Monday, September 05, 2005

வெள்ளையரில் ஒரு நல்லவர்



கர்னல் பென்னி குக்:
21ம் நூற்றாண்டின் அசாத்திய மாகத் தெரிகிற நதி நீர் இணைப்பை 1895ல் நிகழ்திக் காட்டியவர் ஆங்கிலேய எஞ்சினியர் கர்னல் பென்னி குக். பெரும் சவால்களுக்கு இடையில் கேரளா நோக்கிப் பாய்ந்து கடலில் வீணான முல்லை - பெரியாறு நதிகளின் உபரி நீரை தமிழகத்தை நோக்கித்திருப்பிவிட்டார். இந்த அணை பல முறை நதிநீர் ஓட்டத்தால் தகர்க்கப்பட்டது. ஆங்கிலேய அரசு திட்டத்தைக் கை விட்டது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள
வீடு, உடமைகளை விற்று சொந்த முயற்சியால் அணையைக் கட்டினார் குக். அணையிலிருந்து சுரங்கம் அமைத்து முல்லை பெரியாரின் உபரிநீரை வைகை நதியில் பாயச்செய்தார்.

நன்றி இந்தியா டுடே

வெள்ளையன் கொள்ளையன் என ஏக வசணத்தில் வைதாலும்
இப்படியும் வெள்ளையுள்ளம் கொண்ட நல்லவர்களும் உண்டு

இப்படித்தான் திருச்சிராப்பள்ளி நகருக்கு தனது சொந்த பணத்தைக்கு கொண்டு தண்ணீர் கொண்டு வந்தார் இரத்தினவேலு தேவர். ஆனால் இவர் நம்ம ஊர்காரர்



No comments: