தினமலர் செய்தி
Wednesday, November 23, 2005
மாண்டவர் மீண்டார்
தினமலர் செய்தி
Sunday, November 20, 2005
ஆந்திராவில் ஆற்றில் அணை
இதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் இயற்கை எழில் மிகுந்த ஆறு ஆகும். இதை பல கவிஞர்கள் பாராட்டி பாடியிருக்கிறார்கள். பல திரைப்படமும் எடுத்து இருக்கிறார்கள்.
அத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் நதியின் குறுக்கே புதிய அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்து இருக்கிறது. மராட்டியம் மற்றும் சத்தீஷ்கார் மாநில எல்லையில் சுமார் 601 கிலோ மீட்டர் (இது பிழையாக இருக்கலாம்) தூரம் இந்த அணை கட்டப்படுகிறது.
இதற்கு போலவரம் நீர்த்தேக்கம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதை கட்டி முடித்தால் ஆண்டு முழுவதும் 95 கி.மீ. வரை இங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெறும்.
ஆனால் அழகிய பாபி கொண்டலு நதி காணாமல் போய் விடும். இதன் அருகே அமைந்துள்ள பல்வேறு கிராமங்கள் அழிந்து விடும்.
ராமகிருஷ்ண பரமஹம் சரின் சீடர் பாலானந்த சுவாமி பேரண்டம் பள்ளி ஆதிவாசிகள் கிராமத்தில் கட்டிய ஆசிரமம் அழிக்கப்படும். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள்.
மாலை மலர்
தமிழ் நாட்டில் இலவச வேட்டி சேலை வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய். இங்கு எந்த நலத்தி்ட்டமும் வரப்போவதில்லை ஜெயலலிதா தொடங்கினால் கருணாநிதி கிடப்பில் போட்டுவிடுவார். கருணாநிதி தொடங்கினால் ஜெயலலிதா கண்டுக்க மாட்டார். கர்நாடகா , ஆந்திராவில் நீர் அணைகள் அதிகரிக்கிறது , இங்கு காங்கிரசாருடன் போய்விட்டது.
Thursday, November 17, 2005
50 கோடி செலவு அபு, மோனிகாவை கொண்டுவர
- போர்ச்சுகல் நீதி மன்றத்தில் வாதாட சீனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் ஒரு மணிநேரத்திற்கு. இரண்டு ஜுனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் ஒரு மணி நேரத்திற்கு. ஒரு நாளைக்கு ஒரு சீனியர் இரண்டு ஜுனியர் வாதாடினர். ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணிவரை விசாரணை நடந்தது. தினமும் ரூ. 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை வக்கீல் கட்டணமாக செலவு செய்யப்பட்டதாம். மொத்தம் 15 நாட்கள் விசாரணை நடந்ததில் சி.பி.ஐ.க்கு ரூ.15 கோடி செலவு ஆனது.
- சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் இந்திய வக்கீல்களுக்கு போக்குவரத்து, தங்கும் செலவு ரூ. 3 கோடி, இவ்வாறு செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு மொத்தம் ரூ12 கோடி செலவு செய்யப்பட்டது.
- உச்சநீதிமன்றத்தில் வாதாட போர்ச்சுகல் சீனியர் வக்கீல் சீனியர் வக்கீல் மணிக்கு ரூ.10 லட்சம் கட்டணம் வாங்கினார். ஜுனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் கட்டணம் 2 சீனியர் வக்கீல்களையும் 2 ஜுனியர் வக்கீல்களையும் அமர்த்திக் கொண்டதில் ஒரு மணி நேர விசாரணைக்கு ரூ.30 லட்சம் செலவு. உச்சநீதிமன்றத்தில் தினமும் 6 மணி நேரம் வீதம் 6 நாட்கள் விசாரணை நடந்தது. இதனால் தினமும் ரூ.1.80 கோடி வக்கீல் கட்டணம் கொடுக்கப்பட்டதாம்.
- உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல்களையே அரசியல்சாசன நீதிமன்றத்துக்கும் சி.பி.ஐ. பயன்படுத்திக் கொண்டது. அங்கு 4 நாட்கள் விசாரணை நடந்தது. தினமும் ரூ.1.80 கோடி வீதம் 4 நாட்களுக்கு மொத்தம் ரூ7.2 கோடி வக்கீல் கட்டணம் கொடுக்கப்பட்டதாம்.
- நாடு கடத்தல் உத்தரவை அரசியல் சாசன நீதிமன்ற் பிறப்பித்ததும், டில்லியில் இருந்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று லிஸ்பனில் 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தனர். இதற்கான போக்குவரத்து மற்றும் தங்கும் செலவு ரூ.3 கோடி லிஸ்பனில் இருந்து அவர்களை அழைத்து வர தனி விமானத்துக்கு வாடகை ரூ.75 லட்சம்.
- மற்றும் இதர செலவுகள் ஆவணங்கள் தயாரிப்பு வாகனங்கள் வாடகை, சாப்பாட்டுச் செலவு மற்றும் இதர செலவுகளையும் சேர்த்தால் மொத்தம் ரூ.50 கோ.............டி.......
தகவல் தினமலர்
Sunday, November 13, 2005
திருவெறும்பூரில் காமராஜர்
இதை நான் நேரிடையாக கேட்டது.
ஒரு முறை மாற்றுக் கட்சியினர் காமராஜருக்கு கல்யாணம் ஆகவில்லை குடும்பத்தப் பத்தி அவருக்கு என்ன தெரியும் என்றனர். அதற்கு காமராஜர் கலந்து கொண்ட கூடத்தில் இருவர்
ஒருவர்: ஏன்யா உங்க தலைவர் காமராஜருக்கு கல்யாணமேஆகல குடும்பத்திப் பத்தி அவருக்கு என்ன தெரியும்?
இரண்டாமவர்: ஏன்யா உங்க அண்ணாதுரைக்கு கலயாணஆயிடுச்சே ஒரு புழு பூச்சி உண்டா? என்று அவர் கேட்க
எழுந்தார் தலைவர் இருவர் சட்டையையும் பிடித்து ,"நீங்க ரொம்ப பேசீட்டிங்க உட்காருங்க." என அனுப்பிவிட்டார்.
இதை நான் படித்தது காமராஜர் வரலாற்றில்.
Saturday, November 12, 2005
கொம்பன் (கொம்புமுளைத்தவன்)
இதைத்தான் சனிபகவானுக்கு தனது நாவை அடகுவைத்த நமது நடிகை சுகாசினியம்மையார் கூறியது. ஒரு நிகழ்சியில் 100 நபர்கள் வந்தால் அதில் 10 நபர்கையில் கொம்பிருக்கும் அந்த பத்துபேர்தான் அவர்களது தலைவன் என அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்த பத்து நபர் எடுக்கும் முடிவை அந்த கிராமமே ஏற்றுக் கொள்ளும் இந்த வழக்கம் பழங்காலந்தொட்டு வழிவழியாக தொடர்ந்து வருகிறது இன்றும் கூட சில கிராமங்களில் உண்டு.
அந்த கோல் பெரும்பாலும் கருப்பாக இருக்கும் அது எப்படி கருப்பானது . விறகு அடுப்புவைத்து சமையல் செய்யும் அடுப்படிக்கு மேல் வைத்திருப்பார்கள் அந்த புகை பட்டு பட்டு அது கருப்பாகிவிடும்.
Friday, November 11, 2005
எங்கள் ஊரில் காமராஜ்
மட்டும்தான் படிக்க முடிந்தது. மாலை சுமார் 6 மணி இருக்கும் மூன்று கார்களில் காமராஜர் கக்கன்ஜி வந்தனர். அப்பொழுத மனுக்களை முண்டியடித்துக்கொண்டு கொடுக்க முன்வந்தவர்களை காமராஜ், "ஏ ஏ ஏய்யா இப்படி தள்ளுறீங்க எல்லா மனுவையும் பொருமையாக நான் வாங்கிக்கொண்டுதான் போகப்போகிறேன்" என்றார். அப்பொழுது மனுக்களை ஒருவர் மற்றவர்களிடமிருந்து மொத்தமாக வாங்க முயற்சிக்கும் போது நான் சொன்ன அந்த பெரியவர். அவரிடம் கொடுக்காமல்," காமராஜிடம் தான் கொடுப்பேன்" என சத்தமாகச் சொல்லவும். காமராஜரின் பார்வை அங்கு திரும்பியது," யாராப்பா அங்கு விடுப்பா அவரை" என எழுந்து அங்கு போய் அந்த பெயரியவரிடம்," என்ன குறை" என கேட்க அந்த பெரியவர்," ஏங் கொளத்துக்கு ஆத்துத்தண்ணீர் வேணும்யா இஞ்சினீர் முடியாதுங்ரார்" என சொல்ல. இந்த பகுதி காரர்களுக் காகத்தானேய்யா தண்ணீர் கொண்டு வருகிறோம் உங்களுக்கு எப்படி முடியதுன்னு அந்த இஞ்சினீயர் சொன்னார் நாளையே நான் கேட்கிறேன் என அடுத்த நாள் கேட்டு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
Tuesday, November 08, 2005
கக்கன்ஜி
நல்லவர் வல்லவர் காவல்துறை அமைச்சராக எட்டு ஆண்டுகள் பணியாற்றியவர் தனக்கென
எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர் காமராஜரின்நிழல் போவே இருந்தவர் ஒரு முறை
இரயிலில் ஒரு குறிப்பட் ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுத்து இரயில் தூங்கி விட்டார்
அவர் இறங்க வேண்டிய ஸ்டேசனைத் தாண்டி வண்டி சென்று அடுத்த ஸ்டேசனில் நின்றது
அங்கு இறங்கிய அவரை டிக்கெட் பரிசோதகர் சோதணை செய்து அபராதம் கட்டும்படி கூற
அவ்வழியே வந்த ஒரு காங்கிரஸ் தொண்டர் இச்சம்பவத்தைப் பார்த்து," ஐயா இவரை
யாருன்னு தெரியலையா? இவர் தான் முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி" எனச் சொல்ல ; அந்த
பரிசோதகர்," கேள்விப்பட்டிருக்கேன் இவர் எனத்தெரியாது" என தனது வருத்தத்தை
தெரிவித்து; அபராதம் வாங்காமல் அனுப்பியுள்ளார்.
ஒரு முறை எம்.ஜி.யார். முதல்வராக இருக்கும் போது மதுரை அரசு மருத்துவமனையில்
கக்கன்ஜி சாதாரண மக்களுடன் மக்களாக தரையில் படுத்து மருத்துவ சிகிச்சை செய்து
கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு உடனே அவரை பார்த்து சென்னைக்கு அனுப்பிவைத்து
நல்ல முறையில் வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்தார்.
வெள்ளையர் ஆட்சியில் சிறையில் அடைப்பதற்கு முன் நீதிபதி விசாரணை செய்வாராம்.
என்ன சாப்பிடுவார்கள் விசாரணை செய்வது வழக்கம் அதற்கு அரிசி சோறுதான் என
எல்லோரும் கூறவர்.
அவ்வாறு கேட்கும் போது ஒரு நபரை நீதிபதி கேட்டிருக்கார்," உணக்கு கேள்வரகு கூழ்
கொடுக்கச் சொல்கிறேன்" என்றாராம் அதற்கு அவர்," அது எனக்குத் தெரியாதே" என்றாராம்.
"சரி அப்படியனால் வாரம் இரண்டு நாள் உணக்கு அரிசி சோறு தரச்சொல்கிறேன்"
என்றாராம். கக்கன்ஜியிடம் கேட்டதற்கு எதைக்கொடுத்தாலும்சரி என்று ஏற்றுக்
கொண்டாராம்.
அவர் மராமத்து இலாக பார்த்தபோது ஒரு முறை மதுரையில் பாலம் கட்ட ஒரு
தொகையை மதிப்பீடு செய்து ஒதுக்கப்பட்டதாம் கக்கன்ஜி அந்த தொகைக்குள் மேற்படி
வேலையை முடித்து விட்டார் காமராஜர்," என்ன செலவு இன்னும் எவ்வளவு பணம் தேவை"
என கேட்க கக்கன்ஜி,"ஐயா ஒதுக்கிய தொகையிலே மீதம் இருங்குங்க" என்றாராம்
இன்று அந்த தொகையும் பத்தாமல் மறுபடியும் மதிப்பீடு செய்து அதிகமாக சுருட்டக்கூடிய
காலத்தில் அவர் நாட்டிற்காக அவ்வாறு பாடு பட்ட மக்கள் தலைவரை இம்மக்கள் மறந்து
விட்டனரே.
பார்த்ததுண்டா இப்படி பெரிய மனிதரை
கேட்டதுண்டா இவர் பெயரை
சொன்னதுண்டா இவரது செயலை
அனுபவித்துக் கொண்டே மறந்து விட்டோமோ அம்மாமனிதரை
இப்படிப்பட்ட தன்னலங்கருதா தங்கங்களை மறந்ததால் போற்றாததால் தான் அப்படிப்பட்ட
நல்லவர்கள் இப்பூமியில் தோன்ற வில்லை போலும்