Wednesday, June 29, 2005

கள்ளர்களின் பட்டப்பெயர்கள்

  1. அங்கராயர்
  2. அசையாத்துரையர்
  3. அச்சுதப்பண்டாரம்
  4. அடைக்கப்பட்டார்
  5. அடைவளைந்தார்
  6. அண்ணுண்டார்
  7. அணணூத்திப்பிரியர்
  8. அதிகமான்
  9. அத்திரியர்
  10. அம்மாலைத்தேவர்
  11. அயிரப்பிரியர்
  12. அரசாண்டார்
  13. அரசுக்குழைத்தார்
  14. அரியபிள்ளை
  15. அருமைநாட்டார்
  16. அருவாத்தலைவர்
  17. அருவாநாட்டார்
  18. அலங்காரப்பிரியர்
  19. அன்னவாசல் ராயர்
  20. ஆச்சராயர்
  21. ஆட்சிப்பிரியர்
  22. ஆதாழியார்
  23. ஆதித்தநெடுவாண்டார்
  24. ஆரம்பூண்டார்
  25. ஆர்சுற்றியார்
  26. ஆலத்தொண்டமார்
  27. ஆலம்பிரியர்
  28. ஆவத்தியார்
  29. ஆளற்பிரியர்
  30. ஆள்காட்டியார்
  31. இடங்காப்பிறந்தார்
  32. இராங்கிப்பீலியர் (இராங்கியர்)
  33. இராயமுண்டார்
  34. இராரஜாப்பிரியர்
  35. இராஜாளியார்
  36. இருங்கள்ளர்
  37. ஈங்கொண்டார்
  38. ஈழத்தரையர்
  39. ஈழமுண்டார்
  40. உத்தமுண்டார்
  41. உய்யக்கொண்டார்
  42. உலகங்காத்தார்
  43. உலககுடையார்
  44. உழுவாண்டார்
  45. உறந்தைராயர்
  46. ஊமத்தரையர்
  47. ஊரத்தியார்
  48. ஊரான்பீலியர்
  49. எண்ணுட்டுப்பிரியர்
  50. எத்திரியப்பிரியர்
  51. எத்தொண்டார்
  52. ஒண்டிப்புலியார்
  53. ஒளிராயர்
  54. ஓசையார்
  55. ஓட்டம்பிடிக்கியார்
  56. ஓந்தரையர் (ஓமாந்தரையர்)
  57. ஓயாம்பிலியர்
  58. ஓனாயர்
  59. கக்கொடையார்
  60. கங்கநாடர்
  61. கச்சியராயர்
  62. கடம்பராயர்
  63. கடாத்தலைவர்(கடாரத்தலைவர்)
  64. கடாரந்தாங்கியார்
  65. கட்டவெட்டியார்
  66. கண்டபிள்ளை
  67. கண்டசில்லி
  68. கண்டியார்
  69. கதவாடியார்
  70. கரடியார்(கருடியார்)
  71. கரமுண்டார்
  72. கரம்பையார்
  73. கருப்பட்டியார்
  74. கருப்பபூண்டார்
  75. கரும்பூரார்
  76. கலிங்கராயர்
  77. கலியனார்
  78. கவுண்டர்(கண்டர்)
  79. களத்துவென்றார்
  80. களந்தண்டார்
  81. களப்பாடியார்
  82. களப்பிலார்
  83. களமுடையார்
  84. களாவர்
  85. கனகராயர்
  86. கன்னப்பட்டையார்
  87. கஸ்தூரிமுண்டார்
  88. கஸ்தூரியர்
  89. காங்கெயர்
  90. காசிநாடார்
  91. காடவராயர்
  92. காடுவெட்டி
  93. காரைக்காச்சியார்
  94. காலாக்குடியர்
  95. காவாலி
  96. காவெட்டார்
  97. களாக்கடையார்(கிளாக்கர்)
  98. கிளிகண்டார்
  99. கிளியிநார்
  100. கீருடையார்
  101. கீரைக்கட்டையார்
  102. கீவுடையார்
  103. குங்கிலியர்
  104. குச்சராயர்
  105. குடிக்கமுண்டார்
  106. குடிபாலர்
  107. குமரையண்டார்
  108. குறுக்கண்டார்
  109. கூசார்
  110. கூராயர்
  111. கூழாக்கியார்
  112. கையராயர்
  113. கொங்கணர்
  114. கொங்ககரையர்
  115. கொடுப்புலியார்
  116. கொடும்புராயர்(கொடுமளூர் ராயர்)
  117. கொட்டையாண்டார்(கோட்டையாண்டார்)
  118. கொத்ப்பிரார் (கொற்றப்பிரியர்)
  119. கொல்லத்தரையர்
  120. கொழுந்தராயர்
  121. கொன்றையர்
  122. கொன்னமுண்டார்
  123. கோதண்டப்புலியர்
  124. கோபாலர்
  125. கோழயர்
  126. கோறர்
  127. சக்கராயர்
  128. சங்கரதேவர்(சங்கரர்)
  129. சங்காத்தியார்
  130. சமையர்
  131. சம்பிரத்தேவர்
  132. சர்க்கரை
  133. சர்க்கரையப்ப நாடாள்வார்
  134. சவுட்டியார்
  135. சவுளியார்
  136. சன்னாடர்
  137. சாணர் (சாணூரர்)
  138. சாதகர்
  139. சாமுத்திரியர்
  140. சாளுவர்
  141. சிங்கப்பீலியர்(சிங்கப்புலியர்)
  142. சிங்காரிக்கர்
  143. சிட்டாச்சியார்(சிற்றாட்சியார்)
  144. சிந்துராயர்
  145. சிறுநாட்டுராயர்
  146. சிறுமாடர்
  147. சீனத்தரையர்
  148. சுக்கிரர்
  149. சண்டையார்
  150. சுந்தர்
  151. சுரக்குடியார்
  152. சுரைப்பிடுங்கியார்
  153. செம்படையார்
  154. செம்பியமுத்தரசர்
  155. செம்மைகொண்டார்
  156. செம்மைக்காரர்
  157. செயங்கொண்டார்
  158. செனவராயர்(சன்னவராயர்,சனகராயர்)
  159. சென்னண்டார்
  160. சேண்டாப்பிரியர்
  161. சேதிராயர்
  162. சேப்பிழார்
  163. சேர்வைகாரர்
  164. சேலைக்கொண்டார்
  165. சேனாபதியார்
  166. சேனைகொண்டார்
  167. சேனைநாடார்
  168. சோணாருண்டார்
  169. சோணையர்
  170. சோதிரையர்
  171. சோமணநாயக்கர்
  172. சோமரசர்
  173. சோழகர்
  174. சோழங்கதேவர்
  175. சோழங்கநாடார்
  176. சோழங்கர்
  177. சோழதரையர்
  178. சோழப்பிரியர்
  179. சோழன்கிளையார்
  180. ஞானிசேவகர்
  181. தஞ்சைராயர்
  182. தனஞ்சராயர்
  183. தாக்கலக்கியார்
  184. தாளிதியார்
  185. தானாதியார்
  186. திண்ணாப்பிரியர்
  187. திராணியார்
  188. திருக்காட்டியார்
  189. திருப்பூவாட்சியார்
  190. துண்டுராயர்(துண்டீரராயர்)
  191. துறவாண்டார்
  192. தெத்துவென்றார்
  193. தென்கொண்டார்
  194. தென்னரையர்
  195. தேசிராயர்
  196. தேவண்டார்
  197. தேவர்
  198. தொண்டார்
  199. தொண்டைமான்
  200. தொண்டைமான் கிளையார்
  201. தொரையண்டார்
  202. நந்தியராயர்
  203. நரங்கியப்பிலியர்
  204. நரங்கியர்
  205. நல்லவன்னியர்
  206. நல்லிப்பிரியர்
  207. நாடள்வார்(நாடாவார் நாடார்,நாட்டார்)
  208. நாட்டரையர்
  209. நாய்க்கர்
  210. நாய்க்காடியார்
  211. நார்த்தவார்
  212. நாவிளங்கியார்
  213. நெடுங்காளியார்
  214. நெடுத்தார்
  215. நெடுவாண்டார்
  216. நெறிமுண்டார்
  217. நைனியார்
  218. பசும்பிடியார்
  219. பஞ்சரமார்
  220. படைத்தலையார்
  221. படையெழுச்சியார்
  222. பணிபூண்டார்
  223. பண்ணியமுண்டார்
  224. பதுங்கராயர்
  225. பக்தாளர்
  226. பம்பாளியார்
  227. பரங்கிராயர்
  228. பருத்திகொண்டார்
  229. பல்லவராயர்
  230. பல்லவாண்டார்
  231. பவட்டுவார்(பாட்டுவார்)
  232. பழங்கொண்டார் (பழனங்கொண்டார்)
  233. பன்னிகொண்டார்
  234. பன்னையார்
  235. பாண்டியர்
  236. பாண்டுராயர்(பாண்டிராயர்)
  237. பாப்பிரியர்
  238. பாப்பபுடையார்
  239. பாப்புரெட்டியார்(பாப்புவெட்டியார்)
  240. பாலாண்டார்
  241. பாலியார்
  242. பால்நாட்டார்
  243. பால்ராயர்
  244. பாவுடையார்
  245. பிசலண்டார்
  246. பிச்சாடியார்
  247. பிச்சையன்கிளையார்
  248. பிலியராயர்
  249. பீலிமுண்டார்
  250. புட்டில்கழிந்தார்
  251. புண்ணாக்கர்
  252. புலிக்குட்டியார்
  253. புள்ளராயர்
  254. புறம்பயத்தார்
  255. பூச்சியார்
  256. பூவாட்சியார்
  257. பூழிராயர்
  258. பூனையர்
  259. பேதரையர்
  260. பொறை பொறுத்தார்
  261. பொன்பூண்டார்
  262. பொன்னமுண்டார்
  263. பொனனாரம் பூண்டார்
  264. பொன்னானீயார்
  265. போய்ந்தார்
  266. போரைச்சுற்றியார்
  267. போரக்காட்டியார்
  268. போர்பொறுக்கியார்
  269. போர்மூட்டியார்
  270. மங்கலார்
  271. மங்காத்தேவர்
  272. மட்டையர்
  273. மணவாளர்
  274. மண்கொண்டார்
  275. மண்டராயர்
  276. மயிலாண்டார்
  277. மலையரார்
  278. மல்லிகொண்டார்
  279. மழவராயர்
  280. மழுவாடியார்
  281. மண்வெற்றிக்கூழ்வழங்கியார்
  282. மன்னையார்
  283. மாங்காட்டார்
  284. மாதைராயர்
  285. மாதையாண்டார்
  286. மாத்துராயர்
  287. மாந்தரையர்
  288. மாமணக்காரர்
  289. மாம்பழத்தார்
  290. மாலையிட்டார்
  291. மாவலியார்
  292. மாவெட்டியார்
  293. மாளிச்சுத்தியார்(மாளிச்சர்_)
  294. மானங்காத்தார்
  295. மானமுத்தரையர்
  296. மானவிழுங்கியார்
  297. மான்சுத்தியார்
  298. முடிகொண்டார்
  299. முணுக்காட்டியார்
  300. முண்டார்
  301. முதலியார்
  302. முனையரையர்(முனையதரையர்)
  303. மூங்கிலியர்
  304. மூவரையர்
  305. மெய்க்கன் கோபாலர்
  306. மெனக்கடார்
  307. மேல்கொண்டார்
  308. மெனாட்டரையர்
  309. மொட்டத்தேவர்
  310. யுத்தப்பிரியர்
  311. வங்கணர்
  312. வங்காரமுத்தரையர்
  313. வடுராயர்
  314. வம்பாளியார்
  315. வல்லத்தரையர்
  316. வல்லரண்டார்
  317. வல்லாளதேவர்
  318. வல்லிடியார்
  319. வளம்பர்
  320. வன்னிமுண்டார்
  321. வன்னியர்
  322. வாச்சார்
  323. வாட்டாச்சியர்
  324. வாணதரையர்
  325. வாண்டாப்பிரியர்
  326. வாண்டையார்(வண்டைராயர்)
  327. வாயாடியார்
  328. வாலியர்
  329. வாள்வெட்டியார்
  330. விசலண்டார்
  331. விசாதேவர்(விஜயதேவர்)
  332. விசுவரார்
  333. விசையராயர்
  334. விஞ்சைராயர்
  335. விருதுளார்
  336. வில்லவராயர்
  337. விற்பனர்
  338. வீசண்டார்
  339. வீணதரையர்
  340. வீரங்கொண்டார்
  341. வீரப்புலியர்
  342. வெங்கிராயர்
  343. வெட்டுவார்
  344. வெண்டர்(வென்றார்)
  345. வெள்ளங்கொண்டார்
  346. வேணுடையார்
  347. வேளுடையார்
  348. வைராயர்

Monday, June 27, 2005

ந.மு.வேங்கடசாமி நாட்டார்



நாட்டு மக்களால் நாட்டார் ஐயா என அன்புடன் அழைக்கப்படும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்னும் சிற்றூரில் வீ.முத்துசாமி நாட்டாருக்கும் தையலம்மாளுக்கும் நன்மகனாய் 12-04-1884 ல் பிறந்தார்.


தம் சிறு வயதிலேயே ஆசிரியர் எவருடைய உதவியுமின்றித் தாமே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம் திரிபறப் பயின்று, மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேச பணடிதம், பால பண்டிதம் ,பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூவாண்டில் (1905,1906,1907) முறையாக எழுதி முதன்மையாகத் தேர்ச்சி பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பெருமகனாராகிய பாண்டித் துரைத் தேவர் அவர்களால் தங்கப் பதக்கங்களும், தங்கத் தோடாவும் அளிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார்கள்.


தாமே பயின்ற தமிழ்ப் பேராசிரியரின் அறிவாற்றலை அறிந்து அவரைப் பணிபுரிய அழைத்த கல்வி நிறுவனங்கள் பல. கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டும் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகளும் , அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக 7 ஆண்டுகளும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். பின் தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புரவர் கல்லூரியில் நான்கு ஆணடுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்து சிறப்பித்தார்கள்.


1940-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் நாவலர் என்னும் சிறப்புப்பட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப் பெற்றது. ஐயா அவர்கள்எழுதிய உரைகள் தமிழராய்ச்சி நூலகள் பல. 1921-22-இல் திருவருட் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவ முயற்சி செய்து முயற்சி நிறைவேறாமல் போக, 1925-26 -இல் தஞ்சை அல்லது திருச்சியில் தமிழ்ப் பலகலைக் கழகம் ஒன்று அமைகட்கப்பெற வேண்டுமென்று விரும்பி அப்போதைய அமைச்சர் டி.என். சிவஞாமப்பிள்ளை அவரகள் தலைமையில் அமைத்த செயற்குழுவில் உறுப்பனராகவிருந்து செயலாற்றிச் சிறப்பித்தார்கள்.


எளிய வாழ்வும் இனிய நோக்கமும் கொண்டவர்; நெஞ்சிலுரமும் நேர்மைத்திறமும் மிக்கவர்; சிறந்த புலமையாளர்; உயர்ந்த பண்பாளர், தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்ககாகவே தொண்டாற்றிய நாட்டார் 28-3-44 அன்று தம் மணிவிழா நடைபெறுவதற்கு இருவாரத்திறகு முன்டகாலமானார். அன்னாரின் உடல் பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டு அதன்மேல் கற்கோயில் எழுப்பி ஆகம விதிகளின்படி பூசை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் இக்காலத்தில் தமிழ்ப் புலவர் ஒரு வருக்ககாக எழுப்பப்பட்ட முதல் கற்கோயில் இது.

தஞ்சை தமிழ் பல்கலைக் கலகத்துக்கு ஐயா பெயரை வைக்காதது ஐயாவின் தமிழ்த் தொண்டைமதிக்காத செயலாகும்.

Sunday, June 26, 2005

எமெர்ஜென்சிக்கு வயது 30 ஆண்டுகள்

இதற்கு மக்களிடம் நிரம்ப வரவேற்பு இருந்தது இது ஒரு பொற்காலம் பத்தரைமணிக்கு அலுவலகம் செல்பவர் 8 மணிக்கே சென்றார், அணைத்து அலுவலர்களுமே ஒரு வித பயத்துடன், தம்மையறியாமலே தப்பு நடந்திடுமோஎன இருந்தனர். வெடிகுண்டு வேந்தரெல்லாம் பின் அமைச்சர். அன்று அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தால் அது அநியாயமா?
பேரூந்தில் கூட பின்பக்கம் ஏறி முன்பக்கம் இறங்கினர். அப்படி பட்ட நான்னாளை இன்று நினைத்தப்பார்க்கின்றனர். அன்று லஞ்சம் கிடையாது.
எந்த கோப்பும் சரியான நேரத்திற்கு சென்றடையும். அன்னாளை இவர்கள் கருப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். வருத்தந்தான் தவறு செய்பவர்களுக்கு அது செய்முடியாததால் அதை எதிர்த்தனர். எழை பாமரமக்கள் வங்கிகளில் எளிமையாக கடண் பொற்றனர்.
அந்த அம்மையாரின் காலத்தில் தான் நீதிமன்றம் சுயமாக இருந்தது.
அன்னை இந்திராகாந்தி பெற்ற தண்டனை

தேர்தலில் பிரதிவாதி ஊழல் முறைகளை கையாண்டு இருக்கிறார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படுகிறது. அரசு இயந்திரங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியரான எஸ்பால் கபூர் தேர்தல் வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேற்சொன்ன 2குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவே பிரதிவாதி திருமதி. இந்திராகாந்தியை குற்றவாளியென தீர்மானித்து
ரேபர்லின் தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என தீர்மானிக்கிறது.

"சர்க்காரியா கமிஷன் விசாரணையை இந்திரா கொண்டு வந்ததால் வேறு வழியில்லாம்ல எமர்ஜென்சியை அவர் எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது சர்க்காரியா வந்ததிருக்காவிட்டால், கருணாநிதி எதிர்த்திருக்க மாட்டார்", என பத்திரிக்கைளார் சோ இன்றைய தினமலரில் கூறியுள்ளார்.மேலும் கூறுகிறார் ,” விடுதலைப் புலிகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததற்கு அரசில் இடம்பெறும் விடுதலைப் புலிகளின் ஆதரவளர்களும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும், சிலரும், தமிழகத்தில் இருக்கும்புலிகள் ஆதரவு நபர்களுமே காரணம் ஆகும். முஸ்லீம் தீவிரவாதம், புலிகள் நடமாட்டம், அரசு அதிகாரிகளிடம் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கின்மை அதிகரித்திருக்கும் இந்த காலகட்டத்தில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினால்தப்பில்லை", என்கிறார் ஆக இப்படிப்பட்ட சூல் நிலைகளில் மிசாவைக் கொணடுவர சிபாரிசு செய்யு சோ அவர்கள் கலந்து கொணட கூட்டம் மிசா கருப்பு தினக்கூட்டம்
அவரே, உண்மையை ஒத்துக்கொள்கிறார் எமர்ஜென்சியை தேவை என.

அதாவது எங்கோ ஒரு தவறு நடந்திருக்கலாம் அது அந்த சம்பந்த பட்ட நபரின் தவறு தானே தவிர அமைச்சரின் தவறு அல்ல!.
என்னைப் பொருத்தவரை பையனை கண்டிக்க, தண்டிக்க பெற்றோர். மாணவனை கண்டிக்க ஆசிரியர் சமூக விரோதிகளை கண்டிக்க , தண்டிக்க சட்டம், காவல்துறை. இதில் சேராதவரக்ள கண்டிக்க இப்படிப்பட்ட சட்டம் இந்தியாவிற்கு இன்று உடனடியாக தேவை! தேவை!! தேவை!!!

Saturday, June 25, 2005

காவிரி தண்ணீர்

1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயற்சி செய்தது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
பின்பு 1835 ம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரை திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.
1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர் , அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அனுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமிஅய்யரின் முன்டனேர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்ளே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெறிவிக்வே; தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோரும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்னர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30.00,000/-க்கு 1 லட்டசம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமிஅய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதகடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்dதலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.
அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த STANLY என்ற பொறியாளர் மூலம் அணைகட்ட ஆரம்பிக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் உயரம் 124 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கண அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
1 tmc தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் குறையும்
1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 tmc குறையும்
அன்று கர்னாடகா தண்ணீரால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டது என நாம் போராடப்போய் ; இன்ற தண்ணீர் இல்லை என போராட வேண்டியிருக்கிறது..

தமிழக மன்னர்கள் மைசூர் மன்னருக்கு கப்பம் கட்டிய காலம் அது வெள்ளையருக்கு ஒரு பகுதி வரி வசூல் தானே தவிர முழுஆளுமையுமில்லை
மேலும் ஒரு இடத்தில் அணைகட்டினால் பல கிராமங்களை தூக்க வேண்டி வரும்
மேட்டூர் நீர்த் தேக்கத்தில் பல கிராமங்களும் கோவில்களும் உள்ளன. இன்றும் தண்ணீர் குறைந்ததும் அந்த கோவில்கள் தெரியம் அங்கிருந்த கிராமத்தை வேறு இடங்களுக்கு மாற்றி இருப்பர். அவைகள் அணைத்தும் கர்ணாடகா வைச் சேர்நதவை பல்லாயிரகணக்காண நஞ்சை புஞ்சை நிலங்களும் தற்போது நீரில் மூழ்கியிருக்கும் . அணை தமிழக மாயிருப்பினும் நிர்பிடிப்புபகுதி கர்ணாடகா.

Friday, June 24, 2005

கண்ணதாசன்

அம்மாயக் கண்ணனின் தாசா! எங்கள் நேசா!;
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை" என்றயே
இன்று உனக்குப் பிறந்த நாளா? யாருக்கொன்று என்றாலும்
கவிதை எழுதுவாயே இன்றுனக்கு யார்?
உண்மையை மறைக்காமல் பேசும் உத்தமனே
முத்தையா உன் கவிதைகள் முத்தய்யா
அனைத்தும் தமிழ் சொத்தையா உனைப் பற்றி கோடி நினைத்தேன்
குறைவே முடித்தேன் நீ சென்று இரண்டு மாமங்கள் ஆகியதா
நேற்று நடந்தது போல் இருக்கய்யா!
வந்தநாள் 24-06-27 சென்ற நாள் 17-10-81
வந்த இடம் சிறுகூடல் பட்டி சென்ற இடம் சிகாகோ

Thursday, June 23, 2005

காந்தி பெயரில் மாட்டுக்கறி விற்பனை

ஆஸ்திரேலியாவின் சவுத்வேல்ஸ் நகரில் 'காந்தி' கடையில் சிக்கன், மட்டன், பீப்,
மீன், நண்டு என எல்லா ஐட்டங்களும்தாராளமாக சுடச் சுடக் கிடைக்கும். ஆம் புலால் உண்பதை அறவே தவிர்த்த, எல்லாரையும் தவிர்க்கச் சொன்ன அந்த மகாத்மாவுக்கு இப்போது இப்படி ஒரு கதி!

நல்ல வேலை நமது பிரதமர் இதற்கு கண்டனம் தெறிவித்து தடுத்துவிட்டார்
நன்றி சொல்லுவோம் நம் தலைமைஅமைச்சருக்கு

Sunday, June 05, 2005

விஜயாலய சோழன்

விஜ
பாம்பினிடமிருந்து
வல்லூறு காத்த மணிப்புறாதான் நாமங்கு!
வேளி
வல்லூறாய்ப் பல்லவரை எண்ணல் வலிவின்மை.
கொல்லென்றுகூறி எதிர்த்தல் அறிவின்மை.
புல்லுருவி போலே நாம் பல்லவஆல் பொந்தினிலே
மெல்ல வளர்ந்ததையே வீழ்த்தல் மதியுடைமை!
விஜ
வேளிரே! ஆண்டுமக்கு மேலேற மேலேற
வானில் மதிப்புக் குறைந்துகொண்டு போகிறதோ!
வீச்சுக்கத் திக்கு விழிஇமைக்கா வீரன்நான்.
சூழ்டச்சிக்கே கோழைநான், சொல்லுவதைக் கேளுங்கள்
சோணாட்டில் சூழ்ச்சி நரியிடத்திலே யிருந்தும்
நானோட்ட எண்ணி நலிகின்றேன். என்னிடத்தில்
சொல்லிவிட்டீர் நீர் இச்சொல்! சொன்ன ஆள் வேறென்றால்
பல்லிவால் போல்துடிக்கும் பாழ்நாக்கும் துண்டாகி!
வேளி
தங்கம் கதிர்காய்த்துச் சாய்ந்தாடும் நாட்டரசே!
சிங்கத்தைப் பார்த்துச் சிறுநரியாய் ஆகென்று
கூறுவேனோ?

Saturday, June 04, 2005

சோழ மன்னன் விஜயாலன்

விஜயாலயன்
கூறும், கொடும்பாளூர்வேளிரே! எம்வேலில்
கூருண்டு பாய்ச்சக் குறிதான் தெரியவில்லை....!
வேம்பெடுத்துப் பூச்சூடும் வேந்தனவன் அம்பெடுத்து
வீம்பெடுத்த சோழர் குடமுக்கில் வீசினான்முன்!
வாள் கொடுத்தோம், வாளுக்கு யாமும் எமக்காகத்
தோள் கொடுத்தார் பல்லவர்கள், தோற்றோம், அவர்வென்றார்
தோற்றதனால் யாமிழந்தோம் சோணாட்டின் தென்பகுதி,
தோற்றதனால் யாதழந்தார் சொல்லுமப் பல்லவர்கள்?
மீண்டும் அரிசிலாற் றங்கரையில் வேலெடுத்த
பாண்டியர்கள் ஓர்பக்கம், பல்லவர்கள் எம்பக்கம் !
தென்பாண்டி வேந்தன்தன் சித்தத்திலும் சோழ
மண்தீண்டா வாறுநாம் வாட்டி விரட்டிவிட்டோம்.
யாபெற்ற தென்னஅவ் வெற்றியினால்? பல்லவர்கள்
தாம்பெற்றார் யாம் வென்ற சோழத் தரையெல்லாம் !
'வெற்றால் பலன் அவர்க்கு, தோற்றால் இழப்பெமக்கு'
என்றால் துணைஎதற்கு? சொல்லும் நீர்.
வேளிர்
இட்டஓர் நெல்
கட்டுக் கதிராகும் காவிரிபாய் சோழமன்னா !
மட்டுப் படாச்சினத்தை மாற்றித்தாம் கேட்டருள்க.
போரெடுத்துச் சோணாட்டு மண்ணில் புதுப்பகைவர்
யாரடுத்தார் என்றாலும் தாமே எழுந்திடுவார்
பல்ல்வர்கள் காக்க நமை....