Thursday, July 14, 2005

பெருந்தலைவர் காமராஜ்



வீரத்தின் விளை நிலமாய் வெங்கொடுமை புள்ளடிமை

சோரத்தின் புலை வாழ்வை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாய்
பாரதத்தின் சுதந்திரத்தை பரித்திருந்த பரங்கியரை வேரதிர
பேர்த்தெரிய வந்த பெருங்காற்றாய் அன்னை திரு நிலத்தில்
அடியூன்றிய அன்னியர்களை தறித்தெடுக்கும் கோடாறியாய்
செத்துக்கிடந்த தமிழ் சிங்கேரு போல் எழுந்து பரங்கியரை பரக்கடித்த
கர்மவீரனாய் ஏமப் பெருந்துயிலில இருளில் கிடந்தோரை
துமப் புகைபோட்டு துயில் எழுப்பும் மந்திரமாய் பிறப்பெடுத்து வந்த
பெருமகனாம் பச்சைத்தமிழனாம் விருதுபட்டி வீரசிங்கமாம்
ஆதாயம் தேடாமல் ஆற்றிய தொண்டுக்குண்டோ ஈடு
ஏழைகளுகிலவச கல்வி கண்ட தலைவா
முதியோர் உதவித் தொகை கொடுத் தலைவா
மதியஉணவு படைத்த தலைவா
குறைந்த மூலதனத்தைக் கொண்டே பல நீர் தேக்கங்கொணர்ந்தனை நீ
நீர் இல்லாத திட்டங்களுக்கு பல கோடி அதில் சில கோடி கமிசன்
20
விழுக்காடு அன்று உனக்களிக்க கமிசனுக்கேஅதிலும் இரண்டு
இயந்திரங்களை பெற்ற நீரல்லவோ மாமனிதன்*
(
தமிழக முதல்வராயிருக்கும் போது வெளிநாட்டில் இயந்திரங்கள் வெங்டராமன் மூலமாக இயந்திரங்களை கொடுத்த கம்பெனி 20 சதவீதம் நாங்கள் கமிசன் கொடுப்போம் எனட்றனர்
அதை வெங்கட்ராமன் தலைவரிடம் கூற ,"அந்த தொகைக்கு மேலும் இரண்டு இயந்திரங்கள் வாங்கு" என்றார்.)

காமராஜர் பிறப்பு-1903,

குமாரசாமி சிவகாமி செல்வன்

முதல்வராக 13 ஆண்டுகள்

சிறைவாசம் 9 ஆண்டுகளுக்கு மேல்

இறப்பு காந்தி பிறந்த நாள் அன்று 1975



No comments: