Saturday, December 24, 2005

சென்னையில் இன்று அழகிகள் திருவிழா:

தென் இந்திய அழகி யார்? நடிகர் தனுஷ்- ரஞ்சிதா தேர்வு செய்கிறார்கள்

சென்னை, டிச. 24-
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் இன்று மாலை தென்இந்திய அழகி போட்டி நடக்கிறது.

இறுதி சுற்று போட்டிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களை சேர்ந்த 22 அழகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாலை 6.30 மணிக்கு பிரமாண்டமான மேடையில் அழகிகள் அணி வகுக்கிறார்கள்.

இந்த போட்டியை காண தென் இந்தியாவில் உள்ள ஏராளமான மாடலிங் அழகி களும் வந்து குவிந்துள் ளார்கள். இதனால் வர்த்தக மைய வளாகம் அழகிகள் திரு விழா கூடமாக களை கட்டி உள்ளது.

தெலுங்கு சினிமா நடிகை சவுமியா தமிழக அழகிகள் அஸ்வினி, மிருதுளா உள்பட போட்டியில் பங்கேற்கும் அழகிகளில் மிஸ் தென் இந்தியா பட்டத்துக்கான அழகியை நடுவர் குழுவினர் தேர்வு செய்கிறார்கள்.

நடிகர் தனுஷ், நடிகை ரஞ்சிதா, தெலுங்கு சினிமா நடிகர் ஜீவன், ஹாய் மதன், தயாரிப்பாளர் ஏ.வி.எம். பால சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு குழுவினராக இருக்கிறார்கள்.

பட்டம் பெறும் அழகிக்கு கிரீடம் சூட்டப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. 2 மற்றும் 3-வது இடத்தை பெறும் அழகிகளுக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

போட்டிக்கான ஏற்பாடுகளை மாயாமதன், பிரதீப் குமார், பாபுஜி உள்பட பலர் செய்து வருகிறார்கள்.
நன்றி மாலை மலர்

No comments: