Sunday, June 26, 2005

எமெர்ஜென்சிக்கு வயது 30 ஆண்டுகள்

இதற்கு மக்களிடம் நிரம்ப வரவேற்பு இருந்தது இது ஒரு பொற்காலம் பத்தரைமணிக்கு அலுவலகம் செல்பவர் 8 மணிக்கே சென்றார், அணைத்து அலுவலர்களுமே ஒரு வித பயத்துடன், தம்மையறியாமலே தப்பு நடந்திடுமோஎன இருந்தனர். வெடிகுண்டு வேந்தரெல்லாம் பின் அமைச்சர். அன்று அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தால் அது அநியாயமா?
பேரூந்தில் கூட பின்பக்கம் ஏறி முன்பக்கம் இறங்கினர். அப்படி பட்ட நான்னாளை இன்று நினைத்தப்பார்க்கின்றனர். அன்று லஞ்சம் கிடையாது.
எந்த கோப்பும் சரியான நேரத்திற்கு சென்றடையும். அன்னாளை இவர்கள் கருப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். வருத்தந்தான் தவறு செய்பவர்களுக்கு அது செய்முடியாததால் அதை எதிர்த்தனர். எழை பாமரமக்கள் வங்கிகளில் எளிமையாக கடண் பொற்றனர்.
அந்த அம்மையாரின் காலத்தில் தான் நீதிமன்றம் சுயமாக இருந்தது.
அன்னை இந்திராகாந்தி பெற்ற தண்டனை

தேர்தலில் பிரதிவாதி ஊழல் முறைகளை கையாண்டு இருக்கிறார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படுகிறது. அரசு இயந்திரங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியரான எஸ்பால் கபூர் தேர்தல் வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேற்சொன்ன 2குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவே பிரதிவாதி திருமதி. இந்திராகாந்தியை குற்றவாளியென தீர்மானித்து
ரேபர்லின் தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என தீர்மானிக்கிறது.

"சர்க்காரியா கமிஷன் விசாரணையை இந்திரா கொண்டு வந்ததால் வேறு வழியில்லாம்ல எமர்ஜென்சியை அவர் எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது சர்க்காரியா வந்ததிருக்காவிட்டால், கருணாநிதி எதிர்த்திருக்க மாட்டார்", என பத்திரிக்கைளார் சோ இன்றைய தினமலரில் கூறியுள்ளார்.மேலும் கூறுகிறார் ,” விடுதலைப் புலிகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததற்கு அரசில் இடம்பெறும் விடுதலைப் புலிகளின் ஆதரவளர்களும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும், சிலரும், தமிழகத்தில் இருக்கும்புலிகள் ஆதரவு நபர்களுமே காரணம் ஆகும். முஸ்லீம் தீவிரவாதம், புலிகள் நடமாட்டம், அரசு அதிகாரிகளிடம் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கின்மை அதிகரித்திருக்கும் இந்த காலகட்டத்தில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினால்தப்பில்லை", என்கிறார் ஆக இப்படிப்பட்ட சூல் நிலைகளில் மிசாவைக் கொணடுவர சிபாரிசு செய்யு சோ அவர்கள் கலந்து கொணட கூட்டம் மிசா கருப்பு தினக்கூட்டம்
அவரே, உண்மையை ஒத்துக்கொள்கிறார் எமர்ஜென்சியை தேவை என.

அதாவது எங்கோ ஒரு தவறு நடந்திருக்கலாம் அது அந்த சம்பந்த பட்ட நபரின் தவறு தானே தவிர அமைச்சரின் தவறு அல்ல!.
என்னைப் பொருத்தவரை பையனை கண்டிக்க, தண்டிக்க பெற்றோர். மாணவனை கண்டிக்க ஆசிரியர் சமூக விரோதிகளை கண்டிக்க , தண்டிக்க சட்டம், காவல்துறை. இதில் சேராதவரக்ள கண்டிக்க இப்படிப்பட்ட சட்டம் இந்தியாவிற்கு இன்று உடனடியாக தேவை! தேவை!! தேவை!!!

No comments: