Friday, June 24, 2005

கண்ணதாசன்

அம்மாயக் கண்ணனின் தாசா! எங்கள் நேசா!;
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை" என்றயே
இன்று உனக்குப் பிறந்த நாளா? யாருக்கொன்று என்றாலும்
கவிதை எழுதுவாயே இன்றுனக்கு யார்?
உண்மையை மறைக்காமல் பேசும் உத்தமனே
முத்தையா உன் கவிதைகள் முத்தய்யா
அனைத்தும் தமிழ் சொத்தையா உனைப் பற்றி கோடி நினைத்தேன்
குறைவே முடித்தேன் நீ சென்று இரண்டு மாமங்கள் ஆகியதா
நேற்று நடந்தது போல் இருக்கய்யா!
வந்தநாள் 24-06-27 சென்ற நாள் 17-10-81
வந்த இடம் சிறுகூடல் பட்டி சென்ற இடம் சிகாகோ

1 comment:

NambikkaiRAMA said...

கண்ணதாசனுக்கும் கவியால் வாழ்த்திய எண்ணார்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.கண்ணதாசன் கவிதையாக தற்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.