Wednesday, May 03, 2006

அம்பிகாபதி அமராவதி - 13 -

இரண்டாம் நிகழ்சி : இரண்டாம் காட்சி

களம்: அரண்மனை, உவளகம்

நேரம்: மாலை

அரசன்: (அமைச்சருடன் உவளகத்திற்குச் செல்கையிற் கேமாளியைப் பார்த்து) ஏடா, துத்தி! அமைச்சரும் யானும் வருகின்றோம் என்று அரசிக்கு முன் ஓடித் தெரிவி (அமைச்சரைப் பார்த்து) நெடுநேரம் ஆகியும், இன்னுஞ் சிறிது நேரம் இம்மாலையில் நீங்கள் எம்முடன் இருக்கவேண்டுவது பற்றி வருந்துகின்றேன்.

அமைச்சர்: எவ்வளவு நேரம் ஆனாலும் மன்னர் பெருமான் பணியிற் காத்திருக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அரசன்: அமைச்சரே , கம்பர் தில்லை ,திருவரங்கம் சென்று வர ஓராண்டாவது ஆகும் அது வரையில் எம் அருமைப் பதல்வி அமராவதிக்கு தமிழ் பாடம் கற்பிக்க எவரை ஏற்படுத்தலாம் என கருதுகிறீர்கள்.

(இருவரும் உவளகத்தினுட் சென்று அரசன் அமர, அமைச்சர் பக்கத்தே நிற்க அரசி வந்து அரசனைப் பணிந்து)

அரசி: பெருமான் புலவர் பேரவையின்றம் வர நெடு நேரமாயிற்று போலுமு் (அமைச்சரைப் பார்த்து) நம்பிப்பிள்ளை நிற்கின்றனரே.

அரசன்: பிள்ளே! இருக்கையில் அமருங்கள்! அங்கயற்கண்ணி! நீயும் அத்தளிமத்தில் அமர்.இன்றைக்கு நம் புலவர் பேரவையில் மிகவுங் கிளர்ச்சியான ஒரு சொற்போர் நடைபெற்றது; அஃதிப்போது தான் ஒரு முடிவுக்கு வந்தது.

அரசி: ஆசிரியர் கம்பர் இயற்றிய ராமாணத்தைப் பற்றியதாகத்தான் அச் சொற்போர் நிகழ்ந்திருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.

அரசன்: நங்கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் செய்த சூழ்ச்சி எளிதிலே நிறைவேறுவதற்கு கம்பரது நூலேமிகவும் இடந்தந்து விட்டது. கம்பர் முன்னோடு பின் முரணாக அத்துணை பிழைபட கடவுள் வணக்கம் பாடுவார் என்று ஞான் நினைக்கவேயில்லை.சிவபிரான் மேலாதல் திருமால் மேலாதல் அவர் கடவுள் வாழ்த்து சொல்லாமல் முத்தொழில் புறியும் முழுமுதற்கடவுளை நேரே கண்டவர்போற்தலைவர் என்னுஞ் சொல்லால் அவ்வார்த்தை முதலிற் கூறினார்.

அரசி: முத்தொழில் புரியுங் கடவுளை வணங்கத் தொடங்கினவர் அவர்கோர் உருவும் பெயரும் ஏற்பித்தன்றி அதனை வாழ்த்தி வணங்கள் இயலாதே.

அரசன்: நீ செல்லும் இத்தடையினையே நம் சைவப் புலவர் நன்கெடுத்துக்காட்டி மறுத்தார். அதற்கு கம்பர் பொருத்தமான விடை சொல்லல் இயலாமல் , ' இப் புலவர் பேரவை பல்சமயப் புலவரும் குழுமிய தொன்றாயி ருத்தலின், அவ்வெல்லார்க்கும் பொதுப்பட வைத்து முழுமுதற்கடவள் வணக்கம் சொன்னேன்' என்றார். உடனே நம் வைணவப் புலவர் எழுந்து முதற் பாட்டிற்கு பொதுக்கடவுள் வணக்கம் சொல்லி பின்னிரண்டு பாட்டுகளில் திருமாளே முதற் கடவுள் என்றது முன்னோடு பின் முரணாமன்றோ என மறுத்தனர்.

அரசி: ஆம், அஃது உண்மைதானே அரசே! முத்தொழிலைப் புரியும் கடவுளினும் மேலாக காத்தற்றொழில் ஒன்றே புரியுந் திருமாலை முதல்வராக வைத்தல் யாங்ஙனம் பொருந்தும்? இதுதானம் உணராமற் கம்பர் முன்னோடுபின் கடவுள் வாழ்த்துப் படியது எனக்கு பெரியதொரு வியப்பைத்தருகின்றது.

அரசன்: சிறு தெய்வ வணக்கத்தில் ஈடு பட்டவருக்கு அறிவுக்கண் குருடாய்விடும் என்பதற்கு கம்பரே ஒரு சான்று. இராமாநுசர் பரப்பிய குருதெய்வகொள்கையில் மயங்கிச், சைவவேளாள செல்வராகிய திருவெண்ணெய் நல்லூர் சடையப்பவள்ளலே ' சடையன்' என தாம் பூண்ட சிவபிரான் பெயரையும் மாற்றி 'சரராமன்' என்னும் வைணவபெயரை தமக்கு புனைந்து கொண்டார். அவரது உதவியையே மிக நாடிநிற்கும் கம்பரும் அவரையொப்ப வைணவ மதவெறிபிடித்து , அவரது ஏவுதலால், அவரது ஊரிலிருந்தே இவ்விராமாயணத்தை இங்ஙனம் முன்பின் முரணாக பாடிமுடித்திருக்கின்றார்.

அரசி: பெரும! பின்னர் கடவுள் வாழ்த்தை பற்றிய முடிவுஎன்னவாயிற்று?

அரசன்: அன்னேரத்தில் நங் கோமாளி துத்திகேட்ட ஒரு கேள்வி, கம்பர் கூறிய விடை பொருந்தாமையினை நன்கு விளக்கியதோடு அவரையும் வெள்க செய்தது. புலவர் எல்லாருக்கும் அஞ்சிய கம்பர் பொதுக் கடவுள் வணக்கம் கூறினர் ஆயின் , அதை புலவர் வணக்கம் என்னாமல் கடவுள் வணக்கம் என்று ஏன் சொல்ல வேண்டும் என்று துத்து வினவினான்.

அரசி: !! குறியான கேள்விதான் அதற்கு யாது விடை
வரும்.........14

2 comments:

குமரன் (Kumaran) said...

அடுத்த பதிவு எப்போது வரும் ஐயா?

ENNAR said...

தேர்தல் முடிந்தது நாளை