Sunday, July 24, 2005

MUTHURAMALINGA DEVAR




ஓர் சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர் கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு.

"பாவிகளே ! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஓர் கல், இதே கல்தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம் .. . . . .கூடாது. . . .!

பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை மாணவன் பேச்சை இடைமமறித்தான் . . .!

"பாதிரியார் அவர்களே ! ஓர் சந்தேகம் அதை நீங்கள் . . .!

"என்ன சந்தேகம் அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை ... . . !

"அப்படியனால். . . !கோவப்படக்கூடாது நீங்கள் . . . !"

"எனக்கேன் வருகிறது கோவம்".எதுவானாலும் கேளுங்கள் . . .!

"நான் நிற்பதும் ஓர் கல் . கோவிலின்உள்ளே சிலையாக இருப்பதும் கல் . . .!"என்று குறிப்பிட்டீர்கள்

"இரண்டும் கல் தான் இதிலென்ன . . . !"

"சிலபாதிரிமார்களுக்கு தாயார், அக்காள்,தங்கை, உறவுபெண்களும் உண்டு".

"ஆமாம் ...!"

"சிலபாதிரிமார்களுக்கு . . .! மனைவியும் மக்களும் இருக்கிறார்கள்."

"உண்மைதான்"

"இவர்கள் அனைவரும் . . . .! பெண்கள் தானே?"

"சந்தேகம் என்ன வந்தது இதிலே. . . ?"

"அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற்படுமேயானால். . .!ஒரு மனைவியை பாவிக்கிறமாதிரி தங்களது தாய் ,தங்கையர்களை பாவிக்க முடியுமா? அப்படிபாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில் .. . ?"

இடி யோசை கேட்ட நாகம் போலாகிவிட்டார் பாதிரியார். எதிர்பாராது எழுந்த இக் கேள்வியைக்கேட்டதும்,

அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற பொருங்கூட்டத்தினர் எழுப்பிய

ஆரவாரங்கள் , கையோலிகள் விண்னையெட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன

பல வினாடிகளுக்குப் பின்னர் தெளிவுபெற்றார் பாதிரியார் .

"தம்பி இங்கே வாருங்கள் ... ' '

"பிறமதங்களைப் பழிக்கக்கூடாது என்பது ஆண்டவன் இட்ட கட்டளைகளில் ஒன்றாகும், அதை மறந்தேன் , தக்கசமயத்தில் வந்து உதவிசெய்தீர்கள். உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவன் . நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன்தான். நன்றி", அடுத்த வினாடியே வெளியேறினார் கூட்டத்தை விட்டு பாதிரியார்.

அந்த மாணவன் தான் முத்துராமலிங்கத் தேவர்

Wednesday, July 20, 2005

விமானம் திருச்சியில் விழுந்து விட்டது

திருச்சியை கலக்கிய சிறு ரகவிமானம்


இன்று காலை சுமார் 10.10 மணியளவில் ஒரு ராணுவ பயிற்சி விமானம் திருச்சிராப்பள்ளி மெயின்காட்கேட் பக்கம் தாளப்பறந்து கட்டிடங்களை இடிப்பது போல பாண்டமங்கலம் வழியா லிங்கம் நகரில் கீழே விழுந்து விட்டதாக செய்தி திருச்சிராப்பள்ளி நகர் முழுதும் பரவி மக்கள், ஆம்புலன்ஸ், காவல்துறை, விமானபடை வாகனங்கள், தீயனைப்புபடை , வட்டாட்சியர் அனைவருமே விரைந்து பாண்டமங்கலம் லிங்க நகர் சென்று, அங்கு இல்லை குழுமனி என கூறியதைக் கேட்டு அங்கு சென்று அங்கும் இல்லாமல் அங்கிருந்து ஒவ்வொரு ஊராக சென்று பார்தனர் . கடைசியில் அந்த விமானம் பத்திரமாக கோவையில் இறங்கியதாக செய்தி. அந்த விமானம் பெரும் புகையை ஏற்படுத்தியதால் விழுந்து விட்டதாக மக்கள் கருதிவிட்டனர்.


எந்த ஒரு விமானமும் ஒரு எல்லையில் பறந்தால் அந்த எல்லை சம்பந்தபட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தெரியாதா? இது போல ஒரு குறும்புத்தனமாக செய்த அந்த விமானிமீது ஒழுங்கு நடவடிக்கைஉண்டா? (வேண்டுமென்றே செய்திருப்பின்).


என்னார்

Friday, July 15, 2005

மூன்று சூரியன்


சூரியன் என்றால் ஒன்றுதான் என்பவர்களுக்கு ஓர் அடி கொடுக்க வருகிறது மூன்று சூரியன்களுடன் தெரியும் புதிய கிரகம் விணவெளியில் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டு படித்துள்ளனர்.
விண்வெளியில் இருக்கும் அதிசியங்கள் பலப்பல. இது வரை சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது கிரகங்கள் பற்றித்தான் நமக்கு தெரியும். ஆனால், அதற்கு அப்பால் மூன்று சூரியன்களுடன் கிரகம் ஒன்று இருப்பதை நாசா விஞ்ஞானிகள் தற்போது கண்டு பிடித்துள்ளனர். இந்த புதிய கிரகத்தின் பெயர் 'டடூன்' இது பூமியை விட 1500மடங்கு பெரியது. இதில் இருந்து பார்த்தால் மூன்று சூரியன்கள் அருகருகே இருப்பது தெரியுமாம். ஒரு சூரியன் மஞ்சள் நிறத்திலும் . மற்ற இருண்டு சூரியன்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் உள்ளதாம். டடூன் கிரகம் பூமியிலிருந்து 149 ஒளியாண்டுகள் தூரம் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது பத்து டிரில்லியன் கி.மீ. தூரமாகும். வாயுக்கள் இல்லாமல் உருவானதுதான் கிரகங்கள் என விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்தனர். ஆனால் இந்த கருத்தை மாற்றியுள்ளது டடூன் . இது முழுவதும் வாயுக்களால் ஆனது. இது பற்றிய ஆராய்ச்சியில் இன்னும் பல புதிய தகவல்கள் தெரியவரும். இதேபோல் இன்னும் பல கிரகங்கள்இருக்கலாம். என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Thursday, July 14, 2005

பெருந்தலைவர் காமராஜ்



வீரத்தின் விளை நிலமாய் வெங்கொடுமை புள்ளடிமை

சோரத்தின் புலை வாழ்வை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாய்
பாரதத்தின் சுதந்திரத்தை பரித்திருந்த பரங்கியரை வேரதிர
பேர்த்தெரிய வந்த பெருங்காற்றாய் அன்னை திரு நிலத்தில்
அடியூன்றிய அன்னியர்களை தறித்தெடுக்கும் கோடாறியாய்
செத்துக்கிடந்த தமிழ் சிங்கேரு போல் எழுந்து பரங்கியரை பரக்கடித்த
கர்மவீரனாய் ஏமப் பெருந்துயிலில இருளில் கிடந்தோரை
துமப் புகைபோட்டு துயில் எழுப்பும் மந்திரமாய் பிறப்பெடுத்து வந்த
பெருமகனாம் பச்சைத்தமிழனாம் விருதுபட்டி வீரசிங்கமாம்
ஆதாயம் தேடாமல் ஆற்றிய தொண்டுக்குண்டோ ஈடு
ஏழைகளுகிலவச கல்வி கண்ட தலைவா
முதியோர் உதவித் தொகை கொடுத் தலைவா
மதியஉணவு படைத்த தலைவா
குறைந்த மூலதனத்தைக் கொண்டே பல நீர் தேக்கங்கொணர்ந்தனை நீ
நீர் இல்லாத திட்டங்களுக்கு பல கோடி அதில் சில கோடி கமிசன்
20
விழுக்காடு அன்று உனக்களிக்க கமிசனுக்கேஅதிலும் இரண்டு
இயந்திரங்களை பெற்ற நீரல்லவோ மாமனிதன்*
(
தமிழக முதல்வராயிருக்கும் போது வெளிநாட்டில் இயந்திரங்கள் வெங்டராமன் மூலமாக இயந்திரங்களை கொடுத்த கம்பெனி 20 சதவீதம் நாங்கள் கமிசன் கொடுப்போம் எனட்றனர்
அதை வெங்கட்ராமன் தலைவரிடம் கூற ,"அந்த தொகைக்கு மேலும் இரண்டு இயந்திரங்கள் வாங்கு" என்றார்.)

காமராஜர் பிறப்பு-1903,

குமாரசாமி சிவகாமி செல்வன்

முதல்வராக 13 ஆண்டுகள்

சிறைவாசம் 9 ஆண்டுகளுக்கு மேல்

இறப்பு காந்தி பிறந்த நாள் அன்று 1975



Saturday, July 09, 2005

கொள்ளிடத்தில் ஏழு கதவணைகள்

தமிழ் நாடு ஆண்டு தோறும் தண்ணீர்ப் பற்றாக் குறையினால் பரிதவித்து வருகிறது. ஜீவ நதியாக விளங்கிய காவிரி வறண்டு விட்டது. கர்நாடக மாநிலம் தண்ணீர் விட மாட்டேன் என்று முரட்டுப் பிடிவதாம் பிடித்து வருகிறது. நடுவர் மன்றம் சொன்னாலும், உச்ச நீதிமன்றம் சொன்னாலும் பாரதப் பிரதமரே சொன்னாலும் கீழ்ப்படிய மாட்டேன் என்று கூறுவது முரட்டுப் பிடிவதாம் தானே! அம்மாநிலத்தினை கீழ்ப்படிய வைப்பதற்கு பலமான மத்திய அரசு இல்லை.

இப்போது கர்நாடக மாநிலத்தில் எவ்வளவு மழை பெய்கிறதோ, அந்த அளவுக்கு மேலேயே பயன்படுத்தக்கூடிய விளைநிலங்களை அது தாயர் செய்து விட்டது. எனவே கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் வரும் என்று நாம் எதிர் பார்ப்பதற்கு இடமில்லை . அவர்கள் பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல், பயன்படுத் தமுடியாமல் வழிந்து வரும் தண்ணீர்தான் நமக்கு வந்து சேரும். கடந்த சில ஆண்டுகளாகவே அப்படித் தான் நடந்து வருகிறது. கர்டநாடகத்திற்கு வடிகால் பூமியாகத்தான் தமிழ்நாடு விளங்கிவருகிறது.

இயற்கையின் பாரபட்சம் காவிரிப் படுகையின் மொத்த நிலப்பரப்பில் 42.2 சதவீதம் கர்நாடகத்திலும், 3.5 சதவீதம் கேரளத்திலும் , மீதி 54.3 சதவீதம் தமிழ் நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் உள்ளது ஆனால் இற்கை அமைப்பினால் கர்நாடக, கேரள மாநிலங்களிலும் சராசரி ஆண்டு தோறும் 3015 மி.மீ. மழையும் தமிழ் நாட்டில் சராசரி 981 மி.மீ. மழையும் தான் பொழிகிறது. இதனால் கர்நாடக கேரளத்தில் பெய்யும் மழை அங்கு பயன் படுத்தாமையினால் தமிழ் நாட்டுக்கு ஓடி வந்து இங்கு ஏராளமான விளைநிலங்களுப் பயன் படுகிறது.

இது ஆயிரகணக்கான ஆண்டுகளாக நடந்து வந்தது . கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டில் கட்டிய கல்லணைதான் உலகிலேயே முதன் முதலாக கட்டப்பட்ட பாசன அமைப்பாகும் காவிரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் பெரும்பகுதியை தமிழ் நாடு தான் பயன் படுத்திவந்தது. 1971 – 1972 வரை இந்த நிலை நீடித்தது அந்த ஆண்டு கிடைத்த நீரினைக் கொண்டு தமிழ் நாடடில் 28.2 இலட்சம் ஏக்கர் பாசனம் நடந்தது. கர்நாடகத்தில் 6.68 இலட்சம் ஏக்கர் தான், கேரளத்தில் வெறும் 6300 ஏக்கர் மட்டுமே. நாளாவட்டத்தில் இந்த நிலை மாறிவிட்டது. எங்கள் மாநிலத்தில் பெய்யும் மழை எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறிக்கொண்டு கர்நாடகம் அதன் பாசன பரப்பினை 19.6 லட்சம் ஏக்கருக்கு அதிகரித்து விட்டது. அதற்கு மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. காவிரி நடுவர் நீதி மன்றம் கர்நாடகத்தில் காவிரி பாசனம் 11.2 இலட்சம் ஏக்கருக்குமேல் அதிகரிக்கக்கூடாது என்று 1991ல் ஆணை பிறப்பித்தது.

கர்நாடகத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு 205 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்றும் இடைக்கால ஆணையிட்டது. கர்நாடகம் எதையும் பின்பற்றவில்லை. இனிமேல் பின்பற்றும் என்ற நம்பிக்கையும் இல்லை.

எனவே தமிழ் நாட்டில் பெய்யும் மழையினைக் கொண்டு தான் நாம் பிழைக்க வேண்டும் என்ற நிலமை உருவாகி வருகிறது. உண்மையில் பார்க்கப் போனால் பல நூற்றாண்டுகளாக காவிரி நீரைப்பயன்படுத்தி வந்த நமக்கு முன்னுரிமை உண்டு. நமது தேவைகளை பூர்த்தி செய்து விட்டுதான் புதிய பயன் பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது சர்வதேச சட்டம். ஆனால் எதற்கும் கட்டுப்படாத கர்நாடத்தை என்ன செய்வது?.

தமிழ் நாட்டில் நதிகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதனையும் அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதனையும் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகள் அளிப்பதற்காக நான்காண்டுகளுக்கு முன் ஒரு தொழில் நுட்பக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆறு மாதங்கள் ஆய்வுநடத்தி அரசுக்கு ஓர் அறிக்கையளித்தது. அக்குழுவில் திரு. சி.எஸ். குப்புராஜ் அவர்கள் ஒரு அங்கத்தினராக இருந்தார்கள்.

குழு அளித்த பயனுள்ள பரிந்துரைகளில் ஒன்று கொள்ளிடத்தில் மேலணைக்கும் அணைக்கரைக்கும் (ஒரு ஊரின் பெயர்)இடையே ஏழு கதவணைகள் அமைக்ப்படவேண்டும் என்பது . இதனால் கீழ் அணை என்று கூறப்படும் அணைக்கரையின் மூலமாக கடலில் கலக்கும் 100 டிஎம்சி தண்ணீரில் பெரும் பகுதியை பயன் படுத்தலாம் என்பதாகும். இந்த 100 டிஎம்சி என்பது கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
வரும் ஆண்டுகளில் இது குறையலாம் , கர்நாடகத்தின் செயல்பாடுகளால் ! இருப்பினும் கணிசமான அளவு இந்தக் கதவணைகள் மூலமாக சேமிக்க முடியும். மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் . இந்தக் கதவணைகள் (மொத்தக் கொள்ளளவு 14.0 டிஎம்சி) காவிரி நீருக்காக மட்டுமல்ல கொள்ளிடத்தின் வடபால் உள்ள நீர்பிடிப்பகுதியில் இருந்து கிடைக்கும் நீருக்காகவும் கூடத்தான்.

தமிழ் நாட்டில் பெய்யும் ஒவ்வொரு துளி மழைநீரினையும் சேமிக்க வேண்டடிய நிர்ப்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே தான் இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. .

இந்தக்கதவணைகள் கட்டப்படவேண்டிய இடங்களும் மற்ற விபரங்களும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தோராய மதிப்பீடு ரூ.250 கோடி. பயன்கள் அளவிடமுடியதன. முக்கியமானது கொள்ளிடத்தின் இருகரைகளிலும் நூரு கி.மீ.வரை நிலத்தடி நீர் மட்டம் உயரும் .

அன்மைக்காலத்தில் தமிழ் நாடு அரசு வெளியிட்டு பின்னர் கிராம மக்களின் எதிர்ப்பினால் வாபஸ் வாங்கப்பட்ட வீரானம் விரிவாக்கத்திட்டதுடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம் .

தலைமைச் செயலகத்தில் வழக்கம் போல் தூசி படிந்து கொண்டிருக்கும் சி.எஸ். குப்புராஜ் அவர்களது குழுவின் அறிக்கையினை எடுத்து, தூசி தட்டி, இந்த ஒரு பரிந்துரையினையாவது நிறைவேற்றினால், மக்களுக்கு பெரும் பலனளிக்கும்.
கடலில் கலந்து வீனாகும் தண்ணீர் ஓரளவு சேமிக்கப்படும்.

சேது சமத்திரத்திட்டத்திற்கு 2400 கோடி நம் கொள்ளிடத்திற்கு 240 கோடி
கடலில் 2400 கோடியைப் போட வேண்டாம் எனச் சொல்லவில்லை ஆற்றிலும் ஒரு 240 கோடியைப் போட்டல் திருமானூர் தண்ணீர் சென்னைக்கு தங்கு தடையின்றி கொண்டு செல்லலாமே.

எந்த பிதிபலனும் எதிர் பார்க்காத பெருந்தலைவர் இருந்தால் இது நடக்கலாம். ஆட்சியில் இருந்தால்தான் !! ம்...ஆகட்டும் ..பா..ர்..க்..க...லா...ம்..ம்..ம்.

வெவசாயி பெருமூச்சு இது தான் என்ன பன்றது

Friday, July 01, 2005

சேது சமுத்திரதிட்டம்


சேது சமுத்திரத்திட்டம் நல்ல திட்டம் தானே இதை ஏன் சிலர் எதிர்க்க வேண்டும்

ஊர் சுற்றி போகமல் குறுக்கு வழியில் செல்வதால் பயண தூரம் மிச்சம் தானே


எ.கா:

முதல் முடிய சுற்று குறுக்கு மீதம

கண்ணியாகும சென்னை 755 487 248

" வைசாக் 1014 724 290

" கொல்கத் 1357 1103 254

தூத்துக்குடி சென்னை 769 345 424

" வைசாக் 1028 662 366

" கொல்கத் 1371 1041 330


அதுசரி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பவர்கள் பெருங்கடலை ஏன்? சமுத்திரம்

என வைத்துள்ளர் ஐயா ராமதாஸ் என்ன சொல்லப்போகிரார்
சேதுகடல்