Saturday, December 31, 2005

2006 வாழ்த்து

2006 ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


நமக்கு ஒரு வயது கூடிவிட்டதை நிணைவு படுத்த வருகிறது புத்தாண்டு

தமிழ் மணத்து நல்உள்ளங்களுக்கு என்னுடைய

ஆங்கில வருட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Saturday, December 24, 2005

சென்னையில் இன்று அழகிகள் திருவிழா:

தென் இந்திய அழகி யார்? நடிகர் தனுஷ்- ரஞ்சிதா தேர்வு செய்கிறார்கள்

சென்னை, டிச. 24-
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் இன்று மாலை தென்இந்திய அழகி போட்டி நடக்கிறது.

இறுதி சுற்று போட்டிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களை சேர்ந்த 22 அழகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாலை 6.30 மணிக்கு பிரமாண்டமான மேடையில் அழகிகள் அணி வகுக்கிறார்கள்.

இந்த போட்டியை காண தென் இந்தியாவில் உள்ள ஏராளமான மாடலிங் அழகி களும் வந்து குவிந்துள் ளார்கள். இதனால் வர்த்தக மைய வளாகம் அழகிகள் திரு விழா கூடமாக களை கட்டி உள்ளது.

தெலுங்கு சினிமா நடிகை சவுமியா தமிழக அழகிகள் அஸ்வினி, மிருதுளா உள்பட போட்டியில் பங்கேற்கும் அழகிகளில் மிஸ் தென் இந்தியா பட்டத்துக்கான அழகியை நடுவர் குழுவினர் தேர்வு செய்கிறார்கள்.

நடிகர் தனுஷ், நடிகை ரஞ்சிதா, தெலுங்கு சினிமா நடிகர் ஜீவன், ஹாய் மதன், தயாரிப்பாளர் ஏ.வி.எம். பால சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு குழுவினராக இருக்கிறார்கள்.

பட்டம் பெறும் அழகிக்கு கிரீடம் சூட்டப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. 2 மற்றும் 3-வது இடத்தை பெறும் அழகிகளுக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

போட்டிக்கான ஏற்பாடுகளை மாயாமதன், பிரதீப் குமார், பாபுஜி உள்பட பலர் செய்து வருகிறார்கள்.
நன்றி மாலை மலர்

Sunday, December 18, 2005

சென்னையில் 42 பேர் மரணம்


வெள்ள நிவாரணம் பெருவதில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் மரணம் எப்பொழுதும் போல எதிர்கட்சிகளின் ஒப்பாரி ,"முதல்வரே ராஜினாமா செய்"
"ஓ வி அளகேசா நீ ஆண்டது போதாதா! மக்கள் மண்டது போதாதா?"என அன்று தொடங்கிய திமுகவின் தாரக மந்திரம் இன்றும் நீள்கிறது.
சில பகுதிகளில் ஒரு மண்டல அலுவலரின் பொருப்பில் சில கிராமங்கள் ஒப்படைக்கப்பட்டு அவர் காலை 10 மணிக்கு வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ளவர்கள் தலைமையில் இரண்டு நபர்களை நியமித்து ஒரு நாளைக்கு 250 நபர்களுக்கு மட்டும் ரேசன் கடையில் டோக்கன் கொடுத்து பணம் வழங்கப்படுகிறது. எந்த பிரச்சனையும் இல்லை ஏன் சென்னையில் மட்டும் இந்தக்கொடுமை.
தினமலர்

Wednesday, November 23, 2005

மாண்டவர் மீண்டார்

கரூர் அருகே இறந்ததாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற பெண் மீண்டும் வீ்ட்டிற்கு உயிருடன் திரும்பிவந்தார்.
கரூர் ஈரோடு மெயின் ரொடு குட்டக்கடையிலிருந்து இரண்டு கி.மீ.யில் உள்ளது ஆலம்பாளயம் என்னும் கிராமம் இக்கிராமத்தில் வசிப்பவர் நல்லுச்சாமி இவரது மனைவி பழனியம்மாள் இவருக்கு பல ஆண்டுகளாக ஆஸ்த்துமா நோய் இருந்து வந்து பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர் ; பிறகு பெரிய டாக்டர்கள் பார்த்ததும் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியதால் இறந்து விட்டதாகக் கருதி அனைத்து சடங்குகளும் செய்து . சுடுகாட்டிற்கு கொண்டு சென்று விறகுகள் மேல் வைப்பதற்கு இருதிச்சடங்குகள் செய்யம் பெழுது உடல்அசைவதைப்பார்த்து உயிர் உள்ளதால் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
தினமலர் செய்தி

Sunday, November 20, 2005

ஆந்திராவில் ஆற்றில் அணை

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கிளை நதியான பாபி கொண்டலு நதி ஓடுகிறது. இந்த நதி மலைகளின் நடுவில் ஓடுகிறது.

இதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் இயற்கை எழில் மிகுந்த ஆறு ஆகும். இதை பல கவிஞர்கள் பாராட்டி பாடியிருக்கிறார்கள். பல திரைப்படமும் எடுத்து இருக்கிறார்கள்.

அத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் நதியின் குறுக்கே புதிய அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்து இருக்கிறது. மராட்டியம் மற்றும் சத்தீஷ்கார் மாநில எல்லையில் சுமார் 601 கிலோ மீட்டர் (இது பிழையாக இருக்கலாம்) தூரம் இந்த அணை கட்டப்படுகிறது.

இதற்கு போலவரம் நீர்த்தேக்கம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதை கட்டி முடித்தால் ஆண்டு முழுவதும் 95 கி.மீ. வரை இங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ஆனால் அழகிய பாபி கொண்டலு நதி காணாமல் போய் விடும். இதன் அருகே அமைந்துள்ள பல்வேறு கிராமங்கள் அழிந்து விடும்.

ராமகிருஷ்ண பரமஹம் சரின் சீடர் பாலானந்த சுவாமி பேரண்டம் பள்ளி ஆதிவாசிகள் கிராமத்தில் கட்டிய ஆசிரமம் அழிக்கப்படும். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள்.
மாலை மலர்
தமிழ் நாட்டில் இலவச வேட்டி சேலை வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய். இங்கு எந்த நலத்தி்ட்டமும் வரப்போவதில்லை ஜெயலலிதா தொடங்கினால் கருணாநிதி கிடப்பில் போட்டுவிடுவார். கருணாநிதி தொடங்கினால் ஜெயலலிதா கண்டுக்க மாட்டார். கர்நாடகா , ஆந்திராவில் நீர் அணைகள் அதிகரிக்கிறது , இங்கு காங்கிரசாருடன் போய்விட்டது.

Thursday, November 17, 2005

50 கோடி செலவு அபு, மோனிகாவை கொண்டுவர

மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய தாதா அபு சலீமையும், மோனிகாவையும் இந்தியாவிற்கு கொண்டுவர இதுவரை ஆன செலவு ரூ.50 கோடி.
  1. போர்ச்சுகல் நீதி மன்றத்தில் வாதாட சீனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் ஒரு மணிநேரத்திற்கு. இரண்டு ஜுனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் ஒரு மணி நேரத்திற்கு. ஒரு நாளைக்கு ஒரு சீனியர் இரண்டு ஜுனியர் வாதாடினர். ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணிவரை விசாரணை நடந்தது. தினமும் ரூ. 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை வக்கீல் கட்டணமாக செலவு செய்யப்பட்டதாம். மொத்தம் 15 நாட்கள் விசாரணை நடந்ததில் சி.பி.ஐ.க்கு ரூ.15 கோடி செலவு ஆனது.
  2. சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் இந்திய வக்கீல்களுக்கு போக்குவரத்து, தங்கும் செலவு ரூ. 3 கோடி, இவ்வாறு செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு மொத்தம் ரூ12 கோடி செலவு செய்யப்பட்டது.
  3. உச்சநீதிமன்றத்தில் வாதாட போர்ச்சுகல் சீனியர் வக்கீல் சீனியர் வக்கீல் மணிக்கு ரூ.10 லட்சம் கட்டணம் வாங்கினார். ஜுனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் கட்டணம் 2 சீனியர் வக்கீல்களையும் 2 ஜுனியர் வக்கீல்களையும் அமர்த்திக் கொண்டதில் ஒரு மணி நேர விசாரணைக்கு ரூ.30 லட்சம் செலவு. உச்சநீதிமன்றத்தில் தினமும் 6 மணி நேரம் வீதம் 6 நாட்கள் விசாரணை நடந்தது. இதனால் தினமும் ரூ.1.80 கோடி வக்கீல் கட்டணம் கொடுக்கப்பட்டதாம்.
  4. உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல்களையே அரசியல்சாசன நீதிமன்றத்துக்கும் சி.பி.ஐ. பயன்படுத்திக் கொண்டது. அங்கு 4 நாட்கள் விசாரணை நடந்தது. தினமும் ரூ.1.80 கோடி வீதம் 4 நாட்களுக்கு மொத்தம் ரூ7.2 கோடி வக்கீல் கட்டணம் கொடுக்கப்பட்டதாம்.
  5. நாடு கடத்தல் உத்தரவை அரசியல் சாசன நீதிமன்ற் பிறப்பித்ததும், டில்லியில் இருந்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று லிஸ்பனில் 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தனர். இதற்கான போக்குவரத்து மற்றும் தங்கும் செலவு ரூ.3 கோடி லிஸ்பனில் இருந்து அவர்களை அழைத்து வர தனி விமானத்துக்கு வாடகை ரூ.75 லட்சம்.
  6. மற்றும் இதர செலவுகள் ஆவணங்கள் தயாரிப்பு வாகனங்கள் வாடகை, சாப்பாட்டுச் செலவு மற்றும் இதர செலவுகளையும் சேர்த்தால் மொத்தம் ரூ.50 கோ.............டி.......
இவர்களுக்கு தூக்குத்தண்டணை கூடாதாம் . நாட்டின் பணம் எவ்வளவு சேதம் பாருங்கள்.
தகவல் தினமலர்

Sunday, November 13, 2005

திருவெறும்பூரில் காமராஜர்

ஒரு முறை திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது அதில் பெருந்தலைவர் காமராஜர் கலந்து கொண்டார். வந்து அரை மணிநேரம் ஆனது மற்றவர்கள் பேசினர் பாராளுமண்ற வேட்பாளர் எஸ்.பி.தங்கவேல் முத்துராஜா அவர்கள் போசுவார் என விழாத்தலைவர் கூறி உட்காரபோனார், என்ன நினைத்தாரோ காமராஜர் எழுந்தாதர், "முத்துராஜாவும் பேசவேண்டாம் ஒன்னும் பேசவேண்டாம் நா எங்கடுப்ப தீத்துத்துட்டுப்போறேன்"( இந்த சொல் முன்பக்கம் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்) என மைக்கின் முன்னிற்று, "நீங்க யாரும் கோவிச்சுக்கக் கூடாது நான் திருச்சினாப்பள்ளி போய் அங்கிருந்து ட்ரெய்ன் பிடித்து கொள்ளம் (கேரளா) அவசரமாக போக வேண்டும் திருச்னாபள்ளி போவதற்குள் இரண்டு ரயில்வே கேட் இருக்கு வருத்தப் படவேண்டாம் உங்கள் வாக்குகளை எஸ்.பி.முத்துராஜா வக்கில் அவர்களுக்கு போட்டு ஜெயிக்க வைத்து டெல்லிக்கு அனுப்பிவையுங்கள்." என சொல்லிவிட்டு சென்று விட்டார். எங்கு BHEL கொண்டு வந்தாரோ அதே இடத்தில்.
இதை நான் நேரிடையாக கேட்டது.
ஒரு முறை மாற்றுக் கட்சியினர் காமராஜருக்கு கல்யாணம் ஆகவில்லை குடும்பத்தப் பத்தி அவருக்கு என்ன தெரியும் என்றனர். அதற்கு காமராஜர் கலந்து கொண்ட கூடத்தில் இருவர்
ஒருவர்: ஏன்யா உங்க தலைவர் காமராஜருக்கு கல்யாணமேஆகல குடும்பத்திப் பத்தி அவருக்கு என்ன தெரியும்?
இரண்டாமவர்: ஏன்யா உங்க அண்ணாதுரைக்கு கலயாணஆயிடுச்சே ஒரு புழு பூச்சி உண்டா? என்று அவர் கேட்க
எழுந்தார் தலைவர் இருவர் சட்டையையும் பிடித்து ,"நீங்க ரொம்ப பேசீட்டிங்க உட்காருங்க." என அனுப்பிவிட்டார்.
இதை நான் படித்தது காமராஜர் வரலாற்றில்.

Saturday, November 12, 2005

கொம்பன் (கொம்புமுளைத்தவன்)

கொம்பன் என்றால் தலைவன், பலம் பொருந்தியவன், திறன்மிகுந்தவன்; இவர் கையில் ஒரு கொம்பு ,அதாவது குச்சி,தடி, கம்பு வைத்திருப்பார் அந்த கால வழக்கம்; அதாவது நாடாளும் மன்னருக்கு செங்கோல் கிராமதலைவனுக்கு அம்பலக்கோல். பேச்சு வாக்கில் நீ என்ன கொம்பு உள்ளவனோ? என்பதை கொம்பனோ! என்பது தான் மாறி கொம்பு முளைத்தவனோ ஆனது .
இதைத்தான் சனிபகவானுக்கு தனது நாவை அடகுவைத்த நமது நடிகை சுகாசினியம்மையார் கூறியது. ஒரு நிகழ்சியில் 100 நபர்கள் வந்தால் அதில் 10 நபர்கையில் கொம்பிருக்கும் அந்த பத்துபேர்தான் அவர்களது தலைவன் என அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்த பத்து நபர் எடுக்கும் முடிவை அந்த கிராமமே ஏற்றுக் கொள்ளும் இந்த வழக்கம் பழங்காலந்தொட்டு வழிவழியாக தொடர்ந்து வருகிறது இன்றும் கூட சில கிராமங்களில் உண்டு.
அந்த கோல் பெரும்பாலும் கருப்பாக இருக்கும் அது எப்படி கருப்பானது . விறகு அடுப்புவைத்து சமையல் செய்யும் அடுப்படிக்கு மேல் வைத்திருப்பார்கள் அந்த புகை பட்டு பட்டு அது கருப்பாகிவிடும்.

Friday, November 11, 2005

எங்கள் ஊரில் காமராஜ்

அப்பொழுது நான் பள்ளி மாணவன் எனக்கு வயது 8 அல்லது 9 இருக்கும் 1959 அல்லது 1960 இருக்கும், என நினைக்கிறேன் சரியாக ஞாபகம் இல்லை; எங்கள் ஊருக்கு பெருந்தலைவர் காமராஜரும், கக்கன்ஜியும் வருகிறார்கள் என சிறிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சொல்லப்போனால் கிராமமே விழாக்கோளம் பூண்டிருந்தது என்று சொல்லலாம்; அந்த அளவிற்கு மாவிலை வேப்பிலை தோரணங்கள் கூடவே காங்கிரஸ் கொடிகள்; எனது மாமா வேம்புராஜ் தொண்டமார் தான் பஞ்சாயத்து போர்டு தலைவர் அன்று. அவர் வீட்டு விஷேசம் போல விருந்து; வெளியூரிலிருந்து வந்த கட்சிக்காரர்களுக்கு அங்கு தான் சாப்பாடு. ஏன் என்றால் 5 மைல் சென்றால் தான் சுமாரான சாப்பாட்டுக்கடை BHEL வரவில்லை. ஊரில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் சட்டை போட மாட்டார்கள் வேட்டி துண்டுதான் அணிவது வழக்கம். ஒருவர் ஊரின் முக்கியஸ்த்தர் தனது வெள்ளை வேட்டையை இடுப்பில் கட்டி அதை இறக்கிவிட்டால் காமராஜர் வருவதற்குள் அழுக்காகிவிடுமாம் அதற்கா சுற்றிவைத்துக் கொண்டிருந்தார் கையில் ஒரு வெள்ளைத்தாள் அதில் எங்களது நீர் நிலைகளுக்கு பெருந்தலைவர் கொண்டு வந்த புதிய மேட்டுக் கட்டளைக் கால்வாயிலிருந்து தண்ணீர் கேட்டு எழுத்திய மனு அதில் என்னால் காணமுடிந்த வாசகம் மஹா ரா ரா ரா ஸ்ரீ காமராஜ் அய்யவுக்கு
மட்டும்தான் படிக்க முடிந்தது. மாலை சுமார் 6 மணி இருக்கும் மூன்று கார்களில் காமராஜர் கக்கன்ஜி வந்தனர். அப்பொழுத மனுக்களை முண்டியடித்துக்கொண்டு கொடுக்க முன்வந்தவர்களை காமராஜ், "ஏ ஏ ஏய்யா இப்படி தள்ளுறீங்க எல்லா மனுவையும் பொருமையாக நான் வாங்கிக்கொண்டுதான் போகப்போகிறேன்" என்றார். அப்பொழுது மனுக்களை ஒருவர் மற்றவர்களிடமிருந்து மொத்தமாக வாங்க முயற்சிக்கும் போது நான் சொன்ன அந்த பெரியவர். அவரிடம் கொடுக்காமல்," காமராஜிடம் தான் கொடுப்பேன்" என சத்தமாகச் சொல்லவும். காமராஜரின் பார்வை அங்கு திரும்பியது," யாராப்பா அங்கு விடுப்பா அவரை" என எழுந்து அங்கு போய் அந்த பெயரியவரிடம்," என்ன குறை" என கேட்க அந்த பெரியவர்," ஏங் கொளத்துக்கு ஆத்துத்தண்ணீர் வேணும்யா இஞ்சினீர் முடியாதுங்ரார்" என சொல்ல. இந்த பகுதி காரர்களுக் காகத்தானேய்யா தண்ணீர் கொண்டு வருகிறோம் உங்களுக்கு எப்படி முடியதுன்னு அந்த இஞ்சினீயர் சொன்னார் நாளையே நான் கேட்கிறேன் என அடுத்த நாள் கேட்டு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

Tuesday, November 08, 2005

கக்கன்ஜி

நல்லவர் வல்லவர் காவல்துறை அமைச்சராக எட்டு ஆண்டுகள் பணியாற்றியவர் தனக்கென

எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர் காமராஜரின்நிழல் போவே இருந்தவர் ஒரு முறை

இரயிலில் ஒரு குறிப்பட் ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுத்து இரயில் தூங்கி விட்டார்

அவர் இறங்க வேண்டிய ஸ்டேசனைத் தாண்டி வண்டி சென்று அடுத்த ஸ்டேசனில் நின்றது

அங்கு இறங்கிய அவரை டிக்கெட் பரிசோதகர் சோதணை செய்து அபராதம் கட்டும்படி கூற

அவ்வழியே வந்த ஒரு காங்கிரஸ் தொண்டர் இச்சம்பவத்தைப் பார்த்து," ஐயா இவரை

யாருன்னு தெரியலையா? இவர் தான் முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி" எனச் சொல்ல ; அந்த

பரிசோதகர்," கேள்விப்பட்டிருக்கேன் இவர் எனத்தெரியாது" என தனது வருத்தத்தை

தெரிவித்து; அபராதம் வாங்காமல் அனுப்பியுள்ளார்.

ஒரு முறை எம்.ஜி.யார். முதல்வராக இருக்கும் போது மதுரை அரசு மருத்துவமனையில்

கக்கன்ஜி சாதாரண மக்களுடன் மக்களாக தரையில் படுத்து மருத்துவ சிகிச்சை செய்து

கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு உடனே அவரை பார்த்து சென்னைக்கு அனுப்பிவைத்து

நல்ல முறையில் வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்தார்.

வெள்ளையர் ஆட்சியில் சிறையில் அடைப்பதற்கு முன் நீதிபதி விசாரணை செய்வாராம்.

என்ன சாப்பிடுவார்கள் விசாரணை செய்வது வழக்கம் அதற்கு அரிசி சோறுதான் என

எல்லோரும் கூறவர்.

அவ்வாறு கேட்கும் போது ஒரு நபரை நீதிபதி கேட்டிருக்கார்," உணக்கு கேள்வரகு கூழ்

கொடுக்கச் சொல்கிறேன்" என்றாராம் அதற்கு அவர்," அது எனக்குத் தெரியாதே" என்றாராம்.

"சரி அப்படியனால் வாரம் இரண்டு நாள் உணக்கு அரிசி சோறு தரச்சொல்கிறேன்"

என்றாராம். கக்கன்ஜியிடம் கேட்டதற்கு எதைக்கொடுத்தாலும்சரி என்று ஏற்றுக்

கொண்டாராம்.

அவர் மராமத்து இலாக பார்த்தபோது ஒரு முறை மதுரையில் பாலம் கட்ட ஒரு

தொகையை மதிப்பீடு செய்து ஒதுக்கப்பட்டதாம் கக்கன்ஜி அந்த தொகைக்குள் மேற்படி

வேலையை முடித்து விட்டார் காமராஜர்," என்ன செலவு இன்னும் எவ்வளவு பணம் தேவை"

என கேட்க கக்கன்ஜி,"ஐயா ஒதுக்கிய தொகையிலே மீதம் இருங்குங்க" என்றாராம்

இன்று அந்த தொகையும் பத்தாமல் மறுபடியும் மதிப்பீடு செய்து அதிகமாக சுருட்டக்கூடிய

காலத்தில் அவர் நாட்டிற்காக அவ்வாறு பாடு பட்ட மக்கள் தலைவரை இம்மக்கள் மறந்து

விட்டனரே.

பார்த்ததுண்டா இப்படி பெரிய மனிதரை

கேட்டதுண்டா இவர் பெயரை

சொன்னதுண்டா இவரது செயலை

அனுபவித்துக் கொண்டே மறந்து விட்டோமோ அம்மாமனிதரை

இப்படிப்பட்ட தன்னலங்கருதா தங்கங்களை மறந்ததால் போற்றாததால் தான் அப்படிப்பட்ட

நல்லவர்கள் இப்பூமியில் தோன்ற வில்லை போலும்

Friday, October 28, 2005

சன் செய்தி

திருச்சி உறையூர் பாத்திமாநகரில் தண்ணீர் சூழ்ந்துள்ளது யாரும் கவணிக்கவில்லை நடவடிக்கை எடுக்வில்லை என மக்கள் குமுறல் இன்று இரவு சன் தொலைக்காட்சியில் செய்தி.
பாத்திமா நகர் என்பது நஞ்சை நிலத்தில் வீட்டு மனைகளாக பிரித்து வீடுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு மாநகராட்சி சாலை வசதி செய்து கொடுத்துள்ளனர் ஒரு பிளாட்டை சுற்றி சாலை அமைத்தால் அந்த பிளாட் பள்ளமாகத்தானே இருக்கும் தண்ணீர் வடியவில்லை வடியவில்லை என்றால் எப்படி வடியும். இந்த ஆண்டு வடிகால்வழியாகவே காவிரி நீர் ஊருக்குள் புகுந்து விட்டது. அந்தந்த பிளாட்களில் தண்ணீர்நின்றால் அதற்கு அந்த பிளாட்காரர்தான் பொருப்பு.

Saturday, October 08, 2005

போகர் சித்தர் 4

போகர் தியானத்தில் அமர்ந்தது
போகமுனிவருக்கு ஆறுபத்து மூன்று சீடர்கள் இருந்தனர் . அவர்களுக்கு அட்டாங்க யோகங்களையும் கற்பித்து இனி நீங்கள்வெளியில் போய்க் கற்றுக் கொண்ட வித்தைகளைப் பரிசோதித்துப் பாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
அறுபத்து மூன்று பேரும் நாடெங்கும் சுற்றிப் பார்த்த பின் விண்வெளியில் தாவிஆங்கு உள்ள ஆறு தலங்களையும் நன்றாகப் பார்த்துவிட்டு மனோண்மணிதேவி எழுந்தருளியிருக்கும் இடம் வரை சென்று சிலம்பொலி கேட்டுப்பின் பூவுலகை நோக்கித் திரும்பினர். பூவுலகில் மேருமைலையை வலம் வந்து வணங்கிப் பின் கீழே இறங்கி வந்து போகமுனிவரை வணங்கினார்கள்.
போக முனிவர் மிக மகிழ்ச்சி அடைந்தவராக இனிச் சிறிது காலம் சமாதியில் இருங்கள் எனறு கூறி அனுப்பி விட்டுத் தாமும் சுணங்க மரத்தின் கீழ் வேட்டியை விரித்துப் போட்டுச் சிவயோகத்தில் அமர்ந்தார்(இங்கு எனக்கொரு அய்யம் அதாவது புலித்தோளில் அல்லவா அமந்து யோகம் செய்வர் இவர் ஏன் தனது வேட்டியை அவிழ்து போட்டு அமர்ந்தார்).அவர் மனம் வெளிஒளிப்பாழில் லயித்துப் போய் பிரம்ம நிலையில் அப்படியே தங்கிவிட்டது.
நாட்கள் கடந்தன. ஆண் ஒன்று பெண் ஒன்றுமாக இரண்டு சிங்கங்கள் அவ்வழியாக வந்தன. அந்த இடம் வாழ்க்கை நடத்த ஏற்றதாக இருப்பதாக நினைத்தன.
ஏதோ ஒரு கற்சிலை இருக்கிறது. அதுவும் நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டன.
அங்கேயே விலங்குகளை அடித்தக் கொண்டு வந்து தின்றன. அங்கேயே ஆணும் பெண்ணும் விளையாடிக் கலவியில் ஈடு பட்டு குட்டிகளை ஈன்றன. காலப்போக்கில் அங்கு ஒரு சிங்கக் கூட்டமே உண்டாகிவிட்டது.
ஒரு நாள் ஆண்சிங்கம் கற்சிலையின் மடியில் படுத்து நாவில் வாயைத் தடவிக் கொண்டிருக்கையில் சிலையின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளி ஒன்று அதன் வாயில் விழுந்தது. வெளிஒளிப் பாழில் அனுபவித்த அளவு கடந்த ஆனந்த நிலையின் காரணமாக உண்டான கண்ணீர் அது, சிங்கம் திடுக்கிட்டுப் போய்க் கீழே குதித்தது. சித்தர் முகத்தைப் பார்த்தது.
சித்தரின் உடலில் சற்றும் கூடச் சலமில்லை. ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர்த் துளிகள் சொட்டுச் சொட்டாக உருண்டு உதிர்ந்து கொண்டிருந்தன. சித்தரின் கண்ணீர்த் துளியை உண்டதால் அதற்கு ஞானம் உண்டாகிவிட்டது.
உடனே தன் மனைவி மக்களை அழைத்தது. "ஐயகோ! நாம் கற்சிலை என்று நினைத்தது சிலையல்ல இதோ பாருங்கள் கற்சிலை கண்ணீர் விடுமா? இது சிலை அல்ல. யாரோ மகான்! சமாதி யோகத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த இடத்தை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறோம். என்னென்ன தப்புத் தண்டாக்களை யெல்லாம் இங்கேயே செய்தோம்!
"ஐயகோ! ஐயகோ! முனிவர் விழித்தக் கொண்டால், நம்மைச் சபிக்கப் போகிறார்...." என்று புலம்பியது.
உடனே நிலைமையைப் புரிந்து கொண்ட பெண் சிங்கம் அந்த இடத்தைச் சுத்தப் படுத்தத் தொடங்கியது. மற்ற சிங்கங்களும் உதவிபுரிந்தன, எலும்புகளும், தோல்களுமாகக் ககிடந்த அந்த இடத்திலிருந்த அசுத்தங்களை யெல்லாம் போக்கித் தண்ணீர் தெளித்து நறுமணமலர்களைக் கொண்டுவந்து குவித்து மங்களகரமான இடமாக மாற்றிவிட்டன.
அன்று முதல் சிங்கங்கள் புலால் உண்ணுவதை விட்டுவிட்டன. ரிஷிகள் உண்பதைப் போன்று காய்கனி இலை சருகுகளைப் புசித்து வாழ்ந்தன. அவையும் சிவ சிந்தை நெறியில் நின்றன.
இப்படி இருக்கும் காலத்தில் போகமுனிவர் வெளி ஒளிப்பாழில் பதிந்திருந்த தம் மனதைவீட்டு உலகிற்குக் கொண்டுவந்தார். தன் அருகிலிருந்த சிங்கத்தைப் பார்த்து "நீ யார்?" என்று கேட்டார்.
சிங்கம் தான் விலங்காக வாழ்ந்த காலத்தில் பல தவறுகள் செய்ததையும் அவருடைய கண்ணீர்த் திவலை தன் வாயில் விழுந்ததால்,ஞானம்பெற்று அன்று முதல் தூய வாழ்க்கை நடத்தி வருவதையும் கூறித் தான் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டது.
போகமுனிவரின் அருளால் சிங்கம் ராஜ குடும்பத்தில் பிறந்து நீதியுடன் அரசாண்டு முத்திபெற்றது.

(இதை என்னால் நம்ப முடியவில்லை விலங்காக இருந்த காலத்தில் என்று சொல்வதைப்பார்த்தால் கண்ணீர் திவலை வாயில் விழுந்து விட்டதால் மனித உருவம் பெற்று விட்டாத எனத் தெரியவில்லை )
எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்து
தொரும் . . . . . . . . .

போகர் பற்றி அகஸ்தியர்



அகஸ்திய முனிவர் போகரை சீனாக்காரர் என்றே கூறுகிறார். அகஸ்தியர் பனிரெண்டாயிரம் நான்காம் காண்டத்தில் .


போகமுனிவர் சீனபதிக்கு உகந்தபாலர். காலங்கியின் சீடர் சித்தர்களில் முதன்மையானவர். புலிப்பாணியின் குரு இவருடைய தாய் தந்தையர்கள் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்கிறார் அகஸ்தியர். போகர் சலவைத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர் என்கிறார்.


அதோடு சவர்க்காரம் - சித்தர்கள் அறியவேண்டிய முதன்மையான பொருள். போகரின் தாய் தந்தையர் அதன் தன்மையை உணர்ந்தவர்கள் என்று கூறி எதிர்காலத்தில் போகர் சவர்க்கார வழலை மார்க்கம் கண்டதற்கு ஒரு அடிப்படையையும் உண்டாக்கியுள்ளார்.


பாரேதான் சீனபதி வெள்ளை மாண்பர்

பாருலகில் போகருட மரபென்பார்கள்

நேரேதான் பதினெட்டு வெள்ளை மாண்பர்

நெடிதான பூவுலகில் வாழ்ந்தாரப்பா


சீன நாட்டிலுள்ள வெள்ளை நிற மக்கள் போரின் மரபு என்பாரகள். உலகத்தில் பதினெட்டு வகையான வெள்ளை மனிதர்கள் உண்டு. அவர்களிலே சீனர்களும் ஒருவகையாவர்.


பால்குடிக்கும் பச்சிளங் குழவிப் பருவத்திலும், ஆறேழு மாதங்கள் உடைய இளம் சிசுவாக இருந்த போதும் குழந்தை பேசும் சொற்களைக் கேட்டுத் தாயார் திடுக்கிடுவாள். உலக அதிசயங்களில் ஒன்று போல் தன் வயதுக்கு மீறிய சொற்களைக் கூறும்.


மந்திரச் சொற்களை மழலை மொழியில் தாறுமாறாக உச்சரிக்கும். உலகத்தின் நிலையாமை பற்றியும் எல்லோக்கும் தாயான ஒருத்தி இருக்கிறாள் என்றும் கூறும். குழந்தை இப்படிப் பேசுவதைக்க கண்ட தாயானவள்,"அது என்னமோ ஏதோ தெரியவில்லையே?" என்று மிகுந்த துக்கம் அடைவாள்.

அவ்வாறு தாயார் துக்க மடையும் சமயங்களில்,"அம்மா நீ ஏன் கவலைப் படுகிறாய்? என்னைச் சாதாரண மனிதன் என்று நினைத்துக்கொள்ளாதே. நான் பிறவிக் கடலைத் தாண்டிப் பெரும் பேறடையப் பிறந்தவன். இந்த உலகம் எல்லாம் சுற்றி வரப்போகிறேன் . ஏழுகடல்களையும் தாண்டிப் போகப் போகிறேன்," என்றெல்லாம் வித்தாரம் பேசும்.


சிறு குழந்தையாக இருந்தபோதே ஞானத்தை உபதேசிப்பவர் போல் பேசுவார். பெரிய ஞானிபோல் பேசுவார், பிற்காலத்தில் உலகத்திற்கு அநேகம் நூல்களை அளிக்ப் போகிறவர் அல்லவா? அவர் இந்த உலகத்தின் மேல்நெடுங்காலம் இருந்தார்.


அகத்தியமுனிவர் போகரைப்பற்றி இவ்வாறு கூறுகிறார். அகத்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூல் மட்டும் கிடைக்காமலிருந்தால் போகரைப் பற்றிய இந்த வரலாறு உலகிற்கு தெரியாமலே போயிருக்கும்.

அது மட்டுமன்று, போ_யாங் என்ற சீனப் பெயரே போகர் என மருவியது என்று துணிவாரும் உளர். உலகத்தில் எங்குமே இல்லாத பெயராக பேகர் என்ற பெயரை உண்டாக்கி போகத்தில் ஆழ்ந்து போனவர். ஆகையால் அப்பெயர் ஏற்பட்டது என்ற வதந்தியை உண்டாக்கி அவதூறுக் குள்ளாக்கப் பட்டார். அதற்குத் தக்கபடி கதைகளும் உண்டாக்கப் பட்டன என்று கருதுவார் பலர்.

பேகர் என்ற பெயருக்கு நியாயமான, ஒரு காரணம் கற்பிக்க விரும்புபவர் சகலதுறைகளிலும் துறை போயவர் ஆகையல் போகர் என்ற வெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.


போ_யாங் என்ற பெயர் போ_யர் என்று மரியாதை நிமித்தம் அழைக்கப்பட்டு போகர் என்று மருவியிருக்கலாம் என்பதே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.


போகர் ஏழாயிரத்தில் பேகர் தம்மைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்

உரைத்தோமே எந்தனிட சாதிமார்க்கம்

உத்தமனே விஸ்வகர்மன் என்னலாகும்

திரைத்ததொரு எந்தனது தலைமுறைதானப்பா

திரளான பதினெட்டுத் தலைமுறையேயாகும்


பேகர் தாம் விஸ்வகர்ம குலத்தில் ஐந்து பிரிவுகளில் ஒன்றில் பிறந்ததாக கூறுகிறார் .அதில் இருந்து போகர் பொற்கொல்லர் குலத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகின்றது ஆனால் கருவூரார் தமது வாதகாவியம் 700-ல்

பாரப்பா போக நாதர் பண்பள மட்குலால்

நேரப்பா ஜெனித்து யிந்த நீணிலமதனி லேதான்

மட்குலாலர் = குயவர்

என்று கூறுகிறார்

அகஸ்தியரும் தமது அமுத கலை ஞானம் 1200 என்ற நூலில்

உறுதியுள்ள போகனுமே குசவன் சாதி

ஓகோகோ அவன்பாடல் லக்கோ இல்லை

என்று கூறுகிறார்.

எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்து

எது எப்படியோ நமக்கு போகர் தமிழ் நாட்டுக்காரர் அது போதும்


தொடரும் . . . . . .

http://palani.org/bhogar-biography.htm

Friday, October 07, 2005

போகர் சித்தர் - 2

பேகர் சீனாவிலிருந்து மூன்று சீடர்களோடு தமிழ் நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். நன்றியுள்ள ஒரு நாயும் அவர்களை விடாமல் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
இமய மலைகளின் கொடிய குளிரும் நெடிய பயணமும் அவர்களை வருத்தின. குளிரைத் தாங்கவும் நடைக் களைப்பால் சோர்ந்து போகாமலிருக்கவும் போகர் பல அரிய மூலிகைகளைக் கொண்டு காய கல்பக் குளிகைகளைச் செய்து கொண்டு வந்திருந்தார்.
அந்தக் குளிகைகளில் ஒன்றை முதலில் அந்த நாய்க்குக் கொடுத்தார். குளிகையை விழுங்கியவுடன் நாய் சுருண்டு மடங்கி விழுந்தது. பிறகு ஒரு சீடனுக்குக் கொடுத்தார். அவனும் விழுந் பிணம் போல் கிடந்தான் பிறகு மற்ற சீடர்கள் இருவருக்கும் கொடுத்தார்.
சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்குச் சாக மனம் வரவில்லை. குளிகையை விழுங்குவது போல் பாசாங்கு செய்து விட்டு மறைத்து வைத்துக் கொண்டனர்.
போகமுனிவர் தாமும் ஒரு குளிகையை விழுங்கினார். அதே இடத்தில் இறந்தவர் போல் விழுந்து விட்டார்.
சீடர்கள் குளிகைகளை வீசி எறிந்தனர். "ஐயோ குருநாதா! போய்விட்டீர்களே" என்று அடித்துக் கொண்டு அலறி அழுதனர். பிறகு இறந்தவர்களை நல்லபடி அடக்கம் செய்யவேண்டும் என்று நினைத்தவர்களாகப் பெட்டிகள் வாங்கிக் கொண்டு வருவதற்காகச் சென்றனர்.
அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது இறந்து கிடந்தவர்களைக் காணவில்லை. போகமுனிவரும் அவருடைய உண்மையுள்ள சீடனும், நாயும் வெகு தொலைவில் போய்க் கொண்டிருந்தனர்.
காய கல்பக் குளிகையின் வேகம் தாங்காமல் மூர்ச்சித்து விழுந்தபின் அந்தக் குளிகை உடலில் வேலை செய்து பல மாற்றங்களை உண்டாக்கிப் புதிய தெம்புடனும் ஆற்றலுடனும் அவர்களை எழச் செய்திருக்கிறது. மூடர்களான சீடர்கள் அதை உணரவில்லை. தமது அறியாமையை நினைத்து வருந்தியபடி சீடர்கள் வந்த வழியே திரும்பினர்.
சீனாவிலிருந்து போகமுனிவரை புலிப்பாணி சுமந்து கொண்டு வந்தார் என்று சொல்வதை விட இந்தக் கதையே பொருத்தமாக இருக்கிறது. போகமுனிவர் பழனியில் வாழ்ந்தார். தண்டபாணி சிலையை நவ பாஷாணக் கட்டால் சமைத்தார். கோவிலில் பிரதிஷ்டை செய்தார். தமக்குப் பின் புலிப்பாணியை பூஜை முதலானவற்றைக் கவனித்துக் கெகாள்ளும்படி நியமித்துவிட்டுச் சமாதியடைந்தார். (பழனியாண்டவர் சந்நிதிக்குப் பின்புறத்திலேயே போகர் சமாதி இருக்கிறது) என்பவை கண்கூடாகத் தெரியும் உண்மைகள். ஆயினும் போகர்டவரலாறு மிகவும் சர்சசைக் கிடமளிப்பதொன்றாகும் . அவரைப் பற்றி வழங்கப்பட்ட கட்டுக் கதைகளும் ஏராளம்.

எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்துதொடரும்.........

போகமுனிவர்

மெய்வழிகண்டவர் என்று திருமூலர் பிரானால் தம்மோடொப்பாக வைத்துச் சிறப்பிக்ப்பட்ட போகமுனிவர் திருமூலர் காலத்தைச் சேர்ந்தவராகத்தானே இருக்க வேண்டும்?
ஆனால் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் அறிஞர் மு. அருணாசலம் போகர் பதினாறாம் நூற்றாண்டில் பழனியில் வசித்ததாகக் கூறுகிறாரே?
எது உண்மை?
இந்த ஐயம் தோன்றுவது இயல்பே.
போகர் தமிழகத்தில் இருந்தார். சீனத்துக்குச் சென்றார். அங்கே பல காலம் வாழ்ந்திருந்து சீனமொழியில் பல நூல்களைச் செய்தார். பின் தமிழ் நாட்டுக்குத் திரும்பிவந்தார். பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷாணக் கட்டால் அமைத்தார் என்று எடுத்துக் கொள்டவது சரியாக இருக்கலாம்.
போகமுனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்தபோதிலும் அவற்றைவிட மிகமிக அதிகமாகச் சீனமொழியில் இயற்றியுள்ளார். சீனாவில் அவருக்கு போ-யாங் என்று பெயர் என்றும் வா-ஓ-சியூ என்ற பெயரில் சீனாவின் தலை சிறந்தஞானி என்று கொண்டாடப்படுகிறார் என்றும் போகரைப் பற்றி நீண்ட ஆய்வுகள் செய்துள்ள பேராசிரியர் இராமையா யோகி அவர்கள் தமது போகர் சத்தகாண்டம் நூலின் பதிப்புரையில் கூறியுள்ளார். இவர் அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருந்தவராகையால் இவர் கூற்றில் ஐயப்பாட்டிற்கு இடமிராது என்று நம்புகிறோம்.
போ-யாங்=போகர்
போகமுனிவர் சீன நாட்டில் போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்து சீன நாட்டவராகவே வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது.
சீன நாட்டில் நெடுங்காலம் வாழ்ந்தபின் தமிழ்நாட்டுக்கு வந்த போது சீனத்து உடலிலேயே வந்தாரா அல்லது தமது பழைய உடலோடு வந்தாரா என்பதும் தெரியவில்லை.
போகமுனிவர் சீனநாட்டுக்குச் செல்வதற்கு முன்டபுதான் கொங்கணவர், கருவூரார், இடைக்காடர், சட்டைமுனி போன்ற சீடர்கள் அவருடன் இருந்தார்கள்.
சீனத்திலிருந்து அவரோடு வந்தவர் புலிப்பாணி என்பர். புலிப்பாணியே சீனாவுக்குச் சென்று அவரைக் கண்டு படித்து அழைத்து வந்ததாகவும் முதுமை காரணமாக போக முனிவரால் நடக்க முடியாததால் புலிப்பாணி அவரைத் தமது முதுகில் சுமந்து வந்ததாகவும் கூறுபவர்களும் உண்டு.
ஆனால் சித்தரின் உடலுக்கு முதுமை என்பது ஏது?
போகர் சீனாவிலிருந்து திரும்பி வந்தது பற்றி வேறொரு வரலாறும் கூறப்படுகிறது.

எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்து

தொடரும்.........

Sunday, October 02, 2005

இளவரசி டயானா

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா உலகப் புகழ்பெற்ற பெண்மணி. இளவரசர் சார்லசை மணந்து வில்லியம், ஹாரி என்ற குழந்ஹைகளுக்கு தாய். சார்லசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அரச குடும்பதை விட்டு பிரிந்தவர்.
பின் டோடி அல் பயத்துடன் காதல் கொண்ட அவர் 1997-இல் பாரீஸ் நகரில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். டயானா அரச குடும்ப வாழ்க்கையை விரும்பாத சுதந்திர பறவை. ஆனால் அந்த இளம் பறவை பலரின் வேட்டைக்கு உள்ளான மர்மங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளன.

டயானா வாழ்க்கையில் நடந்த திரைமறைவு ரகசியங்களை அவரிடம் 6 வருடம் மெய்க்காப்பளராக பணியாற்றிய கென்வார்ப் அம்பலப்படுத்துகிறார்.

1993-ம் ஆண்டு டயானா தனது மகன்கள் வில்லியம், ஹாரியுடன் ஆஸ்திரியா லீச் நகரத்திற்கு பயணம் சென்றார். அது பனி சறுக்கு விளையாடுவதற்கு ரம்மியமான இடம். பல்வேறு நாடுகளின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களும் கோடீசுவரர்களும் குவியும் நாடு அது. சொர்க்கலோகம் போன்ற உல்லாச வாழ்க்கை நகரம் அது.
அங்கே ஆல்ப்பெர்க் ஓட்டலில்தான் டயானா தன் இரு மகன்களுடன் தன்கி இருந்தார்.

ஒருநாள் சரியாக காலை 6 மணிக்கு நான் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தேன். திடீரென எனது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. நான் என் உறக்கத்தை கலைத்து விட்டு கதவை திறந்தேன். இரவு நேர பாதுகாப்பு அதிகாரி மார்க் ஜாவோஸ்கி நின்றிருந்தார். அவரது முகத்தில் பீதி பரபரப்பு.

இளவரசி இப்போது நன்றாகத்தானே இருக்கிறார் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மார்க் எதற்காக இப்படி பூடகமாக கேட்கிறார் என்று நினைதேன். என்ன நடந்தது என்று கேட்டேன். மார்க் மூச்சு வாங்கியவாறே பேசத்தொடங்கினார்.

அதிகாலை 5.30 மணி இருக்கும் ஹோட்டலின் கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. ஓடிசென்று பார்த்தேன்
கரிய இருளில் ஸ்கார்ப், தொப்பி அணிந்து இளவரசி வெளியே நின்று இருந்தார். என்னைபார்த்தும் குட்மார்னிங் என்று கூறி விட்டு தனது அறைக்கு போய்விட்டார்.

அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. மார்க் யாருக்கும் தெரியாமல் எப்படி இளவரசி வெளியே போனார்
இப்போது அவர் எங்கே. என அடிவயிற்றில் இருந்து கேள்வி வந்தது. அவரது ரூமில்தான் இருக்கிறார் என்று மார்க்கூறியதும் தான் எனக்கு நிம்மதி வந்தது. எப்படி போனார் நான் மார்க்கிடம் கேட்டேன் அவர் முன்பக்க வாசல் வழியாக அவர் போயிருக்க வாய்ப்பு இல்லை மார்க் அப்படி சொன்னதும் நான் வெளியே எட்டி பார்த்தேன்.

நாங்கள் அந்த ஓட்டலின் முதல் மாடியில் தங்கி இருந்தோம். பால்கனியில் இருந்து கீழே உள்ள புல் தரைக்கு 20 அடி உயரம் இருக்கும். அவர் பால் கனி வழியாக குதித்துதான் வெளியே சென்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். உடனே நான் கீழே சென்று புல்வெளியை பார்த்தேன். அங்கு காலடி தடங்கள் இருந்தன.

நல்ல வேளை அவர் கீழே குத்தித போது பனி அதிகமாக பெய்து கொண்டு இருந்ததால் அவருக்கு அடியேதும் விழவில்லை.

இளவரசி அதற்கு முந்தைய ஆண்டுதான் இளவரசர் சார்லசிடம் இருந்து பிரிந்து இருந்தார். பதிரிகைகாரர்களும் புகைப்படக்காரர்களும் துரத்தி துரத்தி செய்தி சேகரித்த நேரம் அது.

மறுநாள் டயானாவிடம் நீங்கள் நேற்று இரவு எங்கு சென்றீர்கள் என்று கேட்டேன். அது எனக்குள் இருக்க வேண்டிய ரகசியம் என்று கூறிவிடார். அத்துடன் நான் பேச்சை முடித்துக் கொண்டேன். இரண்டு வாரங்கள் கழித்து நான் லீச் நகருக்கு சென்ற போதுதான் அவர் யாரை சந்திக்க சென்றார் என்பது தெரியவந்தது.
செல்சியா (இங்கிலாந்து) நகரின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஹோரே என்பவரும் ஒருவர். ஈரானிய ஓவியக்கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர் இவரது மனைவி டாயனே. இவர் பிரெஞ்சு அரச குடும்பத்தை சேர்ந்த பெண்மணி. இதனால் இவர்களுக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தவருடன் நெருக்கம் உண்டு.
1985-ம் ஆண்டு ஹோரேவும் அவரது மனைவி டாயனேவும் ஒரு முறை லண்டனுக்கு வந்தார்கள். இருவரும் ராணியின் விருந்தினர்களாக ஒருவாரம் `வின்ட்சர் காஸ்டில்' அரண்மனையில் முகாம் போட்டார்கள். அந்த ஒரு வாரமும் கேளிக்கை, விருந்துதான். `ஹோரே' பார்ப்பதற்கு ஆள் ஜோராக இருப்பார். அப்போது ஹோரேவுக்கு வயது 39. இளவரசி டயானாவுக்கு வயது 25.

ஹோரேவும், டயானாவும் ஒருவரையொருவர் அப்பொழுதுதான் முதல் முறையாக பார்த்துக் கொள்கிறார்கள். ஹோரே கை குலுக்க முன்வருகிறார். (அரச குடும்பத்தில் ஆண்-பெண் கைகுலுக்கி கொள்வது சகஜம்). ஆனால் டயானாவின் முகத்தில் வெட்கம், நாணம் பீறிடுகிறது. தயங்கிக் கொண்டே ஹோரேவுடன் கைகுலுக்குகிறார்.

அதன்பிறகு டயானாவே, `தான் ஹோரேவுடன் கைகுலுக்கியபோது வெட்கப்பட்டதாக' ஒப்புக் கொண்டும் இருக்கிறார். ஹோரேயின் மனைவி டாயனேவும் இளவரசி டயானாவும் அவரவர் குடும்ப சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள `நட்பு' வலுப்பெற்றது.

டயானா, ஹோரேயையும் அவரது மனைவி குழந்தைகளையும் தனது கென்சிங்டன் மாளிகைக்கு அழைத்து விருந்தும் கொடுத்தார். இந்த நேரத்தில்தான் இளவரசர் சார்லஸ்- காதலி காமில்லா பார்க்கர் விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது.

ஹோரேயிடம் தனது மனக்குமுறலைக் கொட்டினார் இளவரசி. ஹோரேயும் சார்லஸ்- டயானா பிரச்சினையை தீர்க்க முன் வந்தார். அது திசைமாறியது. சார்லஸ்-காமில்லா பார்க்கர் `காதல்' விவகாரத்தை ஹோரே மூலம் தணிக்க முயன்ற இளவரசி டயானா மெல்ல மெல்ல காதல் பாதைக்கு மாறிவிட்டார்.

ஹோரேவுக்கோ `டபுள்' கொண்டாட்டம். ஒருபக்கம் இளவரசர் சார்லஸ்_காமில்லா விவகாரத்தை தலையிட்டு சமாளிப்பது மாதிரி போக்கு காண்பித்துக் கொண்டே டயானாவின் அன்பையும் பெற்று விட்டார்.

செல்சியா நகருக்கு ஹோரே திரும்பிய பிறகும் டயானா சும்மா இருக்கவில்லை. அவ்வப்போது போனில் சார்லஸ் பற்றி தொண தொணக்க ஆரம்பித்துவிட்டார். ஹோரே ஆறுதல் கூற டயானாவுக்கு அவர்மீது அபரிமிதமான காதல் வளர்ந்தது.

1992-ம் ஆண்டு வாக்கில் டயானா முழுவதுமாக தன்னை மறந்து ஹோரேவை காதலிக்க தொடங்கிவிட்டார். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஹோரேவை முதல் தடவையாக டயானா பார்த்தபோதே அவரிடம் மனதை அடகு வைத்து விட்டார். ஒரு கம்பீரமான ஆண் என்றால் ஹோரேயை மாதிரித்தான் இருக்கவேண்டும் எனவும் நினைத்தார்.

இவர்கள் இருவரும் இது போன்று காதலை வளர்த்துக் கொண்டாலும் பட்டும் படாத மாதிரி சற்று தூரத்தில் நிற்பது மாதிரித்தான் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

ஒரு நாள் சார்லஸ் இல்லாத நேரத்தில் ஹோரே இளவரசி டயானாவின் கென்சிங்டன் அரண்மனைக்கு வந்தார். இது புதிய விஷயம் அல்ல. இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின் டயானா என்னிடம் உதிர்த்த வார்த்தைகள்தான் என்னால் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. "கென், நாங்கள் பேசிக்கொண்டுதான் இருந்தோம். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இனிமையான மனிதர்" என்று என்னிடம் சொன்னார்.

"ஒரு ஆண் அழகானவர், பழகுவதற்கு இனிமையானவர் அனுபவம் வாய்ந்தவர்" என்றால் அதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

அன்று விடிகாலை 3.30 மணி இருக்கும். இளவரசியின் அறை பக்கமிருந்து திடீரென்று `புகை அலாரம்' அடிக்க ஆரம்பித்தது. நான் "ஐயோ இளவரசிக்கு என்ன ஆயிற்றோ ஏது ஆயிற்றோ" என்ற பீதியில் அலறியவாறு அவரது அறையை நோக்கி ஓடினேன். ஆனால் இளவரசியின் அறைக்குள் நுழையும் முன்பே ஒரு போலீஸ்காரன் என்கிற முறையில் அங்கே நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது.

அந்த அறையில் ஒரு பெரிய செடி. அருகே தலைகலைந்த கோலத்தில் ஹோரே சிகரெட்டை உறிஞ்சி இழுத்துக் கொண்டிருந்தார். டயானாவுக்கு சிகரெட் புகையை சுவாசிக்க பிடிக்கவில்லை. அதனால் ஹோரேயை சற்றுத்தள்ளிச் சென்று புகை பிடிக்கும்படி கூறி இருக்கிறார். ஆனால் `புகை அலாரம்' அங்கு இருந்ததை டயானா மறந்துவிட்டார். அதனால்தான் அலாரம் அடித்து இருக்கிறது.

நான் அங்கே வந்ததை ஹோரே விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. என்றாலும் அவரது சிகரெட்டை அணைக்கச் சொன்னேன். அவர் பயந்தவாறே என்னைப்பார்த்தார். பிறகு கீழே விழுந்த நெருப்புச் சாம்பலை கூட்டி தள்ளினார். பின் அங்கிருந்து சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் இந்த சம்பவத்தை நான் வேடிக்கையாய் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த டயானாவிடம் விவரிக்க முயன்றேன். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் சென்று விட்டார்.

இளவரசர் சார்லசைப் பிரிந்த டயானாவின் கவனம் முழுக்க முழுக்க ஹோரே மீதே இருந்தது. அதனால் இந்த விஷயம் வெளியே கசிந்தால் உங்களுக்குத்தான் ஆபத்து என்பதை டயானாவிடம் வெளிப்படையாகவும் சொன்னேன்.

இளவரசி அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க இல்லை. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டார்.

தனிமை, பிரிவு அவரை வாட்டியது. குழப்பமான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டார். ஹோரேயுடன் எப்படியாவது தனது உறவை நீட்டிக்க விரும்பி அவரது மனைவி டாயனேவை தோழியாக்கிக்கொள்ளவும் முனைந்தார். இதுவும் கைகூடவில்லை. அவரது, வேதனை, ஆற்றாமை, ஏமாற்ற உணர்வு பெருகப் பெருக `தேவைகள்' அதிகப்பட்டுக் கொண்டே போயின.

இதனால் செல்சியாவில் இருந்த ஹோரே வீட்டுக்கு போன்மேல் போன் போட்டார். இரண்டு மாதத்தில் அவர் ஹோரே வீட்டுக்கு போட்ட போன் கால்கள் மட்டும் 400-க்கும் மேலிருக்கும்.

எதிர்முனையில் போனை ஹோரே எடுத்துப்பேசினால் மட்டுமே இளவரசி டயானா அவருடன் சுவாரஸ்யமாக பேசுவார். அவர் மனைவி டாயனே எடுத்தது தெரிந்தால் போனை `டொக்'கென்று வைத்து விடுவார்.

இந்த `அனாமதேய' போன் தொல்லையால் அவதிப்பட்ட ஹோரேவின் மனைவி டாயனே போலீசில் புகார் செய்துவிட்டார். விசாரணை நடந்தது. அப்போது அந்த போன் கால்கள் எல்லாமே கென்சிங்டன் மாளிகையில் இருந்து பேசப்பட்டவை என்பது தெரிந்தது.

டயானாவிடம் விசாரணை நடந்தது. அடியோடு இல்லை என்று சொல்லிவிட்டால் நம்ப மாட்டார்கள் என்று உணர்ந்த இளவரசி "நான் ஹோரே வீட்டுக்கு போன் செய்து பேசியது உண்மை. ஆனால் நான் பேசியவை கொஞ்சம்தான். மற்றவற்றை நான் பேசவில்லை" என்று மழுப்பிவிட்டார்.

அந்த விஷயம் அதோடு முடிந்து விட்டது. ஆனால் அன்று `லீச்'சில் தங்கியிருந்தபோது ஹோட்டல் பால்கனியில் இருந்து இளவரசி டயானா குதித்து எங்கே சென்றிருப்பார் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. `ஹோரேவும் லீச்' வந்திருந்தார். அவர் தங்கியிருந்த இடத்துக்குத் தான் அந்த நள்ளிரவில் டயானா சென்றார் என்பதை இன்னும் சொல்லவும் வேண்டுமோ?
  
டயானாவின் மெய்க்காப்பாளராக பணியாற்றிய கெனëவார்ப் இளவரசியின் காதல் அனுபவங்களை தொடர்கிறார்.
அரச குடும்பத்தவர்கள் தங்களது அந்தரங்க விஷயங்களை முழுமையாக மறைத்து விட இயலாது. மறைப்பதும் கடினம். இதற்கு டயானாவும் விதி விலக்கானவர் அல்ல. அவருடைய பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் அவர் சில விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும்.

இளவரசி தோழிகள் யாருடனாவது தியேட்டருக்கு செல்ல விரும்பினாலோ, அல்லது ஆண் ஆதரவாளர் எவருடனாவது சாப்பிட விரும்பினாலோ அதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப நான் பணிபுரிய வேண்டும்.

ஹைகுரோவ் மாளிகையில் இருந்த தலைமை இன்ஸ்பெக்டர் கிரஹாம் சுமித் நான் டயானாவிடம் பணிபுரிய வருவதற்கு முன்பே என்னிடம் ரகசியமாக சொன்னார். "இளவரசிக்கு ஒரு ஆணுடன் தொடர்பு உண்டு. அவர் குதிரை பயிற்சியாளர் கேப்டன் ஜேம்ஸ் ஹெவிட்."

அரச குடும்பத்தில் யார்எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி மெய்க்காப்பாளார் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பாது காப்பாக இருக்கிறார்களா? அவர்களை எவ்வாறு பாதுகாப்பது? என்பதே எங்கள் பணி.

இளவரசி டயானாவிடம் வேலைக்கு சேரும் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஜேம்ஸ் ஹெவிட்டை இளவரசி சந்தித்து இருக்கிறார். டயானாவìன் மெய்க்காப்பாளரான பின்பு `ஹெவிட்' உடன் பேசிய விஷயங்களை அவர் என்னிடம் கூறியிருக்கிறார். ஹெவிட் உடனான முதல் சந்திப்பு இயல்பாக இருந்ததாக என்னிடம் டயானா கூறுவார். அதனால் அவார் மீது டயானாவுக்கு ஈர்ப்பு உண்டு என்பதை அறிவேன்.

ஹெவிட் அரச குடும்பத்தின் குதிரையேற்ற பயிற்சியாளர். குதிரையில் சவாரி செய்வதில் உள்ள சிக்கல் பற்றி டயானா கூறும்போதெல்லாம் அதை சுலபமாக சமாளிப்பது எப்படி என்று ஹெவிட் விளக்கி கூறுவார். இயல்பாக இருந்த இவர்களது பேச்சு சந்திப்பு `உறவு' வைத்துக் கொள்ளும் அளவிற்கு மாறிப்போனது.

இளவரசர் சார்லஸ் மீது டயானா உயிரையே வைத்திருந்தார். ஆனால் உடல் டயானாவிடமும் உயிர் காமில்லா பார்க்கரிடமும் இருந்தது. இதனால் நொறுங்கி போயிருந்த டயானாவுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது. அந்த வடிகாலாய் வந்து வாய்த்தார் ஜேம்ஸ் ஹெவிட். ஏற்கனவே பெண் பித்தர் என்று பெயரெடுத்தவர் அவர். அதனால் இளவரசி டயானா போன்றவர் கிடைத்தால் விடுவாரா என்ன? தனது உடல் இச்சைகளை தணித்துக் கொள்ள தயாராகி விட்டார்.

நீங்கள் கள்ளத்தொடர்பு வைத்தால் எனக்கு வைக்கத் தெரியாதா? என்பது போல இருந்தது டயானாவின் தேடுதல்.

ஒரு புறம் சார்லஸ், காமில்லா பார்க்கர் ஜோடி காதல் களியாட்டம் போட இன்னொரு பக்கம் ஹெவிட், டயானா சல்லாபம் என்று ஹைகுரோவ் மாளìகை காதல் சண்டைக்களமாக மாறிப்போனது. ஆனால் சார்லஸ் கொஞ்சம் அடங்கிப் போவார். இளவரசியை சமாதானப்படுத்துவார். ஆனால் எதுவும் எடுபடாது.

பல தடவை சார்லஸ் பிரச்சினைகளை மறந்து தனது நண்பர்களை டின்னருக்கு அழைத்து வருவார். "டயானாவோ உங்கள் அழுகிப்போன நண்பர்களை நான் எதற்கு கவனிக்க வேண்டும்.? அவர்கள் எனது நண்பர்களே அல்ல!" என காட்டு கத்தாக கத்துவார்.

இருவருக்குமìடையே பனிப்போர் நீடித்தது.

ஹெவிட்டை முதன் முதலாக நான் மத்திய லண்டனில் உள்ள `நைட்ஸ் பிரிட்ஜ் பாரக்ஸில் சந்தித்தேன். கூடவே டயானாவும் இருந்தார். என்னை இளவரசியின் மெய்க்காப்பாளன் என்று நினைத்தாரோ, அல்லது காதலியின் காவலன் என்று நினைத்தாரோ எனக்கு ஏக மரியாதை கொடுத்தார் தனது காதலுக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று கூட அவரது உபசரிப்புக்கு அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

ஹெவிட் மீது இருந்த காதலை டயானா என்னிடம் எடுத்த உடனே கூறி ஒப்புக் கொள்ளவில்லை. வெளிப்படையாகவும் பேசத் தயங்கினார். எனக்கு தர்ம சங்கடமாகிப் போனது.

இந்த சூழ்நிலையில்தான் ஹெவிட்டின் தாயார் ஷெர்லியை டேவன் நகரில் உள்ள அவரது வீட்டில் டயானா சந்தித்துப் பேசி பரபரப்பை உண்டு பண்ணிவிட்டார்.

நான் "இதெல்லாம் வேண்டாம் அம்மா உங்களுக்கு சரிப்பட்டு வராது." என்று எவ்வளவோ கூறிப்பார்த்தேன். எதையும் கேட்கவில்லை.

இன்னொரு நாள்.

குதிரை சவாரிப் பயிற்சிக்காக இளவரசி அடிக்கடி வெளியே செல்வதுண்டு. அப்படிபோன போது ஷெய்லிங் காட்டேஜில் நாங்கள் தங்கியிருந்தோம்.

அன்று மாலை நான் சமையல் செய்து கொண்டிருந்தேன். (இந்த பொறுப்பும் எனக்கு உண்டு) இளவரசியும், ஹெவிட்டும் வெளியே ஹாலில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருநëதார்கள்.

ஒரே கூத்து, கும்மாளம்தான். அதன் பின் இரவு வரை நான் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் சீட்டு விளையாடுவதில் மும்முரமாக இருந்தேன். இளவரசி வந்ததும் அவர் எழுந்து கொண்டார். இருவரும் மாடிப்படியில் ஏறி படுக்கை அறைக்குச் சென்றனர்.

மறு நாள் காலை டயானா வெகுநேரம் கழித்து எழுந்தார். வெளியே வந்த போது அவர் தலைமுடி கலைந்து இருந்தது.

சிறிது நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டவர் வெளியே கிளம்பி விட்டார். ஜேம்ஸ் ஹெவிட்டுடன் தனியாகத்தான் புறப்பட்டார். அந்த காட்டேஜிலë தங்கியிருந்த நாட்களில் ஜேம்சும், டயானாவும் எங்கு போனாலும் தனியாகத்தான் போவார்கள். வாக்கிங் போனால் கூட அவருக்குத் துணை ஜேம்ஸ் ஹெவிட்தான்.

இவர்களது ரகசிய காதல் வெளியுலகத்திற்கு தெரிய வந்த போதுதான் சார்லசும், டயானாவும் பிரிவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஹெவிட்டுடன் இருந்த தொடர்பால் டயானாவின் 2-வது மகன் ஹாரி ஹெவிட்டுட்டுக்கு பிறந்திருக்கலாம் என்று கூட வதந்திகள் வெளியாயìன.

ஆனால் ஹாரி பிறந்த பிறகுதான் ஹெவிட்- டயானா உறவு மலர்ந்தது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும்.

டயனா ரகசியங்கள்...4

Sunday, September 11, 2005

உண்மையான தலைவர்


பெருந்தலைவர் காமராஜரை கட்சி கண்ணோட்டத்தோடு பார்க்ககூடாது. அவர்
மாபெரும் சகாப்தம்.அவரை சிலர் சர்வாதிகார போக்கு கொண்டவர் என்பார்கள். அது
தவறு. அவர் எல்லோர் கருத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டவர்.
அன்றைக்கு பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு மறைந்த போது
நேருவுக்கு பிறகு யார் பிரதமர் பொறுப்பை ஏற்பது என்று வந்தது.
அப்போது பெருந்தலைவர் அத்தனை எம்.பி.க்களையும் கலந்து ஆலோசித்து
லால்பகதூர் சாஸ்திரியை தேர்வு செய்தார். அது, எல்லோருடைய கருத்தையும் கேட்டு
அவர்கள் மனநிலை அறிந்து எடுத்த முடிவு.
அதே நேரத்தில் பெருந்தலைவர், காலத்துக்கு ஏற்ப முடிவெடுக்கும் தன்மை
கொண்டவர். நேரு மறைந்த போது, பெருந்தலைவர் அனைத்து காங்கிரஸ்
எம்.பி.க்களின் கருத்துகளையும் அறிந்து முடிவெடுத்தது போல லால்பகதூர் சாஸ்திரி
இறந்த போது அந்த முறையை கையாளவில்லை.
தேர்தல் மூலம்தான் பிரத மரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
அதை பெருந்தலைவர் ஏற்றுக் கொண்டார். இந்திரா காந்தி பிரதமராக வந்தார்.
பெருந்தலைவர் தோல்வியை கண்டு துவளாத மனம் கொண்டவர்.
இந்தியாவுக்கே வழி காட்டியாக இருந்து நேருவுக்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரியை
தேர்வு செய்து விட்டு தமிழகத்துக்கு வந்து தேர்தலை சந்தித்த பெருந்தலைவர்
தோல்வியை தழுவினார் .
ஆட்சி தி.மு.க.வுக்கு கை மாறியது. அப்போது இமயத்தின் உச்சியில் இருந்து அதள
பாதாளத்தில் தள்ளப் பட்ட நிலை பெருந்தலைவருக்கு ஏற்பட்டது. ஆனால் அவர்
தோல்வியை கண்டு துவண்டு போய் விடவில்லை.
``மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு''. இதை மனமுவந்து ஏற்று கொள்கிறேன். என்று
சொல்லி தோல்வியை ஏற்றுக் கொண்டார். அந்த பக்குவத்தை வேறு எந்த
தலைவரிடமும் நான் பாக்க வில்லை.
காமராஜர் காங்கிரஸ் கட்சியில் பலதரப்பட்டவர்களுடனும் இணைந்து ஒன்றர கலந்து
விட்டவர்.
தேர்தலில் தோற்றபிறகு சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
அப்போது எல்லோரும், மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுகள் இல்லை
என்று யாருடனாவது கூட்டு சேரவேண்டும் என்று பேசினார்கள்.
அப்போது காமராஜருக்கு கோபம் வந்தது. ஏல, போறவனெல்லாம் போங்க! என்னை
ஆளை விடுங்க யார் வேணுமானாலும் எங்கேயும் போய் சேருங்க என்று கோபமாக
பேசினார்.
அந்த கூட்டத்தில் நானும் பங்கு கொண்டிருந்தேன். பெருந் தலைவர் ஆத்திரப்பட்டு
பேசி விட்டதால் எல்லோரும் வெளியே போயிருவாங்க என்று நான் தலையை
தொங்க போட்டுக்கொண்டு இருந்தேன். சுமார் 15 நிமிடம் அமைதி நிலவியது.
திடீரென பெருந் தலைவரே பேச ஆரம்பித்தார். நான் எதுக்கு சொல்றேன் தெரியுமா!
என்றார். அவரை யாரும் பேச விடல்லை. 10 பேர் எழுந்து தேம்பி, தேம்பி அழுதனர்.
அதில் பணக்காரர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் உண்டு.
அவர்கள் எங்களுக்கு பதவி வேண்டாம் ஒன்றும் வேண்டாம் உங்களை விட்டு போக
மாட்டோம். தப்பா பேசினால் மன்னியுங்கள் என்று சொன்னதும் கூட்டமே அழுதது.
இது கட்சியில் பலதரப்பட்டவர்களுடனும் காமராஜர் இணைந்து ஒன்றர கலந்து
இருந்தார் என்பதற்கு சிறந்த சான்றாகும்.
கட்சியின் வெற்றி தோல் வியை விட மக்களின் வளர்ச்சியிலேயே காமராஜர்
கண்ணும் கருத்துமாக இருந்தார்.
காமராஜர் அவருடைய ஆட்சி காலத்தில் சிமெண்டு ஸ்டீல், மின்சாரம் போன்ற
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்குரிய வகையில் இது போன்ற
தொழிற்சாலைகளை தமிழ் நாட்டில் பல இடங்களில் தொடங்கினார்.
அன்றைய திட்ட கமிஷனிடம் போராடி பெல் நிறுவனத்தை பெற்றார்.
அன்றைக்கு காமராஜரின் வற்புறுத் தலின் பேரில் பெல் நிறுவனத்தை அமைப்பது
தொடர்பாக மத்திய அரசில் இருந்து நிபுணர் குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்ய
வந்தார்கள்.
தமிழகம் முழுவதும் ஒரு வார காலம் சுற்றுபயணம் செய்து விட்டு தங்கள்
அறிக்கையில் அதற்குரிய இடம் இல்லை என்று தெரிவிப்பதற்கான நிலை இருந்ததால்
அதை அன்றைய முதல்வராக இருந்த பெருந் தலைவரை நேரில் சந்தித்து கூறி
னார்கள்.
அவர் ஏன்? என்ன சாத்தியகூறுகள் இல்லை? என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் தண்ணீர் நிறைய கிடைக்க வேண்டும். போக்குவரத்து வசதி
வேண்டும், பல ஊர்களுக்கு ரெயில்வே தொடர்பு வேண்டும், மின்சார வசதி வேண்டும்.
பெருமளவுக்கு காலி இடம் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை கேட்ட
காமராஜர் அப்படியா! என்று கூறி விட்டு சற்று நேரம் மவுனமாக இருந்தார். பிறகு
அவர்களிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்.
நாளைக்கு திருச்சி போகி றீர்கள். அங்கு இருந்து தஞ்சை சாலையில் தஞ்சை வரை
செல்கிறீர்கள். அங்கு போய் பார்த்து விட்டு வந்து என்னிடம் பேசலாம்! முடிவு
பண்ணலாம் என்றார்கள்.
நிபுணர்களும் மறுநாள் திருச்சியில் இறங்கி தஞ்சை வரைக்கும் சென்று பார்த்து
பிரமிப்படைந்தார்கள். பெருந் தலைவரிடம் தொடர்பு கொண்டு நாங்கள் நினைத்த
இடம் அப்படியே இருக்கிறது என்று சொல்லி, ஏற்றுக் கொண்டார்கள்.
இப்படியாக மக்களின் வளர்ச்சி யிலேயே கண்ணும் கருத்தையும் செலுத்தினாரே தவிர
காங்கிரஸ் கட்சியின் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாத தலைவர் அவர்.
அவர் பதவியில் இருந்த போதும் சரி இல்லாத போதும் சரி அனைவரிடமும் மனித
நேயத்தோடு பழகி வந்தார். மற்ற வர்களும் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும்
சரி ஒன்று போலவே நடத்தினார்.
இதையெல்லாம் எண்ணி தான் டெல்லியில் காமராஜர் சிலையை ராஜீவ்காந்தி திறந்து
வைத்து பேசிய போது பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்தாலும் சரி,
இல்லாவிட்டாலும் சரி காமராஜ் காமராஜ் தான் என்று கூறினார்.
ஆம் காமராஜருக்கு நிகரான தலை வரில்லை அவருக்கு நிகர் அவரே. ஒப்பில்லாத
பெருந் தலைவருடைய எளிமையை கடைபிடிப்பதுதான் அவருக்கு நாம் செலுத்தும்
சிறந்த அஞ்சலியாகும்.
ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.டி. ராமச்சந்திரன் பெருந் தலைவரோடு
பழகிய நாட்களில் கண்ட காமராஜரின் நற்பணபுகளை வாசகர்களிடம் நினைவு
கூறுகிறார் எஸ்.கே.டி.ராமச்சந்திரன் இருந்தது. ஆனால் அவரை பார்க்க பரோலில்
வரக்கூட மறுத்து, சுதந்திர போராட்டத்தில் உறுதியாக இருந்தார் காமராஜர்.
இதன்பின்னர் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கைதான அனைவரும் விடுதலை
செய்யப்பட்டனர். காமராஜரும் விடுதலையானார். விருதுநகருக்கு வந்த அவரை ஊர்
மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அவர்களிடம் பேசிய காமராஜர் ``உங்களின் அளவற்ற அன்பை பெற்று இருப்பதால்
நான் தலைக்கனம் பிடித்தவனாக மாறினாலும் மாறலாம் அல்லவா? அந்த மனநிலை
ஏற்படாமல் இருக்க எனக்காக நீங்கள் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றார்.
அவரது அடக்கத்தை கண்டு மக்கள் வியந்து பாராட்டினார்கள். பின்பு, வீட்டுக்குள்
சென்று தனது பாட்டியை பார்த்தார்.
பேரனை கண்டு மகிழ்ந்த பார்வதி அம்மையார் 2 நாட்களுக்கு பிறகு மரணம்
அடைந்தார். பாட்டியின் மறைவு காமராஜரை பெருந்துயரில் ஆழ்த்தியது.
இதன்பின்னர் காமராஜர் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதியாக
தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே காம ராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முதன்
முதலாக ஏற்ற முக்கிய பதவி.
காந்தி_இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்கள் தேவைக் கான
உப்பை தயாரித்து கொள்ள அரசு சம்மதித்தது. இதன்பின்னர் ஆங்கிலேய அரசு
பிரதிநிதியாக இந்தியாவுக்கு வந்த வெலிங்டன் பிரபு இந்த ஒப்பந்தத்தை
ஏற்கவில்லை.
அப்போது வெளிநாடு சென்று திரும்பிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
காரணமே இல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது, காமராஜரும்
கைதானார்.
இதைத்தொடர்ந்து 1933_ம் ஆண்டு சென்னை மாகாண சதி வழக்கு ஒன்று பதிவு
செய்யப்பட்டது. இந்த வழக்கில் காமராஜரும் சேர்க்கப்பட்டார். ஆனால்,
விசாரணையில், காமராஜர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டதால் வழக்கில்
இருந்து விடுவிக்கப்பட்டார்.
இது போலவே, விருதுநகர் வெடிகுண்டு வழக்கிலும் காமராஜர் அவரது நண்பர்கள்
முத்துச்சாமி, மாரியப்பன் ஆகியோரை சேர்த்து வழக்குகள் ஜோடிக்கப்பட்டன. இந்த
வழக்கிலும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது தெரிய வந்ததும் விடுவிக்கப்பட்டனர்.
காமராஜர் மீது ஆங்கிலேய அரசு வழக்குகள் போட்டு சலித்து போனது. ஆனால்,
காமராஜர் எதை பற்றியும் கவலைப்படாமல் சளைக்காமல் விடுதலை போராட்டத்தில்
ஈடுபட்டார்.
1936_ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக சத்தியமூர்த்தி
தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காமராஜர் கட்சியின் செயலாளர்களில் ஒருவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருவரும், தோளோடு தோள் நின்று கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
1937_ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு சாத்தூர்
எம்.எல்.ஏ. ஆனார். 1940_ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக
காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941_ம் ஆண்டு இந்திய மக்களை கேட்காமலேயே இந்தியாவை 2_வது உலகப்
போரில் ஆங்கிலேய அரசு ஈடுபடுத்தியதை கண்டித்து, போராட்டம் நடந்தது. இந்த
போராட்டத்தின்போது காமராஜர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் விருதுநகர் நகரசபைக்கு தேர்தல் நடந்தது. சிறையில் இருந்தபடியே
இந்த தேர்தலில் போட்டியிட்டு, காமராஜர் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டார். காமராஜர் விடுதலை செய்யப்படும் வரை துணை தலைவராக இருந்து
நகரசபை கூட்டத்தை நடத்தி வந்தார்.
பின்பு, காமராஜர் விடுதலை செய்யப்பட்டு விருதுநகர் திரும்பினார். நகரசபைக்கு அவர்
வந்தபோது அங்கு நகரசபை கூட்டம் நடந்து கொண்டு இருந்தது.
துணைத்தலைவர் கூட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தார். காமராஜரை கணடதும்
அவர் எழுந்து நகரசபை தலைவர் இருக்கையில் அமரும்படி காமராஜரை கேட்டுக்
கொண்டார். தலைவர் இருக்கையில் காமராஜரும் அமர்ந்தார்.
அவரை பலரும் பாராட்டி பேச காமராஜரோ ``என் குறிக்கோள் இந்திய
விடுதலைக்காக பாடுபடுவதுதான். உள்ளூரில் இந்த பதவியில் இருந்து கொண்டு
செய்ய நான் விரும்பவில்லை. இதை நீங்களே கவனித்து கொள்வது நல்லது.நீங்கள்
அன்போடு அளித்த தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னை தவறாக
நினைக்க வேண்டாம்'' என்று கூறி பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார்.
விடுதலை போராட்டத்தில் அவர் கொண்டு இருந்த வேட்கை இதன்மூலம் தெரிய
வந்தது. அவரை பாராட் டாதவர்களே இல்லை.
``வெள்ளையனே வெளியேறு'' போராட்டத்தில் சிறை சென்ற காமராஜர் தனக்கு
கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி நிறைய புத்தகங்கள் படித்தார். இயற்கையாக
அவரிடம் சேர்ந்திருந்த நுண்ணறிவுடன் நூலறிவும் சேர்ந்ததால் அவர் சிறந்த அரசியல்
அறிஞர் ஆனார். காமராஜர் சிறையில் இருந்தபோதுதான் அவரது அரசியல் குரு
சத்தியமூர்த்தி மறைந்தார்.
காமராஜர் திருமணமாகாதவர். அவருக்கென்று எந்த தொழிலும் கிடையாது. நாட்டு
விடுதலைக்காக உழைப்பதையே அவர் தனது தொழிலாக கொண்டு இருந்தார். சிறந்த
லட்சியவா தியான அவரை பொது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் மிகவும்
மதித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி யில் காமராஜருடைய செல்வாக்கு உயர்ந்திருந்ததை
போலவே, சட்ட சபையிலும் அவரது செல்வாக்கு உயர்ந்தது. காமராஜர் நினைத்தால்
யாரையும் முதல்_அமைச்சராக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது நடந்த தேர்தலில் அமைச்சரவை அமைக்கப்பட்டு ஆந்திர கேசரி பிரகாசம்
முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்குள் அவர் காங்கிரஸ்
கட்சியினரின் வெறுப்புக்கு ஆளானதால் அடுத்த ஆண்டே ஓ.பி. ராமசாமி என்பவரை
காமராஜர் முதல் அமைச்சராக்கினார். இதன்பிறகு அவரது போக்கும் பிடிக் காமல்
குமாரசாமி ராஜாவை முதல் அமைச்சராக்கினார், காமராஜர்.
இப்படி 4 ஆண்டுகளில் 3 பேரை முதல் அமைச்சராக்கும் அளவுக்கு காங்கிரசில்
காமராஜரின் செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. ஆனால், காமராஜர் வழக்கம்போல
எளிமை யாகவே வாழ்ந்தார். அனைவரிடமும் இனிமையாக பழகினார்.
1947_ம் ஆண்டு மார்ச் மாதம் பிரகாசம் முதல் அமைச்சர் பதவியை இழந்தார். அந்த
ஆண்டு ஆகஸ்டு 15_ந் தேதி தான் இந்தியாவுக்கு சுதந்திரமும் கிடைத்தது. இதற்கு
பிறகுதான் காமராஜரின் செல்வாக்கும் ஓங்கியது. அவர் யாரை ஆதரித்தாரோ அவர்கள்
முதல் அமைச் சரானார்கள். அவர் யாரை விரும்பவில்லையோ, அவர்கள் முதல்
அமைச்சர் பதவியை இழந்தனர். அடுத்த தேர்தல் வரை இந்த நிலை நீடித்தது.
நன்றி மாலை மலர்

Monday, September 05, 2005

வெள்ளையரில் ஒரு நல்லவர்



கர்னல் பென்னி குக்:
21ம் நூற்றாண்டின் அசாத்திய மாகத் தெரிகிற நதி நீர் இணைப்பை 1895ல் நிகழ்திக் காட்டியவர் ஆங்கிலேய எஞ்சினியர் கர்னல் பென்னி குக். பெரும் சவால்களுக்கு இடையில் கேரளா நோக்கிப் பாய்ந்து கடலில் வீணான முல்லை - பெரியாறு நதிகளின் உபரி நீரை தமிழகத்தை நோக்கித்திருப்பிவிட்டார். இந்த அணை பல முறை நதிநீர் ஓட்டத்தால் தகர்க்கப்பட்டது. ஆங்கிலேய அரசு திட்டத்தைக் கை விட்டது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள
வீடு, உடமைகளை விற்று சொந்த முயற்சியால் அணையைக் கட்டினார் குக். அணையிலிருந்து சுரங்கம் அமைத்து முல்லை பெரியாரின் உபரிநீரை வைகை நதியில் பாயச்செய்தார்.

நன்றி இந்தியா டுடே

வெள்ளையன் கொள்ளையன் என ஏக வசணத்தில் வைதாலும்
இப்படியும் வெள்ளையுள்ளம் கொண்ட நல்லவர்களும் உண்டு

இப்படித்தான் திருச்சிராப்பள்ளி நகருக்கு தனது சொந்த பணத்தைக்கு கொண்டு தண்ணீர் கொண்டு வந்தார் இரத்தினவேலு தேவர். ஆனால் இவர் நம்ம ஊர்காரர்



Friday, August 26, 2005

மாயக் கண்ணன் பிறந்தநாள்

கண்ணன் பிறந்தான் மாயக் கண்ணன் பிறந்தநாள்
கெளரவ பண்டவர்களைஅழிக்க பிறந்தவனே
கர்ணன் புண்ணியமனைத்தும் கவர்ந்ததால்
புவியில் யாரும் புண்ணியம் செய்வதில்லை
தர்மனை பொய் சொல்ல வைத்ததால்
புவியில் அனைவரும் பொய் சொல்கின்றனர்
சகோதர சண்டையை ஏற்படுத்தியதால்
இன்னும் அது வளர்கிறது, வீட்டுக்கு வீடு நாட்டுக்கு நாடு
வெண்ணையை திருடியதால் நாடெங்கு திருட்டு
சிசுபாலன்,அரக்கியயை நீ கொன்றதால் கொலைகள் நடக்கிறது
நீ அன்று மண்ணைத்தின்றதால் எங்கள் குழந்தைளும் தின்கின்றனர்
மழையில் பசுக்களைக் காக்க மலையை குடையாகப் பிடித்ததால் மழையில்லை

Sunday, August 07, 2005

சொத்துகளை இணைய தளத்தில் காணவேண்டும்

150 இணைபதிவகங்களை கணினி மயமாக்க ரூ.19கோடி
சார்பதிவகங்கள்மற்றும் பதிவுதுறை உயர் அலுவலகங்களை கணினிமயமாக்க 19 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை.
RASI திட்டம் எனறு ஒன்று இருந்தது துத்துக்குடி மாவட்டத்தில் . அது முதலில் செயல்பட்டது; இன்று காணவில்லை அல்லது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,அதாவது வெளிநாடுகளில் இருக்கும் நபர் தனது நிலங்களை இணைய தளத்தில் பார்துக்கொள்ள பயனுள்ளதாக இருந்தது. ஒரு பட்டாரர் தனது குறிப்பிட்ட சர்வே எண்ணை விலைக்கு வாங்கினால் அதை தனது பெயருக்கு பட்டாமாற்றம் செய்துகொண்டால் அந்த சர்வே எண் விற்றவர் பெயரிலிருந்து கிரயம் பெற்றவர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டதை தெரிந்து கொள்ளலாம். உள்ளூரில் இருப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று அதை நேரடியாக பாத்துக்கொள்ளலாம். வெளியில் இருப்பவர்கள் ? அந்தவசதியையும் தமிழக முதல் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

Friday, August 05, 2005

வீரப்பன் பணம் எங்கே?

பல ஆண்டுகளாக மாநில அரசுகளின் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் காட்டு ராஜா மான்புமிகு வீரப்பன் அவர்கள் நாட்டிலும் காட்டிலும் கொள்ளையடித்த மாபெருந்தொகை என்னவாயிற்று? வனராஜாவிடமிருந்து எந்த புவிராஜாவிடம் அல்லது ராணிடம் சென்றது.
தலைவர் பல ஆண்டுகளாக சந்தனமரம் , யானையின் தந்தம், நடிகர் ரஜ்குமாருக்காக கொடுத்த சிறு தொகை ரூபாய் 20 கோடி. விடுதலைப்புகளிடம் ஏதாவது கிடைத்திருக்கும் அது.
வீரப்பன் கொள்ளப்பட்டவுடன் நிலவறையில் பணம் இருப்பதாகக் கூறினார்களே அதுவல்லாம் என்னவாயிற்று. அரசியல் வாதிமுதல் பத்திரிக்கையாளர் வரை யாரும் வாய்திறக்க வில்லையே. ஓ அந்த தொகையில் சிறு பகுதி கொண்டு தான் வாய் அடைக்கப்பட்டு விட்டதோ.

Wednesday, August 03, 2005

ராமதாஸ் VS நிருபர்


நிருபர்:- உங்க பேத்திகள் (மத்திய அமைச்சர் அன்புமணி மகள்கள்)டெல்லியில் உள்ள மேட்டர்டே கான் வெண்டில் படிக்கிறாங்களே?

ராமதாஸ்: அதுபற்றி எல்லாம் நீங்க கேட்கக்கூடாது.


நிருபர்: எல்லாரையும் கட்டாயமா தமிழ்லே படிக்கணும்னு சொல்ற நீங்க உங்க குடும்பத்தைச் சேர்நதவங்களை மட்டும் கான்வென்ட்டில்.......


ராமதாஸ்: வரம்பு மீறி பேசறீங்க


நிருபர்: கான்வெண்ட்டில உங்க பேத்திகள் .. . .


ராமதாஸ்: அதிகமா பேசறீங்க. உங்ககிட்டே தனியா பேசறேன்.

நிருபர்: ஊருக்கு உபதேசம் பண்ற நீங்க.........

ராமதாஸ் : என்ன . . . . அரசியல் பண்றியா? நீ யாரு, ஜெயா டி.வி.யா? துக்ளக்கை படிச்சிட்டு இங்கே வந்து கேள்வி கேட்கிறியா?

ஜி.கே.மணி: மேட்டர் டே ஸ்கூல்லே தமிழ் பாடம் நடத்தப்படுகிறது.

ராமதாஸ் : (ஜி.கே.மணியிடம் திரும்பி) அந்த ஆளு (நிருபர்) கேட்கிற கேள்விக்குலாம் பதில் சொல்லாதே. ஜெயா டிவியை யாருய்யா கூப்பிட்டது?

(ஜி.கே.மணி மவுனம்)


நிருபர் : பிரஸ் மீட்னு வந்துட்டா கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றது உங்க கடைமைதானே.

ராமதாஸ் : இதுக்கு மேலே எதுவும் . . . .(அப்போது பா... பிரமுகர் ஒருவர், நிருபரின் தோளில் தட்டி,'கேள்வி கேட்காதே' என்று மிரட்டினால்)

தொடர்நது அது தொடர்பான கேள்விகளையே நிருபர் கேட்டதால் ராமதாஸ் ஆத்திரம் அடைந்தார். பேட்டியை முடித்துக்கொண்டு கடுகடுப்புடன் புறப்பட்டார். பின்னர், ஆளுங்கட்சி டிவி நிருபரை அழைத்தார்

ராமதாஸ் : என்னையா கேள்வி கேட்கிறே? ஜெயா டிவி ஒரு டிவியா? நமது எம்.ஜிஆர் பத்திரிகைலாம் ஒரு பத்திரிகையா? அந்த பத்திரிகையில் வந்த செய்ததியை துக்ளக்கில் போட்டதால இப்படிலாம் கேள்வி கேட்கிறீயா?

நிருபர் : சும்மா கேட்கல, டில்லியில் நல்லா விசாரிச்சுட்டுத்தான் கேட்கிறேன்


ஜி.கே.மணி : சரி, சரி விடுங்க. இதைத்தொடர்ந்து, மேலும் ஆவேசத்துடன் காரில் புறப்பட்டார் ராமதாஸ்.



பாவம் அந்த நிருபரை என்ன செய்யப்போகிறார்களோ பொருத்திருந்து பார்ப்போம்

Sunday, July 24, 2005

MUTHURAMALINGA DEVAR




ஓர் சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர் கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு.

"பாவிகளே ! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஓர் கல், இதே கல்தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம் .. . . . .கூடாது. . . .!

பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை மாணவன் பேச்சை இடைமமறித்தான் . . .!

"பாதிரியார் அவர்களே ! ஓர் சந்தேகம் அதை நீங்கள் . . .!

"என்ன சந்தேகம் அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை ... . . !

"அப்படியனால். . . !கோவப்படக்கூடாது நீங்கள் . . . !"

"எனக்கேன் வருகிறது கோவம்".எதுவானாலும் கேளுங்கள் . . .!

"நான் நிற்பதும் ஓர் கல் . கோவிலின்உள்ளே சிலையாக இருப்பதும் கல் . . .!"என்று குறிப்பிட்டீர்கள்

"இரண்டும் கல் தான் இதிலென்ன . . . !"

"சிலபாதிரிமார்களுக்கு தாயார், அக்காள்,தங்கை, உறவுபெண்களும் உண்டு".

"ஆமாம் ...!"

"சிலபாதிரிமார்களுக்கு . . .! மனைவியும் மக்களும் இருக்கிறார்கள்."

"உண்மைதான்"

"இவர்கள் அனைவரும் . . . .! பெண்கள் தானே?"

"சந்தேகம் என்ன வந்தது இதிலே. . . ?"

"அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற்படுமேயானால். . .!ஒரு மனைவியை பாவிக்கிறமாதிரி தங்களது தாய் ,தங்கையர்களை பாவிக்க முடியுமா? அப்படிபாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில் .. . ?"

இடி யோசை கேட்ட நாகம் போலாகிவிட்டார் பாதிரியார். எதிர்பாராது எழுந்த இக் கேள்வியைக்கேட்டதும்,

அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற பொருங்கூட்டத்தினர் எழுப்பிய

ஆரவாரங்கள் , கையோலிகள் விண்னையெட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன

பல வினாடிகளுக்குப் பின்னர் தெளிவுபெற்றார் பாதிரியார் .

"தம்பி இங்கே வாருங்கள் ... ' '

"பிறமதங்களைப் பழிக்கக்கூடாது என்பது ஆண்டவன் இட்ட கட்டளைகளில் ஒன்றாகும், அதை மறந்தேன் , தக்கசமயத்தில் வந்து உதவிசெய்தீர்கள். உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவன் . நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன்தான். நன்றி", அடுத்த வினாடியே வெளியேறினார் கூட்டத்தை விட்டு பாதிரியார்.

அந்த மாணவன் தான் முத்துராமலிங்கத் தேவர்

Wednesday, July 20, 2005

விமானம் திருச்சியில் விழுந்து விட்டது

திருச்சியை கலக்கிய சிறு ரகவிமானம்


இன்று காலை சுமார் 10.10 மணியளவில் ஒரு ராணுவ பயிற்சி விமானம் திருச்சிராப்பள்ளி மெயின்காட்கேட் பக்கம் தாளப்பறந்து கட்டிடங்களை இடிப்பது போல பாண்டமங்கலம் வழியா லிங்கம் நகரில் கீழே விழுந்து விட்டதாக செய்தி திருச்சிராப்பள்ளி நகர் முழுதும் பரவி மக்கள், ஆம்புலன்ஸ், காவல்துறை, விமானபடை வாகனங்கள், தீயனைப்புபடை , வட்டாட்சியர் அனைவருமே விரைந்து பாண்டமங்கலம் லிங்க நகர் சென்று, அங்கு இல்லை குழுமனி என கூறியதைக் கேட்டு அங்கு சென்று அங்கும் இல்லாமல் அங்கிருந்து ஒவ்வொரு ஊராக சென்று பார்தனர் . கடைசியில் அந்த விமானம் பத்திரமாக கோவையில் இறங்கியதாக செய்தி. அந்த விமானம் பெரும் புகையை ஏற்படுத்தியதால் விழுந்து விட்டதாக மக்கள் கருதிவிட்டனர்.


எந்த ஒரு விமானமும் ஒரு எல்லையில் பறந்தால் அந்த எல்லை சம்பந்தபட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தெரியாதா? இது போல ஒரு குறும்புத்தனமாக செய்த அந்த விமானிமீது ஒழுங்கு நடவடிக்கைஉண்டா? (வேண்டுமென்றே செய்திருப்பின்).


என்னார்

Friday, July 15, 2005

மூன்று சூரியன்


சூரியன் என்றால் ஒன்றுதான் என்பவர்களுக்கு ஓர் அடி கொடுக்க வருகிறது மூன்று சூரியன்களுடன் தெரியும் புதிய கிரகம் விணவெளியில் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டு படித்துள்ளனர்.
விண்வெளியில் இருக்கும் அதிசியங்கள் பலப்பல. இது வரை சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது கிரகங்கள் பற்றித்தான் நமக்கு தெரியும். ஆனால், அதற்கு அப்பால் மூன்று சூரியன்களுடன் கிரகம் ஒன்று இருப்பதை நாசா விஞ்ஞானிகள் தற்போது கண்டு பிடித்துள்ளனர். இந்த புதிய கிரகத்தின் பெயர் 'டடூன்' இது பூமியை விட 1500மடங்கு பெரியது. இதில் இருந்து பார்த்தால் மூன்று சூரியன்கள் அருகருகே இருப்பது தெரியுமாம். ஒரு சூரியன் மஞ்சள் நிறத்திலும் . மற்ற இருண்டு சூரியன்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் உள்ளதாம். டடூன் கிரகம் பூமியிலிருந்து 149 ஒளியாண்டுகள் தூரம் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது பத்து டிரில்லியன் கி.மீ. தூரமாகும். வாயுக்கள் இல்லாமல் உருவானதுதான் கிரகங்கள் என விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்தனர். ஆனால் இந்த கருத்தை மாற்றியுள்ளது டடூன் . இது முழுவதும் வாயுக்களால் ஆனது. இது பற்றிய ஆராய்ச்சியில் இன்னும் பல புதிய தகவல்கள் தெரியவரும். இதேபோல் இன்னும் பல கிரகங்கள்இருக்கலாம். என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Thursday, July 14, 2005

பெருந்தலைவர் காமராஜ்



வீரத்தின் விளை நிலமாய் வெங்கொடுமை புள்ளடிமை

சோரத்தின் புலை வாழ்வை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாய்
பாரதத்தின் சுதந்திரத்தை பரித்திருந்த பரங்கியரை வேரதிர
பேர்த்தெரிய வந்த பெருங்காற்றாய் அன்னை திரு நிலத்தில்
அடியூன்றிய அன்னியர்களை தறித்தெடுக்கும் கோடாறியாய்
செத்துக்கிடந்த தமிழ் சிங்கேரு போல் எழுந்து பரங்கியரை பரக்கடித்த
கர்மவீரனாய் ஏமப் பெருந்துயிலில இருளில் கிடந்தோரை
துமப் புகைபோட்டு துயில் எழுப்பும் மந்திரமாய் பிறப்பெடுத்து வந்த
பெருமகனாம் பச்சைத்தமிழனாம் விருதுபட்டி வீரசிங்கமாம்
ஆதாயம் தேடாமல் ஆற்றிய தொண்டுக்குண்டோ ஈடு
ஏழைகளுகிலவச கல்வி கண்ட தலைவா
முதியோர் உதவித் தொகை கொடுத் தலைவா
மதியஉணவு படைத்த தலைவா
குறைந்த மூலதனத்தைக் கொண்டே பல நீர் தேக்கங்கொணர்ந்தனை நீ
நீர் இல்லாத திட்டங்களுக்கு பல கோடி அதில் சில கோடி கமிசன்
20
விழுக்காடு அன்று உனக்களிக்க கமிசனுக்கேஅதிலும் இரண்டு
இயந்திரங்களை பெற்ற நீரல்லவோ மாமனிதன்*
(
தமிழக முதல்வராயிருக்கும் போது வெளிநாட்டில் இயந்திரங்கள் வெங்டராமன் மூலமாக இயந்திரங்களை கொடுத்த கம்பெனி 20 சதவீதம் நாங்கள் கமிசன் கொடுப்போம் எனட்றனர்
அதை வெங்கட்ராமன் தலைவரிடம் கூற ,"அந்த தொகைக்கு மேலும் இரண்டு இயந்திரங்கள் வாங்கு" என்றார்.)

காமராஜர் பிறப்பு-1903,

குமாரசாமி சிவகாமி செல்வன்

முதல்வராக 13 ஆண்டுகள்

சிறைவாசம் 9 ஆண்டுகளுக்கு மேல்

இறப்பு காந்தி பிறந்த நாள் அன்று 1975



Saturday, July 09, 2005

கொள்ளிடத்தில் ஏழு கதவணைகள்

தமிழ் நாடு ஆண்டு தோறும் தண்ணீர்ப் பற்றாக் குறையினால் பரிதவித்து வருகிறது. ஜீவ நதியாக விளங்கிய காவிரி வறண்டு விட்டது. கர்நாடக மாநிலம் தண்ணீர் விட மாட்டேன் என்று முரட்டுப் பிடிவதாம் பிடித்து வருகிறது. நடுவர் மன்றம் சொன்னாலும், உச்ச நீதிமன்றம் சொன்னாலும் பாரதப் பிரதமரே சொன்னாலும் கீழ்ப்படிய மாட்டேன் என்று கூறுவது முரட்டுப் பிடிவதாம் தானே! அம்மாநிலத்தினை கீழ்ப்படிய வைப்பதற்கு பலமான மத்திய அரசு இல்லை.

இப்போது கர்நாடக மாநிலத்தில் எவ்வளவு மழை பெய்கிறதோ, அந்த அளவுக்கு மேலேயே பயன்படுத்தக்கூடிய விளைநிலங்களை அது தாயர் செய்து விட்டது. எனவே கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் வரும் என்று நாம் எதிர் பார்ப்பதற்கு இடமில்லை . அவர்கள் பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல், பயன்படுத் தமுடியாமல் வழிந்து வரும் தண்ணீர்தான் நமக்கு வந்து சேரும். கடந்த சில ஆண்டுகளாகவே அப்படித் தான் நடந்து வருகிறது. கர்டநாடகத்திற்கு வடிகால் பூமியாகத்தான் தமிழ்நாடு விளங்கிவருகிறது.

இயற்கையின் பாரபட்சம் காவிரிப் படுகையின் மொத்த நிலப்பரப்பில் 42.2 சதவீதம் கர்நாடகத்திலும், 3.5 சதவீதம் கேரளத்திலும் , மீதி 54.3 சதவீதம் தமிழ் நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் உள்ளது ஆனால் இற்கை அமைப்பினால் கர்நாடக, கேரள மாநிலங்களிலும் சராசரி ஆண்டு தோறும் 3015 மி.மீ. மழையும் தமிழ் நாட்டில் சராசரி 981 மி.மீ. மழையும் தான் பொழிகிறது. இதனால் கர்நாடக கேரளத்தில் பெய்யும் மழை அங்கு பயன் படுத்தாமையினால் தமிழ் நாட்டுக்கு ஓடி வந்து இங்கு ஏராளமான விளைநிலங்களுப் பயன் படுகிறது.

இது ஆயிரகணக்கான ஆண்டுகளாக நடந்து வந்தது . கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டில் கட்டிய கல்லணைதான் உலகிலேயே முதன் முதலாக கட்டப்பட்ட பாசன அமைப்பாகும் காவிரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் பெரும்பகுதியை தமிழ் நாடு தான் பயன் படுத்திவந்தது. 1971 – 1972 வரை இந்த நிலை நீடித்தது அந்த ஆண்டு கிடைத்த நீரினைக் கொண்டு தமிழ் நாடடில் 28.2 இலட்சம் ஏக்கர் பாசனம் நடந்தது. கர்நாடகத்தில் 6.68 இலட்சம் ஏக்கர் தான், கேரளத்தில் வெறும் 6300 ஏக்கர் மட்டுமே. நாளாவட்டத்தில் இந்த நிலை மாறிவிட்டது. எங்கள் மாநிலத்தில் பெய்யும் மழை எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறிக்கொண்டு கர்நாடகம் அதன் பாசன பரப்பினை 19.6 லட்சம் ஏக்கருக்கு அதிகரித்து விட்டது. அதற்கு மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. காவிரி நடுவர் நீதி மன்றம் கர்நாடகத்தில் காவிரி பாசனம் 11.2 இலட்சம் ஏக்கருக்குமேல் அதிகரிக்கக்கூடாது என்று 1991ல் ஆணை பிறப்பித்தது.

கர்நாடகத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு 205 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்றும் இடைக்கால ஆணையிட்டது. கர்நாடகம் எதையும் பின்பற்றவில்லை. இனிமேல் பின்பற்றும் என்ற நம்பிக்கையும் இல்லை.

எனவே தமிழ் நாட்டில் பெய்யும் மழையினைக் கொண்டு தான் நாம் பிழைக்க வேண்டும் என்ற நிலமை உருவாகி வருகிறது. உண்மையில் பார்க்கப் போனால் பல நூற்றாண்டுகளாக காவிரி நீரைப்பயன்படுத்தி வந்த நமக்கு முன்னுரிமை உண்டு. நமது தேவைகளை பூர்த்தி செய்து விட்டுதான் புதிய பயன் பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது சர்வதேச சட்டம். ஆனால் எதற்கும் கட்டுப்படாத கர்நாடத்தை என்ன செய்வது?.

தமிழ் நாட்டில் நதிகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதனையும் அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதனையும் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகள் அளிப்பதற்காக நான்காண்டுகளுக்கு முன் ஒரு தொழில் நுட்பக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆறு மாதங்கள் ஆய்வுநடத்தி அரசுக்கு ஓர் அறிக்கையளித்தது. அக்குழுவில் திரு. சி.எஸ். குப்புராஜ் அவர்கள் ஒரு அங்கத்தினராக இருந்தார்கள்.

குழு அளித்த பயனுள்ள பரிந்துரைகளில் ஒன்று கொள்ளிடத்தில் மேலணைக்கும் அணைக்கரைக்கும் (ஒரு ஊரின் பெயர்)இடையே ஏழு கதவணைகள் அமைக்ப்படவேண்டும் என்பது . இதனால் கீழ் அணை என்று கூறப்படும் அணைக்கரையின் மூலமாக கடலில் கலக்கும் 100 டிஎம்சி தண்ணீரில் பெரும் பகுதியை பயன் படுத்தலாம் என்பதாகும். இந்த 100 டிஎம்சி என்பது கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
வரும் ஆண்டுகளில் இது குறையலாம் , கர்நாடகத்தின் செயல்பாடுகளால் ! இருப்பினும் கணிசமான அளவு இந்தக் கதவணைகள் மூலமாக சேமிக்க முடியும். மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் . இந்தக் கதவணைகள் (மொத்தக் கொள்ளளவு 14.0 டிஎம்சி) காவிரி நீருக்காக மட்டுமல்ல கொள்ளிடத்தின் வடபால் உள்ள நீர்பிடிப்பகுதியில் இருந்து கிடைக்கும் நீருக்காகவும் கூடத்தான்.

தமிழ் நாட்டில் பெய்யும் ஒவ்வொரு துளி மழைநீரினையும் சேமிக்க வேண்டடிய நிர்ப்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே தான் இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. .

இந்தக்கதவணைகள் கட்டப்படவேண்டிய இடங்களும் மற்ற விபரங்களும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தோராய மதிப்பீடு ரூ.250 கோடி. பயன்கள் அளவிடமுடியதன. முக்கியமானது கொள்ளிடத்தின் இருகரைகளிலும் நூரு கி.மீ.வரை நிலத்தடி நீர் மட்டம் உயரும் .

அன்மைக்காலத்தில் தமிழ் நாடு அரசு வெளியிட்டு பின்னர் கிராம மக்களின் எதிர்ப்பினால் வாபஸ் வாங்கப்பட்ட வீரானம் விரிவாக்கத்திட்டதுடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம் .

தலைமைச் செயலகத்தில் வழக்கம் போல் தூசி படிந்து கொண்டிருக்கும் சி.எஸ். குப்புராஜ் அவர்களது குழுவின் அறிக்கையினை எடுத்து, தூசி தட்டி, இந்த ஒரு பரிந்துரையினையாவது நிறைவேற்றினால், மக்களுக்கு பெரும் பலனளிக்கும்.
கடலில் கலந்து வீனாகும் தண்ணீர் ஓரளவு சேமிக்கப்படும்.

சேது சமத்திரத்திட்டத்திற்கு 2400 கோடி நம் கொள்ளிடத்திற்கு 240 கோடி
கடலில் 2400 கோடியைப் போட வேண்டாம் எனச் சொல்லவில்லை ஆற்றிலும் ஒரு 240 கோடியைப் போட்டல் திருமானூர் தண்ணீர் சென்னைக்கு தங்கு தடையின்றி கொண்டு செல்லலாமே.

எந்த பிதிபலனும் எதிர் பார்க்காத பெருந்தலைவர் இருந்தால் இது நடக்கலாம். ஆட்சியில் இருந்தால்தான் !! ம்...ஆகட்டும் ..பா..ர்..க்..க...லா...ம்..ம்..ம்.

வெவசாயி பெருமூச்சு இது தான் என்ன பன்றது