Sunday, November 13, 2005

திருவெறும்பூரில் காமராஜர்

ஒரு முறை திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது அதில் பெருந்தலைவர் காமராஜர் கலந்து கொண்டார். வந்து அரை மணிநேரம் ஆனது மற்றவர்கள் பேசினர் பாராளுமண்ற வேட்பாளர் எஸ்.பி.தங்கவேல் முத்துராஜா அவர்கள் போசுவார் என விழாத்தலைவர் கூறி உட்காரபோனார், என்ன நினைத்தாரோ காமராஜர் எழுந்தாதர், "முத்துராஜாவும் பேசவேண்டாம் ஒன்னும் பேசவேண்டாம் நா எங்கடுப்ப தீத்துத்துட்டுப்போறேன்"( இந்த சொல் முன்பக்கம் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்) என மைக்கின் முன்னிற்று, "நீங்க யாரும் கோவிச்சுக்கக் கூடாது நான் திருச்சினாப்பள்ளி போய் அங்கிருந்து ட்ரெய்ன் பிடித்து கொள்ளம் (கேரளா) அவசரமாக போக வேண்டும் திருச்னாபள்ளி போவதற்குள் இரண்டு ரயில்வே கேட் இருக்கு வருத்தப் படவேண்டாம் உங்கள் வாக்குகளை எஸ்.பி.முத்துராஜா வக்கில் அவர்களுக்கு போட்டு ஜெயிக்க வைத்து டெல்லிக்கு அனுப்பிவையுங்கள்." என சொல்லிவிட்டு சென்று விட்டார். எங்கு BHEL கொண்டு வந்தாரோ அதே இடத்தில்.
இதை நான் நேரிடையாக கேட்டது.
ஒரு முறை மாற்றுக் கட்சியினர் காமராஜருக்கு கல்யாணம் ஆகவில்லை குடும்பத்தப் பத்தி அவருக்கு என்ன தெரியும் என்றனர். அதற்கு காமராஜர் கலந்து கொண்ட கூடத்தில் இருவர்
ஒருவர்: ஏன்யா உங்க தலைவர் காமராஜருக்கு கல்யாணமேஆகல குடும்பத்திப் பத்தி அவருக்கு என்ன தெரியும்?
இரண்டாமவர்: ஏன்யா உங்க அண்ணாதுரைக்கு கலயாணஆயிடுச்சே ஒரு புழு பூச்சி உண்டா? என்று அவர் கேட்க
எழுந்தார் தலைவர் இருவர் சட்டையையும் பிடித்து ,"நீங்க ரொம்ப பேசீட்டிங்க உட்காருங்க." என அனுப்பிவிட்டார்.
இதை நான் படித்தது காமராஜர் வரலாற்றில்.

1 comment:

நல்லவன் said...

தமிழ் தமிழ் என்கிறவர்கள் எல்லாம் திருச்சிராப்பள்ளியை திருச்சி என்பர் ஆனால் காமராஜரோ திருச்சினாப்பள்ளி என்று சொல்லியிருக்கிறார். அவர் தான் உண்மையான தமிழர்