளைகள்,பல ஜாதியிலிருந்தும் உள்ள ஏழை பிள்ளைகள் பள்ளி கூடம் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?. அதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.

அதனில் ஒன்று தான் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவது. இதைதான் காமராஜர் செய்தார்.(மதிய உணவு திட்டம்). பின்னர் எம்.ஜி.ஆர் விரிவாக்கினார்(சத்துணவு திட்டம்). இந்த திட்டங்கள் பெரிய வெற்றி பெற்றன என்பதும் நிறைய பிள்ளைகள் பயன்பெற்றனர் என்பதும் வரலாறு.

இது போன்று ஒன்றும் செய்யாமல் எதற்கு ஜாதி அடிப்படையில் தொழில் கல்வி கொண்டு வர வேண்டும்? இதில் என்னார் வேறு சொல்கிறார். டாக்டர் பையன் டாக்டராகிறார், வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது என்று எடுத்துகாட்டு வேறு. என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து. டாக்டர் பையன் டாக்டராக இருப்பது வெற்றியே... வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது வெற்றியே.
ஆனால் செருப்பு தைப்பவர் பையன் செருப்பு தைப்பனாகவே இருப்பது வெற்றியா?.

மேலும் டாக்டர் பையன் டாக்டராக வருவது குல தொழிலாக அல்ல. ஏனெனில் எல்லா ஜாதியிலும் டாக்டர்கள் இருக்கிறார்கள். அதை குடும்பத் தொழில் என்று கூறுங்கள்.

ஆக்க பூர்வமான எடுத்த காமராஜரையோ, எம்.ஜி.ஆரையோ யாரும் குறை கூறி எழுதுவதில்லை என்றும் இராஜாஜி இதை செய்திருந்தால் அவரையும் சமுகம் பாராட்டியிருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.

நான் முட்டால் தான் புத்தியுள்ள புத்திமான்கள் எனது பின்னுட்டத்தையம் தங்கள் பதிலை ஒரு முறையல்ல பல முறை படித்து பாருங்கள் அடுத் பதிவில் சற்று விளக்கமாக எழுதுகிறேன்.
குலத்தொழில் தான் செய்ய வேண்டும் என்று ராஜாஜி சொன்னாரா? அல்லது தந்தை செய்யும் தொழில் உடன் கூட இருக்கச் சொன்னாரா?அதை முதலில் தெரிந்து கொண்டு பேசுங்கள்.
அப்பாவுக்கு பக்கபலமா உறுதுணையா இருக்கச் சொன்னால் நான் ஊர்சுத்தத்தான் போவேன் என்றால் போங்கள். இந்தி படித்தால் நல்லது என்றார்கள் முடியாது என்றால் போங்கள் யாருக்கென்ன . மது கடை திறக்க வேண்டாம் !!,லாட்டரி சீட்டு ம் நடத்த வேண்டாம் என்று நல்லதை சொன்னால் முடியது என்றால் போங்கள் யாருக்கென்ன .

Sunday, January 15, 2006

வருவாய்த்துறை 2

வருவாய்த் துறை என்பது எப்படி வளர்ந்தது என்பதை பார்த்து விட்டு பிறகு பேசுவோம்
அந்த காலங்களில் நிலவரி வசூல் தான் நாட்டின் முக்கிய வருமானம். அதுவும் இன்றைய கால கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிக அதிகம் தான் நில வரி செலுத்த முடியாமல் கூட நிலத்தை அரசிடமே ஒப்படைத்தவர்களும் உண்டு. நிலவரி வசூல் செய்ய கிட்டி என்ற ஒரு கருவியை வைத்து விரல்களை நெரித்ததும் உண்டு; விரல்களில் துணியை சுற்றி எண்ணெய் ஊற்றி நெருப்பை வைத்தும் வசூல் செய்த காலங்களும் உண்டு . திமுக ஆட்சிக்கு வந்த ஆண்டே லெவி என்ற பெயரில் விவசாயிகளிடம் வலுக் கட்டாயமாக நெல்லை பெற்றதும் உண்டு . இவற்றையெல்லாம் பிறகு பார்ப்போம்.
கிபி. 985 – 1011 ராஜராஜ சோழன் ஆண்டு வந்தபோது வருவாய் நிர்வாகத்தை சீர் அமைத்தார்

கி.பி. 1175 – 1194 முகமது கோரி என்ற முஸ்லீம் மன்னர் இந்தியாவை அரசாட்சி செய்தார் அவருடைய காலத்தில்தான் மொகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு வழி வகுக்கப்ட்டது.

கி.பி. 1539 – 1545 அரசாட்சி செய்த ஷெர்ஷா சூரி (டைகர்) வருவாய் நிர் வாகத்தை மேலும் சீர் அமைத்தார் அவருடைய காலத்தில்தான் சென்னைக்கும் கல்கத்தாவிற்கும் இடையே கிரண்ட் ட்ரங் ரோடு அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் நாணயம் உலோகத்தில் கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1556 – 1605 அக்பர் அரசாட்சி செய்த போது இடைப்பட்ட காலத்தில் இந்துக்கள் மீது விதிக்கப்ட்ட சிசியா என்ற வரியை ரத்து செய்தார்.

கி.பி. 1792 – ஆம் ஆண்டில் லார்டு காரன் வாலிஸ் என்பவரால் அனுப்பப் பட்ட கர்ணல் (Red) என்பவர் ரயத்துவாரி அல்லது குல்பி சிஸ்டம் என்ற முறையை ஏற்படுத்தனார் .

கி.பி. 1793 – ஆண்டு லார்டு காரன் வாலீஸ் என்பவர் முதன் முதலாக வங்காளத்தில் நிலையான நிலவரித்திட்டத்தை அமுல் படுத்தினார். மேலும் அவர் முதன் முதலாக சிவில் சர்வீஸ், ஜுடிசியல் சர்வீஸ் ஆகிய பதவிகளுக்கு போட்டி தேர்வுகள் மூலம் தேர்ந் தெடுக்க உத்திரவு பிரப்பித்தார், அதற்கு முன்பு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபையினரால் பதவி சம்பந்தப்பட்ட எந்த வரை முறையின்றி விருப்பம் போல் அளிக்கப்பட்டது.

கி.பி. 1802 ல் தமிழ் நாட்டில் நிலையான நிலவரித்திட்டம் கொண்டு வரப்பட்டது

கி.பி.1806 ல் Lord William Benedict என்பவர் சென்னையில் கவர்ணராக இருந்த போது நிலையான நிலவரித்திட்டத்தை பாளையம் அல்லது ஜமீன் பகுதிகளுக்கு அமுல்படுத்துவதை ஆட்சேபித்தார்.

கி.பி. 1828 ல் - 1835ல் இதே Lord William Benedict இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொருப்பேற்ற போது ஆங்கிலம் கட்டாய பாடமாக்க வழிவகை செய்யப்பட்டது.

கி.பி.1812 ல் தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் பாளையம் மற்றும் ஜமீனை சேர்த்து நிலையான நிலவரித்திட்டம் திரும்பவும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1817 ல் சர் தாமமஸ் மண்ரோ என்பவர் முழுமையான நிலவரிதிட்டம் அமுலுக்கு வந்துள்ளதா என்பதை கண்காணித்தார்.

கி.பி. 1858 ல் நிலவரி திட்ட இயக்குணராக இருந்த திரு.நெவிஸ் (Nevis) என்பவர் முதன் முதலாக மண் வயணம், பாகு பாடு, தமிழ் நாட்டிற்கு நிலவரி திட்டத்தை கொண்டு வந்தார், ரெகுலர் செட்டில் மெண்ட் - ஒரிஜினல் செட்டில் மெண்ட் - மெயின் செட்டில் மெண்ட் கொண்டு வந்தார்.

கி.பி. 1867 ல் பிரதி 30 வருடங்களுக் கொருமுறை மறு நிலவரித் திட்டம் (Resettlement) நடத்தப்பட வேண்டுமென அரசு ஆணைபிரப்பித்து Resettlement என்பது Resurvey செய்தபிறகு தான் செய்யப்படவேண்டும் அதேபோல் ஒரிஜினல் செட்டில்என்பது (Initial) ஆரம்ப சர்வே செய்தபிறகு தான் ஒரிஜினல் செட்டில் செய்யப்படவேண்டும்.

கி.பி. 1937 – இருதியாக இந்த ஆண்டில் தான் மறு நிலவரித்திட்டம் நடை பெற்றது 1937க்குப் பிறகு நாளது வரை மறுநிலவரித் திட்டம் நடை பெறவில்லை. 1937ல் ஆங்கிலேயரகள் ஆட்சி செய்த போது எதிர் காலத்தில் மறு நிலவரித்திட்டம் குறித்து ஏதும் ஆணைகள் பிறப்பிக்கக் கூடாதென அரசு ஆணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேய ஆட்சிக்குப்பிறகு சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சி பொருப்பில் உள்ளவர்களால் மறு நிலவரித் திடம் குறித்து ஆணைகள் ஏதும் பிறப்பிக்கவில்லை

வருவாய்த் துறை

.அரசு திட்டம்!* இயற்கை சீற்ற நிவாரண பணிகளுக்குத் தனித்துறை* வருவாய்த்துறையை இரண்டாக பிரிக்க ஆலோசனை

தமிழக அரசில் மிகப் பெரிய துறையான வருவாய்த் துறை நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அமைப்பிலேயே இன்னும் செயல்பட்டு வருகிறது. சுனாமி, வெள்ள நிவாரணம் போன்றவற்றை சமாளிக்க பேரிடர் மேலாண்மைத் துறை தனியாக இல்லாததால் வருவாய்த் துறை இதர பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறது.
அரசில் மிக முக்கியமான துறை வருவாய்த் துறை. இத்துறைச் செயலரின் கீழ் பல்வேறு பெரிய துறைகள் உள்ளன. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை, நில நிர்வாகம், நில சீர்திருத்தம், சர்வே, பதிவுத் துறை, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு என பல துறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஐ..எஸ்., அதிகாரி தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு துறை கமிஷனரின் கீழும் ஐ..எஸ்., அந்தஸ்தில் பல இணை கமிஷனர்கள் உள்ளனர். இதுதவிர, டி.ஆர்.., அந்தஸ்திலான அதிகாரிகளும் பலர் உள்ளனர்.
மாவட்டங்களை பொறுத்தவரை அனைத்து துறைகளுமே கலெக்டரின் கட்டுப்பாட்டில் வருகின்றன. எனவே, நிவாரணம் வழங்குவது என்றாலும், இலவச வேட்டி, சேலை போன்ற திட்டங்களை செயல்படுத்துவது என்றாலும் அனைத்து துறை ஊழியர்களையும் ஒருங்கிணைத்து கலெக்டர்கள் இப்பணிகளை மேற்கொள்வர். ஆனால், மாநில அளவில் அதிகாரிகள் மட்டத்தில் இத்துறை சரிவர பிரிக்கப்படவில்லை. இதனால், பல திட்டங்களை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து வறட்சி, சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிலவுவதால் இதற்கான பணிகளில் வருவாய்த் துறை கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், தற்போது வருவாய்த் துறையே முடங்கிப் போயுள்ளது. பல மாநிலங்களில் பேரிடர் மேலாண்மைக்கு என தனித் துறை உள்ளது. குஜராத்தில் இத்துறையின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ..எஸ்., அதிகாரி இறையண்புவின் சகோதரர் உள்ளார்.
தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைக்கு என தனித் துறையும் இல்லை. வருவாய் நிர்வாகம் மற்றும் நிவாரண, மறுவாழ்வுப் பணிகள் கமிஷனரின் கீழ் இத்துறை வருகிறது. வருவாய் கமிஷனரின் கீழ் ஐ..எஸ்., அதிகாரிகளான மூன்று கூடுதல் கமிஷனர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரின் கீழ் பேரிடர் மேலாண்மை வருகிறது. சுனாமி ஏற்பட்ட போது இதற்காக தனி அதிகாரி மற்றும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டனர்.
சுனாமிக்கு பிறகு பேரிடர் மேலாண்மைத் துறை தேசிய அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு ஆகியும் மாநில அளவில் இத்துறை தனியாக அமைக்கப்படவில்லை. தற்போது வெள்ள நிவாரணப் பணிகளை மிகப் பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் போதிய அதிகாரிகள் மற்றும் நிர்வாக அமைப்பு இல்லாமல் அரசு தடுமாறுகிறது.
அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்களை சமாளிக்கவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் தனியாக துறை அமைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. தனி செயலர் கட்டுப்பாட்டில் வருவாய்த் துறையும், மற்றொரு செயலர் கட்டுப்பாட்டில் பேரிடர் மேலாண்மைத் துறையும் உருவாக்கப்பட வேண்டும். அல்லது வருவாய்த் துறை செயலரின் கீழ் வருவாய் நிர்வாக கமிஷனர் மற்றும் பேரிடர் மேலாண்மை கமிஷனர் என இரு கமிஷனர் பதவிகளை உருவாக்கி, தனித் துறையாக செயல்படுத்த வேண்டும்.
அவ்வாறு வருவாய்த் துறையை மாற்றி அமைத்தால் மட்டுமே இது போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளை அரசு சிறப்பாக கண்காணிக்க முடியும்.
இது தினமலர் செய்தி இதைப் பற்றி சற்று சிந்திப்போம்

http://www.dinamalar.com/2006jan14/frontpage.asp

Friday, January 13, 2006

பிராமன சங்கம்

மணிகண்டன்

2006-ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படணும் .

யாரும் பயப்படத்தேவையில்லை எதற்காக பயப்படணும் இது எல்லாம் ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து அல்ல. மண்ணையாண்டவர் யாரோ மனையை ஆண்வர்கள் யாரோ. இமய மலையில் கொடியை நாட்டியவனும் இலங்கையின் மீது படையெடுத்தவனும் தமிழன்

எச். ராஜா எம்.எல்..,(பா...):

மாற்றங்களை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நாம் கும்பிடுகிற தெய்வத்தை நிந்திக்கிறவர்களை பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தால் நம் பக்தியிலே குறையிருக்கிறது என்று அர்த்தம். எதற்கு பொறுத்திருக்க வேண்டும்.? இத்தனை கோடி மக்கள் இருக்கும் இந்தியாவிலே இந்துக்களை மட்டும் நிந்திக்க காரணம் என்ன?

நாம்கும்பிடுகிற தெய்வத்தை திட்டுவது யார் நமது குடும்பத்தைச்சேர்நத இந்துக்கள் தான் நம்மைத்தான் திட்ட முடியும் அடுத்த வீட்டுக்காரனை திட்டினார் அவன் உதைப்பான் அதான் நம் தெய்வங்கை திட்டுகிறார் தெய்வம் இல்லை என்று சொன்ன ஈ.வே. ராமசாமி மற்றதெய்வங்கை செறுப்பால் அடித்தாரா ?ஏன் செய்ய வில்லை? அவரது சிஷ்யர்கள் அவர்வழியை பின் பன்றுகிறார்கள்.

ஆமாம் உண்மைதான் திராவிட பாரம்பரியம் இந்துக்களை மதிப்பதில்லை இந்துகோயில் களுக்க அரங்காவளர்களாக இருப்பார்கள் இந்துகளையே திட்டுவர் ஒருவர் இந்து வை திருடன்என்பார் (ஒரு வேலை வெண்ணை திருடன் கண்ணனைச் சொன்னாரோ)

நடிகர் டெல்லி கணேஷ்:
நாமெல்லாம் உதாரணப் புருஷர்கள். நாசாவில் ராக்கெட் பறப்பதற்கு நாம்தான் காரணம். பிராமண இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது. ஒரே மனித இனமா வாழ்ந்துவிடலாம் என்று பார்த்தோம் முடியவில்லை. இப்போ ஜாதி ரீதியாகத்தான் வாழமுடியுது. தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா அது ஒரு சுலோகம். பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன்.

உண்மைதான் நாட்டை ஆள்வது நாட்டை பாது காப்பது உணவு உற்பத்தி செய்வதுரோடு போடுவது நாத்து நடுவது அறுவடை செய்வது தொழிற்சாலையில் உழைப்பது எல்லாம் மற்றவர்கள். குடியனவன் சேற்றில் கை வைக்காவிட்டால் சோற்றில் நீங்கள் கைவைக்க முடியுமா?. ராக்கெட் விடாமல் சாப்பிடலாம் !வயலில் பாடுபடாமால் உண்ணமுடியுமா?

சரசுவதி ராமநாதன்:

அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கலப்பு மணங்கள் நமது கலாச்சாரத்தை சீரழிக்கிறது. பிராமின் என்று ஒரு கலாச்சாரம் இருந்தால் போதும், உட்பிரிவுகள் கூடத் தேவையில்லை என்று ஆச்சார்ய சுவாமிகள் கூறியிருக்கிறார்.

அவர்கள் சொல்வது தெரிகிறது இது காலத்தின் கட்டாயம் இதை யாராலும் மாற்ற முடியாது

மற்றவர்கள் பொறுப்பேற்க முடியாது

எழுத்தாளர் சுஜாதா:
நம்முடைய எண்ணிக்கை என்ன? நம்மை அவர்கள் தமிழர்கள் அல்லர் என்கிறார்கள், நமக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். (கைதட்டல்) சங்க காலத்தில் மிகச் சிறந்த புலவரான கபிலர் பிராமணர் .

எனக்கு ஆங்கிலேயரை விட நல்ல ஆங்கிலம் தெரியும் என்னை ஆங்கிலேயன் என சொல்ல முடியுமா? தமிழ் தெரிந்தால் தமிழனா.. வீரமாமுனிவர் வந்து இருந்து தமிழ் கற்று காவியம் படைத்தார் அவர் தமிழன் என்ற சொல்ல முடியுமா?

சினிமா இயக்குநர் பாலசந்தர்:

லவுகீக பார்ப்பானாக இருந்தாலும், வைதீகப் பார்ப்பானாக இருந்தாலும், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். பார்ப்பனர் வெறி என்பது அவர்களின் ரத்த ஓட்டமாக இருக்கிறது என்பதற்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும்? மாநாட்டில் பார்ப்பனர் சிலர் அரிவாளைச் சுழற்றிக் காண்பித்துள்ளனர். இதன் பொருள் வெளிப்படையானது.

இவரே பல படங்களில் பார்பன பெண்களை கேவளமாக சித்தரித்து படம் எடுத்தாரே

விபீஷணர் படலம் இல்லாமல் இராமாயணம் நிறைவு பெறுமா?
மாநாட்டில் பேச்சு வியாபாரி சாலமன் பாப்பையா பங்கு கொண்டு பார்ப்பனர்களைத் தலையில் தூக்கி வைத்து சதிராட்டம் போட்டு இருக்கிறார். அவாள் இல்லாமல் தமிழ் ஏது என்று அவாள் மெச்ச இச்சகம் பேசி ஆழ்வார்ப்பட்டம் பெற்றுவிட்டார். தகுந்த கூலியும் பெற்று இருப்பார் - பேச்சு

இராவணனை காட்டிக் கொடுத விபீணனை மண்ணிக்க முடியது

டோண்டு ராகவன்

ஆனால் ஒன்றை முதலிலேயே கூறிவிடுகிறேன். அரிவாளைத் தூக்கிக் காட்டுவது சற்று மிகைப்படுத்தலே ஆகும். கும்பலில் வந்த ஆக்ரோஷம் என்று கூறினாலும் சற்றே அடக்கி வாசித்திருக்க வேண்டுமென்றே நான் கூறுவேன்.

சரியாகச் சொன்னீர்கள்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் வா.வே.சு அய்யரின் பங்கு அபரிமிதமானது அதைவிட வாஞ்சினாத அய்யரின் பங்கு மேலானது. தமிழ் தாத்தா ஊ.வே.சு அய்யரின் பங்கு மறக்க முடியாது. ஐம்பெருங்காப்பியங்களை கண்டுபிடித்து உலகுக்கொடுத்து உத்தமர் ஊ.வே.சு அய்யரை அந்த காப்பியங்கள் உள்ளவரை மறக்கமுடியாது. வீரவாஞ்சிநாதனை மறக்கமுடியுமா? மேட்டூர் அணை வருவதற்கு காரணமாயிருந்த அந்த அய்யரைத்தான் மறக்க முடியுமா தமிழகத்தில் அனேக தொழிற்சாலைகள் வர காரணமாயிருந்த ஆர். வெங்கட்ராமனைத்தான் மறக்கமுடியுமா? 10ஆயிரம் பார்ப்பனர் உயிர் கொடுத்து காத்த திருவங்கத்தைத்தான் மறக்கு முடியுமா? எல்லலோரும் சங்கம் வைத்துக் கொண்டது போல் அவர்களும்சங்கம் வைத்துள்ளார்கள். அதற்கு ஏன் இத்தணை எதிர்ப்பு


அவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர் பார்பனர் சரி நீங்கள் உங்கள் ஜாதியை அவர்கள் சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. ஏன் இந்த பாகு பாடு காலங்கள் மாறுகின்றன. அனைவரும் ஒரே ஜாதி ஒரே தமிழர். அனவைரும் ஒரு தாயின் பிள்ளைகள்

யாரும் சாதிச்சங்கம் அமைக்க கூடாது பள்ளி கல்லூரிகளிலும் சான்றிதழிகளிலும் சாதிபெயர்வரககூடாத தேர்தலிலும் சாதிக்காக சீட் ஒதுக்கக் கூடாது.



Thursday, January 12, 2006

விவேகானந்தரின் பிறந்த நாள

"எழுமின்.....விழிமின்"

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று
1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிறந்தார்.

சிகாகோ சொற்பொழிவுகள்


1. வரவேற்புக்கு மறுமொழி
செப்டம்பர் 11, 1893
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். (ஒரு பகுதி மட்டும்).
கம்பரைப் பற்றிச் சொல்லும் பொழுது சடையப்பவள்ளலைப் பற்றியும் சொல்லித்தானே ஆகனும் அது போல.

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றால் விவேகாந்தரை உலகறிய செய்தவர் பாஸ்கரசேதபதியே ஆவார். 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்து சமயங்களின் மாநாட்டில் தான் கலந்து கொள்வதாக இருந்த முடிவை மாற்றி விவேகானந்தரை அங்கு அனுப்பி வைத்தது மட்டுமின்றி அவர் 4 ஆண்டுகள் அங்கு தங்கி இந்து மதத்தின் அருமை பெருமைகளை உலகளவில் பறை சாற்றி விட்டு வருவதற்கு உதவி புரிந்தவர் இவர்! விவேகானந்தர் தாயகம் திரும்பிய போது தாயகத்தில் பதிக்கும் முதல் காலடி, என் தலை மீது தான் இருக்க வேண்டும் என வேண்டி, அத்துறவியின் பாதத்ததை தன் தலையில் தாங்கியதோடு அவரை ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று அந்த ரதத்தை தானெ இழுத்து சென்ற அரச பெருமான் அவர். விவேகானந்தர் கால் பதித்த இடத்தில் கல்வெட்டு ஏற்படுத்தி அதில் அன்று அவர் பொறித்த "சத்திய மேவ ஜெயதே"(வாய்மையே வெல்லும்) இன்றும் இந்திய அரசின் தேசிய வாசகமாக உள்ளது!
ஒரு நாட்டின் மன்னர் ஒரு துறவிக்கு கொடுத்த மரியாதை அது.
நாம் கொடுக்கும் மரியாதை இன்று அவர் பிறந்த நாளில் அவரை நினைத்துப் பார்ப்பது.

Wednesday, January 11, 2006

இலங்கை போர்

இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போர் நிறுத்தம் எந்த நேரத்திலும் வாபஸ் ஆகிஅரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் பெரிய அளவில் போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகிறது.

போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறாவிட்டாலும் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஆங்காங்கே அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மன்னார், யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 115 பேர் பலியாகி விட்டனர்.ராணுவத்தின் கெடுபிடி காரணமாக தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அதிரடி தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினரும் கொழும்பு நகருக்குள் ஊடுருவி உள்ளனர்.(செய்தி)

இரண்டாம் உலகப் போரில்

இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால், இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தார் ஹிட்லர். ஆனால் அவருடைய முயற்சி பலிக்கவில்லை. "இந்தியா இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்து கஷ்டப்படுகிறது. நாங்கள் இந்தியாவை விடுவிப்போம்" என்று 1942 ஏப்ரலில் ஜப்பான் அறிவித்தது.

அதற்கு உடனடியாக நேரு பதில் அளித்தார். "இந்திய மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள். அதற்கான வீரமும், விவேகமும் இந்திய மக்களுக்கு உண்டு. எனவே இந்திய மக்களின் விடுதலைக்கு ஜப்பான் உதவி தேவை இல்லை" என்று அறிவித்தார். இந்தியாவுக்கு இங்கிலாந்து எதிரி என்றபோதிலும் ஹிட்லரும், ஜப்பானும் உலகத்துக்கே எதிரிகளாக இருந்தார்கள். எனவேதான் ஜப்பானின் உதவி தேவை இல்லை என்று நேரு கூறினார்.

இதனால் உலகப்போர்களில் இந்தியாவிற்கு நேரடியான பாதிப்பு ஒன்றும் இல்லாமல் போனது.

எப்படியோ அமெரிக்கா தலையிடாமல் இருந்தால் சரி .ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம் என்பர்.

Saturday, December 31, 2005

2006 வாழ்த்து

2006 ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


நமக்கு ஒரு வயது கூடிவிட்டதை நிணைவு படுத்த வருகிறது புத்தாண்டு

தமிழ் மணத்து நல்உள்ளங்களுக்கு என்னுடைய

ஆங்கில வருட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Saturday, December 24, 2005

சென்னையில் இன்று அழகிகள் திருவிழா:

தென் இந்திய அழகி யார்? நடிகர் தனுஷ்- ரஞ்சிதா தேர்வு செய்கிறார்கள்

சென்னை, டிச. 24-
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் இன்று மாலை தென்இந்திய அழகி போட்டி நடக்கிறது.

இறுதி சுற்று போட்டிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களை சேர்ந்த 22 அழகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாலை 6.30 மணிக்கு பிரமாண்டமான மேடையில் அழகிகள் அணி வகுக்கிறார்கள்.

இந்த போட்டியை காண தென் இந்தியாவில் உள்ள ஏராளமான மாடலிங் அழகி களும் வந்து குவிந்துள் ளார்கள். இதனால் வர்த்தக மைய வளாகம் அழகிகள் திரு விழா கூடமாக களை கட்டி உள்ளது.

தெலுங்கு சினிமா நடிகை சவுமியா தமிழக அழகிகள் அஸ்வினி, மிருதுளா உள்பட போட்டியில் பங்கேற்கும் அழகிகளில் மிஸ் தென் இந்தியா பட்டத்துக்கான அழகியை நடுவர் குழுவினர் தேர்வு செய்கிறார்கள்.

நடிகர் தனுஷ், நடிகை ரஞ்சிதா, தெலுங்கு சினிமா நடிகர் ஜீவன், ஹாய் மதன், தயாரிப்பாளர் ஏ.வி.எம். பால சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு குழுவினராக இருக்கிறார்கள்.

பட்டம் பெறும் அழகிக்கு கிரீடம் சூட்டப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. 2 மற்றும் 3-வது இடத்தை பெறும் அழகிகளுக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

போட்டிக்கான ஏற்பாடுகளை மாயாமதன், பிரதீப் குமார், பாபுஜி உள்பட பலர் செய்து வருகிறார்கள்.
நன்றி மாலை மலர்