Wednesday, March 15, 2006

முல்லை பெரியாறு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அதை தடுக்கும் வகையில் கேரள அரசு தடாலடியாக சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்துள்ளது. இதன் படி கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் அளக்கப்படும். இதனால் முல்லைப்பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க முடியாது என்று கேரளம் பகிரங்கமாக அறிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை சூழலுக்கு மத்தியில் எழிலுற அமைந்திருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணைக்கு வயது இன்றளவில் 113. தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கும் பிரதான அணை இதுதான்.

இந்த அணை நீரை தமிழகம் பணன்படுத்திக் கொள்ள வகை செய்யும் ஒப்பந்தம் கடந்த 1886ம் ஆண்டு அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானததின் மகாராஜாவுக்கும் அப்போதைய பரிட்டிஷ் அரசாங்கத்தின் மாநிலச் செலருக்கும் இடையே கையெழுத்தானது. அது முதல் தமிழகம் முல்லைப் பெரியாறு அணையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த அணையில் மொத்தம் 152 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் இப்போது 136 அடி உயரத்துக்கு மட்டுமே தேக்கி வைக்க கேரளா அனுதிக்கிறது. இந்த அளவுக்கு மேல் தண்ணீரை தேக்கினால் அணை உடைந்து விடும். அதனால் இடுக்கி மாவட்டம் உள்பட கேரளாவின் 5 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் கேரளா கூறிவருகிறது. ஆனால் முல்லைப் பெரியாறில் தண்ணீர் மட்டத்தை அதன் முழு அளவுக்கு உயர்த்த முடியவிட்டாலும் குறைந்த பட்சம் 142 அடி உயரத்துக்காவது தண்ணீரைத் தேக்கிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று பலமுறை கேரளாவை கேட்டுக்கொண்டது. அந்த கோரிக்கையை கேரளா கண்டு கொள்ளவே இல்லை.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தற்போதைய 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உத்தரவிடக்கோரி தமிழக அரசு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமனறம் நிபுணர்குழுவனரின் அறிககையை பரிசீலித்து முல்லைப் பெரியாறில் 142 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கிவைக்க கேரளம் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 152 அடி உயரமுள்ள இந்த அணையின் முழு அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்கும் முன்பாக அணையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

முல்லை பெரியாறு தோன்றிய வரலாறு

சரப்ஜித் சிங் சகோதரி மிரட்டல்

பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் சரப்ஜித் சிங்கை முஷாரப் கருணை காட்டி விடுவிக்காவிட்டால் வாகா எல்லையில் தற்கொலை செய்வேன் என அவரது சகோதரி மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதே செயலாக அவர்கள் செய்திருந்தால் 'வெடிகுண்டு வைப்போம் ' என மிரட்டியிருப்பர் அது தான் இந்தியன்

Sunday, March 12, 2006

இந்தியனுக்கு பாக்கிஸ் தானில் தூக்கு

பாகிஜ்தானில் குண்டுகள் வெடிப்பில் ஈடுபட்டதாக கூறி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்கின் அப்பீல் மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர் சரப்ஜித்சிங். இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகாப்பகுதியை கடந்த 1990ம் ஆண்டில் தவறுதலாக சரப்ஜித் சிங் கடந்தார். அப்போது, அவரை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து கைது செய்து லாகூர் சிறையில் அடைத்தனர். அவர் மீது உளவு பார்த்தாக குற்றம் பதிவு செய்யப்பட்டது. பின்னர், லாகூர் மற்றும் பைசலாபாத்தில் 1990ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புகளில் சரப்ஜித் சிங்குக்கு தொடர்பு உள்ளது என்று கூறி அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. லாகூரில் நடந்து குண்டு வெடிப்புக்காகவும், பைசலாபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்காகவும் சரப்ஜித் சிங்குக்கு சுப்ரீம் கோர்ட் தனித்தனியே தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சரப்ஜித் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. இது பற்றி முஷாரப்பிடம் வேசுவதாக பிரதமர் மன்மோகன் அறிவித்தார். இது பற்றி முஷாரப்பிடம் பிரதமர் பேசினார். சரப்ஜித்சிங்குக்கு மன்னிப்பு அளிப்பது பற்றி பரிசீலிப்பதாக முஷாரப் உறுதியளித்தார்.
இதில் லாகூர் குண்டு வெடிப்பில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மிகவும் தாமதமாக சரப்ஜித்சிங் அப்பீல் செய்துள்ளார் என்று கோரி மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று (9-3-06)தள்ளுபடி செய்துவிட்டது. அப்பீல் மனு தள்ளுபடியானது பற்றி சரப்ஜித்சிங்கின் வக்கீல் கூறுகையில்,'சரப்ஜித் சிங் ஒரு அப்பாவி. இரண்டாவது அப்பீல் மனுவையும் சுப்ரீம் கோர்ட் நிராகரிக்கும் என்று நினைக்கிறேன். அதனால், இனி அதிபர் முஷாரப்பிடம் கருணை மனு கொடுப்பதை தவிர சரப்ஜித் சிங்குக்கு வேறு வழியில்லை என்றார்.
இது தினகரன் செய்தி

Saturday, March 04, 2006

திமுக திருச்சியின் திருப்பம்




சென்னை, மார்ச்.4-

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பகிர்வில் ஏற்பட்ட பெரிய சல சலப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது.

மிகக்குறைந்த தொகுதிகளை ஏற்க மறுத்த ம.தி.மு,க, இன்று துணிச்சலான முடிவை எடுத்து அணி மாறி இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசியலில் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ம.தி.மு.க.வுடன் உடன்பாடு காணப்படுவதில் தி.மு.க.வுக்கு தொடக்கத்தில் இருந்தே உரசல்களும், நெருடல்களும் தோன்றின. கூடுதல் தொகுதி பெறுவதுதான் தங்களுக்கு கவுரவமாகவும் உயிரோட்டம் தருவதாகவும் இருக்கும் என்ற எண்ணம் ம.தி.மு.க. தலைவர்களிடம் நிரம்பி இருந்தது. இதை தி.மு.க. தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

என்றாலும் கருணாநிதி கேட்டுக்கொண்டபடி சற்று தியாகம் செய்த ம.தி.மு.க. 25 தொகுதிகளை ஏற்க சம்மதித்தது. ஆனால் முதலில் தி.மு.க. 20 தொகுதிகளை கொடுத்தது. பிறகு 21 என்றது. ம.தி.மு.க. ஏற்காததால் 22 தொகுதி தருகிறோம் என்றனர்.

இதற்கிடையே ம.தி.மு.க. பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானதால் "ம.தி.மு.க.வுக்கு 22 தொகுதிகள்தான் கொடுக்கப்படும். அதற்கு மேல் கொடுக்க இயலாது எனவே கூட்டணியில் இருப்பது பற்றி வைகோ முடிவு எடுக்கட்டும்'' என்று திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கருணாநிதி தெரிவித்தார்.

கருணாநிதி விதித்த `கெடு' ம.தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் ஒருவருக்கொருவர் போனில் தொடர்பு கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து அணிமாற ம.தி.மு.க. முடிவு எடுத்தது.

நேற்றே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வைகோ சந்திக்கப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதை எதிர்பார்த்து நிருபர்களும், போட்டோ கிராபர்களும் போயஸ் கார்டனில் குவிந்தனர். ஆனால் வைகோ வரவில்லை.

இந்த நிலையில் இன்று காலை வைகோ தன் மவுனத்தை கலைத்தார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர இறுதி முடிவு எடுத்த அவர் இது தொடர்பாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச தீர்மானித்தார்.

வைகோவின் முடிவுக்கு ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சிப்பொங்க வரவேற்பு தெரிவித்தனர். இதனால் இன்று காலை 10 மணிக்கு வைகோ அண்ணா நகரில் உள்ள வீட்டில் இருந்து உற்சாகத்துடன் புறப்பட்டார்.

எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமைக் கழகமான தாயகத்துக்கு வைகோ வந்தார். அவரை ம.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு வரவேற்றனர். அதை ஏற்றபடி உள்ளே சென்ற வைகோ, ம.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் பேசினார்கள்.

பிறகு 11.30 மணிக்கு வைகோ டி.என். 01 ஆர். 7675 என்ற டயோட்டா காரில் ஏறி முதல்- அமைச்சர் ஜெயலலிதா வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு புறப்பட்டார். அவரது காரை பின் தொடர்ந்தபடி 20 கார்களில் ம.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் அணி வகுத்து சென்றனர். ம.தி. மு.க. துணை பொதுச் செயலாளர்கள் செஞ்சி ராமச்சந்திரன், சத்யா, பொருளாளர் கண்ணப்பன் ஆகியோரும் உடன் சென் றனர்.

இதற்கிடையேவைகோ வரும் தகவல்அறிந்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைப்பு செயலாளர் செங்கோட் டையன், கொள்கை பரப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் 11.10 மணிக்கு வந்து தயாராக இருந்தனர். 11.12 மணிக்கு ம.தி.மு.க. அவைத்தலைவர் கணேசன் வந்தார். 11.20-க்கு அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் வந்தார்.

இந்த நிலையில் எழும்பூரில் இருந்து புறப்பட்ட வைகோ கடற்கரைசாலை, ராதாகிருஷ்ணன் சாலை வழியாக 11.45 மணிக்கு போயஸ் கார்டன் வந்து சேர்ந்தார். முதல்- அமைச்சர் ஜெயலலிதா வின் வீட்டுக்குள் வைகோ கார் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.

வைகோவை ஓ.பன்னீர் செல்வம் பச்சை நிற சால்வை அணிவித்து வரவேற்றார். பிறகு வைகோவை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றனர். அங்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா, வைகோவை வரவேற்றார். பரஸ்பரம் இரு வரும் வணக்கம் தெரிவித்தனர்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வைகோ பூச்செண்டு வழங்கினார். பின்னர் ம.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் ஜெயலலிதாவுக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வும் வைகோவும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டை யன், ஓ.எஸ்.மணியன், ஜெயகுமார், எல்.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதாவும் வைகோவும் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:-

நடைபெறவுள்ள 2006 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுக்கும், ம.தி. மு.க.வுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப் படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 22 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது என்று கறாராக கூறினார்கள். ஆனால் அ.தி.மு.க.விடம் இருந்து அதைவிட கூடுதலாக 13 தொகுதிகள் ம.தி.மு.க.வுக்கு கிடைத்து உள்ளது. இது ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண் டர்கள் அனைவரையும் மன நிறைவுக் குள்ளாக்கி இருப்பதாக ம.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

ம.தி.மு.க. தமிழகம் முழுவதும் பரவலாக போட்டியிட விரும்புகிறது. இதற்கு அ.தி.மு.க. தரும் 35 தொகுதிகள் பெரும் உதவியாக இருக்கும் என்று ம.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறினார். அதோடு தென் மாவட்டங்களில் ம.தி.மு.க. விரும்புகிற தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. முன்வந்து இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே அ.தி. மு.க. தலைமையிலான அணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரும் என்று தெரிகிறது. இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி பலம் மேலும் வலுவாகி உள்ளது. தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசி யலிலும் திருப்பங்களை ஏற்படுத்த அ.தி.மு.க.- ம.தி.மு.க. கூட்டணி "பிள்ளையார் சுழி'' போட்டு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
திருச்சியில் மாநாடு நடத்தினார் தனக்கொரு திருப்பம் ஏற்படும் என கலைஞர் பல கோடி செலவு செய்து மாநாடு நடத்தினார் அவருக்கு பாதகமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. என்னைப் பொருத்த வரை இது மட்டும் போதாது அ.தி.மு.க. விற்கு இன்னமும் கொஞ்சம் பலம் தேவை. காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட், அல்லது ப.ம.க வந்தால் கண்டிபாக அம்மாவின் ஆட்சிதான்.
ஏதோ செல்வி யிடம் வசவு பெற்றவர்கள் முன்னுக்கு வருவார்கள் போல உள்ளது வைகோ, சிதம்பரம், மணிசங்கர அய்யர், இத்தியாதி
எது எப்படியோ தஞ்சை மாவட்டம் ஒன்று சேர்த்து விட்டது இருந்தாலும் அது தான் சாணக்கியம் என்பார்கள்.


Sunday, February 26, 2006

பாலசிங்கம் பேச்சு

விடுதலைப்புலிகள்- இலங்கை அரசு இடையே முதல் கட்ட சமாதான பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் பி.பி.சி. ரேடியோவுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தை எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. அரசு ஒத்துக் கொண்டபடி தமிழர் பகுதிகளில் செயல்படும் ஆயுத குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்தால் இலங்கையில் அமைதி ஏற்படும்.

ராணுவமும் அதன் புலனாய்வு துறையினரும் தமிழர்களுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தினால் தமிழர் பகுதியில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கூடிய அதிகாரமும், செல்வாக்கும் விடுதலைப்புலிகளுக்கு உண்டு.

விடுதலைப்புலியின் கட்டளையை மீறி யாரும்செயல் பட முடியாது. தமிழர் பகுதிகள் முழுவதும் விடுதலைப் புலிகளின் அதிகாரத்தின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் செயல்படுகிறது.

இலங்கை தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத் தன்மைக்கு உதவியாக அமையும். இந்திய அரசுடன் விடுதலைப்புலிகளுக்கு மறைமுக தொடர்பு இருக்கிறது. ஆனால் இதுபற்றி பகிரங்கமாக வேறு எதுவும் கூற முடியாது.

இவ்வாறு பாலசிங்கம் கூறினார்
மாலை மலர்
என்ன இது இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது பாலசிங்கத்தின் பேச்சு.
இன்னமும் துயரத்தை மறக்க முடிவில்லையே

Saturday, February 25, 2006

நடிகர் விஜய காந்த் 'சோ'

ஊழலை ஒழிக்க முடியாது விஜயகாந்த் கனவு காண்கிறார் -எழுத்தாளர் `சோ' கிண்டல்

நடிகர் விஜயகாந்த்தின் தேர்தல் பிரசாரம் குறித்து எழுத்தாளர் சோ தெரிவித்துள்ள கருத்து:-

விஜயகாந்த், இன்னும் கனவு காண்பதிலிருந்து வெளியில் வரவில்லை. `நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து விடுவேன்' என்கிறார். ஊழலை வேண்டுமானால் குறைக்கலாம். ஒழிக்க முடியாது. உலக அளவில் ஊழலை ஒழித்தவர்கள் எவரும் கிடையாது.

பெரிய பெரிய ஊழல்கள் எல்லாம் இப்பொழுது அமெரிக்காவிலேயே வெளியில் வந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனிலும் ஊழல் இருக்கிறது. ஊழல் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் லஞ்சம் வாங்குவதற்கு தண்டனை விதிக் கப்பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்கும் நீதிபதிக்கு, அதிகாரிகளுக்கு, இந்த அளவு தண்டனை என்று கூறப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றால், அந்தக் காலத்திலேயே லஞ்சம் இருக்கிறது என்று அர்த்தம். லஞ்சம் என்பது, தன்னுடைய உழைப்பினாலோ, திறமை யினாலோ அல்லாமல், திருட்டுத் தனம் மூலமாக சம்பாதித்து விட வேண்டும் என்கிற ஆசையினால் வந்தது.

இதை பெரிய அளவு குறைக்க வேண்டும். எப்பொழுது குறைக்க முடியும்ப பயத்தை உண்டாக்க வேண்டும். எல்லோரும் நேர்மையாக இருந்து விடமாட்டார்கள். சில பேர் நிச்சயமாக நேர்மையாக இருப்பார்கள். இந்த மாதிரி லஞ்சம் வாங்குவது அசிங்கம்.

கீழ்த்தரம் என்று சுயமரியாதை உள்ள சிலர் நினைப்பார்கள்.

இது பெரியார் சுயமரியாதை அல்ல, நிஜமான சுய மரியாதை. பெரியார் சுயமரியாதை இருப்பவர்கள் லஞ்சம் மூலம் சம்பாதித்ததை விட, வேறு யாரும் சம்பாதித்து விட முடியாது.

மாலை மலர்

எதையாவது சொல்லி ஆட்சிக்குக் வரவேண்டுமே. 'ஒரு ரூபாய்கு 3 படி உச்சம் ஒரு நிச்சயம் இல்லையோல் முக்கத்தில் நிறுத்தி சவுக்ககால் அடியுங்கள்' சொல்லவில்லையா? அப்படித்தான் இதுவும்

Wednesday, February 22, 2006

நகைச்சுவை

அண்ணன் காளிமுத்து பாசத்தோடு கொடுத்த பாதை மாறிய பயணம் என்ற புத்தகத்தை ரகசியமாக படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோட்டத்திலே பாத்தி கட்டி என்ற பண்புள்ள பாடலை என்னையும் அறியாமல் பாடிவிட்டேன். இதை யாரோ ஒட்டுக்கேட்டு சொல்லக்கூடாத இடத்தில் சொல்லி விட்டார்கள்.
நான் கேட்கிறேன்... விரும்பிய தொகுதிகளையா கேட்டு விட்டேன்? விரும்பிய பாடலைத்தானே பாடினேன், இதற்கு ஏன் இவ்வளவு வருத்தம்?
பக்கத்திலேயே கனி இருக்கும்போது காயை ஏன் நாட வேண்டும் என்று பழைய வசனத்தை மெல்ல அசை போட்டேன். இது தவறா? கனி எது, காய் எது என்று தெரியாமல், புரியாமல், குழுப்பமான மனநிலையில் சொன்ன வார்த்தைகளை ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்?
அதற்குள் அவசரமாக ஏதேதோ அறிக்கைகளை விடுகிறார் அண்ணன். அதனால், தோட்டத்திலே பாத்தி கட்டி பாட்டும் மறந்து போய்,'பொடா' 'பொடா' புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு என்ற பாடல் அல்லவா நினைவுக்கு வந்துவிட்டது!
நாளொரு நவரசம், பொழுபொரு காமெடி என்ற ரீதியில் பாம்பரமாய் சுற்றிச் சுழல வேண்டியதுதான் என்று ஆறுதல் சொல்கிறது மனசாட்சி. அந்த திருப்தியிலேதான் இப்போது விடை பொறுகிறேன் அடுத்த காமெடி சீன் தயாரானதும் மீண்டும் சந்திக்க வருவேன், வணக்கம்
இன்று தினமலரில்

Sunday, February 19, 2006

தேவசபையில் கண்ணனும் துரியோதனனும் சந்தித்தால் என்ன பேசுவர்?- ஒரு கற்பனை

துரியோதனன் : வணங்குகிறேன் கண்ணா

கண்ணன் : என்ன துரியோதனா? அடக்கம் பணிவு எல்லாம் இங்கு வரவும் வந்து விட்டது போல் இருக்கி றது.

துரியோதனன் : எங்கு எனக்கு இல்லை? கண்ணா?

கண்ணன் : அன்று என்னிடம் குருச்சேத்திர போருக்கு உதவி கேட்க வந்தாயே அன்று?

துரி : அன்று என்ன?

கண்ணன் : என் தலைமாட்டில் அமர்ந்தல்லவா இருந்தாய் அது என்ன அடக்கமா? அவமறியாதையா?ஆனவமா?பாசமா?நேசமா? பணிவா? பக்தியா? சொல் துரியோதனா?

துரி : ஓ அதுவா நான் வந்ததைக் கண்டு தூங்குவது போல் நடித்த நடிகர் திலகமே கண்ணா நீ ஒரு மோசக்காரன், எப்பொழுதும் உனது கால்பக்கம் இருப்பது யார்?தலைபக்கம் இருப்பது யார்?

கண்ணன் : தலைமாட்டில் ஆதிசேசன்,கால்மாட்டில் என்தேவி.

துரி : அதாவது பணிவு தலைமாட்டில், சொந்தம் பாசம் கால்மாட்டில் அதாவது உன் தொண்டன் இருந்தபக்கம் நான் உனது தேவியிருந்தபக்கம் பாண்டவன் அவ்வளவுதான் இல்லையா? கண்ணா.....இது பணிவா? பாசமா?

கண் : அது போகட்டும் பாண்டவருக்காக தூதுவந்தபோது கொலுமண்டபத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து என்னை வணங்கியபோது நீ மட்டும் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாயே அது உனானவத்தைக் காட்ட வில்லையா? துரியோதனா!

துரி : நான் சிம்மாசனத்தில் இருந்ததாக கூறிவிட்டாய் அங்கு அந்த இடத்தில் நீ யார்? நான் யார்? கண்ணா!

கண் : நீ அஸ்த்தினாபுற மன்னன் நான் தூதுவன்

துரி : தூதுவனுக்கு மன்னர் எங்காவது எழுந்து வணங்குவதும் வரவேற்பதும் உண்டா கண்ணா?

கண் : சரி அதுபோகட்டும்,

துரி : நான் படையுதவி கேட்டு வந்தபோது '' நான் ஆயுதமேந்தமாட்டேனெற்று'' பகன்றனை பின் ஏனிந்த சக்ராயுததத்தை எடுத்தனை கண்ணா?

கண் : அது வந்து வேறு வாழியில்லை

துரி : கர்ணன் நல்லவன், வல்லவன், வள்ளல், வீரன், சூரிய குமாரன் உண்மையான எனது நண்பன் அவனை பாவி கொன்று விட்டாயே!!! பாவி...

கண் : சண்டை வேண்டாம் சமாதானமாக போங்கள் என்று பிதாமகர் செல்லும் போது, ''வயதான காலத்தில் வாய்மூடி கிடக்காமல் உபதேசம் செய்கிரீர்கள் என்று கர்ணன் சொன்னதற்கு பிதாமகர்,''உபதேச தர்மம் உனக்குப் பிடிக்காதா?'' என்று கேட்டதற்கு உபதேச தர்மம் ஒருவனை பலர் முன்னே கோழையாக்கிவிடும். என்றான்,''வீராவேச தர்மம் பலர் முன்னே ஒருவனை பகைவனாக்கிவிடும் கர்ணா!! நாடு கொடுத்தான் என்பதற்காக நன்றியுணர்வோடு பேசுகிறாயே தவிர நல்லதை பேசவில்லையே?'' ,'' நன்றி என்பதையே நிறையபேர் என்னெற்று தெரியாமால் இருக்கின்றனரே'' என்ற கர்ணனுக்கு,'' என் பேரன் ஒருவனால் அரசவாழ்வு கண்ட உன்னால் புண்படுத்தப்பட்டேன் '' என்று பிதாமகர் மிக துயரப்பட்டு வருத்தப்பட்டு சொன்னாரே சரியா?

துரி : என்னுயிர் நண்பர் கர்ணனை தேரோட்டி மகன் என அவனை எல்லோரும் தாழ்த்திப்பேசினர். அவனது வீரத்தை யாரும் போற்றிலர் அதில் பிதாமகருக்கும் பங்குண்டு. பாவி ! பாவி !! சண்டாளா !! என் நண்பன் பல ஆண்டுகளாக செய்த தர்மத்தின் பலனை ஒரே நாளில் இரந்து விட்டாயே வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை தான் செய்த புண்ணி, தர்மங்கள் என்று சொல்வார்களே அதையும் கவர்ந்து விட்டாயே கள்வா, அதை விட கொடுமை அவன் செய்த புண்ணியங்களை பெற்று அதனால் ஒரு புண்ணியம் கிடைக்குமல்லவா அதையும் என் நண்பர் உனக்கு கொடுத்து உயர்ந்து விட்டான் தர்மங்களையே யாசகம் பெற்ற யாசகா. இதனால் தான் தற்போது பூவுலகில் யாரும் தர்மம் செய்வதில்லை போலும் நீதான் பொய்யன் மாயவி மோசக்காரன் திருடன் நீ பொய் சொன்னது போதாதென்று பொய்யே பேசாத தர்மமையுமல்லவா? பொய் சொல்ல வைத்து விட்டாய் ''அசுவத்தாமா அதகா குஞ்சரா''.என்று நீ அன்று சொல்ல வைத்த பொய் இன்றும் ஆழ் போல் தலைத்து அறுகு போல் வேரூன்றி நன்றாக பரவிவருகிறது. யுத்த தர்மம் என்று ஒன்று இருக்கிறது அதை மீறி என்னை அடிக்ககூடாத இடத்தில் பீமனை அடிக்க வைத்தாயே கண்ணா இன்றும் பூலோகத்தில் நடக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நீ தான்.

கண் : முடிந்ததா அரவக்கொடியேனே! பாஞ்சாள நாட்டு மகள், உன் தந்தைக்கும் மருமகள், சபை நடுவே பொதுமக்கள், படைவீரர்கள்,பணிப்பொண்கள் மந்திரி இவ்வளவு பேருக்கு மத்தில் அவள் சேலையை நீக்க ஆணையிட்டது சரியா? முறையா?

துரி : ஏன் என்ன நடக்கும் அடிமையென்றால் என்று அந்த தர்மனுக்குத் தெறியாதா? ராஜ நீதி என்ன? அடிமையை நாம் எப்படியும் நடத்தலாம் என விதியிருக்கிறதே மேலும் அடிமையான பின் ஏன் பாண்டவர்கள் தங்கள் மார்பில் துணியேந்தியிருந்தனர் மணிகளையும் போட்டிருந்தனர் அடிமைகளுக்கு மார்பில் துணியேந்தும் வழக்கமில்ல என்பது தெறியாதா? அப்போதே கர்ணன் சொன்னானே,'' அடிமைகளுக்கு மார்பிலே துணியேந்தும் வழக்கமில்லை என்றவுடன் பாண்டவர்கள் தங்கள் மேல்துண்டையும் அணிகளன்களையும் எடுத்து வைத்து விட்டனரே பிராட்டியார் மாட்டும் செய்யாததால் தான் நான் ஆணையிட்டேன். இதில் என்ன தவறு?
இங்கு வந்து தெரிந்து கொண்டேன் நீயும் சகுனியும் சேர்ந்து தான் இந்த நாடகத்தை நடத்தினீர்கள் என்று. எது எப்படியோ தர்மனை பொய் சொல்லவைத்து பூலோக மக்களை பொய் சொல்லவைத்து விட்டாய் கொடையால் கிடைத்த புண்ணியங்கள் அனைத்தையும் பெற்று பூவுலகில் யாரையும் புண்ணியம் செய்யாமால் வைத்த புண்ணியன் நீ.

Sunday, February 12, 2006

ஜாலியன் வாலாபாக் - 2 -

பதில்: "ஆமாம்; அப்படித்தான் சொன்னேன்."

இருப்பதற்குள் மிகவும் குட்டையான சுவரை நோக்கி மக்கள் ஓடினார்கள். அதுவே ஜாதியடியால் ஐந்தடி உயரம் இருந்தது. அங்கே தான் மக்களில் பலரைக் குண்டுகள் தாக்கி வீழ்த்தின.

கேள்வி: "கவச மோட்டார்கள் உள்ளெ புகப் போதிய வழி இருந்ததாக வைத்துக்கொள்ளுவோம். அப்போது யந்திரத்துப்பாக்கி (மெஷின்கன்) கொண்டு நீர் சுட்டிருப்பீரோ?.

பதில்: "ஆமாம்; அநேகமாக அப்படித்தான் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்."

ஹண்டர் அறிக்கை அழுத்தமாய்ச் சொல்லுகிறது: "டையரை எங்கள் முன்னிலையில் விசாரித்த போது, அவர் இந்த விஷயத்தை விளக்கமாய்ச் சொன்னார்: தம் மோட்டார்க் காரில் வரும்போதே ஒரு தீர்மானம் செய்து விட்டாராம்; கூட்டம் போடக்கூடா தென்று தாம் விதித்த தடையுத்திரவை மீறிமக்கள் கூடியிருந்ததால், உடனே அவர்களைச் சுடுவ தென்று முடிவு செய்தாராம்."

விசாரணையில் டையர் கூறினார்:"அத்தனை மனிதர்களையும் கொன்று விடுவ தென்று நான் முடிவு செய்திருந்தேன்...."

டையர் தம் ராணுவமேல் அதிகாரிக்கு ஓர்அறிக்கை (டிஸ்பாட்ச்) அனுப்பியிருக்கிறார். தம்முடைய இந்தச் சொந்த அறிக்கையில் சில வார்த்தைகளைத் தடித்த எழுத்தில் (ஐட்டலிக்ஸ்) அவரே வரைந்திருக்கிறார். அவருடைய இந்த வாசகத்தை ஹண்டர் அறிக்கை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறது. டையர் எழுதியிருக்கிறார், "நான் சுட்டேன் , மக்கள் கூட்டம் கலையும் வரையில் சுட்டுக்கொண்டே யிருந்தேன், ஒரு பலனை விளைவிப்பது அவசியம், அதை விளைவிப்பது என் கடமை என்று நான் கொண்டேன். என் செயல் நியாயம் என்று காட்ட இந்த அளவு சுட்டதே மிகவும் குறைந்த பட்சமானது என்று நான் கருதுகிறேன். கேவலம் கூட்த்தைக் கலைப்பது ஒன்றே அப்போது முக்கியம் என்று நான் கருதவில்லை; அங்கே கூடியிருந்த மக்களுக்கு மட்டும் அல்ல; இதைவிட முக்கியமாக, பஞ்சாப் எங்கும் உள்ள மக்களுக்கெல்லாமே போதிய அளவு பய பக்தியை (மாரல் எஃபெக்ட்) உண்டாக்கவேண்டியிருந்தது. ராணுவ நோக்கில் பார்த்தால் இது புலப்படும். மித மிஞ்சிய அளவு கடுமையாகச் சுட்டதாக இதைச் சொல்லமுடியாது...

இதைப்பற்றி ஹண்டர் அறிக்கை கூறுகிற முடிவு இது:

"தமது கடமைபற்றி டையர் இப்படிக் கொண்ட கருத்து, துரதிருஷ்ட வசமானது.... அவர் அவ்வளவு நேரம் சுட்டதன் மூலம் மகத்தான பிழை (க்ரேவ் வரர்) புரிந்து விட்டார் என்று எங்களுக்குத் தோன்றுகிறது"

அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது: "ஜலியன்வாலா பாக்கில் காயம் அடைந்தவர்களைக் கவனிக்க, டையர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை; இதைப்பற்றி எல்லாரும் குறை கூறுகிறார்கள்." விசாரணையில் டையர் சொன்னார்:"தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் மனுச் செய்துகொண்டிருந்தால், அப்படி உதவ நான் தயாராக இருந்தேன்."

பஞ்சாபில் பிரிட்டிஷ் ஆக்டிங் கவர்னராக அப்போது ஸர் மைக்கேல் ஓட்வியர் என்பவர் வேலைபார்த்து வந்தார். டையரின் செயலை அவர் ஆமோதித்தார்;கலவரங்களைப் புரட்சி எழுச்சி (ரிபெல்லியன்) என்று அவர் குறிப்பிட்டார். ஹண்டர் கமிஷன் இப்படி அபிப்பிராயம் கூறுகிறது; "பஞ்சாபில் ஒரு நெருக்கடியை டையர் காப்பாற்றழி விட்டார் என்றும், சிப்பாய்க் கலகம் போன்ற பெரிய கலக எழுச்சியைத் தடுத்துவிட்டார் என்றும் வேறு சிலர் கூட வர்ணிக்கிறாரக்கள். ஆயினும் இந்த மாதிரி முடிவு செய்வது சாத்தியம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பிரிட்டிஷ் ஆட்சியைக்கவிழ்க்க வேண்டும் என்று, கலவரங்களுக்கு முன்னதாக எந்த விதமான சதியும் (கான்ஸ்பிரஸி) நடக்கவில்லை".

புரட்சி செய்து எழும்(இன்ஸரெக்ஷன்) நோக்கம் எவருக்கும் இல்லை; அப்படி யாரும் திட்டமிவும் இல்லை. இது மட்டும் அல்ல; மேலும் ஒன்று கூறுகிறது ஹண்டர் அறிக்கை: " 10-ஆம் தேதி எழுந்த கலவரம் சில மணி நேரத்துக்குள்ளே அடங்கிவிட்டதாக சம்பவம் எதுவும் மீண்டும் நிழவில்லை. 10-ஆம் தேதியிலே கூட, பொறுப்பு (சார்ஜ்) வகித்த அதிகாரி தம் கடமையைப் புரிந்திருந்தால் அந்தக் கொடுங் குற்றங்களையும் - பாங்க் உத்தியோகஸ்தர்களைக் கலகக்காரர் கொன்ற கொலைகளை - அவர் அநேகமாகக் தடுத்திருக்க முடியும்".

இரண்டரை நாட்கள் அமிர்தசரஸில் அமைதியே நிலவியது. அதற்குப் பிறகே டையரின் கசாப்பு வேலை (புச்சரி) நடந்திருக்கிறது. அநாவசியமாக அவர் படுகொலை (மாஸக்கர்) புரிந்தார். அந்த நாளில் இந்தியாவிலி ஓங்கியிருந்த பரிட்டிஷ் ராணுவ மனோபாவத்திலே பிறந்ததுதான் இந்தப் படுகொலை. இந்த மனோபாவத்தை விளக்க, ஹண்டர் அறிக்கை ஒரு மேற்கோள் தருகிறது. டில்லியில் பதவி விகத்த ஜெனரல் ட்ரேக்-ப்ராக்மான் என்பவரல் சொன்ன இந்த வாசகந்தான் அந்த மேற்கோள்: " ஆசியாக்காரன் எதையும் மதிக்கமாட்டான்; வலிமை (ஃபோர்ஸ்) ஒன்றைக் கண்டால் மட்டுமே மதிப்பான்."

ஜலியன்வாலாவில் தாம் செய்த படுகொலை குறித்துப் பெருமையோடு ரத்னச் சுருக்கமாக டையர் சொன்னார்:"ஜோரான நல்ல காரியம் ஒன்றைச் செயயப் போவதாகத்தான் நான் எண்ணினேன்."

செய்தகொடுமை போதாது எனறு,மக்களுக்கு ஜெனரல் டையர் ஓர் அவமானமும் இழைத்தார்; இகழ்ச்சிக்குரிய ' தவழும் உத்திரவு' (க்ராலிங் ஆர்டர்) ஒன்றைப் பிறப்பித்தார். அமிர்தசரஸ் பெண் பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக இருந்த மிஸ் ஷெர்வுட் என்ற பெண்ணை ஏப்ரல் 10-ஆம் தேதி ஒரு கலகக் கூட்டம் காட்டுமிராண்டித்தனமாக் கொலை செய்து விட்டது. ஜலியன்வாலா பாக் ரத்தமுழுக்கு நடந்து பல நாள் சென்ற பின்பு, டையர் ஓர் உத்திரவு போட்டார். மிஸ் ஷெர்டவுட்டைக் கலகக் கூட்டம் எங்கே தாக்கியதோ அந்தத் தெருவில் எந்த இந்தியன் போனாலும் சரிதான; அவன் மண்டியிட்டுத் தவழ்ந்து கோண்டே போகவேண்டும் - இது அந்த உத்திரவில் ஒரு ஷரத்து. சில குடும்பத்டதினர் தங்கள் வீடுகளுக்குப் போக இந்தத் தெரு ஒன்றே வழியாக இருந்தது. அவர்களுங்கூட இப்படித் தவழ்ந்து கொண்டு தான் போகவேண்டும்.

ஷெர்வுட் அடிபட்ட இடத்தில், கசையடி மேடை (விப்பிங் போஸ்ட்) ஒன்றையும் டையர் அமைத்தார்: தம் உத்திரவை எந்த இந்தியனாவது மீறினால், அவனை இங்கே கொண்டு வந்து நிறுத்திப் பகிரங்கமாய் அவனுக்குக் கசையடி கொடுக்கச் சொன்னார். அமிர்த சரஸில் சில ஜில்லாக்களில் வழியிலே போகும்போது பிரிட்டிஷ் அதிகாரிகளுள் எவனையாவது கண்டால் வண்டியிலோ குதிரை போன்ற விலங்கின் மீதோ சவாரி செய்கிற இந்தியன் எவனும் கீழே இறங்கி விடவேண்டும் ; பெருங்குடையோ குட்டைக் குடையோ பிடித்துக்கொண்டு போகிற எவனும் அதை இறக்கி விடவேண்டும்; அந்தப் பிரிட்டிஷ் அதிகாரிக்குச் 'சலாம்' வைக்கவேண்டும் - இது டையரின் கட்டளை.

பிரிட்டிஷ் இந்தியா மந்திரி(ஸெக்ரட்டரி அவ் ஸ்டேட் ஃபார் இண்டியா) பதவியல் இருந்த ஸர் எட்வின் மாண்டேகு உத்தியோக ரீதியில் வைஜிராயலார்டு செம்ஸ் ஃபோர்டுக்கு 1920 மே 26-ல் ஒரு கடிதம் எழுதினார். "ஜலியன்வாலா பாக்கில் ப்ரிகடீர் ஜெனரல் டையர் தம் செயலுக்கு அடிப்படையாகக் கொண்ட கோட்பாட்டை மன்னர் பிரானின் சர்க்கார் அழுத்தமாக மறுக்கிறது" என்று அதில் கூறினார்.மேலும் "நாகரிக சர்க்காருக்குரிய எந்த லட்சணத்தையும் டையர் போட்ட 'தவழும் எத்திரவு' மீறிவிட்டது" என்று எழுதினார்.டையரின் செயல் கண்டு எண்ணற்ற ஆங்கிலேயர் வெட்க மடைந்தார்கள். ஆனால் அதை ஆதரிக்காமலும் இல்லை.

டையரைச் சர்க்கார் ராஜீனாமாச் செய்யச் சொல்லியது. விமாங்களைக்குறி பார்க்க உதவியாகத் தூரம்காணும் கருவி(ரேஞ்ஜ் ஃபைண்டர்) ஒன்றைத் தமது ஆயுளின் இறுதிக் காலத்தில் டையர் கண்டு பிடித்தார். ப்ரிஸ்டல் நகரில் ஓய்வு பெற்று வாழ்ந்து,1927 ஜுலை 23-ல் அவர் இறந்தார்.

அங்கே ஒரு வாவேசு அய்யரும் இல்லை , வாஞ்சிநாதனும் இல்லை.

தொடரும்.......

Saturday, February 11, 2006

ஜாலியன்வாலா பாக்

ஜலியன்வாலா பாக் என்ற இடத்திலே கூட்டம் நடந்தது.' பாக்' என்றால்

தோட்டம் என்று அர்த்தம். அறிக்கை கூறுகிறது:"பெயரைப் பார்த்தால் தோட்டம் என்று தோன்றும்: ஆனால், ஜலியன்வாலா பாக் எந்த விதத்திலும் தோட்டம் அல்ல. உபயோகத்தில் இல்லாத ஒரு நிலம் அது. நீண்ட சதுர (ரெக்டாங்குல்) வடிவம் கொண்டது. அங்கங்கே பாழடைந்த கட்டிட இடிபாடுகள் மூடிக்கிடந்தன. அநேகமாய் முழுவதுமே அதைக் கட்டிடச் சுவர்கள் சூழ்ந்திருந்தன. அதற்குள்ளே வரப்போகச் சில வழிகளே இருந்தன. அந்த வழிகளும் நன்றாயில்லை. அடிக்கடி மக்களின் பெருங்கூட்டங்கள் அதில் நடப்பது வழக்கம் என்று தெரிகிறது. அதன் ஒரு கோடி வழியாக ஜெனரல் டையர் நுழைந்தார். அந்தக் கோடியின் நுழைவாயிலுக்கு இரண்டு புறமும் தரை மேடாக இருக்கிறது. டையர் நுழைந்த கோடிக்கு எதிர்க்கோடியில் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. ஜெனரல் டையர் தம் துருப்புக்களை நிறுத்திய இடத்திலிருந்து 150 கஜ தூரத்தில் உயரமாக அமைந்த மேடை ஒன்றின் மீது ஒரு மினதன்ட நின்றுகொண்டு அந்த மக்கள் கூட்டத்துக்குப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்." பாக்கில் பத்தாயிரத்துக்கு மேல் இருபதாயிரம் மக்கள் வரையில் கூடியிருந் திருக்கிறார்கள் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.

இருபத்தைந்து கூர்க்காக்கள் (அதாவது நேப்பாளப் போர் வீரர்கள்), பலூச்சி்ஸ்தானத்திலிருந்துவந்த இருபத்தைந்து பலூச்சிகள் இந்த இரு கூட்டத்தினரும் ரைஃபிள் (சிறு துப்பாக்கி) தங்கியிருந்தார்கள்; நாற்பது கூர்க்காக்கள் கத்திமட்டுமே வைத்திருந்தார்கள். இவர்களோடும் இரண்டு கவச (ஆர்மர்டு) மோட்டார்களோடும் டையர் வந்தார்."ஜலியன்வாலா பாக் பக்கமாக வந்ததும், குறுகிய நுழைவாயில் வழியாக அதனுள் இந்தப் படையுடன் டையர் புகுந்தார். கவச மோட்டார்கள் புகப் போதிய அகலமாக அந்த வாயில் இல்லை, எனவே, வெளியே தெருவிழலேயே அவற்றை டையர் விட்டு வைத்தார்". என்று அந்த அறிக்கை அறிவிக்கிறது.

மேலும் அது தொடர்ந்து சொல்கிறது: "பாக்கினுள் நுழைந்தவுடனே, நுழைவாயிலின் ஒரு பாக்கம் உள்ள மேட்டில் இருபத்தைந்து துருப்புக்களையும் மறு பக்கம் உள்ள மேட்டில் இன்னோர் இருபத்தைந்து துருப்புக்களையும் டையர் நிறுத்திவைத்தார். மக்கள் கூட்டத்துக்கு எந்த வித எச்சரிகையும் செய்யாமலே அவர்களைச் சுடத் தம் துருப்புக்களுக்குக் கட்டளையிட்டார். தடை உத்தரவுப் பிரகடனத்தை மீறி மக்கள் கூடியிருந்ததால், அவர்களுக்கு அப்படி எந்த எச்சரிக்கையும் செய்யத் தேவையில்லை என்று அவர் கருதினாராம். துருப்புக்கள் சுமார் பத்து நிமிட நேரம் தொடர்ந்து சுட்டார்கள். என்ன விதமான பிரசங்கத்தை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவில்லை. மக்களில் எவரும் துப்பாக்கி தாங்கியிருக்க வில்லை. ஆனால், அவர்களில் சிலர் தடிகள் வைத்திருந் திருக்கக் கூடும்.....துருப்புகள் சுட ஆரம்பித்வுடனே, கூட்டம் கலையத் தொடங்கியது. மொத்தம் 1650 தடவை(ரவுண்டு) துருப்புக்கள் சுட்டார்கள்.... தனித் தனினயே சுட்டார்கள்; சரமாரி (வால்லி) ஆகச் சுடவில்லை....சுமார் 379 பேர் மாண்டதாக, கமிஷனின் இந்த விசாரணையில் புலனாகிறது."

மாண்டவர்களைப் போல் மூன்று மடங்கு மக்கள் காயமுற்றிருக்க வேண்டும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது. ஆகவே செத்தவர் 379 பேர்; காயமுற்றவர் 1137 பேர். இந்த இரண்டு எண்ணிக்கையையும் கூட்டிப் பார்க்கும் போது, 1650 துப்பாகிக் குண்டினால்1516 ஆள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. தாழ்வான 'தோட்ட'த்தில் பட்டியில் அடைபட்ட ஆடு மாடுகள் போல் மக்கள் சிக்கியிருந்திருக்கிறார்கள்; வீரர்களின் குண்டுகளுக்குச் சரியான இலக்காகியிருக்கிறார்கள்.

டையரை ஹண்டர் கமிஷன் முன் குறுக்கு விசாரணை செய்தார்கள். தம்முடைய மனப்பான்மையையும் நோக்கத்தையும் அப்போது அவர் வெளியிட்டார்.


கேள்வி: "சுடுவதை அடிக்கடி நீர் திசை மாற்றினீரா? மக்கள் எங்கே அடர்த்தியாய் நின்றார்களோ அங்கே பார்த்துச் சுடச் சொன்னீரா?"

தொடரும்.......

Friday, February 03, 2006

N.S. கிருஷ்ணன்

திருச்சி தென்னூரில் குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்டுவதற்காக

மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் கிந்தனார் கதாகாலச்ட்சேபம் நிகழ்சிசயை என்.எஸ். கிருஷ்ணன் நடத்தினார். இதில் வசூலான தொகை ரூ.1360துடன் தன்னுடைய நன்கொடையாக ரூ.1640 ம் சேர்த்து ரூ.3000 த்தை அன்றைய நகரசபைத் தலைவரிடம் கொடுத்து கிந்தனார் குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்டவைத்தார். பிறகு போக்கு வரத்துக்கு இடஞ்சலாக இருப்பதால் அந்த வண்டி ஸ்டாண்டை எடுத்து மேற்கு பக்கம் கட்டினார்கள் . சென்ற ஆண்டு அந்த வண்டி ஸ்டாண்டை மாநகராட்சி முழுவதும் அப்புறப்படுத்திவிட்டது.

"முன்னுக்கு வாங்க .....முன்னுக்கு வாங்க....... கேய் .....கேய் ....கேய் "

என குதிரை வண்டடிக்காரன் சொன்ன வார்த்தை அவருக்கு பிடித்தது. யாரும் முன்னுக்கு வாங்க முன்னுக்கு வாங்க என நம்மை முன்னேரச்சொல்ல மாட்டார்கள் அந்த குதிரைவண்டிக்காரன் தான் அப்படிச் சொல்வான் என்பதற்காக அவர்களுக் அதை ஏற்படுத்திக் கொடுத்தார்.


Thursday, February 02, 2006

வைரஸ் தாக்குதல்

எனக்கு வந்த மின்னஞ்சல் பார்த்தக்கொள்ளுங்கள் தடுக்கவழி தேடுங்கள் எனக்கும் சொல்லுங்கள் எப்படி என
From: View message header detail customerservice@vsnl.co.in
To: vsnlusers@vsnl.net
Subject: Immediate attention - New Virus Alert
Date: Thursday, February 2, 2006 10:42 am
Dear Tata Indicom Broadband Customer,
A new mass-mailing worm has appeared that can destroy files on your computer. The

MyWife/Blackworm virus can arrive on your computer in the form of an attachment to an

e-mail or through a file transfer, often from a known and trusted friend.

On February 3rd, all Word, Excel, PowerPoint and PDF documents are likely to be

deleted from the hard drives of computers infected by the virus.

We recommend that you implement and follow these protection measures to keep your

Wednesday, January 25, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் - 3 -

காந்திக்கு எதிரே இரண்டடி தூரத்தில் அந்த மணிதன் வந்து நின்று கொண்டான். சிறிய ஆட்டோமாட்டிக் பிஸ்டல் ஒன்றால் மூன்று முறை சுட்டான்.
முதல் குண்டு பாய்ந்தது; இயங்கிக் கொண்டிருந்த காந்தியின் கால் தரையில் பதிந்தது. ஆயினும் அவர் நின்று கொண்டே யிருந்தார். இரண்டாவது குண்டு பாய்ந்தது; ரத்தம் பீரிட்டுக் காந்தியின் வெண்மையான துணிகளைக் கறைப்படுத்தத் தொடங்கியது. அவருடைய முகம் சாம்பலென வெளிறிட்டது. கூப்பியகைகள் மெல்லத் தளர்ந்து தொங்கின. ஒரு புஜம் மட்டும் கணநேரம் ஆஷாவின் கழுத்தில் பதிந்திருந்தது.
"ஹே ராமா!"என்று காந்தி முணுமுணுத்தார். முன்றாவது குண்டு வெடித்தது வெளிவந்தது. துவண்ட உடல் தரையிலே படிந்து விட்டது. அவருடைய மூக்குக் கண்ணாடி மண்ணிலே விழுந்தது. பாதரட்சைள் பதங்களை விட்டு நழுவிக் கழன்றன.
ஆபா, மனு இரண்டுபேரும் காந்தியின் தலையைப் பிடித்து நிமிர்த்தினார்கள். அன்புக் கரங்கள் அவரைத் தரையில் இருந்து தூக்கி, பிர்லா மாளிகைக்குள் அவருடைய அறையில் கொண்டு போய்ச் சேர்த்தன.

Tuesday, January 24, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் - 2 -

வரிசையாகத் தூண்கள் நிற்கும் நீளமான செம்பாறாங்கல் மண்டபப் பாதையில் இரண்டு நிமிஷ நேரம் நடந்து, பிரார்த்தனை மைதானத்துகுச் செல்ல வேண்டும. தினந்தோறும் இந்த இரண்டு நிமிஷ நேரத்திலும் காந்தி தம் தொல்லைகளை யெல்லாம் மறந்து தாமாஷகப் பேசுவார். அன்று ஆபா கொண்டுவந்து கொடுத்தகாரட் கீரைச் சாறு பற்றிக் கிண்டல் செய்தார்.
" ஆகவே நீ எனக்கு மாட்டுத் தீனியைக் கொடுத்து விட்டாய்" என்று சொல்லி அவர் சிரித்தார்.
" இல்லை, இது குதிரைத் தீனி என்றல்லவா பா சொல்லுவார்கள்" என்று ஆபா பதிலளித்தாள். பா என்று அவள் குறிப்பிட்டது காந்தியின் காலஞ்சென்ற மனைவியை.
"வேறு யாருக்கும் பிடிக்காததை நான் சுவைத்துச் சாப்பிடு வதால், நான் எவ்வளவு பெரியவன்?" என்று கேலியாகச் சொன்னார் காந்தி.
"பாபு(அப்பா), உங்கள் கைக் கடிகாரம் அநாதையாகி விட்டது போல் அழுதுகொண்டிருக்கும் அதை இன்று நீங்கள் பார்க்வேயில்லை" என்றாள் ஆபா.
"அதை ஏன் நான் பார்க்க வேண்டும்? நேரத்தைக் கவனித்துக் கொள்ளும் கணக்குப் பிள்ளைகள் தான் எனக்கு இருக்கிறார்களே!" என்று பட்டென்று பதிலளித்தார் காந்தி.
" அந்தக் கணக்குப் பிள்ளைகளையுந்தான் நீங்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை" என்று மனு குறிப்பிட்டாள். காந்தி மறுபடியும் சிரித்தார்.
இந்த நேரத்தில் மைதானத்துக்கு அருகே உள்ள புல்தரையில் அவர் நடந்துகொண்டிருந்தார். தினந்தோறும்மாலையில் நடக்கும் பிரார்த்தனைக்காகச் சுமார் ஐந்நூறு பேர்கள் கூடியிருந்தார்கள் . " இன்று பத்து நிமிஷம் தாமதித்துவிட்டேன். இப்படித் தாமதிப்பது என்றாலே எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. ஐந்து மணி அடிக்கும் போது இங்கே நான் கணக்காய் வந்திருக்க வேண்டும்" என்று தமக்குத் தாமே பேசுவது போல் காந்தி உரக்கச் சொன்னார்.
பிரார்ததனை மேட்டுக்கு ஐந்து சிறுபடிகள் இருந்தன. அவற்றை அவர் வேகமாகக் கடந்தார். மர மேடைக்கு இன்னும்சில கஜ தூரம் தான் இருக்கும். பிரார்த்தனை நடக்கும் போது அந்த மர மேடையிலேயே அவர் உட்கார்ந்திருப்பார். கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பபாலோரும் எழுந்துநின்றார்கள். பலர் முன்னே நகர்ந்து வந்தார்கள். சிலர் அவருக்காகச் சந்தில் வழி விலக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அவருக்கு மிக அருகே இருந்தவர்கள் அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆபா, மனு இருவருடைய தோள்களிலுமிருந்து கைகளை எடுத்துக் குவித்து, ஹிந்து முறையில் காந்தி எல்லாருக்கும் வணக்கம் செலுத்தினார்.
அப்போது ஒரு மனிதன், முழங்கையால் இடித்துத் தள்ளிக் கொண்டு கூட்டத்திலிருந்து சந்துக்குள் வந்து சேர்ந்தான். வழக்கப்படி காந்தியின் பாதத்தில் விழுந்து வணங்க விரும்பிய ஒரு பக்தன் மாதிரி அவன் தோன்றினான். ஆனால் தாங்கள் நேரம் கடந்து விட்டதால், அவனை மனு தடுத்து நிறுத்த முயன்றால்: அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டாள். ஆனால், அவனோ அவளை உதறி ஒரு புறம் தள்ளினான். அவள் உருட்டியடித்துக்கொண்டு போய் விழுந்தாள். காந்திக்கு எதிரே இரண்டடி தூரம்........

நாளை மீதம்

Monday, January 23, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் -1 -

மாலை மணி 4. 30 கடைசி உணவை ஆபா உள்ளே கொண்டு வந்தாள் . இந்த உணவுக்குப் பிறகு வேறு உணவை அவர் உண்ணப் போவதில்லை. ஆட்டுப் பால், சமைத்வையும் , பச்சையுமான காய் கறிகள், ஆரஞ்சுப் பழங்கள், ஒரு பச்சடி இவைதான் அந்த உணவு எலுமிச்சம் பழம், வடித்த வெண்ணெய், இஞ்சி, கற்றாழைச் சாறு இவற்றின் கலவை அந்தப் பச்சடி. புது டில்லியில் பிர்லா மாளிகையின் பின்புறம் உள்ள தமது அறையில் காந்தி உட்கார்ந்திருந்தார். இந்த உணவை அருந்திக் கொண்டே, சுதந்திர இந்தியாவின் புதிய சர்ககாரில் உதவிப் பிரதம மந்திரியான சர்தார் வல்லப் பாய் படேலுடன் அவர் பேசிச்கொண்ருந்தார். படேலின் மகளும் காரியதரிசியுமான மணிபென் கூட இருந்தாள். நடந்த சம்பாஷணை மிகவும் முக்கியமானது. படேல், பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இந்த இரண்டு பேருக்கும் இடையே மணஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் உலவின . வேறு எத்தனையோ விவகாரங்களைப் போலவே இந்த விவகாரத்தையும் மகாத்மாவின் காதில் போட்டிருந்தார்கள்.

காந்தியும் படேலும் அவருடைய பெண்ணும் மட்டும் தனியே இருப்பதைக் கண்ட ஆபா, தான் குறுக்கிடச் சற்றுத் தயங்கினாள். ஆனாலும் காந்திக்கு எதுவும் நேரந் தவறக்கூடாது. இது அவளுககுத் தெரியும். எனவே, கடைசியில், மகாத்மாவின்நிகல் முலாம் புசிய கைக் கடிகாரத்தை எடுத்து வெரிடம் காட்டினாள். "நான் உடனே கிளம்பியக வேண்டும்" என்று சொல்லிக் காந்தி எழுந்தார். பக்கத்துச் சிற்றறைக்குச் சென்று விட்டு, மாளிகையின் இடது பக்கத்துப் பெரிய தோட்டத்தில் உள்ள பிரார்த்தனை மைதானத்தை நேக்கிப் புறப்பட்டார். மகாத்மாவுடைய பங்காளியின் பேனான கனு காந்தியின் இளம் மனைவி ஆபா. மற்றோரு பங்காளியின் பேத்தி மனு. இந்த இரண்டு பேரும் அவருடன் சென்றார்கள். இந்த இரண்டு பேருடைய தோள்கள் மீதும் அவர் கைகளைச் சார்த்திக் கொண்டார். "இவர்கள் தான் நான் நடக்க உதவும் ஊன்று கோல்கள்" என்று காந்தி சொல்வார்.
மீதம் நாளை

Friday, January 20, 2006

நண்பர் பால சந்தர் கணேசனுக்கு

கடிதத்திற்கு பதில்

//"மாணவ_மாணவிகளுக்கு தினம் அரை வேளைதான் படிப்பு. மீதி அரை நேரம், ஏதாவது கைத்தொழில் கற்க வேண்டும்" என்பதே ராஜாஜியின் கல்வித்திட்டம்.


2 ஷிப்டுகளில் பள்ளிக்கூடம் நடத்தி, அதிகமானவர்களை சேர்க்கலாம் என்று ராஜாஜி நினைத்தார்.

"என்ன தொழில் கற்பது? அரசாங்கமே தொழில் கல்விக்கு ஏற்பாடு செய்யுமா?" என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர்.

"அப்பா செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்றுக்கொள்ளலாம்" என்று ராஜாஜி பதிலளித்தார்.//

கற்றுக் கொள்ளலாம் என்று தான் சொன்னார் அதையே தொடர்ந்து செய்யச் சொல்ல வில்லை. அரசியலில் ஆதாயம் பெற மாற்றுக் கட்சியினரால் இதை பெரிது படுத்தி பூதாகாரமாக்கினர்.
ராஜாஜி அன்று சொன்னது இன்றும் நடக்கிறது கட்சித்தலைவர் மகன் அவருக்கு பின் அந்த கட்சித் தலைவர் , நடிகர் மகன் நடிகர், மந்திரி மகன் மந்திரி கிட்டத்தட்ட இதுவும் குலத்தொழில் மாதிரி அன்று எதிர்த்தவர்கள் 'நான் அன்று எதிர்த்தேன் இன்று எனது மகனுக்கு மந்திரி பதவி வேண்டாம்' என யாரும் கூறவில்லை டாக்டர் மகன் டாக்டர் தான். எஞ்சினியர் மகன் எஞ்சினியர் தான் அவர் என்ன சொன்னார் பாதி நேரம் ஏதாவது தொழில் கற்றுக்கொள்ளுங்கள் என்றார் இவர்கள் கேட்டதற்கு தந்தையுடன் கூட இருந்து உதவிசெய்யட்டும் அதை கத்துக்கொள்ளட்டும் என்றார் COLLECTOR வேலைக்குப் போக வேண்டாம் என்றா சொன்னார்?, அதாவது ஒன்று கிராமத்தில் சொல்லவார்கள் ஆகாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என. இதை பெரியார் சொல்லியிருந்தால் ஆகா ஓகொ என புகழ்ந்திருப்பார்கள் சொன்னவர் பார்ப்பணர் என்ற ஒரே காரணத்தால் அன்று எதிர்த்தனர். பார்பணிசியம் என்பது வேறு அதில் எனக்கு உடன்பாடு கிடையாது அதை இதோடு இணைக்கக்கூடாது. சொன்னதை சொன்ன கருத்து நல்ல கருத்து என்றால் யார் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ராஜாஜி சொல்வதற்கு முன்னமே நாம் அந்த வேலையைத்தான் செய்தோம் பள்ளிகூடம் விட்டது வயலுக்கு போனோம், ஒவ்வொருவரும் அப்டித்தான்.
ஒரு மாணவன் 6 மணிநேரம் தொடர்ந்து படிக்க முடியாது 4 மணிநேரம் படித்து விட்டு மீதி நேரம் ஏதாவது தொழில் கத்துக்கொள்ளட்டும் என்பது நல்ல திட்டம்தான்.



இப்போது குலகல்வி திட்டம் பற்றி என்னுடைய பதில்.
உண்மையில் பிள்ளைகள் அதுவும் ஏழை பிள்ளைகள்,பல ஜாதியிலிருந்தும் உள்ள ஏழை பிள்ளைகள் பள்ளி கூடம் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?. அதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.

அதனில் ஒன்று தான் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவது. இதைதான் காமராஜர் செய்தார்.(மதிய உணவு திட்டம்). பின்னர் எம்.ஜி.ஆர் விரிவாக்கினார்(சத்துணவு திட்டம்). இந்த திட்டங்கள் பெரிய வெற்றி பெற்றன என்பதும் நிறைய பிள்ளைகள் பயன்பெற்றனர் என்பதும் வரலாறு.

இது போன்று ஒன்றும் செய்யாமல் எதற்கு ஜாதி அடிப்படையில் தொழில் கல்வி கொண்டு வர வேண்டும்? இதில் என்னார் வேறு சொல்கிறார். டாக்டர் பையன் டாக்டராகிறார், வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது என்று எடுத்துகாட்டு வேறு. என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து. டாக்டர் பையன் டாக்டராக இருப்பது வெற்றியே... வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது வெற்றியே.
ஆனால் செருப்பு தைப்பவர் பையன் செருப்பு தைப்பனாகவே இருப்பது வெற்றியா?.

மேலும் டாக்டர் பையன் டாக்டராக வருவது குல தொழிலாக அல்ல. ஏனெனில் எல்லா ஜாதியிலும் டாக்டர்கள் இருக்கிறார்கள். அதை குடும்பத் தொழில் என்று கூறுங்கள்.

ஆக்க பூர்வமான எடுத்த காமராஜரையோ, எம்.ஜி.ஆரையோ யாரும் குறை கூறி எழுதுவதில்லை என்றும் இராஜாஜி இதை செய்திருந்தால் அவரையும் சமுகம் பாராட்டியிருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.

நான் முட்டால் தான் புத்தியுள்ள புத்திமான்கள் எனது பின்னுட்டத்தையம் தங்கள் பதிலை ஒரு முறையல்ல பல முறை படித்து பாருங்கள் அடுத் பதிவில் சற்று விளக்கமாக எழுதுகிறேன்.
குலத்தொழில் தான் செய்ய வேண்டும் என்று ராஜாஜி சொன்னாரா? அல்லது தந்தை செய்யும் தொழில் உடன் கூட இருக்கச் சொன்னாரா?அதை முதலில் தெரிந்து கொண்டு பேசுங்கள்.
அப்பாவுக்கு பக்கபலமா உறுதுணையா இருக்கச் சொன்னால் நான் ஊர்சுத்தத்தான் போவேன் என்றால் போங்கள். இந்தி படித்தால் நல்லது என்றார்கள் முடியாது என்றால் போங்கள் யாருக்கென்ன . மது கடை திறக்க வேண்டாம் !!,லாட்டரி சீட்டு ம் நடத்த வேண்டாம் என்று நல்லதை சொன்னால் முடியது என்றால் போங்கள் யாருக்கென்ன .

Sunday, January 15, 2006

வருவாய்த்துறை 2

வருவாய்த் துறை என்பது எப்படி வளர்ந்தது என்பதை பார்த்து விட்டு பிறகு பேசுவோம்
அந்த காலங்களில் நிலவரி வசூல் தான் நாட்டின் முக்கிய வருமானம். அதுவும் இன்றைய கால கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிக அதிகம் தான் நில வரி செலுத்த முடியாமல் கூட நிலத்தை அரசிடமே ஒப்படைத்தவர்களும் உண்டு. நிலவரி வசூல் செய்ய கிட்டி என்ற ஒரு கருவியை வைத்து விரல்களை நெரித்ததும் உண்டு; விரல்களில் துணியை சுற்றி எண்ணெய் ஊற்றி நெருப்பை வைத்தும் வசூல் செய்த காலங்களும் உண்டு . திமுக ஆட்சிக்கு வந்த ஆண்டே லெவி என்ற பெயரில் விவசாயிகளிடம் வலுக் கட்டாயமாக நெல்லை பெற்றதும் உண்டு . இவற்றையெல்லாம் பிறகு பார்ப்போம்.
கிபி. 985 – 1011 ராஜராஜ சோழன் ஆண்டு வந்தபோது வருவாய் நிர்வாகத்தை சீர் அமைத்தார்

கி.பி. 1175 – 1194 முகமது கோரி என்ற முஸ்லீம் மன்னர் இந்தியாவை அரசாட்சி செய்தார் அவருடைய காலத்தில்தான் மொகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு வழி வகுக்கப்ட்டது.

கி.பி. 1539 – 1545 அரசாட்சி செய்த ஷெர்ஷா சூரி (டைகர்) வருவாய் நிர் வாகத்தை மேலும் சீர் அமைத்தார் அவருடைய காலத்தில்தான் சென்னைக்கும் கல்கத்தாவிற்கும் இடையே கிரண்ட் ட்ரங் ரோடு அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் நாணயம் உலோகத்தில் கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1556 – 1605 அக்பர் அரசாட்சி செய்த போது இடைப்பட்ட காலத்தில் இந்துக்கள் மீது விதிக்கப்ட்ட சிசியா என்ற வரியை ரத்து செய்தார்.

கி.பி. 1792 – ஆம் ஆண்டில் லார்டு காரன் வாலிஸ் என்பவரால் அனுப்பப் பட்ட கர்ணல் (Red) என்பவர் ரயத்துவாரி அல்லது குல்பி சிஸ்டம் என்ற முறையை ஏற்படுத்தனார் .

கி.பி. 1793 – ஆண்டு லார்டு காரன் வாலீஸ் என்பவர் முதன் முதலாக வங்காளத்தில் நிலையான நிலவரித்திட்டத்தை அமுல் படுத்தினார். மேலும் அவர் முதன் முதலாக சிவில் சர்வீஸ், ஜுடிசியல் சர்வீஸ் ஆகிய பதவிகளுக்கு போட்டி தேர்வுகள் மூலம் தேர்ந் தெடுக்க உத்திரவு பிரப்பித்தார், அதற்கு முன்பு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபையினரால் பதவி சம்பந்தப்பட்ட எந்த வரை முறையின்றி விருப்பம் போல் அளிக்கப்பட்டது.

கி.பி. 1802 ல் தமிழ் நாட்டில் நிலையான நிலவரித்திட்டம் கொண்டு வரப்பட்டது

கி.பி.1806 ல் Lord William Benedict என்பவர் சென்னையில் கவர்ணராக இருந்த போது நிலையான நிலவரித்திட்டத்தை பாளையம் அல்லது ஜமீன் பகுதிகளுக்கு அமுல்படுத்துவதை ஆட்சேபித்தார்.

கி.பி. 1828 ல் - 1835ல் இதே Lord William Benedict இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொருப்பேற்ற போது ஆங்கிலம் கட்டாய பாடமாக்க வழிவகை செய்யப்பட்டது.

கி.பி.1812 ல் தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் பாளையம் மற்றும் ஜமீனை சேர்த்து நிலையான நிலவரித்திட்டம் திரும்பவும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1817 ல் சர் தாமமஸ் மண்ரோ என்பவர் முழுமையான நிலவரிதிட்டம் அமுலுக்கு வந்துள்ளதா என்பதை கண்காணித்தார்.

கி.பி. 1858 ல் நிலவரி திட்ட இயக்குணராக இருந்த திரு.நெவிஸ் (Nevis) என்பவர் முதன் முதலாக மண் வயணம், பாகு பாடு, தமிழ் நாட்டிற்கு நிலவரி திட்டத்தை கொண்டு வந்தார், ரெகுலர் செட்டில் மெண்ட் - ஒரிஜினல் செட்டில் மெண்ட் - மெயின் செட்டில் மெண்ட் கொண்டு வந்தார்.

கி.பி. 1867 ல் பிரதி 30 வருடங்களுக் கொருமுறை மறு நிலவரித் திட்டம் (Resettlement) நடத்தப்பட வேண்டுமென அரசு ஆணைபிரப்பித்து Resettlement என்பது Resurvey செய்தபிறகு தான் செய்யப்படவேண்டும் அதேபோல் ஒரிஜினல் செட்டில்என்பது (Initial) ஆரம்ப சர்வே செய்தபிறகு தான் ஒரிஜினல் செட்டில் செய்யப்படவேண்டும்.

கி.பி. 1937 – இருதியாக இந்த ஆண்டில் தான் மறு நிலவரித்திட்டம் நடை பெற்றது 1937க்குப் பிறகு நாளது வரை மறுநிலவரித் திட்டம் நடை பெறவில்லை. 1937ல் ஆங்கிலேயரகள் ஆட்சி செய்த போது எதிர் காலத்தில் மறு நிலவரித்திட்டம் குறித்து ஏதும் ஆணைகள் பிறப்பிக்கக் கூடாதென அரசு ஆணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேய ஆட்சிக்குப்பிறகு சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சி பொருப்பில் உள்ளவர்களால் மறு நிலவரித் திடம் குறித்து ஆணைகள் ஏதும் பிறப்பிக்கவில்லை