Friday, August 26, 2005

மாயக் கண்ணன் பிறந்தநாள்

கண்ணன் பிறந்தான் மாயக் கண்ணன் பிறந்தநாள்
கெளரவ பண்டவர்களைஅழிக்க பிறந்தவனே
கர்ணன் புண்ணியமனைத்தும் கவர்ந்ததால்
புவியில் யாரும் புண்ணியம் செய்வதில்லை
தர்மனை பொய் சொல்ல வைத்ததால்
புவியில் அனைவரும் பொய் சொல்கின்றனர்
சகோதர சண்டையை ஏற்படுத்தியதால்
இன்னும் அது வளர்கிறது, வீட்டுக்கு வீடு நாட்டுக்கு நாடு
வெண்ணையை திருடியதால் நாடெங்கு திருட்டு
சிசுபாலன்,அரக்கியயை நீ கொன்றதால் கொலைகள் நடக்கிறது
நீ அன்று மண்ணைத்தின்றதால் எங்கள் குழந்தைளும் தின்கின்றனர்
மழையில் பசுக்களைக் காக்க மலையை குடையாகப் பிடித்ததால் மழையில்லை

1 comment:

வீ. எம் said...

குட்டி ராஜா,
ஒன்னு சொல்லாம விட்டுடீங்க..

கண்ணா, நீ மீட்டர் மீட்டர புடவைய விட்டு
பாஞ்சாலி கற்பை காப்பதியதால்
கற்பழிக்கபடும் பெண்களை காப்பாற்றுவது
இன்றும் தொடர்கிறது -
திரைபடங்களில் எங்கள் ஹீரோக்கள் மூலமாக..