Saturday, February 25, 2006

நடிகர் விஜய காந்த் 'சோ'

ஊழலை ஒழிக்க முடியாது விஜயகாந்த் கனவு காண்கிறார் -எழுத்தாளர் `சோ' கிண்டல்

நடிகர் விஜயகாந்த்தின் தேர்தல் பிரசாரம் குறித்து எழுத்தாளர் சோ தெரிவித்துள்ள கருத்து:-

விஜயகாந்த், இன்னும் கனவு காண்பதிலிருந்து வெளியில் வரவில்லை. `நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து விடுவேன்' என்கிறார். ஊழலை வேண்டுமானால் குறைக்கலாம். ஒழிக்க முடியாது. உலக அளவில் ஊழலை ஒழித்தவர்கள் எவரும் கிடையாது.

பெரிய பெரிய ஊழல்கள் எல்லாம் இப்பொழுது அமெரிக்காவிலேயே வெளியில் வந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனிலும் ஊழல் இருக்கிறது. ஊழல் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் லஞ்சம் வாங்குவதற்கு தண்டனை விதிக் கப்பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்கும் நீதிபதிக்கு, அதிகாரிகளுக்கு, இந்த அளவு தண்டனை என்று கூறப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றால், அந்தக் காலத்திலேயே லஞ்சம் இருக்கிறது என்று அர்த்தம். லஞ்சம் என்பது, தன்னுடைய உழைப்பினாலோ, திறமை யினாலோ அல்லாமல், திருட்டுத் தனம் மூலமாக சம்பாதித்து விட வேண்டும் என்கிற ஆசையினால் வந்தது.

இதை பெரிய அளவு குறைக்க வேண்டும். எப்பொழுது குறைக்க முடியும்ப பயத்தை உண்டாக்க வேண்டும். எல்லோரும் நேர்மையாக இருந்து விடமாட்டார்கள். சில பேர் நிச்சயமாக நேர்மையாக இருப்பார்கள். இந்த மாதிரி லஞ்சம் வாங்குவது அசிங்கம்.

கீழ்த்தரம் என்று சுயமரியாதை உள்ள சிலர் நினைப்பார்கள்.

இது பெரியார் சுயமரியாதை அல்ல, நிஜமான சுய மரியாதை. பெரியார் சுயமரியாதை இருப்பவர்கள் லஞ்சம் மூலம் சம்பாதித்ததை விட, வேறு யாரும் சம்பாதித்து விட முடியாது.

மாலை மலர்

எதையாவது சொல்லி ஆட்சிக்குக் வரவேண்டுமே. 'ஒரு ரூபாய்கு 3 படி உச்சம் ஒரு நிச்சயம் இல்லையோல் முக்கத்தில் நிறுத்தி சவுக்ககால் அடியுங்கள்' சொல்லவில்லையா? அப்படித்தான் இதுவும்

No comments: