Wednesday, July 20, 2005

விமானம் திருச்சியில் விழுந்து விட்டது

திருச்சியை கலக்கிய சிறு ரகவிமானம்


இன்று காலை சுமார் 10.10 மணியளவில் ஒரு ராணுவ பயிற்சி விமானம் திருச்சிராப்பள்ளி மெயின்காட்கேட் பக்கம் தாளப்பறந்து கட்டிடங்களை இடிப்பது போல பாண்டமங்கலம் வழியா லிங்கம் நகரில் கீழே விழுந்து விட்டதாக செய்தி திருச்சிராப்பள்ளி நகர் முழுதும் பரவி மக்கள், ஆம்புலன்ஸ், காவல்துறை, விமானபடை வாகனங்கள், தீயனைப்புபடை , வட்டாட்சியர் அனைவருமே விரைந்து பாண்டமங்கலம் லிங்க நகர் சென்று, அங்கு இல்லை குழுமனி என கூறியதைக் கேட்டு அங்கு சென்று அங்கும் இல்லாமல் அங்கிருந்து ஒவ்வொரு ஊராக சென்று பார்தனர் . கடைசியில் அந்த விமானம் பத்திரமாக கோவையில் இறங்கியதாக செய்தி. அந்த விமானம் பெரும் புகையை ஏற்படுத்தியதால் விழுந்து விட்டதாக மக்கள் கருதிவிட்டனர்.


எந்த ஒரு விமானமும் ஒரு எல்லையில் பறந்தால் அந்த எல்லை சம்பந்தபட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தெரியாதா? இது போல ஒரு குறும்புத்தனமாக செய்த அந்த விமானிமீது ஒழுங்கு நடவடிக்கைஉண்டா? (வேண்டுமென்றே செய்திருப்பின்).


என்னார்

No comments: