கொம்பன் என்றால் தலைவன், பலம் பொருந்தியவன், திறன்மிகுந்தவன்; இவர் கையில் ஒரு கொம்பு ,அதாவது குச்சி,தடி, கம்பு வைத்திருப்பார் அந்த கால வழக்கம்; அதாவது நாடாளும் மன்னருக்கு செங்கோல் கிராமதலைவனுக்கு அம்பலக்கோல். பேச்சு வாக்கில் நீ என்ன கொம்பு உள்ளவனோ? என்பதை கொம்பனோ! என்பது தான் மாறி கொம்பு முளைத்தவனோ ஆனது .
இதைத்தான் சனிபகவானுக்கு தனது நாவை அடகுவைத்த நமது நடிகை சுகாசினியம்மையார் கூறியது. ஒரு நிகழ்சியில் 100 நபர்கள் வந்தால் அதில் 10 நபர்கையில் கொம்பிருக்கும் அந்த பத்துபேர்தான் அவர்களது தலைவன் என அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்த பத்து நபர் எடுக்கும் முடிவை அந்த கிராமமே ஏற்றுக் கொள்ளும் இந்த வழக்கம் பழங்காலந்தொட்டு வழிவழியாக தொடர்ந்து வருகிறது இன்றும் கூட சில கிராமங்களில் உண்டு.
அந்த கோல் பெரும்பாலும் கருப்பாக இருக்கும் அது எப்படி கருப்பானது . விறகு அடுப்புவைத்து சமையல் செய்யும் அடுப்படிக்கு மேல் வைத்திருப்பார்கள் அந்த புகை பட்டு பட்டு அது கருப்பாகிவிடும்.
2 comments:
"கொம்பன்" நல்ல விளக்கம்.
நன்றி ராமா
Post a Comment