Sunday, June 05, 2005

விஜயாலய சோழன்

விஜ
பாம்பினிடமிருந்து
வல்லூறு காத்த மணிப்புறாதான் நாமங்கு!
வேளி
வல்லூறாய்ப் பல்லவரை எண்ணல் வலிவின்மை.
கொல்லென்றுகூறி எதிர்த்தல் அறிவின்மை.
புல்லுருவி போலே நாம் பல்லவஆல் பொந்தினிலே
மெல்ல வளர்ந்ததையே வீழ்த்தல் மதியுடைமை!
விஜ
வேளிரே! ஆண்டுமக்கு மேலேற மேலேற
வானில் மதிப்புக் குறைந்துகொண்டு போகிறதோ!
வீச்சுக்கத் திக்கு விழிஇமைக்கா வீரன்நான்.
சூழ்டச்சிக்கே கோழைநான், சொல்லுவதைக் கேளுங்கள்
சோணாட்டில் சூழ்ச்சி நரியிடத்திலே யிருந்தும்
நானோட்ட எண்ணி நலிகின்றேன். என்னிடத்தில்
சொல்லிவிட்டீர் நீர் இச்சொல்! சொன்ன ஆள் வேறென்றால்
பல்லிவால் போல்துடிக்கும் பாழ்நாக்கும் துண்டாகி!
வேளி
தங்கம் கதிர்காய்த்துச் சாய்ந்தாடும் நாட்டரசே!
சிங்கத்தைப் பார்த்துச் சிறுநரியாய் ஆகென்று
கூறுவேனோ?

No comments: