Wednesday, March 29, 2006

புத்தர் சிலையை உடைத்தவர்




இஸ்லாமாபாத், மார்ச். 29-

சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் கிறிஸ்டியன் பெரி. இவர் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகள் பற்றிய தகவல்களைசேகரித்து அவற்றை டாக்குமென்டரி படங்களாக எடுத்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் பாமி யான் மலைப்பகுதியில் உலகின் 2 மிகப்பெரிய புத்தர் சிலைகள் இருந்தன. சிலை 1,500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. இந்த சிலைகளில் ஒன்று 180 அடி உயரம் இருந்தது. இன்னொன்று 121 அடி உயரம்.

யுனெஸ்கோ நிறுவனத்தால் இவை உலக பழங்கால அரிய சிற்பங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்த சிலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு தலிபான் ஆட்சி இருந்த போது உடைக்கப்பட்டன.

இந்த சிலைகளை உடைக்கும்படி அல்கொய்தா இயக்க தலைவன் பின்லேடன்தான் உத்தரவிட்டுள்ளான். அவற்றை உடைக்க தலிபான் தலைவர் முல்லா உமருக்கு விருப்பம் இல்லை என்றாலும் பின்லேடன் உத்தரவுபடி சவூதி அரேபியா மற்றும் பாகிஸ் தானை சேர்ந்த என்ஜினீயர்கள் அவற்றை உடைத்து எறிந்தனர். உலக வர்த்தக மைய கட்டிடம் தகர்க்கப்படுவதற்கு முன்பே இந்த சிலைகள் தகர்க்கப்பட்டன.

இதற்கான ஆதாங்கள் தன்னிடம் இருப்பதாக சுவிட்சர்லாந்து இயக்குனர் கிறிஸ்டியன் பெரி தெரிவித்தள்ளார்.
மாலை மலர்

Saturday, March 25, 2006

மாதம் வயது குழந்தை

Age 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
Jan F M F M F M M F M F M F M M M F M M F M F M F
Feb M F M F M M F M F M M F F F F M F M M F M F M
Mar F M F F M F M M M F M F F M M M M F M M F M F
Apr M F M F F M M F F M F F F F F M F M F M M M M
Ma M F M F M M F F F F F M F F F F F F M F M M F
Jun M M M F F F M M M F F M F F F F F F F M F F M
Jly M M M F F M M F F M M M F F F F F F F F M F M
Aug M M M F M F F M M M M M F F F M F M F M F M F
Sep M M M F F M F M F M M M F F F F F F M F M F M
Oct M M F F F M F M F M M F F F F F F F M M F M F
Nov M F M F F M F M F F F F M F F F M M M F M M M
Dec M F M F F F F M F M F F M M M M M M M M F F F

எந்த வயதில் எந்த மாதத்தில் பிறந்தால் என்ன குழந்தை
M - Male
F - Female
இது 75 விழுக்காடு தான் சரியாக இருக்கும் இதை நம்பி யாரும் ஏமாற்றமடைந்தால் நானோ தமிழ் மணமோ பொறுப்பல்ல.

அதாவது 18 வயது பெண் ஜனவரி மாதம் பெற்றெடுப்பளேயானால் அது பெண் குழந்தை.
EO&C

Wednesday, March 22, 2006

மகடி சித்தர்

மகடி சித்தர்

சித்தர்கள் கூடுவிட்டுக்கூடு பாய்தல்... ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடங்களில் தென்படுதல்... சட்டென்று மறைந்து தோன்றுதல் போன்ற எண்ணற்ற சித்தாடல்களை செய்திருக்கிறார்கள். 'இதெல்லாம் சாத்யமா?'என்று நாம் யோசிக்கத்தோன்றும் அவர்கள் அதையெல்லாம் நிஜம் என்று உணர்த்துகிறார்கள்.


மனித உடல் ஐந்து வகை என்கிறார்கள். முதலில் உயிர்க்காற்றால் வளர்க்கபடுகிறது காற்றுடல் அடுத்து உணர்வுகளினால் வளர்க்கப்படுகிறது. மன உடல் அடுத்து எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது அறிவு உடல். அதற்கடுத்து உணர்வுகளால் வளர்க்கப்படுகிறது. மன உடல். இந்த மூன்றிற்கும் மையமாக பேரின்ப உணர்வில் வளர்க்கப்படுகிறது. இன்ப ஆனந்த உடல். ஆக... அன்னமய உடல் பிராணமய உடல் மனோமய உடல் விஞ்ஞான மய உடல் ஆனந்த மய உடல் என ஐந்து வகை உடல்களை ஒவ்வொரு மனிதனும் பெற்றிருக்கிறான். என்கிறார்கள். இந்த ஐந்து உடல்களும் ஆன்மா என்கிற உயிருக்கு மேலே ஒன்றின் மீது ஒன்றாக பதிந்திருக்கின்றன. ஆனால் இவை ஒன்றையொன்று ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. எங்கும் நிறைந்து ஒளி வீசும் நுண்ணிய உணர்வு படிப்படியாகத் நுண்மையை இழந்து பருமையாகி நம் கண்களுக்கு தெரிகிற பரு உடலாகிறது என்கிறார்கள் சித்தர்கள்.


அப்படியென்றால் உயிரின் பணி என்று கேட்கலாம். நம் ஆன்மா என்பது உடல் என்கிற மரப்பொம்மையை அசைய வைக்கிற சக்தியாகும். சித்தர்கள் ஆன்மாவை திடமாக நம்பியவர்கள். "உயிரு நம்மையால் உடலெடுத்து வந்திடும்" என்கிறார் சிவவாக்கியர். அதே போன்று "உயிர்த்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்ற தப்புவில்" என்கிறார் கடுவெளிச்சித்தர். "உயிரெனும் குருவி விட்டோடுங்குரம்பை" என்று உயிரை உடலில் குடியிருக்கும் பறவையாக குறிப்பிடுகிறார் பட்டினத்தார். உடலை ஆட்டுவிப்பது உயிர் என்பதை குறிக்கும் விதமாக "நந்த வனத்திலோர் ஆண்டி" பாடலில் விளக்குகிறார் திருமூலர். அதுமட்டுமல்ல "சூரியனின் வெப்பத்தால் கடல் நீர் உப்பாகிறது. அந்த உப்பு மீண்டும் தண்ணீரில் கரையும் போது தண்ணீரில் அடங்குகின்றது. உப்பு எங்கிருந்து வந்ததோ அங்கேயே அடங்குவதைப்போன்று உயிர் சிவத்திலிருந்து தோன்றிச் சிவத்துக்குள்ளேயே அடங்கும்" என்கிறார்.


உயிர்கள் நான்கு வகைத் தோற்றமாகவும் ஏழு வகைப் பிறப்பாகவும் என்பத்து நான்கு லட்சம் உருவ வேற்றுமைகளோடும் பிறக்கின்றன என்கிறது சிவஞான சித்தரின் நூல். அதிலும் பட்டினத்தார் தனது பாடலில் "புல்லாகி பூண்டாய் . கல்லாய் மரமாய் கீரியாய் நரியாய் ஊர்வனவாய் பூதமொடு தேவருமாய் வேதனை செய்வதானவராய் உயிர்கள் பிறக்கின்றன என்கிறார்.


ஆக சித்தர்கள் ஆன்மாவையும் உடலையும் மிக துள்ளியமாக அறிந்து உடல் இயக்கத்தை ஆராய்ந்த நூல் தான் அவர்களால் 'மாயை' என்கிற அமானுஷ்யத்தை நிகழ்த்த முடிந்தது. கூடுவிட்டு கூடு பாய்தல் பல இடங்களில் தோன்றி மறைதல் போன்ற அற்புதங்களை செய்ய முடிந்தது.


இப்போது நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கூரில் வாழ்ந்து பல சித்தாடல்களையும் ஆச்சர்யங்களையும் நிகழ்த்திய மகடிச் சித்தரைப் பற்றி அறியப் போகிறீர்கள்.


ஒல்லியமான தேகமும் கூர்மையான பார்வையும் கருமையான தாடியுமாக திருவிதாங்கூர் நகரில் சுற்றித்திரிந்த இந்த சித்தர் நம் சம காலத்தை சார்ந்தவர் இவர் 1950லிருந்து 1955_க்குள் ஏகப்பட்ட அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.


இவர் ஒரு இஸ்லாமியர் என்றாலும் மத வேறுபாடுகள் இல்லாமல் தன்னை நாடி வருபவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்திருக்கிறார். பல மொழிகள் பேசத் தெரிந்த இச்சித்தர் யார் என்ன மொழியில் தங்கள் குறைகறைச் சொன்னாலும் உடனே அதை கேட்டறிந்து அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே நல்லாசி வழங்குவார்.


சித்தர் கண்கள் மிகவும் ஒளிப்பொருந்தியவை. அவரது கண்களை சாமான்யமானவர்கள் நேருக்கு நேராக பார்க்கவே முடியாது. அவராக நம் கண்களை ஒரு நொடி கவனித்தாலே போதும். நமக்குள் மெலிதாக அதிர்வு ஏற்படும். அடுத்தநொடி நம்மையறியாமல் நம் பிரச்சனைகளை ஒளிவுமறைவு இல்லாமல் அவரிடம் சொல்லிவிடுவோம்.


தீராத நோய் கடல் தொல்லை. பிள்ளைபேறு இல்லாமை என எந்த பிரச்சனையானாலும் அவர் தனது அமானுஷ்ய சக்தியால் குணப்படுத்திவிடுவார்.


அவர் அங்கே நிகழ்த்திய அற்புதங்களை கேட்கும் போது நமக்குள் வியப்பு ஏற்படும்.


1950 ஆம் வருடம் அவர் திருவனந்தபுரம் கன்னியாகுமரிக்கு இடையே அப்போது இயங்கிக் கொண்டிருந்த சிண்டிகேட் பஸ்ஸில் சென்றுக் கொண்டிருந்தார். பஸ்ஸில் இருந்தவர்களில் பலர் அவரது அமானுஷ்ய சக்தியை அறிந்தவர்கள் என்பதால் சித்தரை நெருங்கி தங்கள் குறைகளை சொல்ல முற்பட்டனர். ஏகப்பட்ட மனிதர்கள் தன்னை நெருங்குவதில் திகைப்படைந்த சித்தர்.. பஸ் சுசீந்திரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சரேலென பஸ்ஸிலிருந்து தாவி ஆற்றுக்குள் குதித்துவிட்டார். பஸ்ஸிக்குள்ளே இருந்தவர்கள் அதிர்ச்சியாய் பஸ்ஸை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆற்றக்கரைக்கு ஓடி வந்தனர். அங்கே சிரித்த முகமாய் தண்ணீருக்குள்ளிருந்து வெளிப்பட்ட சித்தர்... "நீங்க போங்க நான் குளிச்சிட்டு வர்ரேன்" என்றார். அடுத்த நிமிடம் பஸ் புறப்பட... பஸ்ஸினுள்ளே எல்லோருடைய பேச்சும் சித்தரைப் பற்றியே இருந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பஸ் தக்கலை வந்த சேர்ந்தது. அப்போது தக்கலை பஸ் நிறுத்தத்திற்கு அருகே இருந்த ஒரு மண் திண்டின் மீது சித்தர் சம்மணமிட்டு அமர்ந்திருக்க... பஸ்ஸிலிருந்த அத்தனைபேரும் ஆச்சர்யமாய் சித்தரை பார்த்தனர். 'சுசீந்திரம் பாலத்திற்கு கீழே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இவர் எப்படி தக்கலை பஸ் நிலையத்திற்கு வந்தார்? அந்த வழியாக வருவது இது ஒரு பஸ் தானே. எப்படி. எப்படி அவரால் இது முடிந்தது?" கேள்வியாய் அவர்கள் பார்க்க... சிரித்த படியே சித்தர் "எனக்கு ஒண்ணும் ஆகலேன்னு சொல்லத்தான் இங்கே காத்திருந்தேன். வரட்டுமா?" என்று சொல்லிவிட்டு நகர ஆரம்பித்தார். இது போன்று ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றிய அதிசயத்தையும் சித்தர் நிகழ்த்தியிருக்கிறார். ஒரு முறை திருவிதாங்கூரில் வாழ்ந்த சில கட்டிடத் தொழிலாளர்கள் கட்டுமான வேலைக்காக ஆஸ்திரேலியா செல்ல இருந்தனர். அதற்கு முன்பாக சித்தரிடம் ஆசி பெறும் விதமாக அவரை வணங்கச் சென்றனர். அவர்கள் எதற்காக தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை தனது அமானுஷ்ய சக்தியால் உணர்ந்து கொண்ட சித்தர். "கடல் தாண்டி வேலைக்கு போறீங்களா? போய்ட்டு வாங்க ஒரு குறையும் இருக்காது" என்று சொல்ல. அவர்கள் நன்றியுணர்வாய் சித்தரை வணங்கிவிட்டு நகர்ந்தனர். அதில் ஒருவர் 'நான் சித்தரிடம் என் மகளின் கல்யாணம் இந்த வருடத்திற்குள் நடந்துவிடுமா?' என்று கேட்கலாம் என நினைத்தேன். அதற்குள் நீங்கள் அழைக்கவே கேட்காமலே வந்துவிட்டேன் என்றார். அன்றே அவர்கள் சென்னை பயணமாகி அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டனர்.


ஆஸ்திரேலியாவில் அவர்களது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்க ஒரு நாள் அவர்கள் வேலை பார்த்த இடத்திற்கு மகடி சித்தர் வந்தார். எதிர்பாராத விதமாக சித்தர் எப்படி இந்த நாட்டிற்கு வந்தார்? என்று அத்தனை பேரும் ஆச்சர்யமுகமாய் அவரைப் பார்த்தனர். உடனே சித்தர் தன் மகளின் திருமணம் பற்றி கேட்க மறந்த நபரை நெருங்கி "உன் மகளுக்கு அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாக கல்யாணம் நடந்திடும் அதுக்குள்ளே உங்க வேலை முடிஞ்சு நம்ம ஊருக்கு வந்திடுவீங்க "இதை சொல்லத்தான் இங்கே வந்தேன் வரட்டுமா?" என்று நகர எல்லோரும் ஆச்சர்யமாய் அவரை பார்த்தனர். சித்தர் சொன்னது போலவே அவரது வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்து சம்மதித்து விட்டதாக கடிதம் வர அந்த நபர் ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றனர். அதை விட தங்கள் வீடு தேடி வந்து சித்தர் ஆசி வழங்கிவிட்டு போனதாக எழுதியிருந்ததைப் படித்து மேலும் ஆச்சர்யமானார்.


அடுத்த ஆறுமாதத்திற்குள்ளாகவே அவர்களின் வேலை முடிந்துவிட திருவிதாங்கூர் திரும்பிய அவர்கள் சித்தரிடம் செல்ல... "எல்லாம் புரிந்தவர் போன்று" அவர்களை பார்த்து மெல்ல புன்னகைத்தார் சித்தர். உடனே அவர்கள் சித்தர் ஆஸ்திரேலியா வந்திருந்த விஷயத்தை சொல்ல அதை நம்ப மறுத்த கிராமத்தினர் "இவர் இங்கே தான் இருக்கிறார். இங்கிருப்பவர் விசா பாஸ்போர்ட்இ பணம் இல்லாமல் எப்படி ஆஸ்திரேலியா வர முடியும்?" என்று கேட்க.. அவர்கள் சித்தரின் அமானுஷ்ய சக்தியை ஊருக்கு எடுத்துரைக்க எல்லோரும் அவரை திகைப்பாக வணங்க ஆரம்பித்தனர்.


இந்த அற்புதங்களைப் போலவே சுடுகாட்டில் இரவு நேரத்தில் தனது உடலை கைவேறு கால் வேறு என தனித்தனியாக அவர் பிரித்து போட்டிருந்ததைப் பார்த்து பலரும் அதிர்ச்சியும். ஆச்சர்யமும் அடைந்திருக்கிறார்கள்.


சித்தரை பொறுத்தவரை அவர் முன்னே பசியோடு பிணியோடு யாரும் இருக்கக் கூடாது. ஊருக்குள்ளே எங்கே பசியும் பிணியும் இருக்கிறதோ அங்கே ஓடோடிச் சென்று உதவுவார்.


பசித்தவர்கள் வீட்டின் முன்னே உணவுப்பொருட்களை வைத்து 'மகடி' என்று குரல் கொடுப்பார்... அடுத்த நொடி வீட்டுக்குள்ளே இருப்பவர்கள் வெளியே வந்து பார்த்தால் உணவு மட்டும் இருக்கும்.


அவர் இருக்க மாட்டார். அதே போல் பிள்ளை பேறு இல்லாதவர்கள் தன்னை தேடி வந்தால் தன் கையில் இருக்கும் உணவுப் பொருளை கொடுத்து சாப்பிடச் சொல்வார். அதை சாப்பிட்ட அவர்களின் வயிற்றில் கண்டிப்பாக குழந்தை உருவாகிவிடும்.


சித்தரின் அருளால் குணமடைந்த பல செல்வந்தர்கள் அவர் கேட்டதை அள்ளித்தர தயாராக இருந்தனர். ஆனால் அவர் கிழிந்த துணியும் தண்ணீரும் மட்டுமே தனக்கு போதும் என்றார். பிரதியுபகாரம் கருதாது அவ்வூரில் ஏக்கப்பட்ட நன்மைகள் அருளிய சித்தர். ஒரு நாள் ஒரு பெட்டிக்கடைக்காரர் தன்னை ஒரு பாக்கு வெட்டியால் தாக்க முயன்றதால் அந்த கடைக்குள்ளேயே தூக்கில் தொங்கினார். உடனே போலீசுக்கும் டாக்டருக்கும் தகவல் தரப்பட்டது. அவர் உடலை கயிற்றிலிருந்து வெளியே எடுத்து போஸ்ட் மார்டத்துக்கு ஆயுத்தமாயினார். டாக்டர் கூரிய கத்தியை எடுத்த நொடியில் சித்தர்கள் சடாரென கண்களைத் திறந்து துள்ளிக் குதித்து ஓடினார். சுற்றிலும் இருந்தவர்கள் அதிர்ச்சியாய் சித்தரை பார்த்தனர். அவர் புன்னகை முகமாய் "அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டு போகமாட்டேன். இங்கே எனக்கு நிறைய வேலை இருக்கு. அதையெல்லாம் முடிச்சிட்டு தான் போவேன்" என்றார். அவர் சொன்னது போலவே அதற்கு பிறகு. எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார். அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. திருவிதாங்கூர் புதுப்பள்ளிக்கு எதிரே அவர் சமாதிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சென்ட் நிலமும் புளியமரமும் அவரின் புனிதத்தை இன்றும் உணர்த்தி கொண்டிருக்கிறது. நீங்களும் அங்கே சென்று அந்த புனித பூமியை தரிசித்துவிட்டு வாருங்கள் உங்களுக்கும் நலம்பல வழங்குவார் அந்த மகா சித்தர்.

குமுதம்

Tuesday, March 21, 2006

தொல்காப்பியன்

தீராத தலைநோயால் துடித்துக்கொண்டிருந்த திரணாக்கிய முனிவரைக் காப்பாற்ற வேண்டும் என்று அகத்தியரைக கேட்டுக் கொண்டார்கள், போடாத கும்பிடெல்லாம் போட்டு பெரிய பெரிய வார்த்தைகளால் புகழ்ந்து, "நீங்கள் மனது வைத்தால் இவன் பிழைப்பான். இல்லாவிட்டால் செத்துப் போவான். இவனுக்கு நீங்கள் தான் உயிர் பிச்சை அளிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

அகத்தியர் பார்த்தார். திரணாக்கியரின் கபாலத்திற்குள் தேரை புகுந்து கொண்டிருக்கிறது. கபாலத்தைத் திறந்து தேரையை வெளியேற்றினால் தான் அவர் பிழைப்பார் என்பதைத் தெரிந்து கொண்டார். அக்காலத்திலேயே அகத்தியர் மூளை அறுவை சிகிச்சை வரை செய்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

அகத்தியர் திரணாக்கதியரின் மண்டை ஓட்டைத் திறந்தார். உள்ளே தேரை இருந்தது. அதை எடுப்பதற்காக இடுக்கியை எடுத்தார். தேரையை எடுக்க வேறு வழி இல்லை என்பதாலேயே அகத்தியர் அவ்வாறு செய்தார். ஆனால் சற்று இசகு பிசகாக இடுக்கி பட்டுவிட்டால் கூடஉடனே நோயாளி இறந்து போய்விடுவானே? தவிர அகத்தியர் இடுக்கியால் பிடிக்கும் வரை தேரை உட்கார்ந்து கொண்டா இருக்கும்?

அதைப்பற்றி யெல்லாம் யோசிக்க அகத்தியருக்கு அவகாசம் இருக்கவில்லை. ஆனால் புத்திசாலியான ஊமைச் சீடன் உடனே நிலைமையைப் புரிந்து கொண்டான். சட்டென்று அகத்தியரைத் தடுத்து விட்டான். ஓடிப்போய் ஒரு தாம்பாளத்தில் தண்ணீர் கொண்டு வந்து தேரையிடம் காட்ட அது மூளையை விட்டு தாம்பாளத் தட்டில் குதித்தது.

அகத்தியருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவும் கூறமுடியுமா? ஊமைப் பையனாகக் காட்சியளித்த அந்தச் சீடன் எவ்வளவு மாபெரும் காரியத்தைச் சாதித்து விட்டான்! நோயாளியின் உயிரைக் காப்பாற்றி விட்டான். தன்னுடைய மானத்தையும் காப்பாற்றி விட்டான். அது முதல் அந்தச் சீடனுக்குத் தேரையர் என்ற பெயரே நிலைத்து விட்டது.

அந்த தலைநோய் நீங்கிய திணாக்கிய முனிவர் தான் பின்னாளில் அகத்தியரின் மாணக்கனாகி தொல்காப்பியம் என்ற சிறந்த இலக்கண நூலை இயற்றிய தொல்காப்பியர்

தகவல் சித்தர்கள் வரலாறு

Wednesday, March 15, 2006

முல்லை பெரியாறு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அதை தடுக்கும் வகையில் கேரள அரசு தடாலடியாக சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்துள்ளது. இதன் படி கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் அளக்கப்படும். இதனால் முல்லைப்பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க முடியாது என்று கேரளம் பகிரங்கமாக அறிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை சூழலுக்கு மத்தியில் எழிலுற அமைந்திருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணைக்கு வயது இன்றளவில் 113. தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கும் பிரதான அணை இதுதான்.

இந்த அணை நீரை தமிழகம் பணன்படுத்திக் கொள்ள வகை செய்யும் ஒப்பந்தம் கடந்த 1886ம் ஆண்டு அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானததின் மகாராஜாவுக்கும் அப்போதைய பரிட்டிஷ் அரசாங்கத்தின் மாநிலச் செலருக்கும் இடையே கையெழுத்தானது. அது முதல் தமிழகம் முல்லைப் பெரியாறு அணையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த அணையில் மொத்தம் 152 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் இப்போது 136 அடி உயரத்துக்கு மட்டுமே தேக்கி வைக்க கேரளா அனுதிக்கிறது. இந்த அளவுக்கு மேல் தண்ணீரை தேக்கினால் அணை உடைந்து விடும். அதனால் இடுக்கி மாவட்டம் உள்பட கேரளாவின் 5 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் கேரளா கூறிவருகிறது. ஆனால் முல்லைப் பெரியாறில் தண்ணீர் மட்டத்தை அதன் முழு அளவுக்கு உயர்த்த முடியவிட்டாலும் குறைந்த பட்சம் 142 அடி உயரத்துக்காவது தண்ணீரைத் தேக்கிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று பலமுறை கேரளாவை கேட்டுக்கொண்டது. அந்த கோரிக்கையை கேரளா கண்டு கொள்ளவே இல்லை.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தற்போதைய 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உத்தரவிடக்கோரி தமிழக அரசு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமனறம் நிபுணர்குழுவனரின் அறிககையை பரிசீலித்து முல்லைப் பெரியாறில் 142 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கிவைக்க கேரளம் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 152 அடி உயரமுள்ள இந்த அணையின் முழு அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்கும் முன்பாக அணையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

முல்லை பெரியாறு தோன்றிய வரலாறு

சரப்ஜித் சிங் சகோதரி மிரட்டல்

பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் சரப்ஜித் சிங்கை முஷாரப் கருணை காட்டி விடுவிக்காவிட்டால் வாகா எல்லையில் தற்கொலை செய்வேன் என அவரது சகோதரி மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதே செயலாக அவர்கள் செய்திருந்தால் 'வெடிகுண்டு வைப்போம் ' என மிரட்டியிருப்பர் அது தான் இந்தியன்

Sunday, March 12, 2006

இந்தியனுக்கு பாக்கிஸ் தானில் தூக்கு

பாகிஜ்தானில் குண்டுகள் வெடிப்பில் ஈடுபட்டதாக கூறி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்கின் அப்பீல் மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர் சரப்ஜித்சிங். இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகாப்பகுதியை கடந்த 1990ம் ஆண்டில் தவறுதலாக சரப்ஜித் சிங் கடந்தார். அப்போது, அவரை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து கைது செய்து லாகூர் சிறையில் அடைத்தனர். அவர் மீது உளவு பார்த்தாக குற்றம் பதிவு செய்யப்பட்டது. பின்னர், லாகூர் மற்றும் பைசலாபாத்தில் 1990ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புகளில் சரப்ஜித் சிங்குக்கு தொடர்பு உள்ளது என்று கூறி அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. லாகூரில் நடந்து குண்டு வெடிப்புக்காகவும், பைசலாபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்காகவும் சரப்ஜித் சிங்குக்கு சுப்ரீம் கோர்ட் தனித்தனியே தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சரப்ஜித் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. இது பற்றி முஷாரப்பிடம் வேசுவதாக பிரதமர் மன்மோகன் அறிவித்தார். இது பற்றி முஷாரப்பிடம் பிரதமர் பேசினார். சரப்ஜித்சிங்குக்கு மன்னிப்பு அளிப்பது பற்றி பரிசீலிப்பதாக முஷாரப் உறுதியளித்தார்.
இதில் லாகூர் குண்டு வெடிப்பில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மிகவும் தாமதமாக சரப்ஜித்சிங் அப்பீல் செய்துள்ளார் என்று கோரி மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று (9-3-06)தள்ளுபடி செய்துவிட்டது. அப்பீல் மனு தள்ளுபடியானது பற்றி சரப்ஜித்சிங்கின் வக்கீல் கூறுகையில்,'சரப்ஜித் சிங் ஒரு அப்பாவி. இரண்டாவது அப்பீல் மனுவையும் சுப்ரீம் கோர்ட் நிராகரிக்கும் என்று நினைக்கிறேன். அதனால், இனி அதிபர் முஷாரப்பிடம் கருணை மனு கொடுப்பதை தவிர சரப்ஜித் சிங்குக்கு வேறு வழியில்லை என்றார்.
இது தினகரன் செய்தி

Saturday, March 04, 2006

திமுக திருச்சியின் திருப்பம்




சென்னை, மார்ச்.4-

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பகிர்வில் ஏற்பட்ட பெரிய சல சலப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது.

மிகக்குறைந்த தொகுதிகளை ஏற்க மறுத்த ம.தி.மு,க, இன்று துணிச்சலான முடிவை எடுத்து அணி மாறி இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசியலில் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ம.தி.மு.க.வுடன் உடன்பாடு காணப்படுவதில் தி.மு.க.வுக்கு தொடக்கத்தில் இருந்தே உரசல்களும், நெருடல்களும் தோன்றின. கூடுதல் தொகுதி பெறுவதுதான் தங்களுக்கு கவுரவமாகவும் உயிரோட்டம் தருவதாகவும் இருக்கும் என்ற எண்ணம் ம.தி.மு.க. தலைவர்களிடம் நிரம்பி இருந்தது. இதை தி.மு.க. தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

என்றாலும் கருணாநிதி கேட்டுக்கொண்டபடி சற்று தியாகம் செய்த ம.தி.மு.க. 25 தொகுதிகளை ஏற்க சம்மதித்தது. ஆனால் முதலில் தி.மு.க. 20 தொகுதிகளை கொடுத்தது. பிறகு 21 என்றது. ம.தி.மு.க. ஏற்காததால் 22 தொகுதி தருகிறோம் என்றனர்.

இதற்கிடையே ம.தி.மு.க. பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானதால் "ம.தி.மு.க.வுக்கு 22 தொகுதிகள்தான் கொடுக்கப்படும். அதற்கு மேல் கொடுக்க இயலாது எனவே கூட்டணியில் இருப்பது பற்றி வைகோ முடிவு எடுக்கட்டும்'' என்று திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கருணாநிதி தெரிவித்தார்.

கருணாநிதி விதித்த `கெடு' ம.தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் ஒருவருக்கொருவர் போனில் தொடர்பு கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து அணிமாற ம.தி.மு.க. முடிவு எடுத்தது.

நேற்றே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வைகோ சந்திக்கப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதை எதிர்பார்த்து நிருபர்களும், போட்டோ கிராபர்களும் போயஸ் கார்டனில் குவிந்தனர். ஆனால் வைகோ வரவில்லை.

இந்த நிலையில் இன்று காலை வைகோ தன் மவுனத்தை கலைத்தார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர இறுதி முடிவு எடுத்த அவர் இது தொடர்பாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச தீர்மானித்தார்.

வைகோவின் முடிவுக்கு ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சிப்பொங்க வரவேற்பு தெரிவித்தனர். இதனால் இன்று காலை 10 மணிக்கு வைகோ அண்ணா நகரில் உள்ள வீட்டில் இருந்து உற்சாகத்துடன் புறப்பட்டார்.

எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமைக் கழகமான தாயகத்துக்கு வைகோ வந்தார். அவரை ம.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு வரவேற்றனர். அதை ஏற்றபடி உள்ளே சென்ற வைகோ, ம.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் பேசினார்கள்.

பிறகு 11.30 மணிக்கு வைகோ டி.என். 01 ஆர். 7675 என்ற டயோட்டா காரில் ஏறி முதல்- அமைச்சர் ஜெயலலிதா வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு புறப்பட்டார். அவரது காரை பின் தொடர்ந்தபடி 20 கார்களில் ம.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் அணி வகுத்து சென்றனர். ம.தி. மு.க. துணை பொதுச் செயலாளர்கள் செஞ்சி ராமச்சந்திரன், சத்யா, பொருளாளர் கண்ணப்பன் ஆகியோரும் உடன் சென் றனர்.

இதற்கிடையேவைகோ வரும் தகவல்அறிந்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைப்பு செயலாளர் செங்கோட் டையன், கொள்கை பரப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் 11.10 மணிக்கு வந்து தயாராக இருந்தனர். 11.12 மணிக்கு ம.தி.மு.க. அவைத்தலைவர் கணேசன் வந்தார். 11.20-க்கு அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் வந்தார்.

இந்த நிலையில் எழும்பூரில் இருந்து புறப்பட்ட வைகோ கடற்கரைசாலை, ராதாகிருஷ்ணன் சாலை வழியாக 11.45 மணிக்கு போயஸ் கார்டன் வந்து சேர்ந்தார். முதல்- அமைச்சர் ஜெயலலிதா வின் வீட்டுக்குள் வைகோ கார் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.

வைகோவை ஓ.பன்னீர் செல்வம் பச்சை நிற சால்வை அணிவித்து வரவேற்றார். பிறகு வைகோவை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றனர். அங்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா, வைகோவை வரவேற்றார். பரஸ்பரம் இரு வரும் வணக்கம் தெரிவித்தனர்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வைகோ பூச்செண்டு வழங்கினார். பின்னர் ம.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் ஜெயலலிதாவுக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வும் வைகோவும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டை யன், ஓ.எஸ்.மணியன், ஜெயகுமார், எல்.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதாவும் வைகோவும் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:-

நடைபெறவுள்ள 2006 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுக்கும், ம.தி. மு.க.வுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப் படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 22 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது என்று கறாராக கூறினார்கள். ஆனால் அ.தி.மு.க.விடம் இருந்து அதைவிட கூடுதலாக 13 தொகுதிகள் ம.தி.மு.க.வுக்கு கிடைத்து உள்ளது. இது ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண் டர்கள் அனைவரையும் மன நிறைவுக் குள்ளாக்கி இருப்பதாக ம.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

ம.தி.மு.க. தமிழகம் முழுவதும் பரவலாக போட்டியிட விரும்புகிறது. இதற்கு அ.தி.மு.க. தரும் 35 தொகுதிகள் பெரும் உதவியாக இருக்கும் என்று ம.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறினார். அதோடு தென் மாவட்டங்களில் ம.தி.மு.க. விரும்புகிற தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. முன்வந்து இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே அ.தி. மு.க. தலைமையிலான அணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரும் என்று தெரிகிறது. இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி பலம் மேலும் வலுவாகி உள்ளது. தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசி யலிலும் திருப்பங்களை ஏற்படுத்த அ.தி.மு.க.- ம.தி.மு.க. கூட்டணி "பிள்ளையார் சுழி'' போட்டு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
திருச்சியில் மாநாடு நடத்தினார் தனக்கொரு திருப்பம் ஏற்படும் என கலைஞர் பல கோடி செலவு செய்து மாநாடு நடத்தினார் அவருக்கு பாதகமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. என்னைப் பொருத்த வரை இது மட்டும் போதாது அ.தி.மு.க. விற்கு இன்னமும் கொஞ்சம் பலம் தேவை. காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட், அல்லது ப.ம.க வந்தால் கண்டிபாக அம்மாவின் ஆட்சிதான்.
ஏதோ செல்வி யிடம் வசவு பெற்றவர்கள் முன்னுக்கு வருவார்கள் போல உள்ளது வைகோ, சிதம்பரம், மணிசங்கர அய்யர், இத்தியாதி
எது எப்படியோ தஞ்சை மாவட்டம் ஒன்று சேர்த்து விட்டது இருந்தாலும் அது தான் சாணக்கியம் என்பார்கள்.