Sunday, April 30, 2006

அம்பிகாபதி அமராவதி - 12 -

கோமாளி:- (அரசனைநோக்கி) மாராசா எனக்கு ஒரு ஐயுறவு அதெக் கெஞ்சிக் கேட்கட்டுமா?

அரசன்:- கண்டபடியெல்லாம் உளறாமற் சொல்லக்கூடுமானாற் சொல்.

கோமாளி:- ( சாக்கியப் புலவரைச் சுட்டிக்காட்டி) இந்த சாக்கிய சாமி சொன்னாங்களே கடவுள் இல்லை யென்று; அது எப்படியாவது போகட்டும்; ஆனா உயிர் கூட இல்லே யின் னாங்களே, அது எப்படி ? இதோ நான் இருக்கிறேனே , என்னக் கூட பொய்யினுசொன்னா எனக்கு அழுகை வருகிறது (சிறிது ஆழுகின்றான். எல்லாருஞ் சிரிக்கின்றனர்) மாராசா, நீங்கக் கூட பொய்யா? இந்த உலகமெல்லாம் பொய்யின்னாங்களே; அப்படியான இந்த இரவைக்கி எனக்குச் சாப்பாடு? அது பொய்யாவாமே பாத்துக்குங்கோ.(எல்லோரும் மிகச்சிரிக்கின்றனர்! சாக்கிய புலவர் நாணுகின்றனர்)

அரசன்: (நகைத்துத் கொண்டு) ஏடா! துத்தி. சாக்கிய புலவர் தமது மதக்கொள்கையை எடுத்துச்சொன்னாரே தவிர, உடனே எல்லாம் பொய்யாய் விடுமென்பது அவரது கரத்தன்று. உனக்கு மும்மடங்கு மிகுதியான உணவு இன்றிரவு தரச்செய்வோம், அஞ்சாதே. (அம்பிகாபதியை நோக்கி ) ஏதும் விடையுண்டோ?

அம்பிகாபதி:- சாக்கிய புலவர் கூறிய தமது மதக்கொள்கை உலக வழக்கிற்கும் நூல் வழக்கிற்கும் அன்றோர் மென்யுணர்விற்குஞ் சிறிதும் பொருந்தியதாய் இல்லை. அஃது உலக வழக்கிற்கு முழு மாறாதல் இப்போது துத்தி நகைச்சுவையுண்டாக பேசிய சொர்காளல் வெட்ட வெளியாய் விளங்கி விட்டது. இனி கடவுளும் உயிரும் உண்டோ இல்லையோ என்னும் ஆழ்ந்த ஆராய்சியில் நாம் இப்போது நுழைய வேண்டுவதில்லை நம் பெருமான் மெய்கண்ட தேவர் தாம் அருளிச்செய்திருக்கும் சிவஞான போதத்திற்கு கடவுள் உயிர் உலகம் அல்லது பதி,பசு,பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றி ஆராய்ந்துரைக்க வேண்டுவனவெல்லாம் முற்ற அராய்ந்து அவற்றின் உண்மையை முடித்துக்கூறியிருக்கின்றார். மற்று என் தந்தையார் இயற்றிஇருக்கும் இராமாவதார காப்பியச் சொற்பொருட்டன்மைகளை ஆராய்தற் பொருட்டு குழுமிய இப்புலவர் பேரவையயில் அதனை விட்டு பிற வற்றை ஆராய்தல் வெறும் கர்லப் போக்காகும். இனி, ராமன் என்றோர் அரசன் வடநாட்டில் இருந்தமை , பழைய பெளத்த சமய நூலாகிய 'தசரத ஜாதகத்திலேயே ' சொல்லப்பட்டிருத்தலின் , அவனை இல்பொருள் என்றல் பெளத்தர் தம் நூலுக்கே மாறாய் இருக்கின்றது. ஆனால், அவன் தென்னாடு போந்து இராவணனோடு போராடினான் என அது நுவலவில்லையே எனின், அவன் தென்னாடு போந்ததாக அந்நூல் நுவலாமையால் , அவன் தென்னாடு போந்த செய்தி பொய்யாக கருதப்பட்டினும், உள்ளோன் தலைவனாக நிகழாததனை நிகழ்ந்ததாக வைத்து அவன் மேலேற்றி உரைப்பது 'இல்லதினியது நல்லது என்று புலவரால் நாட்டப் பட்டதோர் ஒழுக்கமாம்' என்று தெய்வப் புலமை நக்கீரனார் உரையுரைதாராகலின் , வடமொழியில் வான்மீகி நாட்டிய அப்புணைந்தரையினையே என் தந்தையார் மொழி பெயர்ந்துப் பாடினார். அதனை என் தந்தையார் நூலுக்கு ஒரு குற்றமாகக் கூறுதல் அடாது.

வைணவப் புலவர்: இராமாயணத்தின் பின் நிகழ்ச்சி பொய்யென்னும் பெளத்தரின் கொள்கையை அம்பிகாபதியார் ஏற்று மொழிதலாலும், இராமன் மும்மூர்த்திகளிலும் மிக்கவன் என்பதனைப் புனைந்துரையென அவர் அங்ஙனமே கூறுதலாலும் கம்பர் இயற்றிய இவ்விராமாவதார நூலை வைணவராகிய நாங்கள் ஒப்புக் கொள்ளல் முடியாது.

சைவப் புலவர்: பிறப்பு இறப்பு இல்லா முதல்வனாகிய சிவபிரானைப் பார்க்கிலும், பிறப்பு இறப்பிற்பட்ட ஒரு சிற்றுயிராகிய இராமனை மேலவனாகக் கூறுங் கம்பரது இந்நூல், சைவர்களாகிய எங்களாலும் ஏற்றுக் கொள்ளபடுதல் இயலாது.



சாக்கியப் புலவர்: கடவுள் உண்டென்பதே பெறப்படாமல் இருக்கக் கடவுளே இராமனாகப் பிறந்தான் என்றலின் கம்பரத இந்நூல் பெளத்தராகிய எங்களாலும் ஒப்புக்கொள்ளப்படுதல் இயலாது.

சமணப் புலவர்: இதே காரணம் பற்றிக் கம்பராமயணத்தைச் சமண் மதத்தவராகிய யாங்களும் ஏற்றல் சிறிதும் கூடாது

கூத்தர்: கம்பர் பாடிய இவ்விராமாவதாரக் கடவுள் வணக்கமே வைணவத்தி்ற்கும் முரணாய்ச் சைவத்திற்கும் முரணாய்ச் சமண் சாக்கியத்திற்கும் முரணாய்க் காணப்படுகின்றது. அம்பிகாபதியார் கூறிய விடைகளோ சைவ சமயக் கொள்கைகளோடு இணங்கி அறிய நுட்பம் வாய்ந்தனவாயிருப்பினும், அவை கம்பர் கருத்தோடு ஒட்டியவையல்ல என்பது அதனைச் சிறிது நினைந்து பார்ப்பவரும் நன்குணர்வர். ஆகையால் இந்நூலைப் பல் சமயப் புலவரும் ஒருங்கு குழீஇய இப்பேரவையில் எங்ஙனம் அரங்கேற்றுவிப்பதென்பது எனக்கு விளங்கவில்லை. இதற்கு மன்னர் பிரானும் அமைச்சருமே முடிவு கூறவேண்டும்.

அமைச்சர்: மாபெரும் புலவர்கள் உள்ள இப்பேரவையில் நீங்கள் எல்லாரும் ஒரே சமயத்தீராயில்லாமல், ஒன்றோடொன்று ஒவ்வாப் பல்பெருஞ் சமயத்தீராய் இருகிக்கின்றீர்கள் நும்மில் பலரும் இதுகாறும் நிகழ்த்திய தடைகளால் கம்பர் இயற்றிய இவ்விராமாவதார நூல் நும்மில் அம்பிகாபதியாரைத் தவிர மற்றேவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாயில்லை. ஆதலால் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படத்தக்கது, தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறளைப் போன்ற தொரு நூலாக இருந்தல் வேண்டும்.

புலவர் எல்லாரும்: ஆம்! ஆம்! திருக்குறளைப் யொத்த தொரு பொதுநூலே இப்பேரவையில் அரங்கேற்றத் தக்கதாககும்; மற்றை ஆகா.

அமைச்சர்: அங்ஙனமாயின், ஆசிரியர் கம்பர் தமது இராமாவதார நூலைச் சைவ சமயக் கொள்கைக்கேற்பச் செய்தனராயின், அதனை அவர் தில்லைக்குக் கொண்டு சென்று தில்லை வாழந்தணர் தம் அவையில் அரங்கேற்றுதலே செயற்பாலது. அன்றி, அதனை அவர் வைணவ சமயக் கொள்கைக் கேற்பச் செய்து முடித்தனராயின், அதனை அவர் திருவரங்கத்திற்கு எடுத்துச் சென்று திருமாலடியார் இடையில் அரங்கேற்றுதலே செயற்பாலது. மன்னர்பிரான் கட்டளயாதோ?


அரசன்: அறிவான் மிக்க சான்றோர்காள்! அமைச்சர் நம்பிப்பிள்ளை கூறுவது எமக்கும் பொருத்தமாகவே காணப்படுகின்றது. ஆசியர் கம்பர் இயற்றிய ராமவதார காப்பியத்தின் கடவுள் வணக்கச் செய்யுட்களே உங்களுல் எவராலும் ஏற்றுக்கொள்ளப் படாமையினை நான் வருத்தத்துடன் நேரே கண்டேன் ; ஆகையால் இந்நூலின் மற்றை பெரும்பகுதி முழுவதும் உங்களால் ஏற்றுக்கொள்ளப்படுமோ என ஐயுறுகின்றோம் . சமண் சாக்கிய புலவர்கள் எவருமே இதனை ஏற்கமாட்டார்கள் என்பது வெளிப்படை. . எஞ்சிய சைவராதல் வைணவராதல் இதனைஏற்பார்களானால் இதனை அவ்விருவருள் ஒரு குழுவினரிடையே அரங்கேற்றுவித்தலே நன்று. ஆசிரியரது கருத்து யாதோ.?

கம்பர் : மன்னர் பிரான் திருவுள்ளங்கருதுமாறே யான் இந்நூலை முதலில் தில்லை மாநகருக்கு எடுத்துச் சென்று அங்கே தில்லைவாழந்தணரிடையில் இதனை அரங்கேற்ற முயல்வேன் அவரதற்கு இடம் தாராராயின் பின்னர் திருவரங்கத்திற்குச் சென்று திருமாலடியார் நாப்பண் இதனை திண்ணமாய் அரங்கேற்றி வருவேன். யான் இன்னமொரு கிழமையில் இங்கிருந்து புறப்படுவதற்று அரசர் பெரும! விடையளித்தருளல் வேண்டும்.

அரசன்: அவ்வாரே செய்தருள்க புலவர் பிரானே! நம்பிப்பிள்ளே ! ஆசிரியர் தில்லையும் திருவரங்கத்திற்கும் சென்று தமது நூலை அரங்கேற்றி வரும் வரையும் அவருக்காகுஞ்செலவுகளுக்கு சிறிதும் குறைவின்றி நிரம்பப் பொன்னும் ஏவலாட்களும் ஊர்திமுதலியவைகளும் கொடுத்து வழி அனுப்பிவையுங்கள்.(எழுந்து புலவரணைவரையும் வணங்கி ) மாலை 9 நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. நுங்களை நெடுந்நேரம் இன்று இவ்வகையில் நிறுத்தி வைத்துவிட்டோம். பிழைபொருத்தருள்க.

(எல்லொருஞ் செல்ல விடைதர)

புலவர் அனைவரும் :- மன்னர் பெருமா! பன்னெடுங்காலம் ஆழிசூலகில் வாழியர் பெரிதே

( அமைச்சரைத்தவிர மற்யையோர் அனைவரும் போய்விடுகின்றனர்)
வரும் .........13

Friday, April 28, 2006

அம்பிகாபதி அமராவதி - 11 -

வைணவப் புலவர்: இதுவும் எமது வைணவமதக் கொள்கை யன்று. இது சைவமதக் கொள்கை. இராமபிரான் திருமாலினும் மிக்க கடவுள் தன்மை உடையன் என்பதே எமது கோட்பாடு.

கம்பர்: இராமனது தெய்வத் தன்மையைப் பற்றிக் கூறிய செய்யுட்களைப் படித்துக் காட்டினால் அவரது கருத்தின் மெய்மை தெற்றென விளங்கும்.

{கம்பர் தமது நூலின் இடையிடையே இராமனது தெய்வத் தன்மையினை நுவன்ற பாடல்களைப் படித்து முடிவாக}

"முளரிமேல் வைகுவான் முருகற் றந்தஅத்

தளிரியல் பாகத்தான் தடக்கை ஆழியான்

அளவிஒன் றாவரே யன்றி ஐயமில்

கிளவியர் தனித்தனி கிடைப்ப ரோதுணை"

என்னுஞ் செய்யுளைப் படித்தனர்

வைணவப் பலவர்: இது தான் எமது மதம்! மும்மூர்த்திகளுந் தனித் தனியே எம் இராமபிரானுக்கு ஒப்பாக மாட்டா ரென்பதே எமது கொள்ளை, இவ்விடத்தே கம்பர் சொல்லியது முற்றிலும் பொருத்தமே.

(அரசன், அமைச்சர், சைவப்புலவர் முகங்சிவக்கின்றனர்)

கூத்தர்: (சீற்றத்துடன் எழுந்து) ஈதென்ன பேதைமை! "பிறவா யாக்கைப் பெரியோன்" என இளங்கோவடிகளாலும், "தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடீ"என மாணிக்கவாசகராலும், "தந்தையாரோடு தாயிலர் தம்மையே, சிந்தியா எழுவார் வினை தீர்ப்பாரல், எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ" எனத் திருஞானசம்பந்தராலும் வழுத்தப்பட்ட முழுமுதற்கடவுளான சிவபொருமான் எங்கே, கோசலையின் வயிற்றில் கருவாய்த் தங்கிப் பிறந்து தன்னரசையும் மனைவியையும் இழந்து. அரக்கரொடு பலநாள் வருந்திப் போராடி, அகத்தியர் ஈந்த சிவபிரான் வில்லாலுங் கணையாலும் அவரை மடித்துப், பின் தன் மனையாளையும் அரசையும் பெற்று வைகி, நாட்செல்லச் சரயு நதியில் வீழ்ந்து மாண்ட இராமன் எங்கே! இத்தகைய இராமனை மும்மூர்தியினுஞ் சிறந்தவன் என்றலினும் மிக்கதொரு மடமையுண்டோ? சொல்லுமின் புலவீர்காள்!

வைணவப் புலவர்: கொள்கைகளைப் பற்றிப் பேசுங்கால்'பேதைமை, 'மடமை' முதலான வசைச் சொற்களை வழங்கி எதிர்ப் பக்கத்தாரை இகழ்தல் முறையன்று

கூத்தர்: "அரனதிகன் உலகளந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவிலார்க்கு" என்றுரைத்த விடத்து, 'அறிவிலார்' என்னும் வசைச்சொல்லால் இருபக்கத் தாரையுங் கம்பர் இகழ்ந்து பேசியிருக்கின்றனரன்றோ? யாம் வழங்கிய அவ்விரண்டு சொற்களும் மெய்யறிவில்லாமையைத் தெரிவிக்கின்றதாகலின், அவ்வாறு சொல்லியதை ஒரு குற்றமாக எடுத்தலாகாது.

அரசன்: எடுத்த பொருளை விடுத்துச் சொற்குற்றம் பார்த்தல் நன்றன்று, உண்மை காணும் வேட்கையுடன் நிகழ்த்தப்படும் இவ்வழக்கில் தவறி வசைச் சொற்கள் சில வரினும் அவற்றை நீங்கள் பாராட்டலாகாது. ஆயினும, "யாகாவா ராயினும் நாகாக்க" என்னுந் தெய்வத் திருக்குறளை நுங்களெல்லார்க்கும் பணிவுடன் நினைப் பூட்டுகிறேன். அது நிற்க, 'மும்மூர்த்திகளுந் தனித்தனியே இராமனுக்கு ஒப்பாகார்' என்ற கம்பருரை பொருந்துமா? என வினாவியதற்கு இன்னும் விடைவந்திலது.

அம்பிகா: மன்னர்பிரான் கட்டளைப்படியே அதற்கு யான் அறிந்த விடை கூறுவேன்," முளரிமேல் வைகுவான்" எனுஞ் செய்யுளின் கருத்துப் பொருள் என் தந்தையார் கருத்தன்று; அது சுக்கிரீவன் கருத்து. இராவணனாற் கவர்ந்து கொள்ளப்பட்ட சீதை தன் மெய்யினின்றுங் கழற்றி யெறிந்த அணிகலன்களைச் சுக்கிரீவன் கொணர்ந்து இராமனுக்குக் காட்ட, அவன் அவற்றைக் கண்டு சீதையின் பிரிவை யாற்றானாய் மிக நைந்து உணர்வற்றுக் கீழே விழ, அவனை சுக்கிரீவன் தாங்கி, அவன் அப்பெருந் துயர் நீங்கி மனக்கிளர்ச்சி கொள்ளுமாறு, 'மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்தால்உனக்கு ஒப்பாவரேயன்றி அவர் தனித்தனியே நினக்கு ஒப்பாகார்' என உயர்வு நவிற்சியால் கூறிய புனைந்துரையை என் தந்தையார் கருத்தாகத் துணிதல் தக்க தன்று.

(கூத்தரும் அரசனும் மகிழ்சிக் குறி காட்டுகின்றனர்)

சைவப்புலவர்: சுக்கிரீவன் கருத்தாக அவ்வாறு கம்பர் கூறுதலுங் குற்றமேயாம். மூம்மூர்த்திகளுந் தனித்தனியே இராமனுக்கு ஒப்பாகார் என்பதற்கு மேற்கோள் பண்டைச் சான்றோர் அருளிச்செய்த தமிழ் நூல்களிலாதல், வடமொழி நூல்களிலாதல் இருக்கின்றனதா? மேற்கோள் காட்டாக்கால் அக்கூற்றுக் குற்றமேயாகும்.

சமணப்புலவர்: (எழுந்து) காணப்பட்ட இவ்வுலகமும் ,இவ்வுலகத்தியங்கும் உயிர்களுமே நம் பொறி புலன்களாலும் அறிவாலும் அறியப்படுகின்றன. இவற்றின் மேம்பட்ட கடவுள் என்றொரு பொருள் உண்டென்பது எவ்வாற்றாலனுந் துணியப் படவில்லை. அங்ஙமிருக்கக் கடவுளென்றொரு பொருள் உண்டென்றும், அக்கடவுளும் ஒன்றாயிராமல். சிவன், மாயன், நான்முகன் என மூவராய் உளரென்றும், மாயனே இராமனாய்ப் பிறக்க அவ்விராமன் மாயனிலும் ஏனையிருவரிலும் ஏற்றம் மிக்கவனென்றும் புகல்வன வெல்லாஞ் சிற்றறிவினாரை ஏமாற்றி, அவர் தம்முட் கலாம் விளைத்து, அவ்வாற்றால் தம் பிழைப்புக்கு வழிசெய்து கொண்டவர் கட்டி வைத்த குருட்டுக் கதைகளே யன்றி வேறல்ல. அத்தகைய பொய்யை ஒரு காப்பியமாகப் பாடிய கம்பரது செயல், ஒரு முயற்கொம்பின் மேலேறிச் சென்று வான்வெளியில் ஒரு மாளிகை கட்டுவதற்கே ஒப்பாயிருக்கின்றது!


சாக்கியப் புலவர்: கடவுளென்றொரு பொருள் உண்டெனட்பது எவ்வாற்றானும் அறியப்படாமை போலவே, உயிர் என்று ஒரு பொருள் உண்டென்பதும் எவ்வாற்றானும் அறியபடவில்லை. இவ்விரண்டின் வேறாக உலகம் என்பதொரு பொருளும் உண்மையில் இல்லை.இல்லாதவற்றைஉள்ளனவாகக் கனவின்கண் உணரும் மயக்கவுணர்வே கடவுளும், உயிரும், உலகமும் உண்டென நனவின் கண்ணும் மயங்கியுணர்கின்றது. இம்மயக்கந் தீர்ந்தவழி அம்மூன்று பொருளும் இல்லையா என்பதே முடிவு. இல்பொருளான கடவுள் இல்பொருளான இராமன் என்னும் ஓர் உயிராகப் பிறந்த தென்றலும், பிறந்து இல் பொருளான இவ்வுலகின்கண் இல் பொருளான இராவணனைக் கொன்ற தென்றலும், எல்லாம் முழுப்பொய். மெலும் வான்மீகி இராமாயணத்திற்கு முற்பட்ட எமது 'தசரத ஜாதகம்' இராமன் தென்னாடு போந்ததாக ஏதும் நுவலவில்லை. அவன் கங்கையாற்றங்கரையிலேயே தன் தங்கை சீதையுடன் சில காலந் தங்கியிருந்து; தன் தந்தை இறந்தபின் தனது நகர்க்கு மீண்டேகிச் சீதையை மணந்துகொண்டு அரசு செலுத்தினான் என்னுமளவே கூறுகின்றது. ஆகவே இராமாயணங் கூறும் நிகழச்சிகள் அத்தனையும் முழுப்பொய்யும் புரட்டுமேயாகும்; அதனாற் பொய்யான இராமனைப் பொய்யான மும்மூர்திகளுந் தனித்தனியே ஒவ்வாரென்பதும் பொய்; (இதைக் கோட்டு அவையினர் எல்லாரும் நகைக்கின்றனர்)
வரும் ....12

Wednesday, April 26, 2006

அம்பிகாபதி அமராவதி - 10 -

அம்பி: அற்றேல் வைணவமத ஆழ்வார்களில் ஏனையோரைவிட மெய்யுணர்வில் மிக்கவருங் காலத்தால் முற்பட்டவருமான பொய்கையாழ்வாரும் பேயாழ்வாரும், "பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகந் தாய நெடுமாலும்--என்றும் இருவரங்கத் தால்திரிவரேனும் ஒருவன் ஒரவரங்கத் தென்றும் உளன்" என்றும், "தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும் சூழ் அரவும் பொன்ஞாணுந் தோன்றுமால்--சூழுந் திரண்டருவி பாயுந் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து"
என்றும் முறையே பாடிச் சிவபெருமானையுந் திருமாலையும் உயர்வு தாழ்வு கருதாது ஒத்த நிலையில் ஓருருவில் வைத்துக் கூறியிருக்கின்றனராதலால், அது வைணவமதக் கொள்கை என்பது பொருந்தாது. (அரசனம் அமைச்சனம் அம்பிகாபதியின் விடையை வியந்து மகிழ்கின்றனர்)

சைவசமயப் புலவர்: தீவடிவினனான சிவபிரானுக்கு நீர் வடிவினனான திருமால் ஒரு தேவியேயெனச் சைவ சமயாசிரியர் நால்வரும் அருளிச் செய்திருத்தலால், அதனையே முதலாழ்வார் இருவருந் தழீஇக் கூறினர். அதனால், அது வைணவத்திற்கே உரிய கொள்கையாதல் எங்கனம்,? இம் முதற் பெருங் கொள்கையில் வேறாகாத போது, வைணவத்தைப் பிறிதொரு மதமாக வைத்துரைத்தல் இசையுமா?

வைணவப் புலவர்: முதலாழ்வார் இருவர்க்கும் பின் வந்த நம்மாழ்வார் முதலானவர்கள் கைக்கொண்ட கொள்கையே எம்மனோர்க்குரிய உண்மை வைணவமாகும். அதனை விடுத்துச், சைவ சமயச் சார்பில் நின்று முதலாழ்வார் பாடியருளிய திருப்பாட்டுகளை எடுத்டதுக் காட்டி அம்பிகாபதியார் கூறிய விடை எம்மனோர்க்கு உன்பாடாகாது.

அம்பி: பண்டைக்காலத்தே, அதாவது இற்றைக்கு ஆயிரத்தி இருநூறாண்டு கட்கு முற்பட்ட காலத்தே சைவம் என்றும் வைணவம் என்றும் இரு வேறு மதங்கள் இருந்தமைக்குத் தினையளவு சான்றுதானும் இல்லை. எல்லாரும் "நீலமேனி வாலிழை பாகத் தொருவனையே" வணங்கியும் வாழ்த்தியும் வழிபட்டும் வந்தனர். சைவசமய ஆசிரியரும், முதலாழ்வார் இருவரும் அம்மெய்ந் நெறியிற் கடைப் பிடியாய் நின்றே நம்மனோர்க்கு முழுமுதற் கடவுளுண்மையினை அறிவுறுத்தினர். அவர்க்குப் பிற்காலத்தில் வந்தவர்களே மதவெறி பிடித்துத் திருமாலையுயர்த்திச் சிவபெருமானைத் தாழ்த்தி, தம் புன்செயலுக்கேற்ற புராண கதைகளைப் பொய்யாகப் புனைந்து கட்டி மதவேற்றுமையுண்டாக்கிப் பிறவிப்பயனைத் தாமும் இழந்து பிறரும் இழக்கும்படி செய்துவிட்டனர்! இவ்வுண்மையினையே என் தந்தையாரும் இவ்விராமாவதார காவியத்தின் கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலத்தில்,
"
அரனதிகன் உலகறந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவிலார்க்குப், பரகதிசென்றடை வரிய பரிசே போல்" என்று விளக்கடமாக நன்கெடுத்துப் பாடியிருக்கின்றார். மேலும, "நம்மாழ்வார் சிவபிரானை இழிவாக விடுத்துத் திருமாலையே உயர்வாகப் பிடித்துப் பாடிய கொள்கையினர்" உன்மையன்று; அவர்,
"
பூத்தண் துழாய்முடியாய் புனைகொன்றையஞ் செஞ்சடையாய்"
என்றும்,
"
என மலைமகள் கூறன்றன்னை. . . எயில் முன்றெரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ"
என்றும்,
"
முனியே நான்முகனே முக்கண் அப்பா"

என்றுஞ் சிவபொருமானைப் படலவிடங்களில் அன்புதுளும்ப வழுத்திக் கடைப்படியாக நின்ற பாட்டில்,

"
அவாவறச் சூழ் அரியை அயனை அரனைஅலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்"

என்று முடித்துக் கூறியும் இருக்கின்றார்.

சைவசமயப் புலவர்: அவ்வாறு எனில் கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு 'இராமாவதாரம்' எனப் பெயர் வைத்த தென்னை?.

அம்பி: இந்நிலவுலகில் தீயவர் தொகையுந் தீமையும் மிகுந்து. நல்லவர் குழுவும் நன்மையும் அலைவுற்றுக் குன்றுகின்ற காலத்தே, எல்லாம் வல்ல இறைவன் தன்னருட் செயலுக்குத் தக்கார்பால் நின்று தீயாரைத் துடைத்து நல்லரைப் புரப்பான். ஆதலால், அரக்கரின் கொடுமை பெருகி அறவோரின் பெருமை அருகிய பண்டை நாளில் இறைவன் இராமபிரானைப் பிறப்பித்து அவன் பால் முனைந்து நின்று அரக்கரை அழித்து அறவோரை ஓம்பினான். கட்புலனாகத இறைவன் செயல் கட்புலனாய்ப் பிறந்த இராமபிரான் என்னுந் தக்கோன்பால் நின்று அவனை இயக்கித் தன் நோக்கத்தினை முடித்தது. ஆகவே, தக்கோனான இராமன் பிறப்பினையும் அதனால் உலகத்திற்கு விளைந்த நன்மையினையுங் கூறுதலின் இக்காப்பியத்திற்கு 'இராமாவதாரம்' எனப் பெயர் தந்தனர் என் தந்தையார்.
வரும்.....11

அம்பிகாபதி அமராவதி - 9 -

அம்பிகாபதி: (உடனே எழுந்து) 'புலவர் ' என்னும் சொல்லுக்கு 'கடவுளர்' என்றும் ஒரு பொருள் உண்டு. அதனால் கடவுள் வணக்கஞ் சொல்லவே, புலவர் வணக்கமும் அதில் அடங்கும் (எல்லாறும் அம்பிகாபதியின் நுண்ணறிவினை வியக்கின்றனர்)



கோமாளி: அப்படியானா, சாமிங்களா ! எனக்கொரு வரங்கொடுங்க ! எம்பொண்டாட்டிக்கு ஆம்பிளைப் பிள்ளை மேலே ஆசை , எனக்குப் பொம்பள பிள்ளே மேலேதான் ஆசை எனக்கொரு பொம்பள பிள்ளைக்கி வரம் கொடுங்க .

புலவர்:( குலுங்கி சிரித்து) அப்படியே தந்தோம்



அரசன்: ஏடா, துத்தி! வாயை மூடு சிவ பூசையில் கரடியைவிட்டோட்டுதல் போல் புலவர்கள் பேச்சினிடையே ஏதும் உளராதே!

(அவன் வாயை மூடிக் கொண்டு அச்சமுற்றவன் போல் நிற்க கண்டு எல்லோரும் நகைக்கின்றனர்)

கூத்தர்: முதற் செய்யுளிற் போந்த முழுமுதற் கடவுள் வணக்கத்திற்குப் பின்னிரண்டு செய்யுளிற் போந்த திருமால் வணக்கம் மாறாயிருக்கின்றதன்றோ? என்ற வினாவுக்கு விடை தரல் வேண்டும்.(என்று கம்பரை நோக்கிக் கூற கம்பர் தம் மகனை நோக்கல்)

அம்பிகாபதி: காணவுங் கருதவும் படாத முழுமுதற் கடவுளை வாழ்த்துவது முகமனே யாதலால், சத்துவ குணத்தின் பாற்பட்டுக் காணவுங் கருதவும் எளிதாக நம்மனோர்க்குத் திருமால் வடிவிற்றோன்றிய அம்முதற் கடவுளைப் பின்னிரண்டு செய்யுட்களில் வணங்கியது மாறுகோளாகாது.

சைவசமய்ப் புலவர்: அற்றேல் , முழுமுதற் கடவுளை வாழ்த்திய முதற் செய்யுள் முகமனேயன்றி உண்மையன்றென்பது. அம்பிகாபதியாரால் ஒப்புக் கொள்ளப் பட்டது. அது நிற்க, முக்குணங்களுங் கடந்த முழுமுதல் அம் முக்குணங்களுள் ஒன்றான சத்துவத்தின் பாற்பட்டுத் தன் பெருமை குன்றிச் சிறுமை எய்திய தெனல் அதன் இறைமைக்கு இழுக்காம். அங்ஙனஞ் சிறுமைபட்ட திருமாலை முதல்வராக இசைப்பது யாங்ஙனம் பொருந்தும்?


அம்பி: இந்நிலவுலகத்தைவிட எத்தனையே கோடி மடங்கு பெரிதான பகலவன் மண்டிலம் இங்கிருந்து நோக்கும் நம்மனோர் ஊனக்கண்களுக்கு ஒரு சிறு சிவந்த வட்டம் போல்தோன்றினும், அது தன்னளவில் மிகப் பெரிய தோர் உலகமேயாதல் போல, நம்மனோர் பொருட்டுத் திருமால் வடிவிற் சிறுத்துத் தோன்றும் முதல்வன் தன்னிலையிற் பெருத்த இயல்பினனேயாம்: அதனால் அஃதவன் இறைமைக்கு இழுக்காகாது.

சைவசமயப் புலவர்: அற்றேல் சத்துவ குணத்தில் தோன்றிய முதல்வன், தமோ குணத்தில் தோன்றிய முதல்வனான உருத்திரனிலுஞ் சிறந்தவன் என்பதுபடக் கம்பர் இரண்டாவது செய்யுளில், "மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர்" எனக் கூறியது பிழையன்றோ?.

அம்பி: தந்தையாயினான் ஒருவன் தன் மக்களுள் தனக்கு நேரே பயன்படும் ஒரு புதல்வனை உயர்த்தி மற்றைப் புதல்வர்களைத் தாழ்த்திப் பேசுதல் போலத் திருமால் வடிவில் நேரே போந்து இந் நிலவுலகினர்க்குதவி புரிந்த இறைவனை உயர்த்தி அங்ஙனம் நேர்நின்றுதவி புரியாது எட்டா நிலைமையனாய் உருத்திரன் என நின்ற இறைவனை மிகுத்தப் பேசாது விட்டனர்; ஆதலால் அஃதொரு குற்றமாகாது.

வைணவப் புலவர்: இஃது எங்கள் வைணவ மதக் கொள்கையன்று எங்கள் கொள்கைப்படி திருமாலே முதற் கடவுள்; மற்றை நான் முகன் உருத்திரன் என்னும் இருவருந் திருமாலினுந் தாழ்ந்த சிறு தேவர்களே ஆவர்.(அரசனுங் கூத்தருஞ் சைவப்புலவருஞ் சினக்குறியுடையராகின்றனர்)
வரும்......10

Monday, April 24, 2006

அம்பிகாபதி அமராவதி - 8 -

இரண்டாம் நிகழ்ச்சி: முதற் காட்சி



களம்: சோழன் அரண்மனையிற் புலவர் மண்டபம்

நேரம்: பிற்பகல்



அரசன்: (அமைச்சர் நம்பிப் பிள்ளையை நோக்கி) ஐய! இப்பங்குனி திங்களிலேயே வெயிலின் கடுமை மிகுதியாக இருக்கின்றது! பகல் 25 நாளிகை ஆனமையால் இப்போது தான் வெயிலின் கடுமை தனிந்து வருகின்றது புழுக்கத்தை மாற்றி தென்றல் காற்று மெல்லென வீசுகின்றது . சண்பகம் சந்தனம் முல்லை மெளவல் முதலான மலர்களின் நறுமணத்தில் அளைந்து வருதுலால் இம் மலையக்கால் நம் உடம்புக்கும் உயிருகு:ம் எவ்வளவு ஆறுதலையும் கிளர்ச்சியையும் தறுகின்றது! பாருங்கள்

அமைச்சர்: ஆம் பெருமானே! கொழுந் தமிழ் நறவினை பருகும் புலவர் பெருமக்கள் குலாம் ஒருங்கு கூடியிருந்து அகப்பொருள் புறப்பொருள்களை நுணுகி ஆராய்ந்தின்புறுவதற்கு ஏற்றதோரிடமாக இம் மண்டபம் அமைக்கப்பட்டிருப்பது தான் பெரிதும் பாராட்டற்பாலது! இதனை சூழ்ந்துள்ள இளமரக்காவில் மணங்கமழ் மரஞ்செடி கொடிகள் அழகுற அமைந்து பசுந்தலை நெருங்கி பல நிறப்பூக்கல் உடையவாய் பகலவன் வெப்பந்தோன்றாவாறு தண்ணிழல் பயந்து நிற்கின்றன; இம் மரத்தொகுதிகளின் இடை யிடையே பளிங்கை உருக்கி நிறைத்து விட்டார் போல் குளிர்ந்த நீர் நிரம்பிய வாவிகள் அமைந்து விளங்குகின்றன; அவ்வாவிகளில் அகன்ற இலைகளின் ஊடே ஊடே அல்லியும் தாமரையும் முறுக்கவிழ்ந்த மலரினவாய்த் திகழ அம்மலர்களிலும் இலைகளிலும் பெரியவுஞ் சிறியவுமான புள்ளினங்கள் பறந்து பறந்தமர்கின்றன. மரக்கோடுகளிலும் பூங்கொடிகளிலும் இருந்து குயில்கள் கூவுகின்றன. நாகணவாய் பாடுகின்றன; இவையெல்லாம் நம் உணர்வினை இயற்கையழகின் வயப்படுத்தி நமதுள்ளத்தினை எத்துணைப் பெருங்களிப்பின்கண் தோய்த்து விடுகின்றன.

அரசர்: ஆம் நம்பிப்பிள்ளை. என் முன்னோரான சோழவேந்தர்கள் தமிழமிழ்தை ஆரப்பருகித் தெவிட்டா அவ்வின்பத்தில் வாழ்நாள் முழுதும் திளைத்தவர்கள் . ஆதலால், அகத்தே தாம் துய்த்த அப்பேரின்ப பெருக்கை புறத்தே இவ்வமைப்பிலும் பெருக விட்டு களிகூற்தற்கே இப்புலவர் மண்டபத்தையும் இதனைச் சூழ்ந்த இளமரக்காவையம் வழிவழியே இவ்வளவு அழகுடையவாகச் சீர்செய்த வந்தார்கள். ! இன்னேரத்திற்கு தாங்கள் நமது புலவர்பேரவையினை கூட்ட ஒழுங்கு செய்தது எவ்வளவு நல்லதாய் யிருக்கின்றது!

அமைச்சர்: இப்போது நடைபெறப் போகுங் கம்பராமாயண அரங்கேற்றத்தால் நம்புலவர் குழுவிற் பெரும் போராட்டம் நேரும். ஆதலால் அது தணிதற்கு இரவில் நெடுநேரஞ் செல்லுமெனக் கண்டே, எப்போதும் போல் மாலைப் பொழுதில் இவ்வவையினைக் கூட்டாமல் முன்னதாக இப் பிற்பகலிலேயே இதனைக் கூட்ட ஒழுங்கு செய்தேன் மன்னா!

அரசன்: அது நன்றே ஆனாலும் கம்பர் இராமாயாணத்தை இங்கு அரங்கேற்றாமல் செய்ய கூத்த முதலியாரிடம் கூறிவிட்டேன்.

அமைச்சர்: நானும் முதலியாரிடம் நெடு நேரம் பேசினோம். கம்பர் கல்வியிற் பெரிய புலவர் பெருமானாய் இருத்தலுடன், முன்னே தங்கட்கும் பின்னே இளவரசிக்கும் ஆசானாகவும் இருக்கிறார். பேர் உழைப்பிற் பாடிய அப்பெருங்காப்பியத்தை அவர் தமது புலவர் கழகத்திற் கொணர்ந்து அரங்கேற்ற இடம் கொடுக்க வில்லையேல் அவர்கு நம்மாட்டு மிக்க மனவருத்தம் உண்டாகும். அதுவேயுமன்றிக் கூத்தர்க்கும் அவர்க்கும் புறந்தோன்றாப் பகைமை நீண்ட காலமாய் வேரூன்றியிருக்கின்றது; அதனால் அவரது சொற்கேட்டே நடுவின்றித் தாங்கள் இராமாயாணத்தை அரங்கேற்ற மறுத்தீர்களென்னும் பழிச் சொல்லும் உண்டாம்.

அரசன்: (பதைத்து)அற்றேல், அவர் நூலை அரங்கேற்றுவதற்கு ஒழுங்கு செய்து விட்டீர்கள் போலும்.

அமைச்சர்: இல்லை அரசே, இன்றுடன் அரங்கேற்றம் முடிந்து போகும். நம் புலவர்கள் இடுஞ் சொற்போரால் உடனே அது முடிவுக்கு வருதலைக் காண்பீர்கள்!

கோமாளி: மாராசா, புலவர் சண்டையை நிறுத்தாதிங்க, ஊருச் சண்டே கண்ணுக்குக் குளிர்ச்சி.



அரசன்: (நகைத்து) ஏடா துத்தி, புலவர் சண்டை கண்ணுக்கு மட்டுமன்று ; அஃது அறிவுக்கும் குளிர்ச்சிதான்

{
ஒட்டக்கூத்தர், கம்பர், அம்பிகாபதி, மற்றும் புலவர்கள் பிறரும் வருகின்றனர்}

அரசன்:(இருக்கையினின்றும் எழுந்து) புலவர் பெருமான்கட்கு வணக்கம். எல்லீரும் இருக்கையில் அமர்ந்தருள்க!
(
எல்லோரும் அமர்கின்றனர்)


அமைச்சர்:(உடனே எழுந்து நின்று) வேந்தர் பெருமானுக்கும், இப்பேரவையில் அமர்ந்திருக்கும் நல்லிசைப் புலவர்க்கும் பிறர்க்கும் எனது வணக்கம். அறிவான் ஆன்ற சான்றோர்களே! நம் மன்னர் பெருமான் நிறுவியிருக்கும் இப் புலவர் பேரவையிற் பெருந்தமிழ்ப் புலவரும் பாவலருமான உங்களாலும் மற்றவர்களாலும் மிகப்பாராட்டப்படுங் கம்பநாடர் "இராமாயணம்" என்னும் பெருங்காப்பியத்தைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடி இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததொன்றேயாம். அதனை, அவர் இங்கே அரங்கேற்றக் கொணர்ந்திருக்கின்றனர். முதுமையிலும், முதுதமிழ்ப் புலமையிலும் இப் புலவர் பேரவைக்குத் தலைமையாசிரியராய் அமர்ந்திருக்குங் கூத்த முதலியார் இதைப்பற்றித் தமது கருத்தைத் தெரிவிக்குமாறு நம் வேந்தர் பெருமான் விரும்புகின்றார்கள்.

கூத்தர்: அரசர் ஏறே! அமைச்சர் பெருந்தகையே! அருந்தமிழ் வல்ல பெருந்தமிழ்ப் புலவர்களே! கல்வியிற் சிறந்த கம்பர் இயற்றியிருக்கும் "இராமாவதாரம்" என்னும் பெருங்காப்பியத்தை நாம் எல்லாருங் கேட்டு மகிழவேண்டுவதே செயற்பாலது. இங்கமர்ந்திருக்குங் கலைவாணரின் கருத்து யாதோ?

மீதம் ...9

Sunday, April 23, 2006

அம்பிகாபதி அமராவதி - 6 -

அரசி: ஆற்றாமையிலும் ஓர் இன்பம் இருக்கின்றது பெரும! முதன்மையாய்க் காதலன்பில் பிணிப்புண்டவர் பட்ட துன்பங்களைக் கண்டுங் கேட்டும் நாம் அழும்போதும் ஓர் இன்பத்தை அடைகின்றோம் ; அல்லாக்கால் அந்நிகழ்ச்சிகளைக் காண்பதிலும் கேட்பதிலும் நமக்கு விருப்பம் உண்டாகாதன்றோ? தங்கள் கருத்து யாதோ?

அரசன்: அது மெய்யே, என்றாலுங் கணவனும் மனைவியுமாய் வாழ்பவர் தம்முள் அன்புடையராயினும் இலாராயினும், ஒருவரையொருவர் இழக்க நேருங்கால் துயருற்றுப் புலம்புவது இயற்கைதானே! அதைக் காணும் பிறரும் அந்நேரத்தில் ஆற்றாராய்க் கண்கள்அழுதலும் இயற்கைதானே அங்கயற்கண்ணி! அதைச் சிறப்பித்துப் பேசுவதில் என்ன ஏற்றம் இருக்கிறது?

அரசி: அங்ஙனமன்று பெருமாளே காதலன்புடையார் தம் பிரிவில் உண்டாகும் ஆற்றாமை அவருயிர் உடம்பில் தங்கமாட்டாத ஓர் ஏக்கத்தினை உண்டாக்கி விடுகின்றது, அதனால் அவருள் ஒருவர் மாய்ந்தக்கால் மற்றவரும் ஏங்கி உயிர் துறந்துவிடுகின்றனர். வேறு வலிய காரணத்தால் உயிர் பிழைத்திருப்பினும், நடைப்பிணமாகவோ, இவ்வுலகியலிற் பற்றற்று இறைவன்பால் உருகி ஒடுங்கியபடியாகவோ வாழ்நாளைக் கழிக்கின்றனர். காதலரைப்பற்றி மாணிக்கவாசகப் பெருமாள் திருவாய் மலர்ந்தருளியது இப்போதென் நினைவுக்கு வருகின்றது.

அரசன்: அஃதியாது?

அரசி: காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்
ஆகத்துள் ஓருயிர் கண்டனம் யாம் இன்றி யாவையுமாம்
மேகத் தொருவன் இரும்பொழில் அம்பலவன் மலையில்
தோகைக்குந் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்பதுன்பங்களே"

இவ்வருமைத் திருப்பாட்டிற்கு இலக்கியங் கண்ணகியும் மாதவியுமாதலால், அவர் தம் நிகழ்ச்சிகளை நேரே கண்டுங் கேட்டும் இளங்கோவடிகள் இயற்றியருளிய சிலப்பதிகாரத்தால் நன்கறிகின்றனம் அரசே!

அரசன்: கண்ணகியும் மாதவியுங் கோவலனைத் தம்முமயிராகக்கருதி அன்பு பாராட்டினராயின். அவன் இறந்தமை கேட்டவுடனே அவ்விருவரும் ஏன் இறந்து படவில்லை?.

அரசி: பின்நிகழ்ச்சிகளைப் பெருமான் மறந்துவிட்டீர்கள் போலும் கோவலனைக் கள்வனெனப் பிழைத்துணர்ந்து பாண்டியன் அவனைக் கொலை செய்வித்தமையின், தன் கணவற்கு அக்குற்றம் அணுகாமைப் பொருட்டும், பாண்டியன் முறை தவறிச் செய்த குற்றத்தை அவற்கு எடுத்துக் காட்டி அவனை பழிக்குப்பழி வாங்குதற் பொருட்டுங் கொலைக்களத்திற் பட்ட தன் கணவனைக் காணுதற் பொருட்டுமே கண்ணகி சிலநாள் உயிர் தாங்கியிருந்தது, தன் நோக்கம் முடிந்தபின் தன்னுயிர் நீத்துத் தன் கணவனை நுண்ணுடம்பிற் கண்டு அவனுடன் கூடி வானுலகு புகுந்தனள். மாதவியோ தான் ,ஈன்ற அருமை மகள் மணிமேகலையின் பொருட்டுச் சிறிது காலம் உயிர் தாங்கிப் பின்னர் துறவியாகி உயிர் நீங்கினள். ஆசிரியர் இளங்கோவடிகள் இந் நிகழ்ச்சிகளைத் தெளிவாக எடுத்துச் சொலல்லியிருக்கின்றனரே!

அரசன்: இவைகளை முற்றுமே மறந்து போனேன் கண்மணி!

அமரா: அப்பா, அரசியல் நிகழ்சிகளில் கருத்து ஈடுபட்டு இருத்தலால் இவைகளை மறந்து விட்டது இயற்கைதானே அம்மா!

அரசி: அது இயற்கைதான் கண்மணி ! நாம் எந்நேரமும் மிகுதியாய்க் கல்வியிலேயே நினைவு வைத்திருப்பதால் இவை நம் நினைவை விட்டகலவில்லை. மேலும் நான் சிலப்பதிகாரம் , மணிமேகலை என்னும் நூல்களைப் பயின்றபின், கண்ணகி, மாதவி, மணிமேகலை என்னும் பெண்மணிகளின் பேரன்புங் கற்பும் என் நினைவிற் கன்மேலெழுத்துப்போற் பதிந்து, தூண்டா மணிவிளக்குப் போற் சுடர்ந்து திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அரசன்: என்ன அங்கயற்கண்ணி! ! அம்மாதர்களின் அன்பை அவ்வளவு மிகுதியாகச் சிறப்பித்துப் பேசுகின்றாய் மணஞ்செய்து கொண்ட பின் தங்கணவரிடத்தில் அன்பில்லா தொழுகும் மாதரார் தாம் யார் உளர்?

அரசி: உறவினரால் பிணைக்கப்பட்ட மண மக்களிடத்துக் காதல் அன்பும் உண்மைக் கற்பொழுக்கமுந்தோன்றி நிலைத்தல் அரிதாகவே யிருக்கின்றது. இத்தகைய சேர்க்கையில் பலர் தம் உறவினரின் கட்டுப்பாட்டுக்காகவே ஒருவர் மீதொருவர் அன்பு பாராட்டுகின்றனர்; மற்றும் பலர் கடமைக்ககாகவே வாழ்கை செலுத்துகின்றனர்; இன்னும் பலர் ,பிறர் கூறும் பழிக்கஞ்சி ஒருமித்து இருக்கின்றனர்; மேலும் பலர் முன்னமே தம்மால் விருப்பப்பட்டார் பால் உள்ளன்பும், தமக்குள் வெளியன்பும் உடையராய்க் கரந்தொழுகுகின்றனர்; இங்ஙன மெல்லாமலன்றி, மணந்து கொண்டபின் ஒருவரையொருவர் உயிராய்க் கருதியொழுகுங் கணவன் மனைவியரும் இல்லாமற் போகவில்லை.

அரசன்: அங்ஙனமாயின், அங்கயற்கண்ணி நீ என் மேல் எவ்வகையான அன்பு பூண்டு நடக்கின்றனையோ, {அரசி நாணத்தால் வாளாதிருக்க}

அமராவதி: (சிரிப்புடன்) அப்பா, அம்மாவும் நீங்களுந்தாங் காதலன்பு மிக்கவர்கள் ஆயிற்றே. உங்கள் உள்ளம் அறிந்ததொன்றை வினவினால் அம்மா எங்ஙனம் விடை சொல்லும்?


அரசி: அம்மா ! உண்மையைச் சொல்லி விடுகின்றேன். (அரசன் திடுக்கிடுகின்றான்) யான் உன் தந்தையாரைப் பாராமலும் இவரது உள்ளன்பை யான் அறியாமலும் இருக்கையில் , என் பெற்றோர்கள் இவர் தம் பெற்றோர்க்கு இணங்கி என்னை இவர்க்கே மணஞ்செய்து கொடுக்க உறுதி செய்த விட்டார்கள். அதனால், அப்போது என் உள்ளத்தில் உன்டான நடுக்கத்தைச் சிவபிரான் ஒருவரே அறிவர். எனது காதலன்புக்கு ஏற்றவர் அல்லாத ஒருவரை யான் மணக்கும் படி நேர்ந்தால் யான் என் செய்வதென்று மிகவும் கலங்கிநின்றேன்.
மணம் முடிந்த பிறகோ யான் செய்த நல்வினைப் பயத்தால் இவர்பால் எனக்குக் காதலன்பே நிகழ்ந்து எனது நடுக்கத்தைத் தீர்த்தது. நின் தந்தையாரும் இதுவரையிற் பேரன்பு டையராகவே என்பால் நடந்து வருகின்றனர். அஃது யான் பெற்ற பெறுதற்கரிய பேறன்றோ?.


அரசன்: செல்வி, அமராவதி ! நின் அன்னை 'உண்மையைச் சொல்லி விடுகின்றேன் ' என்றதைக் கேட்டவுடன் என் நெஞ்சந் திடுக்கிட்டது. எங்கே இவள் காதலன்பில்லா மனையாளாயினளோ என அஞ்சினேன்; ஆனாற் பேரன்பினள் என்பதை நெடுக அறிந்தே வருகின்றேன். நின் அன்னையின் பேரழகையுங் குணநலங் , கலைநலங்களையும் யான் கண்டது முதல், என் உயிர் ஒரு புதிய இன்ப உணர்ச்சி வாய்ந்ததாய், இவளை என் உயிராகவே கருதி வருகின்றது.

அமரா: (கை கொட்டிச் சிரித்து கொண்டு) அம்மா அம்மா, இப்போது அப்பாவுக்குக் காதலன்பு இன்னது தான் என்று தெரிந்துவிட்டது.

அரசன்: அங்ஙனமன்று கண்மணி யான் பழைய தமிழ் இலக்கியங்களைப் பயின்ற காலத்திலேயே காதலன்பைப் பற்றி அறிவேன். ஆனால், அது புலவர்களால் புனைந்து கட்டப்பட்டுச் சொல்லளவாய்க் கருதப்படுவதேயன்றி மெய்யாகவே நிகழ்வதல்ல என்றே எண்ணி வந்தேன். இப்போது நின் அன்னையின் உண்மை மொழிகளையும் கண்ணகி மாதவியின் அன்பின் திறத்தையும் நினைத்துப் பார்க்குங்கால், நம்மை யறியாமலே நமதுள்ளத்தில் நிகழும் அத்தகைய தோர் அன்பு இருக்கத்தான் வேண்டுமென் றுணர்கின்றேன்.

அரசி: பெரும என்ன என் மகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றீர்களே?

அரசன்: அங்கயற்கண்ணி நின் அழகையெல்லாம் வடித்தெடுத்துத் திருத்திய பொற்பாவைபோல் அமராவதி திகழ்கின்றாள் இவட்கு ஏற்ற கணவன் வாய்க்க வேண்டுமே! இவட்கு அவன்பால் காதலன்பு நிகழ வேண்டுமே ! என்பதைப் பற்றித்தான் கவலைப்படுகின்றேன்..

அரசி: அதைப்பற்றி கவலைப் படவேண்டாம். அமராவதியின் மனப்பாங்கறிந்தே மணம் முடிப்போம்.

அரசர்: அஃது எங்ஙனம் முடியும்? நாமோ மிக உயர்ந்த அரசவாழ்க்கையில் இருக்கிறோம். நம்மையொத்த சேர பாண்டிய அரச குலத்திற் பிறந்த அரசிளைஞரிலிருந்தன்றோ நாம் நம் புதல்விக்கு மணமகனைத் தேர்நதெடுத்து மணம் புரிதல்வேண்டும்? தேர்ந் தெடுக்கப் படுபவன்பால் இவட்குக் காதலன்பு நிகழாவிட்டாலும், நமது மேல்நிலையை யறிந்து இவள் அவன்பால் பேரன்பு பாராட்க் கடமைப் பட்டிருக்கின்றன ளன்றோ?

அரசி: பெரும! என் புன்சொல்லையும் நன்சொல்லா நீங்கள் செவியேற் றருளல் வேண்டும் . கணவன் மனைவியர்க்குள் உண்டாகும் அன்பு பிறர் குழைத்து ஊட்டுவதன்று அஃதவர்கியற்கையாவுண்டாவது..

தேம்போதி ஆம்பல் திகழ்மதி முன்னோ
வேங்கதிர் முன்னோ விரிந்து வாய் விளங்கும்?
கொழுஞ்சுவை மாவும் மாவுறை குயிலுங்
குழைமுகந் தோற்றிக் கூவிக் களிப்பது
பொதியத் தென்றலின் முன்னோ? அன்றிப்
புதுமை சிதைக்கும் புயற்கால் முன்னோ?
தோகை மாமயில் ஓகையில் ஆல்வது
கருமுகில் முன்னோ? கதிரவன் மெம்மையிற்
பால் நுரை யென்னப் பாக்கும்
வால்நிற மாசியின் முன்னோ? மன்னா!

அரசன்: நன்கு நுவன்றனை நங்காய் ! நீபுகல்
அல்லியும் மாவும் மெல்லிய குயிலும்
நீல மஞ்ஞையும் மாந்தரைப் போலப்
பகுத்தறி வுடைய பிறவியோ வகுத்தி! அதனால்,
தேரும் அறிவின் வழிவைத் தன்பை
ஆரச் செலுத்தல் அணங்களை யார்க்கு
மான வாழ்கையென மதித்தறி நீயே

அரசி: அன்பின் வழியது உயிர் நிலை என்ற
வள்ளுவர் வாய்மொழி பொய்யோ வள்ளால் !
உயிர்கு உயிராய் நடக்கும் அன்பின்
வழியே அறிவும் ஒழுகவ தல்லது
மாறி இயல்வதை (எங்கும்) மகாரிலும் கண்டிலம்
பிள்ளைப் பருவத்துப் பள்ளியிற் கொள்ளுஞ்
சிறார்தங் கேண்மை சிறந்ததோ? வெறாத
நெஞ்சின ராகி எஞ்சா தியாவுந்
தேர்ந்து பார்த்து நேர்ந்த கேண்மை
மைந்தரில் பார்த்து நேர்ந்த கேண்மை
மைந்தரில் மகளிரிற் சிறந்ததோ? பகரீர்

அரசன்: அன்பும் அறனும் அறிவினை முன்நிறீஇப்
பின்பு செல்லா வாயின் மண்ணோர்
அல்லற் கடலிற் பட்டுப் பல்லோர்
பழிக்க மாய்வது திண்ணம்; அதனால்
அருமைப் புதல்வி அமரா வதியுங்
காத லன்பைக் கடைக் கண் நிறுவிநம்
மேதகு நிலையை அறிவாள் அளந்தொரு
மன்னவன் மகளை மணந்து
நன்னய வாழ்கை நடத்தவே கடவள்.

அமரா: பொல்லாத இவ்வுலகிற் பொருந்தாத வாழ்க்கையினில்
ஒல்லா மனத்தோ டொருங்கிருந்து நைவதினுங்
கல்லாத நூலெல்லாங் கற்றறிந்து கண்ணுதலின்
சொல்லார் திருவடிகள் தொழுதிருப்பேன் தோன்றலே!

அரசன்: அம்மா, அமராவதி எவ்வளவுதான் கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலுங் கருத்தைச் செலுத்தியிருந்தாலும், நீ திருமணமின்றி யிருத்தல் நம்குலத்திற்கு அடாது. இப்போது நீ பதினாறாண்டுக்கு மேற்பட்ட மடந்தைப் பருவத்தை அடைந்துவிட்டாய், ( தன் மனைவியை நோக்கி ) நம் பாண்டிய மன்னன் மகனும் நின் தம்பியுமான குலசேகர பாண்டியனை வருவித்துச் சிறிது காலம் நம் புதல்வியுடன் அவன் பழகுமாறு செய்வோம்.

அரசி: பொருமாள் திருவுளப்படியே
(
பணியாள் வர)
அரசன்: ஏடா , துத்தி ! உணவெடுத்தற்கு அழைக்க வந்தனையோ?

கோமாளி: ஆமா , மகராசா ! பத்து நாழி ஆனதுகூடதெரியாமல் இருக்கின்றீர்கள் உங்களுக்கு போச்சு ஆப்பிட்டா சோறுகூட வேணாம் (அரசியை நோக்கி ) சின்னம்மா, பெரியம்மா இந்த ராசாகூடா ரொம்பப் பேச்சு வச்சுக்கர்தீங்க உங்களக்கூட சோறு தின்ன விட மாட்டார்)


அரசன்: என்னடா துத்தி எந்நேரமுஞ் சோற்றையே கட்டிக்கொண்டு அழுகின்றனையே!

கோமாளி: ஆமா, மாராசா , நான் சோறுதின்னுகிட்டே ரொம்ப நாள் இருப்பேன். சோறு தின்னாமே ஒரு நாளாவது இருக்க முடியுமா?



அரசன்: உணவருந்தி பலநாள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை உணவருந்தாமல் சிலநாளாயினும் இருப்பது தான் வியப்பு.

கோமாளி: நம்மாள் அது முடியாது . நமக்கு மூனுவேலுயையும் சட்டதிட்டமாகச் சாப்பிடணும் என்னுடம்மைப் பார்த்தீர்களா? ( தன் தடித்த உடம்பைத் திருப்பித்திருப்பிக் காட்ட மூவரும் சிரிக்கின்றனர்) நீங்க வேளாவேலைக்குச் சாப்பிடாமே எஃகு குச்சிபோல் இளைச்சு இருக்கிறீங்கோ வாங்க போகலாம் பேச்செ வளத்தாதிங்க..

(அரசன் அவனுடன் செல்ல, அரசியரும் அரசனை வணங்கி தம் உணவரைக்கு சென்று விட்டனர்)

தொடரும்......7

Friday, April 21, 2006

அம்பிகாபதி அமராவதி - 5 -

முதல் நிகழ்ச்சி : இரண்டாம் காட்சி

களம்: அரண்மனையிற் கன்னி மாடம்

நேரம்: அதுவே

அரசனும் அரசியும்: (வாயில் காப்போளை நோக்கி )ஏடி தத்தே நாங்கள் வருவதை முன்னாடி சென்று அமராதிக்கு த் தெரிவி ( அவள்இருவரையம் வணங்கி விரைகின்றாள்)

(அரசனும் அரசியும் கன்னிமாடத்தினுட் செல்ல அமராவதி எதிரே வந்து)

அமராவதி: அம்மா, அப்பா வாருங்கள் வணக்கம் .

அரசனரசி: அம்பலத்தான் அருளால் எல்லா நலன்களும் பெற்று நீடு இனிது வாழ்க!
(
இருவரும் புதழ்வியுன் அமர்கின்றனர்)


அரசன்: (புன்சிறிப்புடன் ) குழந்தாய், நீ நின் அன்னையிடத்துத்தான் மிக்க அன்புடையை. எங்களை வணங்கியபோது நீ முதலில நின் அன்னையைத்தானே குறிப்பிட்டாய்.

அமராவதி: ஆம் அப்பா. ஆறறிவுடைய மக்களிலும் தாழ்ந்த ஆன் (ஆவின் - பசு)கண்றும் அம்மா என்று தாயைத்தானே அழைக்கின்றன. மக்களின் குழந்தைகளும் முதற்கண் அம்மா என்றுதானே அழைக்கின்றன. பிள்ளைமைப் பருவமுதல் இயற்கையாய் உண்டான அப்பழக்கம் முதற்கண் அம்மா என்று இப்போதும் என்னை அழைக்கச் செய்தது. அதனால் யான் உங்கள் பாற் குறைந்த அன்புடையேனென்று கூறலாகுமோ?

அரசன்: (மகளின் நெற்றிமேல் முத்தமிட்டு) அருமைச் செல்வி, நின்அறிவு மொழியை மெச்சினேன். நாங்கள் வரும்பொது யாழொலி கேட்டது; நீ யாழ்ப் பயிற்சி செய்தது கொண்டிருந்தனை போலும்.

அமரா: ஆம் , அப்பா யான் ஆசிரியர் கம்பர் பாற் சிலப்பதிகாரம் பாடங் கேட்டு வருவதுதான் உங்கட்குத் தெரியுமே அக்காப்பியத்தின் இடையிடையே அமைக்கப் பட்டிருக்கும் இனிய வரிப்பாட்டுகளை யாழிலிட்டுப் பாடி இசைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.

அரசன்: கண்மணி, நீ இயற்றமிழோடு இசைத் தமிழ் நாடகத் தமிழ்களுங்கருத்தாய்ப் பயின்று வருவதுதான் என்னுள்ளத்திற்குப் பெருங் களிப்பினைத் தருகின்றது.

அரசி: கல்வி விளக்கே , உன் தந்தையார்க்கு மட்டு மன்று , எனக்கும் நின் முத்தமிழ்ப் பயிற்சி எவ்வளவோ பேரு வகையினைப் பயக்கின்றது ! பார் ! நின் தந்தையின் முன்னோரான கரிகாற் சோழ வேந்தரின் மகள் ஆதிமந்தி என்னும் கற்பரசி முத்தமிழ்ப் புலமை முழுதும் வாய்ந்து திகழ்ந்தமை அகநானூற்றில் காணப்படும் அவருடைய பாக்களால் நன்கறிகின்றோம் அல்லவா? அங்ஙனமே நம் சேர சோழ பாண்டியமரபில் வந்த பெண்மணிகளெல்லாரும் முத்தமிழ்ப் புலமையில் மிகச்சிறந்தே வளங்கினர்.

அரசன்: நல்லது , சிலப்பதிகாரத்தில் இப்போது நீ பயிலும் பகுதியிலிருந்து சில வரிப்பாட்டுகளை எடுத்து யாழில் இசைத்துப்பாடு.

அமராவதி:அங்ஙனமே செய்கின்றேன் அப்பா (யாழை கையில் எடுத்து வணங்கி அதனை இயக்கி பாடுகின்றாள் )

“காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும் ஊதுலைதோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சாயின் ஏதிலார் சொன்ன தெவன் வாழி யோதோழீஇ" “நண்பகற் போதே நடுங்கு நோய் கைம்மிகும் அன்பனைக் காணா தலவுமென் நெஞ்சென்றே அன்பனைக் காணா தலவுமென் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீஇ" “தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீஇ" {அமராவதி கண்ணீர் சிந்தியபடியாய்ப் பாட அரசியுங் கண்கலங்கலுற்றாள்}

அரசன்: (இருவரையும் நோக்கி) !கண்ணகி ஆற்றாது பாடிய இவ்விரங்கற் பாக்கள் உங்கள் இருவரையும் கலங்கவைத்து விட்டது.

அரசி: ஆம், பெரும அமராவதி பாடியது கண்ணகியே நேரிருந்து ஆற்றாது பாடியதைப் போலிருந்தது. கணவன் கொலையுண்ட செய்தி தெரியா திருக்கையிலேயே அவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்த தென்று நெஞ்சம் ஐயுற்று இங்ஙனம் அழுதனளாயின் அவன் இறந்த செய்திகேட்டபின் அவள் எவ்வளவு துடி துடித்திருப்பபாளோ! ஐயோ! கண்ணகி கணவன்மேல் வைத்த காதலன்பு அளவிடற் பாலதாயில்லையே.

அரசன்: இவ்வரிப் பாட்டுகளை இயற்றிய இளங்கோவடிகள் இவை தம்மை எத்துணைத் திறமையாகப்பாடியிருக்கின்றார்.

அரசி: ஆம், பெரும கண்ணகியின் காதலுயிர் துடி துடித்த நிலையில் இளங்கோவடிகள் தாமுமிருந்து பாடினமையாலன்றோ அவை அவ்வளவு உருக்கம் வாய்ந் தனவாயிருக்கின்றன! அம்மா , அமராவதி கணவன் இறந்த செய்தி கேட்டபின் கண்ணகி துயருற்ற துயரப் பாடல்களையும் பாடு.

(அமராவதி மறுபடியும் யாழை இயக்க பாடுகின்றாள்)

“இன்புறு தங்கணவர் இடரெரி யகம் மூழ்கத் துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் மன்பதை யலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ"
அரசன்: (நெஞ்சழிந்து ) அம்மா துயர் மிகுந்த இப்பாட்டுப் போதும் , நிறுத்திவிடு.

மீதம் 6

Thursday, April 20, 2006

அம்பிகாபதி அமராவதி - 4 -

அரசி: ஆம், பெரும! கூத்தர் கல்வியிலும் , சிவநேயத்திலும் , நற்குணங்களிலும் சிறந்தவரேயாயினும் அவர் நந்தமிழ்ப் புலவர்கள் பால் அழுக்காறு மிக உடையர்; மேலுந் தாம் இளமை காலத்தில் தமக் காகாத புலவர்களைக் காளிக்கு வெட்டிப் பலியிட்டாரென்பதை நான் செவியுற்ற கால முதல் அவர்பால் எனக்கு பயமுண்டு,
அத்தகையவர் புலமையிற் சிறந்த கம்பர்பால் மனஎரிச்சலின்றி இருப்பாரா? கம்பர் நமது புலவர் பேரவையில் இராமாயணத்தை அரங்கேற்றக் கூத்தர் விடாரென்பது தீர்மானந்தான்.

அரசன்: அற்றேல் உனக்கும் எனக்கும் இருந்த ஒரு பெருங்கவலை தீர்ந்ததன்றோ? ஆனாலுங் கம்பர் மனம் புழுங்குமே என்பதனை நினைக்க நினைக்க ஒருபால் வருத்தமும் உண்டாகின்றது.

அரசி: அதற்கு நாம் என்செய்வது! கம்பர் நல்ல புலவர்தாம். காளி கோயிற் குருக்களாயிருந்து, அம்மைக்குஞ் சிவபெருமானுக்குத் தொண்டுசெய்து தாம் அரிதிற்பெற்ற மகனுக்கும் அம்பிகாபதி எனப் பெயர் வைத்துச் சைவ வுணர்ச்சி மிகுந்தவராயிருந்தும், அவர் இராமன் கதையைப் பாடியது ஓர் இழுக்கன்றோ?

அரசன்: கம்பர் அது பாடியதன் கருத்து யாதோ! ஒரு கால் இவ்வாறிருக்ககலாம் ; என் பாட்டனார் விக்கிரமசோழர் சிவத்தொணடிற் சிறந்தவரேனும் , வைணவ மதத்திலும் ஈடுபட்டார். அவருக்கு மிக நெருங்கிய தோழரான நம் சடையப்ப பிள்ளையும் , அவரது சேர்க்கையால் தாமும் வைணவத்தில் மிக ஈடுபட்டுச் "சரராமன்" என்று ஒரு பட்டப் பெயருந் தாமே சூடிக்கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு இசைந்தே அவராற் பெரிது பேணப்படுங் கம்பரும் இராமாயணம் படினார் என்று எண்ணுகின்றேன்.

அரசி: அது மெய்யாயிருக்கலாம். . நம் தமிழ்ப் புலவர்களில் பெரும்பாலார் தமக்குப் பொருளுதவி செய்வார் எவராயினும் அவரை வரைகடந்து உயர்த்திப் பாடிப் புகழ்ந்து விடுகின்றனர்; அவர் விரும்பியபடி யெல்லாந் தமது பெருமையும் கருதாது செய்கின்றனர்; மெய்யான நமது சைவசமயக் கொள்கையினையும் மெல்ல நழுவவிடுகின்றனர்! தம்போன்ற புலவர்க்குப் பிறர் பொருளுதவி செய்யக் கண்டாலும் வயிறெரிந்து விடுகின்றனர்! திருவள்ளுவரைப் போல் மானங்காத்தொழுகுவார் அரியராய் இருக்கின்றனரே!

அரசன்: ஆமாம், கம்பரும் இக்குற்றங்களுக்கு ஆளாகாதவர் அல்லர். என் முன்னோர் தந்தை வாணியன்தாதன் என்னும் பெரும்புலவர்க்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புச் செய்தபோது, கம்பர்ட அது கண்டு மனம்பொறாது அப்புலவர்மேல் வசைபாட, அப்புலவருங் கம்பர்மேற் சீற்றங் கொண்டு வசை பாடினர். இது புலவர்க்குள் இயற்கையாய் விட்டது! பிறரைத் திருத்தவல்ல கலைவாணரே தாந் திருந்தாராயின் அவரைத் திருத்தவல்லார் யார்! அது நிற்க, நம் அருந்தவப் புதல்வி அமராவதியை யான் இரண்டு மூன்று நாட்களாய்ப் பார்க்கவில்லை. கன்னி மாடத்திற்குச் சென்று அவளைப் பார்ப்போம் வா.
(
இருவரும் போகின்றனர்)

மீதம் 5

அம்பிகாபதி அமராவதி - 3 -

கூத்தர்: ஆம் ஆசிரியன் மனம் உவக்க செய்தல் மாணாக்கன் கடமையாயின் நின் முன்னோர் சிவத்தொண்டும் வழி வழிச் சிறக்க வேண்டும் அல்லவா? அமைச்சர் சேக்கழாரைக்கொண்டு திருத்தொண்டர் புராணம் பாடுவித்த அநபாய சோழனாம் நின் மூதாதையரின் கீர்த்தி இவ்வுலகெலாம் பரவி என்றும் மங்காது விளங்குவதொன்றன்றோ? சிவபிரானைக் குறைத்துக் குறும்பாய்ப் பேசிய இராமாநுசரை நின் பாட்டன் குலோத்துங்கன் இச்சோழநாட் டெல்லையில் இராதபடி செய்தும் தில்லை முன்றிலிலிருந்த திருமால் கோயிலை அவன் பெயர்தழித்ததும் அறியாதார் யார்? அத்தகைய சிவத்தொண்டன் கால் வழியிற் பிறந்த நீ அவற்குச் செய்யவேண்டிய கடமையினையும் நினைத்துப் பார்.

அரசன்: உண்மை, உண்மை புலவர் பிரானே, இப்போதியான் இருதலைக் கொள்ளி எறும்பாயினேன். ஒரு பக்கம் என் ஆசிரியரது உள்ளத்தை உவப்பிக்க வேண்டிய கடமை, மற்றொரு பக்கம் என் முன்னோரின் சிவத்தொண்டினைத் தொடர்ந்து நடத்தவேணடிய கடமை. இவ்விரண்டிலும் யான் வழுவுதல் ஆகாது. இதற்கொரு வழி தாங்களே கூற வேண்டும்.

கூத்தர்: நல்லது, நாளை காலையில் நின் அமைச்சர் நம்பிப்பிள்ளையுடன் சூழ்ந்து செய்ய வேண்டுவதின்ன தென்று தெரிவிக்கின்றேன். அதுபற்றிக் கவலை வேண்டாம் ; நீடு வாழ்மின்!
(
கூத்தர் செல்கிறார் )
(
அரசர் தனது மனைவியை நோக்கி)
அரசன்: அங்கயற் கண்ணி இப்போது நமக்கு கவலை நீங்கியது கம்பர் தமது இராமாயணத்தை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற விடார் கூத்தர் .

மீதம் ...4