Wednesday, February 22, 2006

நகைச்சுவை

அண்ணன் காளிமுத்து பாசத்தோடு கொடுத்த பாதை மாறிய பயணம் என்ற புத்தகத்தை ரகசியமாக படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோட்டத்திலே பாத்தி கட்டி என்ற பண்புள்ள பாடலை என்னையும் அறியாமல் பாடிவிட்டேன். இதை யாரோ ஒட்டுக்கேட்டு சொல்லக்கூடாத இடத்தில் சொல்லி விட்டார்கள்.
நான் கேட்கிறேன்... விரும்பிய தொகுதிகளையா கேட்டு விட்டேன்? விரும்பிய பாடலைத்தானே பாடினேன், இதற்கு ஏன் இவ்வளவு வருத்தம்?
பக்கத்திலேயே கனி இருக்கும்போது காயை ஏன் நாட வேண்டும் என்று பழைய வசனத்தை மெல்ல அசை போட்டேன். இது தவறா? கனி எது, காய் எது என்று தெரியாமல், புரியாமல், குழுப்பமான மனநிலையில் சொன்ன வார்த்தைகளை ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்?
அதற்குள் அவசரமாக ஏதேதோ அறிக்கைகளை விடுகிறார் அண்ணன். அதனால், தோட்டத்திலே பாத்தி கட்டி பாட்டும் மறந்து போய்,'பொடா' 'பொடா' புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு என்ற பாடல் அல்லவா நினைவுக்கு வந்துவிட்டது!
நாளொரு நவரசம், பொழுபொரு காமெடி என்ற ரீதியில் பாம்பரமாய் சுற்றிச் சுழல வேண்டியதுதான் என்று ஆறுதல் சொல்கிறது மனசாட்சி. அந்த திருப்தியிலேதான் இப்போது விடை பொறுகிறேன் அடுத்த காமெடி சீன் தயாரானதும் மீண்டும் சந்திக்க வருவேன், வணக்கம்
இன்று தினமலரில்

No comments: